சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் அ%
அஃதே     அகம்     அகற்ற     அகலகில்லேன்     அகலில்     அகில்     அகைப்பு     அக்கரை     அக்காக்காய்     அக்கும்     அங்     அங்கண்     அங்கம்     அங்கற்கு     அங்கு     அங்கும்     அங்குற்றேன்     அங்கை-ஆழி     அங்கைத்     அங்ஙனம்     அசுரர்கள்     அச்சம்     அச்சுதன்     அஞ்சன     அஞ்சுடர்     அஞ்சுவன்     அடக்கு     அடங்கு     அடர்     அடல்     அடி     அடிகள்     அடிக்கீழ்     அடிச்     அடிச்சியோம்     அடித்தலமும்     அடிமையிற்     அடியான்     அடியால்     அடியும்     அடியேன்     அடியை     அடியைத்     அடியோமோடும்     அடுத்த     அடுத்து     அடை     அடைக்     அடைந்த     அடைந்தது     அடைந்திட்டு     அடைவதும்     அட்டுக்     அணங்கு     அணங்குக்கு     அணி     அணியன்     அணைவது     அண்டக்     அண்டத்தின்     அண்டத்து     அண்டமும்     அண்டர்     அண்டர்-கோன்     அண்ணல்     அதிருங்     அதிர்     அது     அதுவே     அதுவோ     அத்தன்     அத்தா     அத்தியூரான்     அந்தகன்     அந்தம்     அந்தரத்து     அந்தரம்     அந்தோ     அனந்தன்பாலும்     அனந்தாழ்வான்     அனுங்க     அன்ன     அன்னதோர்     அன்னமும்     அன்னம்     அன்னவனை     அன்னே     அன்னை     அன்னைமீர்     அன்னையும்     அன்பன்     அன்பு     அன்பே     அன்றி     அன்றிய     அன்று     அன்றே     அப்பனே     அப்பனை     அப்பம்     அமர     அமரராய்த்     அமரர்     அமரர்கள்     அமரர்க்கு     அமர்ந்த     அமலன்     அமுதம்     அமுது     அமைக்கும்     அமைவு     அம்     அம்பரமும்     அம்பரமே     அம்பரம்     அம்பு     அம்மா     அம்மானாய்ப்     அம்மான்     அயர்க்கும்     அயர்ப்பாய்     அயல்     அரக்கர்     அரக்கியர்     அரங்கனே     அரணம்     அரண்     அரன்     அரவ     அரவத்து     அரவம்     அரவிற்     அரவு     அரி     அரிஏறே     அரிய     அரியது     அரியன     அரியாய     அரு     அருகல்     அருகும்     அருளாத     அருளாது     அருளை     அருள்     அருள்பெறுவார்     அருவி     அறிகிலேன்     அறிந்தன     அறிந்து     அறியாக்     அறியாதார்க்கு     அறியார்     அறியும்     அறியேன்     அறியோமே     அறிவது     அறிவினால்     அறிவிலேனுக்கு     அறிவு     அறுக்கும்     அற்புதன்     அற்றது     அற்றவன்     அலமும்     அலம்     அலம்பா     அலம்புரிந்த     அலர்     அலைத்த     அல்லது     அல்லல்     அல்லி     அல்லிக்     அல்லியம்பூ     அல்வழக்கு     அளந்து     அளப்பு     அளவு     அளி     அளிக்கும்     அழகிய     அழகியான்     அழகு     அழகும்     அழிலும்     அழுவன்     அழைக்கின்ற     அழைக்கும்     அழைப்பன்     அவத்தங்கள்     அவனுடை     அவனே     அவனைவிட்டு     அவன்     அவரவர்     அவர்     அவற்கு     அவா     அவையம்     அவ்வவ்    
Number of search results : 278
Pages:    1    2  3  Next
2.0   திருப்பல்லாண்டு -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   திருப்பல்லாண்டு  

அடியோமோடும் நின்னொடும் பிரிவு இன்றி
      ஆயிரம் பல்லாண்டு
விடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற
      மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர்
      ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச
      சன்னியமும் பல்லாண்டே
5.0   திருப்பல்லாண்டு -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   திருப்பல்லாண்டு  

அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி
      அசுரர் இராக்கதரை
இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த
      இருடிகேசன் தனக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது
      ஆயிர நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்
      லாயிரத்தாண்டு என்மினே
11.0   திருப்பல்லாண்டு -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   திருப்பல்லாண்டு  

அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர்
      கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போல திருமாலே நானும்
      உனக்குப் பழ அடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று
      நாமம் பல பரவி
பல் வகையாலும் பவித்திரனே உன்னைப்
      பல்லாண்டு கூறுவனே
31.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

அதிருங் கடல்நிற வண்ணனை ஆய்ச்சி
மதுரமுலை ஊட்டி வஞ்சித்து வைத்துப்
பதறப் படாமே பழந் தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே
      ஒளிவளையீர் வந்து காணீரே
42.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 20   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

அழகிய பைம்பொன்னின் கோல் அங்கைக் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப
மழ கன்றினங்கள் மறித்துத் திரிவான்
குழல்கள் இருந்தவா காணீரே
      குவிமுலையீர் வந்து காணீரே
58.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்புலிப் பருவம்

அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுற
மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூகின்றான்
குழகன் சிரீதரன் கூவக் கூவ நீ போதியேல்
புழையில ஆகாதே நின்செவி புகர் மா மதீ                       
74.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
செங்கீரைப் பருவம்

அன்னமும் மின் உருவும் ஆளரியும் குறளும்
      ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை
      ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று
அன்னநடை மடவாள் அசோதை உகந்த பரிசு
      ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்
இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார் உலகில்
      எண்திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே
83.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
சப்பாணிப் பருவம்

அளந்து இட்ட தூணை அவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க உருவாய்
உளந் தொட்டு இரணியன் ஒண்மார்வு அகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி
      பேய் முலை உண்டானே சப்பாணி
84.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
சப்பாணிப் பருவம்

அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை
மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி
வடம் சுற்றி வாசுகி வன்கயிறு ஆகக்
கடைந்திட்ட கைகளால் சப்பாணி
      கார்முகில் வண்ணனே சப்பாணி
128.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாய்ப்பால் உண்ண அழைத்தல்

அரவு அணையாய் ஆயர் ஏறே
      அம்மம் உண்ணத் துயிலெழாயே
இரவும் உண்ணாது உறங்கி நீ போய்
      இன்றும் உச்சி கொண்டதாலோ
வரவுங் காணேன்;வயிறு அசைந்தாய்
      வன முலைகள் சோர்ந்து பாயத்
திரு உடைய வாய்மடுத்துத்
      திளைத்து உதைத்துப் பருகிடாயே
136.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாய்ப்பால் உண்ண அழைத்தல்

அங் கமலப் போதகத்தில்
      அணி கொள் முத்தம் சிந்தினாற்போல்
செங் கமல முகம் வியர்ப்ப
      தீமை செய்து இம் முற்றத்தூடே
அங்கம் எல்லாம் புழுதியாக
      அளைய வேண்டா அம்ம விம்ம
அங்கு அமரர்க்கு அமுது அளித்த
      அமரர் கோவே முலை உணாயே
156.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நீராட்டம்

அப்பம் கலந்த சிற்றுண்டி
      அக்காரம் பாலிற் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன்
      தின்னல் உறுதியேல் நம்பி
செப்பு இள மென்முலையார்கள்
      சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும்
      சோத்தம் பிரான் இங்கே வாராய்
181.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோல் கொண்டுவா எனல்

அக்காக்காய் நம்பிக்குக் கோல் கொண்டு வா என்று
மிக்காள் உரைத்த சொல் வில்லிபுத்தூர்ப் பட்டன்
ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர்
மக்களைப் பெற்று மகிழ்வர் இவ் வையத்தே
190.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பூச் சூட்டல்

அண்டத்து அமரர்கள் சூழ
      அத்தாணியுள் அங்கு இருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்
      தூமலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை ஏழும்
      ஓர் ஆலிலையிற் துயில் கொண்டாய்
கண்டு நான் உன்னை உகக்கக்
      கருமுகைப் பூச் சூட்ட வாராய்
222.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
ஆயர்மங்கையர் முறையீடு

அங் கமலக் கண்ணன்தன்னை அசோதைக்கு
மங்கை நல்லார்கள் தாம் வந்து முறைப்பட்ட
அங்கு அவர் சொல்லைப் புதுவைக்கோன் பட்டன் சொல்
      இங்கு இவை வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே
234.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல்

அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை
மஞ்சனம் ஆட்டி மனைகள்தோறும் திரியாமே
கஞ்சனைக் காய்ந்த கழல் அடி நோவக் கன்றின்பின்
என்செயப் பிள்ளையைப் போக்கினேன்? எல்லே பாவமே
238.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல்

அவ்வவ் இடம் புக்கு அவ் ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்க்
கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே
எவ்வும் சிலை உடை வேடர் கானிடைக் கன்றின் பின்
தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே
249.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு அன்னை மகிழ்தல்

அஞ்சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும்
      அழகா நீ பொய்கை புக்கு
நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும்
      நான் உயிர் வாழ்ந்திருந்தேன்
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய்?
      ஏதும் ஓர் அச்சம் இல்லை
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய்
      காயாம்பூ வண்ணம் கொண்டாய்
264.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோவர்த்தனகிரியைக் குடைகொண்டமை

அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும்
      தயிர்- வாவியும் நெய்- அளறும் அடங்கப்
பொட்டத் துற்றி மாரிப் பகை புணர்த்த
      பொரு மா கடல்வண்ணன் பொறுத்த மலை
வட்டத் தடங்கண் மட மான் கன்றினை
      வலைவாய்ப் பற்றிக் கொண்டு குறமகளிர்
கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
266.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோவர்த்தனகிரியைக் குடைகொண்டமை

அம் மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும்
      ஆனாயரும் ஆநிரையும் அலறி
எம்மைச் சரண் ஏன்றுகொள் என்று இரப்ப
      இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை
தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப்
      புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று
கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
274.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோவர்த்தனகிரியைக் குடைகொண்டமை

அரவிற் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு
      அரவப்-பகை ஊர்தி அவனுடைய  
குரவிற் கொடி முல்லைகள் நின்று உறங்கும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடைமேல்
திருவிற் பொலி மறைவாணர் புத்தூர்த்
      திகழ் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவு மனம் நன்கு உடைப் பத்தர் உள்ளார்
      பரமான வைகுந்தம் நண்ணுவரே             
303.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தலைவன்பின் சென்ற மகளைக்குறித்துத் தாய் பலபடி உன்னி

அண்டத்து அமரர் பெருமான்
      ஆழியான் இன்று என்மகளைப்
பண்டப் பழிப்புக்கள் சொல்லிப்
      பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?
கொண்டு குடி- வாழ்க்கை வாழ்ந்து
      கோவலப் பட்டம் கவித்துப்
பண்டை மணாட்டிமார் முன்னே
      பாதுகாவல் வைக்குங் கொல்லோ?
319.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம்

அல்லியம்பூ மலர்க்கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க் கண் மடமானே
எல்லியம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலைகொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்
338.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-1

அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரைக்
குலம் பாழ் படுத்துக் குலவிளக்காய் நின்ற கோன் மலை
சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ- மகளிர்கள் ஆடும் சீர்ச்
சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ் சோலையே
376.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பத்தராய் இறப்பார் பெறும் பேறு

அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி
      ஆவி மூக்கினிற் சோதித்த பின்னைச்
சங்கம் விட்டு அவர் கையை மறித்துப்
      பையவே தலை சாய்ப்பதன் முன்னம்
வங்கம் விட்டு உலவும் கடற் பள்ளி
      மாயனை மதுசூதனை மார்பில்
தங்க விட்டுவைத்து ஆவது ஓர் கருமம்
      சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே
382.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலின் நாமம் இடுதல்

அங்கு ஒரு கூறை அரைக்கு உடுப்பதன் ஆசையால்
மங்கிய மானிட சாதியின் பேர் இடும் ஆதர்காள்
செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்தக்கால்
நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
393.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்டம் என்னும் திருப்பதி

அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்தி
      அழல் உமிழ் ஆழிகொண்டு எறிந்து அங்கு
எதிர் முக அசுரர் தலைகளை இடறும்
      எம் புருடோத்தமன் இருக்கை
சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளிற்
      சங்கரன் சடையினிற் தங்கிக்
கதிர் முகம் மணிகொண்டு இழி புனற் கங்கைக்
      கண்டம் என்னும் கடிநகரே
452.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பண்டன்று பட்டினம் காப்பே

அரவத்து அமளியினோடும்
      அழகிய பாற்கடலோடும்
அரவிந்தப் பாவையும் தானும்
      அகம்படி வந்து புகுந்து
பரவைத் திரை பல மோதப்
      பள்ளி கொள்கின்ற பிரானைப்
பரவுகின்றான் விட்டுசித்தன்
      பட்டினம் காவற் பொருட்டே             
459.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பெருமானைப் போகவிடேன் எனல்

அக்கரை என்னும் அனத்தக் கடலுள்
      அழுந்தி உன் பேர் அருளால்
இக்கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ்
      சேல் என்று கை கவியாய்
சக்கரமும் தடக்கைகளும் கண்களும்
      பீதக ஆடையொடும்
செக்கர் நிறத்துச் சிவப்புடையாய் திரு
      மாலிருஞ் சோலை எந்தாய்
461.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பெருமானைப் போகவிடேன் எனல்

அன்று வயிற்றிற் கிடந்திருந்தே அடி
      மை செய்யல் உற்றிருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டுகொண்டேன் இனிப்
      போக விடுவதுண்டே?
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும்
      திருச் சக்கரம் அதனால்
தென்றித் திசை திசை வீழச் செற்றாய் திரு
      மாலிருஞ் சோலை எந்தாய்
470.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அடிமைப்பட்டுத் தாம் பெற்ற நன்மைகளை நினைத்துக் களித

அனந்தன்பாலும் கருடன்பாலும்
      ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி
      வாழச் செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக்
      கண்கள் அசும்பு ஒழுக
நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன்
      நேமி நெடியவனே
490.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 17   ஆண்டாள்   திருப்பாவை  

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ் செய்யும்
      எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
  எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த
      உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
  உம்பியும் நீயும் உகந்து-ஏலோர் எம்பாவாய்
495.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 22   ஆண்டாள்   திருப்பாவை  

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
      பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
  கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
      திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
      எங்கள்மேல் சாபம் இழிந்து-ஏலோர் எம்பாவாய்
497.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 24   ஆண்டாள்   திருப்பாவை  

அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
      சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
      கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி
      வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
      இன்று யாம் வந்தோம் இரங்கு-ஏலோர் எம்பாவாய்
539.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கூடல் இழைத்தல்

அற்றவன் மருதம் முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையிற்
செற்றவன் திகழும் மதுரைப் பதிக்
கொற்றவன் வரில் கூடிடு கூடலே
540.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கூடல் இழைத்தல்

அன்று இன்னாதன செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல்-கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே
554.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
குயிற் பத்து

அன்று உலகம் அளந்தானை உகந்து
      அடிமைக்கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை
      நலியும் முறைமை அறியேன்
என்றும் இக் காவில் இருந்திருந்து என்னைத்
      ததைத்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல்
      இங்குத்தை நின்றும் துரப்பன்
620.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் இருக்கும் இடத்துக் கொண்டுசெல்க எனல்

அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான்
      அவன்முகத்து அன்றி விழியேன் என்று
செங்கச்சுக் கொண்டு கண் ஆடை ஆர்த்துச்
      சிறு மானிடவரைக் காணில் நாணும்
கொங்கைத்தலம் இவை நோக்கிக் காணீர்
      கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய்
      யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்.
631.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் உகந்த பொருள்கொண்டு காதல்நோய் தணிமின் எனல்

அழிலும் தொழிலும் உருக் காட்டான்
      அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
தழுவி முழுசிப் புகுந்து என்னைச்
      சுற்றிச் சுழன்று போகானால்
தழையின் பொழில்வாய் நிரைப் பின்னே
      நெடுமால் ஊதி வருகின்ற
குழலின் தொளைவாய் நீர் கொண்டு
      குளிர முகத்துத் தடவீரே
636.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் உகந்த பொருள்கொண்டு காதல்நோய் தணிமின் எனல்

அல்லல் விளைத்த பெருமானை
      ஆயர்பாடிக்கு அணி-விளக்கை
வில்லி புதுவைநகர் நம்பி
      விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள்
      வேட்கை உற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள்
      துன்பக் கடலுள் துவளாரே
638.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
விருந்தாவனத்துக் கண்ணனைக் கண்டமை

அனுங்க என்னைப் பிரிவு செய்து
      ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக்
      கோவர்த்தனனைக் கண்டீரே?
கணங்களோடு மின் மேகம்
      கலந்தாற் போல வனமாலை
மினுங்க நின்று விளையாட
      விருந்தாவனத்தே கண்டோமே
652.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழ்வேன் எனல்

அளி மலர்மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை
      அமரர்கள்தம் குழுவும் அரம்பையரும் மற்றும்
தெளி மதி சேர் முனிவர்கள்தம் குழுவும் உந்தித்
      திசை திசையில் மலர் தூவிச் சென்று சேரும்
களி மலர் சேர் பொழில்-அரங்கத்து உரகம் ஏறிக்
      கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும்
ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு என்
      உள்ளம் மிக என்றுகொலோ உருகும் நாளே
667.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கநாதனது அடியார்க்கு அடியேன்

அல்லி மா மலர்-மங்கை நாதன்
      அரங்கன் மெய்யடியார்கள் தம்
எல்லை இல் அடிமைத் திறத்தினில்
      என்றும் மேவு மனத்தனாம்
கொல்லி-காவலன் கூடல்-நாயகன்
      கோழிக்கோன் குலசேகரன்
சொல்லின் இன்தமிழ் மாலை வல்லவர்
      தொண்டர் தொண்டர்கள் ஆவரே
676.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அழகிய மணவாளன்பால் பித்தன் எனல்

அங்கை-ஆழி அரங்கன் அடியிணை
தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாய்க்
கொங்கர்கோன் குலசேகரன் சொன்ன சொல்
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே
707.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
கன்னியர் ஊடிக் கண்ணனை எள்குதல்

அல்லி மலர்த் திருமங்கை கேள்வன்
      தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள்
எல்லிப் பொழுதினில் ஏமத்து ஊடி
      எள்கி உரைத்த உரையதனைக்
கொல்லி நகர்க்கு இறை கூடற்கோமான்
      குலசேகரன் இன்னிசையில் மேவிச்
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்
      சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பந் தானே.
735.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தசரதன் புலம்பல்

அம்மா என்று உகந்து அழைக்கும் ஆர்வச்சொல்
      கேளாதே அணி சேர் மார்வம்
என் மார்வத்திடை அழுந்தத் தழுவாதே
      முழுசாதே மோவாது உச்சி
கைம்மாவின் நடை அன்ன மென்னடையும்
      கமலம் போல் முகமும் காணாது
எம்மானை என் மகனை இழந்திட்ட
      இழிதகையேன் இருக்கின்றேனே
741.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தில்லைச் சித்திரகூடம் இராம சரிதம்

அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
      அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி
      விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்
செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை
      என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே
748.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தில்லைச் சித்திரகூடம் இராம சரிதம்

அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
      அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி
      உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்
      பருகுவோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே
750.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தில்லைச் சித்திரகூடம் இராம சரிதம்

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி
      அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை
வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற
      விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி
சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி நாளும்
      இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே
766.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 15   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடங்கடற் பணத்தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வம் மல்கு சீரினாய்
சங்க வண்ணம் அன்ன மேனி சார்ங்கபாணி அல்லையே?
772.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 21   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

அரங்கனே தரங்க நீர் கலங்க அன்று குன்று சூழ்
மரங்கள் தேய மாநிலம் குலுங்க மாசுணம் சுலாய்
நெருங்க நீ கடைந்தபோது நின்ற சூரர் என் செய்தார்?
குரங்கை ஆள் உகந்த எந்தை கூறு தேற வேறு இதே
786.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 35   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

அம்பு உலாவு மீனும் ஆகி ஆமை ஆகி ஆழியார்
தம்பிரானும் ஆகி மிக்கது அன்பு மிக்கு அது அன்றியும்
கொம்பு அராவு நுண்மருங்குல் ஆயர்-மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என்கொலோ? எம் ஈசனே
825.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 74   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

அறிந்து அறிந்து வாமனன் அடியிணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெண் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீவினைகள் பற்று அறுதல் பான்மையே
846.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 95   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

அடக்கு அரும் புலன்கள் ஐந்து அடக்கி ஆசையாம் அவை
தொடக்கு அறுத்து வந்து நின் தொழிற்கண் நின்ற என்னை நீ
விடக் கருதி மெய்செயாது மிக்கு ஒர் ஆசை ஆக்கிலும்
கடற் கிடந்த நின் அலால் ஒர் கண்ணிலேன் எம் அண்ணலே
866.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 115   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

அத்தன் ஆகி அன்னை ஆகி ஆளும் எம் பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினர்
எத்தினால் இடர்க்கடற் கிடத்தி ஏழை நெஞ்சமே?
868.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 117   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

அச்சம் நோயொடு அல்லல் பல் பிறப்பு அவாய மூப்பு இவை
வைத்த சிந்தை வைத்த ஆக்கை மாற்றி வானில் ஏற்றுவான்
அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன்
நச்சு நாகனைக் கிடந்த நாதன் வேத கீதனே
910.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 39   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

அடிமையிற் குடிமை இல்லா
      அயல் சதுப்பேதிமாரிற்
குடிமையிற் கடைமை பட்ட
      குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய்
      மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும்
      அரங்க மா நகருளானே
914.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 43   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

அமர ஓர் அங்கம் ஆறும்
      வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களிற் தலைவராய
      சாதி-அந்தணர்களேலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில்
      நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும்
      அரங்க மா நகருளானே
923.0   திருப்பள்ளி எழுச்சி -பாசுரம்   பாடல் # 7   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருப்பள்ளி எழுச்சி  

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
      அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
      எம்பெருமான் உன கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
      இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
927.0   அமலன் ஆதிபிரான் -பாசுரம்   பாடல் # 1   திருப்பாணாழ்வார்   அமலன் ஆதிபிரான்  

அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன்
      நீள் மதில் அரங்கத்து அம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே
944.0   கண்ணி நுண் சிறுத்தாம்பு -பாசுரம்   பாடல் # 8   மதுரகவி ஆழ்வார்   கண்ணி நுண் சிறுத்தாம்பு  

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ் அரு மறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
947.0   கண்ணி நுண் சிறுத்தாம்பு -பாசுரம்   பாடல் # 11   மதுரகவி ஆழ்வார்   கண்ணி நுண் சிறுத்தாம்பு  

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே
992.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சாளக்கிராமம்

அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு
      அலற அவள் மூக்கு அயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி
      விண்ணோர் பெருமான் நண்ணார்முன்
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக்
      கல் ஒன்று ஏந்தி இன நிரைக்காத்
தடுத்தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய
      சாளக்கிராமம் அடை நெஞ்சே
1008.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
சிங்கவேழ்குன்றம்

அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரி ஆய் அவுணன்
பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்-
பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேழ்குன்றமே
1009.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
சிங்கவேழ்குன்றம்

அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் அவுணன்
கொலைக் கையாளன் நெஞ்சு இடந்த கூர் உகிராளன் இடம்-
மலைத்த செல் சாத்து எறிந்த பூசல் வன் துடி வாய் கடுப்ப
சிலைக் கை வேடர் தெழிப்பு அறாத சிங்கவேழ்குன்றமே
1025.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 1

அம்பரம் அனல் கால் நிலம் சலம்
      ஆகி நின்ற அமரர்-கோன்
வம்பு உலாம் மலர்மேல் மலி மட
      மங்கை-தன் கொழுநன்-அவன்
கொம்பின் அன்ன இடை மடக் குற
      மாதர் நீள் இதணம்தொறும்
செம் புனம்-அவை காவல் கொள் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே
1073.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவல்லிக்கேணி

அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு
      இளையவன் அணி இழையைச் சென்று
எந்தமக்கு உரிமை செய் என தரியாது
      எம் பெருமான் அருள் என்ன
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்-தம்
      பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை-
      திருவல்லிக்கேணிக் கண்டேனே
1078.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநீர்மலை

அன்று ஆயர் குலக் கொடியோடு அணி மா
      மலர் மங்கையொடு அன்பு அளவி அவுணர்க்கு
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு
      உறையும் இடம் ஆவது-இரும் பொழில் சூழ்
நன்று ஆய புனல் நறையூர் திருவாலி
      குடந்தை தடம் திகழ் கோவல்நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே
1080.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநீர்மலை

அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து
      அடல் ஆழியினால் அணி ஆர் உருவில்
புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள்
      பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில்
பல மன்னர் பட சுடர் ஆழியினைப்
      பகலோன் மறையப் பணிகொண்டு அணிசேர்
நில மன்னனும் ஆய் உலகு ஆண்டவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே
1115.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிடவெந்தை தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை க

அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு
      அழியுமால் என் உள்ளம் என்னும்
புலம் கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும்
      போதுமோ நீர்மலைக்கு என்னும்
குலம் கெழு கொல்லிக் கோமள வல்லி
      கொடி இடை நெடு மழைக் கண்ணி
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய்?
      -இடவெந்தை எந்தை பிரானே
1117.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிடவெந்தை தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை க

அன்னமும் மீனும் ஆமையும் அரியும்
      ஆய எம் மாயனே அருளாய்
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும்
      இடவெந்தை எந்தை பிரானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன்
      மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
      பழவினை பற்று அறுப்பாரே
1131.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பரமேச்சுரவிண்ணகரம்

அண்டமும் எண் திசையும் நிலனும்
      அலை நீரொடு வான் எரி கால் முதலா
உண்டவன் எந்தை பிரானது இடம்
      -ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
விண்டவர் இண்டைக் குழாமுடனே
      விரைந்தார் இரிய செருவில் முனிந்து
பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே
1161.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தில்லைத் திருச்சித்திரகூடம் 1

அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்
      அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த
பெருமான் திருநாமம் பிதற்றி நும்-தம்
      பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து
      கவை நா அரவின்-அணைப் பள்ளியின்மேல்
திருமால் திருமங்கையொடு ஆடு தில்லைத்
      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே
1210.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:3

அஞ்சுவன் வெம் சொல் நங்காய் அரக்கர் குலப் பாவை-தன்னை
வெம் சின மூக்கு அரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே
பஞ்சிய மெல் அடி எம் பணைத் தோளி பரக்கழிந்து
வஞ்சி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்கொலோ?
1214.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:3

அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்
பின்னை-தன் காதலன்-தன் பெருந் தோள் நலம் பேணினளால்
மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள் நடந்து
புன்னையும் அன்னமும் சூழ் புனல் ஆலி புகுவர்கொலோ?
1230.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வகுந்தவிண்ணகரம்

அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்
      அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும்
முண்டம்-அது நிறைத்து அவன்கண் சாபம்-அது நீக்கும்
      முதல்வன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
எண் திசையும் பெருஞ் செந்நெல் இளந் தெங்கு கதலி
      இலைக்கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர்
      வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே
1252.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருத்தேவனார்தொகை

அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் குல வரையும்
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்து அகில் கனகம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திகழ் மண்ணித் தென் கரைமேல்
திண் திறலார் பயில்-நாங்கைத் திருத்தேவனார்தொகையே
1260.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வண்புருடோத்தமம்

அண்டர் ஆனவர் வானவர்-கோனுக்கு என்று
      அமைத்த சோறு-அது எல்லாம்
உண்டு கோ-நிரை மேய்த்து அவை காத்தவன்
      உகந்து இனிது உறை கோயில்-
கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில்
      குல மயில் நடம் ஆட
வண்டு -தான் இசை பாடிடும் நாங்கூர்
      -வண்புருடோத்தமமே
1263.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வண்புருடோத்தமம்

அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன்
      அலர் கொடு தொழுது ஏத்த
கங்கை போதரக் கால் நிமிர்த்தருளிய
      கண்ணன் வந்து உறை கோயில்-
கொங்கை கோங்கு-அவை காட்ட வாய் குமுதங்கள்
      காட்ட மா பதுமங்கள்
மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர்-
      வண்புருடோத்தமமே
1275.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்ச் செம்பொன்செய்கோயில்

அன்றிய வாணன் ஆயிரம் தோளும்
      துணிய அன்று ஆழி தொட்டானை
மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல்
      மேவிய வேத நல் விளக்கை
தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்
      செம்பொன்செய்கோயிலினுள்ளே
மன்று-அது பொலிய மகிழ்ந்து நின்றானை-
      வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே
1320.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி

அண்டர்-கோன் என் ஆனை என்றும்
      ஆயர் மாதர் கொங்கை புல்கு
செண்டன் என்றும் நான்மறைகள்
      தேடி ஓடும் செல்வன் என்றும்
வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை
      மன்னும் மாயன் என்று என்று ஓதி-
பண்டுபோல் அன்று-என் மடந்தை
      பார்த்தன்பள்ளி பாடுவாளே
1322.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி

அரக்கர் ஆவி மாள அன்று
      ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற
குரக்கரசன் என்றும் கோல
      வில்லி என்றும் மா மதியை
நெருக்கும் மாடம் நீடு நாங்கை
      நின்மலன்-தான் என்று என்று ஓதி
பரக்கழிந்தாள் என் மடந்தை
      பார்த்தன்பள்ளி பாடுவாளே
1348.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்புள்ளம்பூதங்குடி

அறிவது அறியான் அனைத்து உலகும்
      உடையான் என்னை ஆள் உடையான்
குறிய மாணி உரு ஆய
      கூத்தன் மன்னி அமரும் இடம்-
நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க
      எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்-
      புள்ளம்பூதங்குடி-தானே     
1387.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 1

அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக்
கல்லின் மன்னு மதிள் மங்கையர்-கோன் கலிகன்றி சொல
்நல் இசை மாலைகள் நால் இரண்டும் இரண்டும் உடன்
வல்லவர்-தாம் உலகு ஆண்டு பின் வான் உலகு ஆள்வரே
1435.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பேர் நகர்

அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி-தன்னுள்
கொம்பு அனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும்
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்த ஆறே
1449.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:1

அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள்
கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே
விண்ணவர் அமுது உண அமுதில் வரும்
பெண் அமுது உண்ட எம் பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே
1498.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:3

அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும்
      அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்
கொம்பு அமரும் வட மரத்தின் இலைமேல் பள்ளி
      கூடினான் திருவடியே கூடகிற்பீர்
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு
      மணி வண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும்
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில்
      திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
1502.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:3

அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர்
      அரி உரு ஆய் இரணியனது ஆகம் கீண்டு
வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு
      விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து
பொன் சிதறி மணி கொணர்ந்து கரைமேல் சிந்திப்
      புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்
தென் தமிழன் வட புலக்கோன் சோழன் சேர்ந்த
      திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
1532.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:6

அகில் குறடும் சந்தனமும் அம் பொன்னும் அணி முத்தும்
மிகக் கொணர்ந்து திரை உந்தும் வியன் பொன்னித் திருநறையூர்-
பகல் கரந்த சுடர் ஆழிப் படையான் இவ் உலகு ஏழும்
புகக் கரந்த திரு வயிற்றன் பொன்-அடியே அடை நெஞ்சே
1555.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:8

அத்தா அரியே என்று உன்னை அழைக்க
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை
முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னை எங்ஙனம் நான் விடுகேனே
1579.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சேறை

அம் புருவ வரி நெடுங் கண் அலர்-மகளை
      வரை அகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனிமேல் இளங் கன்று
      கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பு அலரும் தண் சோலை வண் சேறை
      வான் உந்து கோயில் மேய
எம் பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும்
      என் மனத்தே இருக்கின்றாரே             
1618.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 4

அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த
      அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானைக்
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி
      ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன்
சொன்ன இன் தமிழ் நல் மணிக் கோவை
      தூய மாலை இவை-பத்தும் வல்லார்
மன்னி மன்னவர் ஆய் உலகு ஆண்டு
      மான வெண் குடைக்கீழ் மகிழ்வாரே
1653.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 1

அடித்தலமும் தாமரையே அம் கைகளும் பங்கயமே
      என்கின்றாளால்
முடித்தலமும் பொன் பூணும் என் நெஞ்சத்துள் அகலா
      என்கின்றாளால்
வடித் தடங் கண் மலரவளோ வரை ஆகத்துள் இருப்பாள்?
      என்கின்றாளால்-
கடிக் கமலம் கள் உகுக்கும் கண்ணபுரத்து அம்மானைக்
      கண்டாள்கொலோ?
1661.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 2

அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்-
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ணபுரம் என்று பேசினாள்
உருகினாள் உள்மெலிந்தாள் இது என்கொலோ?
1670.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 3

அரி விரவு முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும்
தெரிவு அரிய மணி மாடத் திருக்கண்ணபுரத்து உறையும்
வரி அரவின் அணைத் துயின்று மழை மதத்த சிறு தறு கண்
கரி வெருவ மருப்பு ஒசித்தாற்கு இழந்தேன்-என் கன வளையே
1755.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணங்குடி

அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை
      அஞ்சிடாதே இட அதற்கு
பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ
      பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்-
      வரையின் மா மணியும் மரகதத் திரளும்
      வயிரமும் வெதிர் உதிர் முத்தும்
திரை கொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும்
      திருக்கண்ணங்குடியுள் நின்றானே
1767.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாகை: அச்சோப்பதிகம்

அன்னமும் கேழலும் மீனும் ஆய
      ஆதியை நாகை அழகியாரை
கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன்
      காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை
      ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவர் ஆய் உலகு ஆண்டு மீண்டும்
      வானவர் ஆய் மகிழ்வு எய்துவரே
1775.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்புல்லாணி: 1

அலமும் ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பர் ஆய்
சலம்-அது ஆகி தகவு ஒன்று இலர் நாம் தொழுதும் எழு-
உலவு கால் நல் கழி ஓங்கு தண் பைம் பொழிலூடு இசை
புலவு கானல் களி வண்டு இனம் பாடு புல்லாணியே
1798.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்குறுங்குடி: 2

அக்கும் புலியின் அதளும் உடையார்-அவர் ஒருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர்போலும்-
தக்க மரத்தின் தாழ் சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள் இறவு உண்ணும் குறுங்குடியே
1867.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பொங்கத்தம் பொங்கோ

அங்கு அவ் வானவர்க்கு ஆகுலம் தீர
      அணி இலங்கை அழித்தவன்-தன்னை
பொங்கு மா வலவன் கலிகன்றி
      புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ் உலகினில்
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர்
      இம்மையே இடர் இல்லை இறந்தால்
தங்கும் ஊர் அண்டமே கண்டு கொள்மின்
      சாற்றினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ
Pages:    1    2  3  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list column name paadal name string %E0%AE%85