சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.084
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காரைகள், கூகை, முல்லை, கள, பண் - பியந்தைக்காந்தாரம் (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி) Audio: https://www.youtube.com/watch?v=-hsh2WlPosg |
4.070
திருநாவுக்கரசர்
தேவாரம்
முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன் பண் - திருநேரிசை (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி) Audio: https://www.youtube.com/watch?v=DqQU9K5tRZw |
7.097
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால் பண் - பஞ்சமம் (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி) Audio: https://www.youtube.com/watch?v=FnmKA0tsFmA |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.084  
காரைகள், கூகை, முல்லை, கள,
பண் - பியந்தைக்காந்தாரம் (திருத்தலம் திருநனிப்பள்ளி ; (திருத்தலம் அருள்தரு பர்வதராசபுத்திரி உடனுறை அருள்மிகு நற்றுணையப்பர் திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தரின் தாயார் பகவதி அம்மையார் பிறந்த நனிபள்ளியிலுள்ள அந்தணர்கள், அவர் மூவாண்டில் சிவஞானம் பெற்றதையும் சிவபிரானால் பொற்றாளம் அருளப் பெற்றதையும் கேள்வியுற்றுத் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டுமென ஞானசம் பந்தரை வேண்டினர். அதற்கு இசைந்த ஞானசம்பந்தர் தோணிபுரத்து இறைவரை வணங்கி விடைபெற்றுத் தாமரை மலர் போன்ற தம் திருவடி நோக நனிபள்ளி நோக்கி நடந்தருளினார். ஆளுடைய பிள்ளையார் அடிமலர் வருந்தக் கண்ட சிவபாத இருதயர் ஞானசம்பந்தரைப் பிறர் தூக்கிச் செல்வதை விரும்பாது தாமே தன் திருத்தோளில் அமர்த்திக் கொண்டு செல்வாராயினார். நனிபள்ளியை அணுகிய நிலையில் ஞானசம்பந்தர் எதிரே தோன்றும் இப்பதியாது எனக் கேட்கத் தந்தையார் அது தான் நனிபள்ளி எனச் சொல்லக் கேட்டுக் காரைகள் கூகைமுல்லை எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடினார்.
காரைகள், கூகை, முல்லை, கள, வாகை, ஈகை, படர் தொடரி, கள்ளி, கவினி; சூரைகள் பம்மி; விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய சோலை நகர்தான் தேரைகள் ஆரை சாய மிதிகொள்ள, வாளை குதிகொள்ள, வள்ளை துவள, நாரைகள் ஆரல் வார, வயல் மேதி வைகும் நனிபள்ளி போலும்; நமர்கா | [1] |
சடை இடை புக்கு ஒடுங்கி உள தங்கு வெள்ளம், வளர் திங்கள் கண்ணி, அயலே இடை இடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை, இறைவன்(ன்) இடம் கொள் பதிதான் மடை இடை வாளை பாய, முகிழ் வாய் நெரிந்து மணம் நாறும் நீலம் மலரும், நடை உடை அன்னம் வைகு, புனல் அம் படப்பை நனிபள்ளி போலும்; நமர்கா | [2] |
பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடு இலாத பெருமான், கறுமலர் கண்டம் ஆக விடம் உண்ட காளை, இடம் ஆய காதல் நகர்தான் வெறுமலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு போது அலர்ந்த விரை சூழ் நறுமலர் அல்லி பல்லி, ஒலி வண்டு உறங்கும் நனிபள்ளி போலும்; நமர்கா | [3] |
குளிர் தரு கங்கை தங்கு சடைமாடு, இலங்கு தலைமாலையோடு குலவி, ஒளிர் தரு திங்கள் சூடி, உமை பாகம் ஆக உடையான் உகந்த நகர்தான் குளிர்தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடைவண்டு தானும் முரல, நளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகும் நனி பள்ளிபோலும்; நமர்கா | [4] |
தோடு ஒரு காதன் ஆகி, ஒரு காது இலங்கு சுரிசங்கு நின்று புரள, காடு இடம் ஆக நின்று, கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான் வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால், நாடு உடன் ஆடு செம்மை ஒளி வெள்ளம் ஆரும் நனிபள்ளி போலும்; நமர்கா | [5] |
மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து, மலையான் மடந்தை மணிபொன் ஆகம் ஓர் பாகம் ஆக, அனல் ஆடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான் ஊகமொடு ஆடு மந்தி உகளும், சிலம்ப அகில் உந்தி ஒண்பொன் இடறி நாகமொடு ஆரம் வாரு புனல் வந்து அலைக்கும், நனிபள்ளிபோலும்; நகர்கா | [6] |
தகை மலி தண்டு, சூலம், அனல் உமிழும் நாகம், கொடு கொட்டி வீணை முரல, வகை மலி வன்னி, கொன்றை, மதமத்தம், வைத்த பெருமான் உகந்த நகர்தான் புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல், பணிவார்கள் பாடல், பெருகி, நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும்; நகர்கா | [7] |
வலம் மிகு வாளன், வேலன், வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு உலம் மிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர்தான் நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை நலம் மிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும் நனிபள்ளி போலும்; நமர்கா | [8] |
நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார், அற உரு வேத நாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல், நகர்தான் புற விரி முல்லை, மௌவல், குளிர் பிண்டி, புன்னை, புனை கொன்றை, துன்று பொதுள நற விரி போது தாது புதுவாசம் நாறும் நனிபள்ளி போலும்; நமர்கா | [9] |
அனம் மிகு, செல்கு, சோறு கொணர்க! என்று கையில் இட உண்டு பட்ட அமணும், மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர் குணம் இன்றி நின்ற வடிவும், வினை மிகு வேதம் நான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான் நனிமிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும் நனிபள்ளிபோலும்; நமர்கா | [10] |
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத, படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞானமுனிவன், இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன் இசையால் உரைத்த பனுவல், நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க, வினை கெடுதல் ஆணை நமதே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.070  
முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன்
பண் - திருநேரிசை (திருத்தலம் திருநனிப்பள்ளி ; (திருத்தலம் அருள்தரு பர்வதராசபுத்திரி உடனுறை அருள்மிகு நற்றுணையப்பர் திருவடிகள் போற்றி )
முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன் தன்னை, சொல்-துணை ஆயினானை, சோதியை, ஆதரித்து(வ்) உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு நல்-துணை ஆவர்போலும், நனிபள்ளி அடிகளாரே. | [1] |
புலர்ந்தகால் பூவும் நீரும் கொண்டு அடி போற்ற மாட்டா, வலம் செய்து வாயின் நூலால் வட்டணைப் பந்தர் செய்த, சிலந்தியை அரையன் ஆக்கிச் சீர்மைகள் அருள வல்லார் நலம் திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே. | [2] |
எண்பதும் பத்தும் ஆறும் என் உளே இருந்து மன்னிக் கண் பழக்கு ஒன்றும் இன்றிக் கலக்க நான் அலக்கழிந்தேன் செண்பகம், திகழும் புன்னை, செழுந் திரள் குரவம், வேங்கை, நண்பு செய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே! | [3] |
பண்ணின் ஆர் பாடல் ஆகி, பழத்தினில் இரதம் ஆகி, கண்ணின் ஆர் பார்வை ஆகி, கருத்தொடு கற்பம் ஆகி, எண்ணினார் எண்ணம் ஆகி, ஏழ் உலகு அனைத்தும் ஆகி, நண்ணினார் வினைகள் தீர்ப்பார்-நனிபள்ளி அடிகளாரே. | [4] |
துஞ்சு இருள் காலை மாலை, தொடர்ச்சியை மறந்து இராதே அஞ்சு எழுத்து ஓதில், நாளும் அரன் அடிக்கு அன்பு அது ஆகும்; வஞ்சனைப் பால்சோறு ஆக்கி வழக்கு இலா அமணர் தந்த நஞ்சு அமுது ஆக்குவித்தார், நனிபள்ளி அடிகளாரே. | [5] |
செம்மலர்க் கமலத்தோனும் திருமுடி காணமாட்டான்; அம் மலர்ப்பாதம் காண்பான் ஆழியான் அகழ்ந்தும் காணான்; நின்மலன் என்று அங்கு ஏத்தும் நினைப்பினை அருளி நாளும் நம் மலம் அறுப்பர் போலும், நனிபள்ளி அடிகளாரே. | [6] |
அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோடு அசுரர் கூடி அரவித்துக் கடையத் தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்டார் விரவித் தம் அடியர் ஆகி வீடு இலாத் தொண்டர் தம்மை நரகத்தில் வீழ ஒட்டார்-நனிபள்ளி அடிகளாரே. | [7] |
மண்ணுளே திரியும் போது வருவன பலவும் குற்றம்; புண்ணுளே புரை புரையன் புழுப் பொதி பொள்ளல் ஆக்கை | [8] |
பத்தும் ஓர் இரட்டி தோளான் பாரித்து மலை எடுக்க, பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி, பத்துவாய் கீதம் பாட, பரிந்து அவற்கு அருள் கொடுத்தார் பத்தர் தாம் பரவி ஏத்தும் நனிபள்ளிப் பரமனாரே. | [9] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.097  
ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால்
பண் - பஞ்சமம் (திருத்தலம் திருநனிப்பள்ளி ; (திருத்தலம் அருள்தரு பர்வதராசபுத்திரி உடனுறை அருள்மிகு நற்றுணையப்பர் திருவடிகள் போற்றி )
ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால் அறிதற்கு அரிய சோதியன்; சொல்பொருள் ஆய்; சுருங்கா மறை நான்கினையும் ஓதியன்; உமபர்தம் கோன்; உலகத்தினுள் எவ் உயிர்க்கும் நாதியன்; நம்பெருமான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே. | [1] |
உறவு இலி; ஊனம் இலி; உணரார் புரம் மூன்று எரியச் செறி வி(ல்)லி; தன் நினைவார் வினை ஆயின தேய்ந்து அழிய அற இலகும்(ம்) அருளான்; மருள் ஆர் பொழில், வண்டு அறையும், நற விரி கொன்றையினான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே. | [2] |
வான் உடையான்; பெரியான்; மனத்தாலும் நினைப்பு அரியான்; ஆன் இடை ஐந்து அமர்ந்தான்; அணு ஆகி, ஓர் தீ உருக் கொண்டு ஊன் உடை இவ் உடலம்(ம்) ஒடுங்கிப் புகுந்தான்; பரந்தான்; நான் உடை மாடு; எம்பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே. | [3] |
ஓடு உடையன், கலனா; உடை கோவணவன்(ன்); உமை ஓர்- பாடு உடையன்; பலி தேர்ந்து உண்ணும் பண்பு உடையன்; பயிலக் காடு உடையன்(ன்), இடமா; மலை ஏழும், கருங்கடல் சூழ் நாடு, உடை நம்பெருமான் நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே. | [4] |
பண்ணற்கு அரியது ஒரு படை ஆழிதனைப் படைத்துக் கண்ணற்கு அருள்புரிந்தான்; கருதாதவர் வேள்வி அவி உண்ணற்கு இமையவரை உருண்டு ஓட உதைத்து, உகந்து, நண்ணற்கு அரிய பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே. | [5] |
மல்கிய செஞ்சடைமேல் மதியும்(ம்) அரவும்(ம்) உடனே,- புல்கிய ஆரணன், எம் புனிதன், புரிநூல் விகிர்தன், மெல்கிய வில்-தொழிலான், விருப்பன், பெரும் பார்த்தனுக்கு நல்கிய நம்பெருமான், நண்ணும் ஊர் நன்பள்ளி அதே. | [6] |
அங்கம் ஓர் ஆறு அவையும்(ம்), அருமாமறை, வேள்விகளும், எங்கும் இருந்து அந்தணர் எரிமூன்று அவை, ஓம்பும் இடம்; பங்கயமா முகத்தாள் உமை பங்கன் உறை கோயில்; செங்கயல் பாயும் வயல்-திரு ஊர்-நனிபள்ளி அதே. | [7] |
திங்கள் குறுந்தெரியல்-திகழ் கண்ணியன்-; நுண்ணியனாய், நம் கண் பிணி களைவான்; அரு மா மருந்து, ஏழ் பிறப்பும்; மங்கத் திருவிரலால் அடர்த்தான், வல் அரக்கனையும்; நங்கட்கு அருளும் பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே. | [8] |
ஏன மருப்பினொடும்(ம்) எழில் ஆமையும் பூண்டு, உகந்து, வான மதிள் அரணம் மலையே சிலையா வளைத்தான்; ஊனம் இல் காழி தன்னுள்(ள்) உயர் ஞானசம்பந்தற்கு அன்று ஞானம் அருள்புரிந்தான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே. | [9] |
காலமும் நாழிகையும் நனிபள்ளி மனத்தின் உள்கி, கோலம் அது ஆயவனைக் குளிர் நாவல ஊரன் சொன்ன மாலை மதித்து உரைப்பார், மண் மறந்து வானோர் உலகில் சால நல் இன்பம் எய்தி, தவலோகத்து இருப்பவரே. | [10] |