| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அடல்
அடல்
அடல்முனை
அடல்விடையே
அடல்வளவர்ஆணையினால்
அமைச்சர்களும்
1.021
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் மலி படை அரி அயனொடும் அறிவு அரியது ஓர் அழல் மலிதரு
சுடர் உருவொடு நிகழ் தர, அவர் வெருவொடு துதி அது செய, எதிர்
விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன் நகர்
திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி திகழுமே.
1.034
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் ஏறு அமரும் கொடி அண்ணல்
மடல் ஆர் குழலாளொடு மன்னும்,
கடல் ஆர் புடை சூழ் தரு, காழி
தொடர்வார் அவர் தூ நெறியாரே.
1.129
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் வந்த வானவரை அழித்து, உலகு
தெழித்து உழலும் அரக்கர்கோமான்
மிடல் வந்த இருபது தோள் நெரிய, விரல்
பணிகொண்டோன் மேவும் கோயில்
நட வந்த உழவர், இது நடவு ஒணா
வகை பரலாய்த்து என்று துன்று
கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல்
கரை குவிக்கும் கழுமலமே.
2.087
2 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் எருது ஏறு உகந்த, அதிரும் கழல்கள் எதிரும்
சிலம்பொடு இசைய,
கடல் இடை நஞ்சம் உண்டு கனிவு உற்ற கண்டன் முனிவு
உற்று இலங்கை அரையன்
உடலொடு தோள் அனைத்தும் முடிபத்து இறுத்தும், இசை
கேட்டு இரங்கி, ஒரு வாள்
நடலைகள் தீர்த்து நல்கி, நமை ஆள வல்ல நறையூரில்
நம்பன் அவனே.
2.118
2 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் உள் ஏறு உய்த்து உகந்தான், அடியார் அமரர்
தொழக்
கடலுள் நஞ்சம் அமுது ஆக உண்ட கடவுள்(ள்), இடம்
திடல் அடங்கச் செழுங் கழனி சூழ்ந்த திலதைப்பதி,
மடலுள் வாழைக்கனி தேன் பிலிற்றும் மதிமுத்தமே.
3.089
3 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் எயிற்று அரக்கனார் நெருக்கி, மாமலை எடுத்து,
ஆர்த்த வாய்கள்
உடல் கெட, திருவிரல் ஊன்றினார் உறைவு இடம் ஒளி கொள் வெள்ள
மடல் இடைப் பவளமும் முத்தமும் தொத்து வண் புன்னை மாடே,
பெடையொடும் குருகு இனம் பெருகு தண் கொச்சையே
பேணு, நெஞ்சே!
4.058
4 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
அடல் விடை ஊர்தி ஆகி, அரக்கன் தோள் அடர ஊன்றி,
கடல் இடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார் தாம்
சுடர்விடு மேனி தன்மேல் சுண்ண வெண் நீறு பூசி,
படர் சடை மதியம் சேர்த்தி, பருப்பதம் நோக்கினாரே.
7.071
7 st/nd Thirumurai
Song # 6
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அடல் விடையினன், மழுவாளினன், அலரால் அணி கொன்றைப்
படரும் சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவைக்-
கடல் இடை இடை கழி அருகினில் கடி நாறு தண் கைதை
மடல் இடை இடை வெண்குருகு எழு மணிநீர் மறைக்காடே.
8.106
8 st/nd Thirumurai
Song # 32
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அடல் கரி போல், ஐம் புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை
விடற்கு அரியாய், விட்டிடுதி கண்டாய்? விழுத் தொண்டர்க்கு அல்லால்
தொடற்கு அரியாய், சுடர் மா மணியே, சுடு தீச் சுழல,
கடல் கரிது ஆய் எழு நஞ்சு அமுது ஆக்கும் கறைக்கண்டனே.
12.090
12 st/nd Thirumurai
Song # 23
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
அடல்முனை மறவர் மடிந்தவர்
அலர்முகம் உயிருள வென்றுறு
படர்சிறை சுலவு கருங்கொடி
படர்வன சுழல்வன துன்றலில்
விடுசுடர் விழிக ளிரும்புசெய்
வினைஞர்தம் உலையின் முகம்பொதி
புடைமிடை கரியிடை பொங்கிய
புகைவிடு தழலை நிகர்த்தன.
12.090
12 st/nd Thirumurai
Song # 37
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
அடல்விடையே றென்ன
அடர்த்தவனைக் கொல்லும்
இடைதெரிந்து தாள்பெயர்க்கும்
ஏனாதி நாதர்
புடைபெயர்ந்த மாற்றான்
பலகை புறம்போக்கக்
கடையவன்தன் நெற்றியின்மேல்
வெண்ணீறு தாங்கண்டார்.
12.410
12 st/nd Thirumurai
Song # 18
சேக்கிழார்
பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
அடல்வளவர்ஆணையினால்
அமைச்சர்களும் புறம்போந்து
கடலனைய நெடும்படையைக்
கைவகுத்து மேற்செல்வார்
படர்வனமும் நெடுங்கிரியும்
பயிலரணும் பொடியாக
மிடலுடைநாற் கருவியுற
வெஞ்சமரம் மிகவிளைத்தார்.
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000