சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல்
ஐயன்,     ஐயன்     ஐந்து     ஐவர்க்     ஐவர்க்கு     ஐம்ப     ஐந்தின்     ஐம்முத     ஐவர்     ஐந்தில்     ஐயைந்து     ஐயைந்தும்     ஐயைந்     ஐம்மலத்     ஐந்தும்     ஐயென்னும்     ஐந்துபே     ஐயர்நீ     ஐயர்     ஐவன     ஐயரே     ஐயவி     ஐயர்நீர்     ஐயர்அங்     ஐயா     ஐய     ஐயன்;     ஐயனே!     ஐ-இரண்டும்,     ஐயன்காண்,     ஐம்பெருமாபூதங்காள்!     ஐயினால்     ஐந்தலைய     ஐத்     ஐவாய்     ஐயனை,     ஐவணம்     ஐவகையர்     ஐ-இரண்டும்     ஐம்     ஐயுற     ஐயபொட்    
1.003   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஐயன், நொய்யன், அணியன், பிணி இல்லவர் என்றும் தொழுது ஏத்த,
செய்யன், வெய்ய படை ஏந்த வல்லான், திருமாதோடு உறை கோயில்
வையம் வந்து பணிய, பிணி தீர்த்து உயர்கின்ற வலி தாயம்
உய்யும் வண்ணம் நினைமின்! நினைந்தால், வினை தீரும்; நலம் ஆமே.

1.093   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஐயன் முதுகுன்றை, பொய்கள் கெட நின்று,
கைகள் கூப்புவீர்! வையம் உமது ஆமே.

3.023   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஐயன்; நல் அதிசயன்; அயன் விண்ணோர் தொழும்
மை அணி கண்டன்; ஆர் வண்ணம், வண்ணவான்;
பை அரவு அல்குலாள் பாகம் ஆகவும்,
செய்யவன்; உறைவு இடம் திரு விற்கோலமே.

5.040   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஐயனே! அழகே! அனல் ஏந்திய
கையனே! கறை சேர்தரு கண்டனே!
மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
ஐயனே, விதியே, அருள்! என்னுமே.

5.060   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஐயனே! அரனே! என்று அரற்றினால்,
உய்யல் ஆம்; உலகத்தவர் பேணுவர்;
செய்ய பாதம் இரண்டும் நினையவே,
வையம் ஆளவும் வைப்பர், மாற்பேறரே.

5.097   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஐயன், அந்தணன், ஆணொடு பெண்ணும் ஆம்
மெய்யன், மேதகு வெண்பொடிப் பூசிய
மை கொள் கண்டத்தன், மான்மறிக் கையினான்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே.

6.016   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஐ-இரண்டும், ஆறு ஒன்றும், ஆனார் போலும்; அறு-மூன்றும், நால்-மூன்றும் ஆனார் போலும்;
செய் வினைகள் நல்வினைகள் ஆனார் போலும்; திசை அனைத்தும் ஆய் நிறைந்த செல்வர் போலும்;
கொய் மலர் அம் கொன்றைச் சடையார் போலும்; கூத்து ஆட வல்ல குழகர் போலும்;
எய்ய வந்த காமனையும் காய்ந்தார் போலும்-இடைமருது மேவிய ஈசனாரே.

6.024   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஐயன்காண், குமரன்காண், ஆதியான்காண்; அடல் மழுவாள் தான் ஒன்று பியில்மேல் ஏந்து
கையன்காண்; கடல் பூதப் படையினான்காண்; கண் எரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான்காண்;
வெய்யன்காண்; தண்புனல் சூழ் செஞ்சடையான்காண்;
வெண் நீற்றான்காண்; விசயற்கு அருள் செய்தான்காண்;
செய்யன்காண்; கரியன்காண்; வெளியோன் தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.

6.027   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஐம்பெருமாபூதங்காள்! ஒருவீர் வேண்டிற்று ஒருவீர் வேண்டீர்! ஈண்டு இவ் அவனி எல்லாம்
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே, நுகர் போகம்; யானேல், வானோர்
உம்பரும் ஆய் ஊழியும் ஆய் உலகு ஏழ் ஆகி
ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல், வானோர்-
தம் பெருமானாய் நின்ற அரனை, காண்பேன்; தடைப்படுவேனாக் கருதித் தருக்கேன்மி(ன்)னே!.

6.061   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஐயினால் மிடறு அடைப்புண்டு, ஆக்கை விட்டு(வ்) ஆவியார் போவதுமே, அகத்தார் கூடி,
மையினால் கண் எழுதி, மாலை சூட்டி, மயானத்தில் இடுவதன் முன், மதியம் சூடும்
ஐயனார்க்கு ஆள் ஆகி, அன்பு மிக்கு(வ்), அகம் குழைந்து, மெய் அரும்பி, அடிகள் பாதம்
கையினால்-தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.

6.086   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஐந்தலைய நாக அணைக் கிடந்த மாலோடு அயன் தேடி நாட(அ)ரிய அம்மான் தன்னை,
பந்து அணவு மெல்விரலாள் பாகத்தானை, பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் தன்னை,
பொந்து உடைய வெண்தலையில் பலி கொள்வானை, பூவணமும் புறம் பயமும் பொருந்தினானை,
சிந்திய வெந்தீவினைகள் தீர்ப்பான் தன்னை, திரு ஆலம்பொழிலானை, சிந்தி, நெஞ்சே!.

6.093   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஐத் தானத்து அக மிடறு சுற்றி ஆங்கே அகத்து அடைந்தால யாதொன்றும் இடுவார் இல்லை;
மைத் தானக் கண் மடவார் தங்களோடு மாயம் மனை   வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்!
பைத் தானத்து ஒண்மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய
நெய்த்தானம் நெய்த்தானம் என்பீர் ஆகில், நிலாவாப் புலால்-தானம் நீக்கல் ஆமே.

7.015   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஐவாய் அரவினை மதி உடன் வைத்த அழகா! அமரர்கள் தலைவா!
எய்வான் வைத்தது ஓர் இலக்கினை அணை தர நினைந்தேன், உள்ளம் உள்ளளவும்;
உய்வான் எண்ணி வந்து உம் அடி அடைந்தேன்; உகவீர் ஆகிலும் உகப்பன்;
நைவான் அன்று, உமக்கு ஆட்பட்டது, அடியேன்; நாட்டியத்தான் குடி நம்பீ! .

7.045   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஐயனை, அத்தனை, ஆள் உடை ஆமாத்தூர் அண்ணலை,
மெய்யனை, மெய்யர்க்கு மெய்ப்பொருள் ஆன விமலனை,
மையனை, மை அணி கண்டனை, வன் தொண்டன்-ஊரன்-சொல்
பொய் ஒன்றும் இன்றிப் புலம்புவார் பொன் கழல் சேர்வரே.

7.051   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஐவணம் ஆம் பகழி உடை அடல் மதனன் பொடி ஆகச்
செவ்வணம் ஆம் திரு நயனம் விழி செய்த சிவமூர்த்தி,
மை அணவு கண்டத்து வளர் சடை எம் ஆரமுதை,
எவ் வணம் நான் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?

7.060   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஐவகையர் அரையர் அவர் ஆகி, ஆட்சிகொண்டு, ஒரு கால் அவர் நீங்கார்;
அவ் வகை அவர் வேண்டுவது ஆனால், அவர் அவர் வழி ஒழுகி, நான் வந்து
செய்வகை அறியேன்; சிவலோகா! தீவணா! சிவனே! எரிஆடீ!
எவ் வகை, எனக்கு உய்வகை? அருளாய் இடைமருது(வ்) உறை எந்தைபிரானே!.

7.103   7 st/nd Thirumurai   Song # 9      
ஐ-இரண்டும் பதினைந்தும் ஒன்று ஆய்க் கூடி அம்பலம் சேர் அம்பலத்துக்கு(கு) ஆதி ஆகிக்
கை இரண்டும் படைத்தார், உன் பாதம் கூப்ப; கனி இருப்பக் காய் கவர்ந்த கடைய னேற்குப்
பொய் இருளைக் கடிந்து, நின்னை வணங்க நல்காய்! புலன் ஐந்தும் தொல் குரம்பை புகவே செய்து(து) இங்கு(கு),
ஐயனே! மாயக்கூத்து(து) ஆட்டு கின்ற ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே.

8.103   8 st/nd Thirumurai   Song # 28   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஐம் புலன் செல விடுத்து, அரு வரைதொறும் போய்,
துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை
அரும் தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்;
ஒன்று உண்டு, இல்லை, என்ற அறிவு ஒளித்தும்;
பண்டே பயில்தொறும், இன்றே பயில்தொறும்,

8.105.08   8 st/nd Thirumurai   Song # 73   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஐய நின்ன தல்ல தில்லை மற்றோர் பற்று வஞ்சனேன்
பொய் கலந்த தல்ல தில்லை பொய்மை யேன்என் எம்பிரான்
மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல் கணே
மெய் கலந்த அன்பர் அன்பெ னக்கும் ஆக வேண்டுமே

8.225   8 st/nd Thirumurai   Song # 48   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
ஐயுற வாய்நம் அகன்கடைக்
   கண்டுவண் டேருருட்டும்
மையுறு வாட்கண் மழவைத்
   தழுவமற் றுன்மகனே
மெய்யுற வாம்இதுன் னில்லே
   வருகெனவெள்கிச்சென்றாள்
கையுறு மான்மறி யோன்புலி
   யூரன்ன காரிகையே.

9.013   9 st/nd Thirumurai   Song # 4   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும்
அழகிய விழியும்வெண்ணீறும்
சைவம்விட் டிட்ட சடைகளும் சடைமேல்
தரங்கமும் சதங்கையும் சிலம்பும்
மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர்
முகமலர்ந்து இருகணீர் அரும்பக்
கைகள்மொட் டிக்கும் என்கொலோ கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே !

10.000   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

10.105   10 st/nd Thirumurai   Song # 17   திருமூலர்   திருமந்திரம்  
ஐந்து தலைப்பறி ஆறு கடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேலறி யோமே. 

10.108   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரே. 

10.305   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே. 

10.402   10 st/nd Thirumurai   Song # 52   திருமூலர்   திருமந்திரம்  
ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தா கமங்களும்
ஐம்ப தெழுத்தேயும் ஆவ தறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.

10.402   10 st/nd Thirumurai   Song # 56   திருமூலர்   திருமந்திரம்  
ஐந்தின் பெருமையே அகலிட மாவதும்
ஐந்தின் பெருமையே ஆலய மாவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே.

10.402   10 st/nd Thirumurai   Song # 65   திருமூலர்   திருமந்திரம்  
ஐந்து கலையில் அகராதி தன்னிலே
வந்த நகராதி மாற்றி மகாராதி
நந்தியை மூலத்தே நாடிப் பரையொடும்
சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே.

10.413   10 st/nd Thirumurai   Song # 16   திருமூலர்   திருமந்திரம்  
ஐம்முத லாக அமர்ந்தெழு சக்கரம்
ஐம்முத லாக அமர்ந்திரீம் ஈறாகும்
ஐம்முத லாகி யவற்றுடை யாளை
மைம்முத லாக வழுத்திடு நீயே.

10.732   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
ஐவர் அமைச்சருள் தொண்ணூற் றறுவர்கள்
ஐவர்உம் மைந்தரும் ஆளக் கருதுவர்
ஐவரும் ஐந்து சினத்தோடே நின்றிடில்
ஐவர்க் கிறையிறுத் தாற்றகி லோமே.

10.733   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
ஐந்தில் ஒடுங்கில் அகலிட மாவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவ மாவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பத மாவது
ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே.

10.803   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஐயைந்து மத்திமை ஆனது சாக்கிரம்
கய்கண்ட பன்னான்கில் கண்டங் கனாஎன்பர்
பொய்கண் டிலாதபுரு டன்னித யஞ்சுழுனை
மெய்கண் டவனுந்தி ஆகும் துரியமே.

10.806   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
ஐயைந்து பத்துடன் ஆனது சாக்கிரம்
கைகண்ட ஐயைந்தில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையில்
மெய்கண் டவன்உந்தி மேவில் துரியமே.

10.806   10 st/nd Thirumurai   Song # 22   திருமூலர்   திருமந்திரம்  
ஐயைந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில்
எய்யும் நனவு கனவு சுழுத்திஆம்
எய்தும்பின் சூக்குமம் எய்பகுதி மாயை
ஐயமுந் தானவன் அத்துரி யத்தனே.

10.807   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
ஐயைந் தொடுங்குமவ் வான்மாவில் ஆன்மாவும்
மெய்கண்டு சுத்தஅவ் வித்தையில் வீடாகும்
துய்யஅவ் வித்தை முதல் மூன்றுந் தொல்சத்தி
ஐயை சிவம் சித்தி ஆம் தோற்றம் அவ்வாறே.

10.807   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
ஐயைந்தும் ஆன்மாவில் ஆறோ டடங்கிடும்
மெய்கண்ட மேல்மூன்றும் மேவும்மெய் யோகத்தில்
கைகண்ட சத்தி சிவபரத் தேகாண
எய்யும் படிஅடங் கும்நாலேழ் எய்தியே.

10.807   10 st/nd Thirumurai   Song # 31   திருமூலர்   திருமந்திரம்  
ஐம்மலத் தாரும் அதித்த சகலத்தர்
ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தர்
ஐம்மலத் தார்சுவர்க் கம்நர காள்பவர்
ஐம்மலத் தார்அர னார்க்கறி வோரே

10.808   10 st/nd Thirumurai   Song # 24   திருமூலர்   திருமந்திரம்  
ஐந்தும் சகலத்(து) அருளால் புரிவுற்றுப்
பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்
நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்
அந்தி யிருள்போல ஐம்மலம் மாறுமே.

10.808   10 st/nd Thirumurai   Song # 25   திருமூலர்   திருமந்திரம்  
ஐயைந்து மட்டுப் பகுதியும் மாயையாம்
பொய்கண்ட மாயேயந் தானும் புருடன்கண்(டு)
எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி
உய்யும் பராவத்தை யுள்உறல் சுத்தமே.

10.819   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
ஐம்ப தறியா தவரும் அவர்சிலர்

உம்பனை நாடி உரைமுப் பதத்திடைச்செம்பர மாகிய வாசி செலுத்திடத்
தம்பர யோகமாய்த் தான்அவன் ஆகுமே.

10.924   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
ஐயென்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்
செய்யுண்டு செய்யின் தெளிவறி வார்இல்லை
மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்
பொய்யொன் றுமின்றிப் புகல்எளி தாமே.

12.000   12 st/nd Thirumurai   Song # 239   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
ஐந்துபே ரறிவுங் கண்களே கொள்ள
அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணமொரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே யாக
இந்துவாழ் சடையான் ஆடுமா னந்த
வெல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
12.020   12 st/nd Thirumurai   Song # 28   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
ஐயர்நீ ரருளிச் செய்த
வண்ணம்யான் செய்வ தற்குப்
பொய்யில்சீர்ப் புதல்வ னில்லை
என்செய்கேன் புகலு மென்ன
மையறு சிறப்பின் மிக்க
மனையவள் தன்னைப் பற்றி
மொய்யலர் வாவி புக்கு 
மூழ்குவாய் எனமொ ழிந்தார்.
12.070   12 st/nd Thirumurai   Song # 20   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
ஐயர் கைதவம் அறிவுறா தவர்கடி தணுகி
எய்தி நோக்குறக் கோவணம் இருந்தவே றிடத்தின்
மையில் சிந்தையர் கண்டிலர் வைத்தகோ வணமுன்
செய்த தென்னென்று திகைத்தனர் தேடுவா ரானார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 34   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
ஐவன அடிசில் வெவ்வே
றமைத்தன புற்பாற் சொன்றி
மொய்வரைத் தினைமென் சோறு
மூங்கில்வன் பதங்கள் மற்றும்
கைவினை எயின ராக்கிக்
கலந்தவூன் கிழங்கு துன்றச்
செய்வரை யுயர்ப்ப வெங்கும்
கலந்தனர் சினவில் வேடர்.
12.180   12 st/nd Thirumurai   Song # 30   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
ஐயரே அம்பலவர்
அருளால்இப் பொழுதணைந்தோம்
வெய்யஅழல் அமைத்துமக்குத்
தரவேண்டி எனவிளம்ப
நையுமனத் திருத்தொண்டர்
நானுய்ந்தேன் எனத்தொழுதார்
தெய்வமறை முனிவர்களும்
தீயமைத்த படிமொழிந்தார்.
12.200   12 st/nd Thirumurai   Song # 13   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
ஐந்து வருடம் அவர்க்கணைய
அங்கம் ஆறும் உடன்நிறைந்த
சந்த மறைகள் உட்படமுன்
தலைவர் மொழிந்த ஆகமங்கள்
முந்தை யறிவின் தொடர்ச்சியினால்
முகைக்கும் மலரின் வாசம்போல்
சிந்தை மலர உடன்மலரும்
செவ்வி யுணர்வு சிறந்ததால்.
12.210   12 st/nd Thirumurai   Song # 383   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஐயர் கோலம்அங் களித்தகன்
றிடஅடித் தொண்டர்
மையல் கொண்டுளம் மகிழ்ந்திட
வருந்திமற் றிங்குச்
செய்ய வேணியர் அருளிது
வோஎனத் தெளிந்து
வையம் உய்ந்திடக் கண்டமை
பாடுவார் மகிழ்ந்து.

12.280   12 st/nd Thirumurai   Song # 39   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஐயவி யுடன்பல அமைத்தபுகை யாலும்
நெய்யகில் நறுங்குறை நிறைத்தபுகை யாலும்
வெய்யதழல் ஆகுதி விழுப்புகையி னாலும்
தெய்வமணம் நாறவரு செய்தொழில் விளைப்பார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 179   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஐயர் நீரவ தரித்திட
இப்பதி அளவில்மா தவமுன்பு
செய்த வாறெனச் சிறப்புரைத்
தருளிஅச் செழும்பதி இடங்கொண்ட
மைகொள் கண்டர்தங் கோயிலி
னுட்புக்கு வலங்கொண்டு வணங்கிப்பார்
உய்ய வந்தவர் செழுந்தமிழ்ப்
பதிகம்அங் கிசையுடன் உரைசெய்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 451   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஐயர்நீர் யாழ்இதனை முரிக்கும தென்
ஆளுடையா ளுடனே கூடச்
செய்யசடை யார்அளித்த திருவருளின்
பெருமையெலாம் தெரிய நம்பால்
எய்தியஇக் கருவியினில் அளவுபடு
மோநந்தம் இயல்புக் கேற்ப
வையகத்தோர் அறிவுறஇக் கருவிஅள
வையின்இயற்றல் வழக்கே என்றார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 363   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஐயர்அங் கணைந்த போதில்
அகிலலோ கத்துள் ளாரும்
எய்தியே செறிந்து சூழ
எதிர்கொண்ட பரவை யார்தாம்
மெய்யுறு நடுக்கத் தோடு
மிக்கெழும் மகிழ்ச்சி பொங்கச்
செய்யதா ளிணைமுன் சேர
விரைவினாற் சென்று வீழ்ந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 132   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
ஐயா றதனைக் கண்டுதொழு
தருளா ரூரர் தமைநோக்கிச்
செய்யாள் பிரியாச் சேரமான்
பெருமாள் அருளிச் செய்கின்றார்
மையார் கண்டர் மருவுதிரு
வையா றிறைஞ்ச மனமுருகி
நையா நின்ற திவ்வாறு
கடந்து பணிவோம் நாமென்ன.
12.460   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
ஐய மின்றி யரிய திருப்பணி
மெய்யி னாற்செய்த வீரத் திருத்தொண்டர்
வைய்யம் உய்ய மணிமன்று ளாடுவார்
செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர்.

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list