சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல்
நீர்     நீரின்     நாகம்     நாகபணம்     நெய்     நா     நாலும்     நீறு     நானாவித     நுகர்     நிழல்     நீதி     நெறி     நல்ல     நெறியில்     நலம்     நறை     நாற்றமலர்மேல்     நறவு     நாற     நெய்தல்,     நாட     நீட     நீடும்     நளிர்     நின்று     நயர்     நதி     நிலனொடு     நாணொடு     நுணங்குமறை     நெடியான்     நூல்     நாற்றம்     நின்     நன்றா     நல்லாரும்     நிழலின்     நோயும்     நல்     நுண்ணியான்,     நாள்     நன்று     நாணம்     நம்பனை,     நகல்     நிழலால்     நொந்த     நீண்ட     நாணார்     நீந்தல்     நறவம்     நினைவார்     நீடு     நோற்றலாரேனும்,     நிறை     நல்லார்,     நல்லார்     நாகத்து     நீத்த     நெடியர்;     நகுவெண்தலை     நாதன்     நீலமாமிடற்று     நிறைவு     நாணாது     நீலம்,     நாகமும்     நனி     நோதல்     நாற்றமலர்     நெருப்பு     நோய்     நினைப்பு     நலன்     நடை     நலிதரு     நித்திலன்     நீரோடு     நகை     நரை     நறு     நாற்ற     நேரும்     நுதலிய     நூற்     நந்தி     நால்வரும்     நேரிழை     நான்பெற்ற     நானும்நின்     நாட்டுக்கு     நெய்நின்     நூலுஞ்     நாடோறும்     நித்தலுந்     நம்பனை     நிற்கின்ற     நூலொன்று     நில்லா     நில்லாது     நடுவுநின்     நடுவுநில்     நெளிந்தார்     நின்றான்     நாதத்தில்     நீரகத்     நின்றுயி     நின்றது     நித்தசங்     நாவிக்குக்     நாசிக்     நிரம்பிய     நாட்டம்     நயனம்     நாத     நடலித்த     நல்வழி     நாடும்     நாடியின்     நின்றன     நின்ற     நற்கொடி     நாயக     நிலைபெற     நூறும்     நீல     நான்கண்ட     நாலுங்     நண்ணும்     நாடவல்     நாவின்     நடம்இரண்     நீரில்     நாவியின்     நாலாம்     நகார     நம்முதல்     நவமும்     நமஅது     நவகுண்ட     நற்சுட     நல்லதென்     நல்லொளி     நின்றஇக்     நல்குந்     நின்றவள்     நின்றாள்     நாடிகள்     நடந்தது     நவிலும்     நாலிதழ்     நிலாமய     நாதனும்     நின்றனள்     நுண்ணறி     நெறியது     நவிற்றுநன்     நின்றிடு     நடந்த     நாடறி     நாலைந்     நவாக்கரி     நவாக்     நலந்தரு     நினைத்திடும்     நேர்தரு     நடந்திடும்     நீர்பணி     நின்றிடும்     நாவுக்கு     நின்றஇச்     நன்மணி     நானென்றும்     நேர்ந்திடும்     நெறிவழி     நண்ணிய     நணுகினும்     நூறு     நீங்காச்     நெறியைப்     நூலும்     நடுவு     நாலுள்நல்ஈ     நெஞ்சு     நாலான     நானென     நான்இது     நானறிந்     நேயத்தே     நினைவதும்     நாலாறு     நவமிகு     நற்குகை     நள்குகைநால்     நின்றும்     நேரறி     நாவிகண்     நாடொறும்     நடக்கின்ற     நியமத்த     நரருஞ்     நின்றவன்     நேரா     நாலா     நாலொரு     நாடிய     நனவாதி     நனவில்     நனவிற்     நனவகத்     நெருப்புண்டு     நித்தம்     நேடிக்கொண்     நவமாம்     நலம்பல     நாசி     நீஅது     நின்மல     நீரிற்     நன்மைவல்     நினைக்கின்     நகழ்வொழிந்     நமாதி     நமஎன்னும்     நாயோட்டு     நாதத்     நெற்றிக்கு     நாதத்தின்     நீத்திரட்     நந்தியை     நணுகில்     நினையும்     நீரின்றிப்     நிலத்தைப்     நின்றார்     நிற்றல்     நமன்வருன்     நினைப்பும்     நாமமொ     நானா     நிறம்பல     நோக்கும்     நின்றனன்     நீரும்     நாடும்,     நிணந்தான்     நொந்திக்     நினையா     நீநின்று     நினைந்திருந்து     நூலறிவு     நேர்ந்தரவங்     நீயுலக     நிலாவிலங்கு     நெடிதாய     நாமாலை     நடக்கிற்     நூற்றனைத்தோர்     நெஞ்சந்     நாணா     நீயிருந்திங்     நந்தா     நந்திமா     நிருதி     நோக்கிலும்     நன்றறிவார்     நற்கழுத்தை     நிலையில்     நம்பால்     நமக்கிசைந்த     நெறிவார்     நின்னியல்பை     நிறைந்தெங்கும்     நெஞ்சே     நடம்ஆடும்     நாக     நாகங்     நெறிதரு     நீலமுண்ட     நக்கிருந்த     நடைகாவல்     நாள்மாலை     நன்றைக்     நானுமென்     நட்டம்நீ     நிறம்பிறிதாய்     நக்கரை     நட்டமா     நயந்தநாள்     நாவாய்     நூறான்     நீயேயா     நலம்பாயு     நானுடைய     நினைமால்     நீரே     நிலைத்திவ்     நினையடைந்தேன்     நெறிவிரவு     நெஞ்சிற்     நிலந்துளங்க     நடமாடி     நஞ்சுமிழ்     நானே     நாமத்தி     நாயனைய     நினையார்     நாமே     நோக்கிற்றுக்     நாமம்     நலந்தர     நிலத்திமை     நடனம்     நல்கும்     நினைவார்க்     நண்ணிப்     நிலாவு     நெஞ்சார்     நேர்த்தமை     நன்னுத     நீரென்னி     நிலத்திடைப்     நாரணன்     நாந்தன     நிழல்படு     நின்றில     நேசனல்     நடஞ்செய்சிற்     நிலத்தில்     நாவார்     நிதியார்     நற்றவன்     நம்பன்     நந்திக்கும்     நன்னக     நாட்டமிட்ட     நகரங்     நிலம்     நாமுகந்     நகுகின்ற     நிதியுறு     நல்கென்     நீட்டுவ     நிலத்துக்கு     நிலவு     நித்திலத்திற்     நாற்றத்தால்     நாடக     நான்முகனே     நீரெதிர்ந்து     நித்தன்     நீக்கரிய     நண்ணு     நெடுநிலத்தைத்     நயந்து     நைவார்     நலமலி     நெகிழ்ச்சியில்     நாப்பொலி     நீதியின்     நீமதித்     நாடே     நன்றும்     நிலவும்     நாய     நெற்றியிற்     நங்கள்     நற்றமிழ்     நரசிங்க     நெருங்குதூ     நிறைகுடந்     நெற்றிவிழி     நக்கான்     நான்மறை     நாவலர்கோன்     நின்றுகோ     நாடுமின்     நாட்டு     நாவலூர்     நாதனா     நெடுஞ்சடை     நல்லொழுக்கந்     நறைகமழுஞ்     நீணிதியாம்     நேர்ந்தவர்     நமக்கு     நதியும்     நாடு     நிலைமை     நாதர்     நெடியோன்     நள்ளார்     நீளிடை     நின்றமுது     நம்முடைய     நெறிகொண்ட     நின்றெங்கு     நண்ணிமாம     நெருங்குபைந்     நீளிடைவிசை     நாடியகழல்     நாணனே     நாணனும்     நெடிதுபோ     நல்லபத     நாணனொடு     நினைத்தனர்     நின்றசெங்     நற்றவராம்     நல்லசெங்     நீவி     நிறைந்தநீ     நலிவாரும்     நாளும்     நட்டம்புரி     நீங்கும்இர     நுதலின்கண்     நாம     நிலத்தின்     நீற்றலர்பே     நனைமருவும்     நாளைப்போ     நின்றவர்அங்     நன்மை     நற்றி     நங்கை     நெஞ்சம்     நன்றி     நிகழும்     நடமே     நேசம்     நறையாற்றுங்     நில்லாத     நாளும்மிகும்     நீறணிந்தார்     நீற்றால்நிறை     நாமார்க்குங்     நஞ்சும்அமு     நஞ்சுகலந்     நீடுதிருத்     நாவுக்     நவமின்     நீடுந்     நீடிய     நீண்டவரை     நன்மைபெரு     நனைந்தனைய     நல்லூரில்     நாலூர்தென்     நீடுபுகழ்த்     நான்மறைநூற்     நீராருஞ்     நண்ணுந்     நீடுதிருக்     நின்றதிருத்     நாலு     நல்லவென     நீடியசீர்க்     நம்பரடி     நின்றமறை     நம்மையுடை     நல்லதாய்     நாவினுக்     நண்ணி     நிறையும்     நாட்டார்     நாமகர     நாமறியோம்     நாவாண்ட     நீராடித்     நள்ளி     நீடுதொண்டர்கள்     நம்பரை     நாலடி     நீடியஅப்பதிகளெலாம்
நிரைமாடத்
    நெடுங்களத்     நித்திலச்     நீணிலைமா     நிகரிலா     நச்சி     நள்ளாற்றில்     நிறைசெல்வத்     நீடுதிருநீலநக்கர்     நான     நீலநக்     நாயனார்உமக்     நிறைகுடந்தூ     நீடியபே     நாவினுக்கு     நீடுதிரு     நம்பர்மகிழ்     நீடுசீர்த்     நின்றவர்     நீர்நாடு     நிலமிசைப்     நோக்கிட     நாதர்தம்     நின்அற     நீடுமெய்ப்     நெருப்பினில்     நீள்நிலைக்கோ     நீடுகாஞ்சி     நீடுதிருப்     நீடுமிசைத்     நெருப்பில்     நிறைந்தாரா     நலம்மலியும்     நற்றவர்தங்     நாட்டுமறை     நீடுநிலைத்     நகர்வ     நிரந்த     நாதரைப்     நீற்றொளி     நற்றவக்     நீரி     நாவ     நம்பியா     நல்லூர்     நித்தமும்     நாதர்பாற்     நாயனார்     நீற்றழகர்     நனிபள்ளி     நின்றியூர்     நலம்பெருகும்     நாலாங்     நீங்குதுயிற்     நம்பி     நாதரும்     நம்பர்தாம்     நங்கைநின்     நாயனை     நாள்தொறும்     நள்ளிருள்     நற்பதியங்     நலஞ்சிறந்த     நெஞ்சின்     நாதன்தன்     நிலவியஅத்     நறையிதழித்     நீரார்     நாம்இங்     நம்பர்     நிறைந்த     நெல்வேலி     நிலைச்செண்டும்     நகர     நாவலர்தம்     நாவலர்மன்     நாகதலத்     நிறையழிந்த     நலம்பெருகுஞ்     நின்றாலும்     நாரணற்கும்     நின்றவூர்ப்     நீண்டசெஞ்     நன்னீர்ப்     நீடல்     நீலம்     நல்லானை,     நம்     நெதியானை,     நொச்சியே,     நீற்றானை,     நெடியானோடு     நீரானை,     நீரானே!     நிலவும்,     நலம்தான்     நெடியாய்!     நடம்     நல     நகு     நெடியானொடு     நிச்சல்     நாடினார்     நெண்பு     நாசம்     நீதியார்,     நல்குரவும்     நீதியர்,     நளிரும்     நச்சித்     நித்தலும்     நாறு     நெற்குன்றம்,     நன்     நீ     நொய்ம்     நன்மையால்     நீருள்     நீணம்     நெடிது     நலச்     நிணம்     நாதன்!     நரையார்     நீலவடிவர்     நச்சு     நாள்பலவும்     நீற்று     நிணம்,     நீதியால்     நெடிய     நிலை     நிற     நஞ்சு     நேரியன்     நெதி     நுணங்கு     நுண்ணிது     நொடி     நெதியம்     நல்லர்,     நம்பனார்,     நீலமாமணி     நேமியானும்,     நட்டத்தோடு     நீலத்து     நனவினும்,     நாதனும்,     நஞ்சினை     நயந்தவர்க்கு     நல்லவர்     நாடி     நல்-தவர்     நனவிலும்     நல்-தமிழ்     நெடியவன்,     நுண்     நிருத்தனார்,     நாண்     நித்திலத்     நாக(அ)ணைத்     நமர்     நெடு     நலியும்     நல்வினைப்     நீடினார்     நலியும்,     நம்புவார்     நெக்கு     நரகம்     நீற்றர்,     நண்ணலார்     நாணும்     நல்லார்கள்     நீதீ!     நன்றியால்     நக்க     நறப்     நாவாய     நிராமய!     நேடும்     நீறு,     நீண்டு     நீற்றினர்,     நிச்சலும்     நிரை     நெற்றி     நிறையவர்     நெருக்கிய     நீக்கிய     நொய்யது     நாடினர்     நக்கம்     நீவாவாயா     நீயாமாநீ     நேணவராவிழ     நேரகழாமித     நிருத்தன்,     நிலத்தவர்,     நறும்பொழில்     நிறைய     நரம்பு     நரியைக்     நெஞ்சே,     நணியானே!     நிரவு     நாடினார்,     நணியார்     நில     நெஞ்சினைத்     நம்பனே!     நீதியால்வாழ     நரி     நாதனார்     நொய்யவர்;     நங்கையைப்     நங்களுக்கு     நீற்றினை     நாகத்தை     நினைக்கின்றேன்,     நான்     நெடியவன்     நாதனாய்     நறுமலர்     நக்கு     நிணத்து     நிருத்தனை,     நாயினும்     நடு     நிலையும்     நில்லாக்     நெய்தல்     நாள்பட்டு     நின்னை     நாடி,     நீதியை,     நிதி     நீரைச்     நல்லனை,     நூலால்     நங்கையாள்     நக்க(அ)அரையனை,     நினைக்கும்     நிறைக்க     நெருப்பினால்     நாவால்     நடையை     நீற்றினான்,     நீள்     நட்டம்     நீற்றின்     நல்லர்;     நாவல்     நீளமா     நீதியைக்     நல்-தவம்     நாரண(ன்)னொடு,     நாக்கொண்டு(ப்)     நம்புவீர்;     நிலையின்     நேச     நிறம்     நறும்     நீரும்,     நெருக்கி,     நெஞ்சில்     நாலின்மேல்     நமச்சிவாயவே     நடலை     நெக்குநெக்கு     நடுக்கத்துள்ளும்,     நீற்றினானை,     நெய்யும்     நமச்சிவாய     நூறுகோடி     நெடியானும்     நோதங்கம்     நோக்காதே     நெளிவு     நில்லாதே     நினைந்து     நீர்த்திரளை     நல்லூரே     நீதிஆய்,     நீற்றினையும்,     நன்றாக     நீப்ப(அ)ரிய     நிலந்தரத்து     நென்னலை     நீண்டவர்க்கு     நோக்க(அ)ரிய     நெற்றித்     நிலைப்பாடே     நறுமாமலர்     நல்லான்     நிலையவன்     நல்-தவத்தின்     நெய்யினொடு     நல்-தவனை,     நினைத்தவர்கள்     நசையானை;     நீற்றவன்     நேசன்     நல்-தவனை;     நறையூரில்     நாடகம்     நள்ளாறும்,     நம்பன்காண்,     நக்கன்     நாரணனும்     நேர்ந்து     நிலா     நாம்     நிற்பனவும்,     நாயேன்     நரம்பினோடு     நிலன்     நாச்     நிற்பானும்,     நாதனுக்கு     நீள     நொந்தா     நானேல்     நாளார்     நெறியே!     நெடியான்,     நிலனே,     நீற்(ற்)று     நிறையனூர்,     நமண     நரைகள்     நோயனை,     நால்-தானத்து     நஞ்சி,     நிறைக்     நில்லாய்,     நினைதரு     நரைப்பு     நமை     நாத்தான்     நெறியும்,     நீதியில்     நெண்டிக்     நமர்,     நத்தார்     நாதனை,     நெற்றிக்கண்     நம்பினார்க்கு     நரியார்     நாத்தானும்     நள்ளாறு,     நோக்குவேன்,     நீசன்     நோக்கு     நந்தம்பாடியில்     நாத!     நான்முகன்     நாடகத்தால்     நினைப்ப     நெடுந்தகை,     நாயேனைத்     நானும்,     நங்காய்!     நாயின்     நாமகள்     நிலம்,     நித்த     நல்காது     நீக்கி,     நினையப்     நிருத்தனே!     நானேயோ     நடித்து,     நங்கைமீர்!     நாதம்     நிற்பார்     நல்வினை     நின்னுடை     நேயத்த     நீங்கரும்     நிருத்தம்     நடனாம்     நீகண்     நறமனை     நரல்வே     நினைவித்துத்     நந்தீ     நற்பகற்     நாகந்     நிழற்றலை     நறைக்கண்     நல்லாய்     நெருப்புறு     நாய்வயி     நீறணி     நிறைதழை     நெஞ்சிட     நீலமே     நீரணங்     நீரோங்கி     நையாத     நீவாரா     நெடியா     நின்றுநினைந்     நினைத்தேன்     நேசமு     நோக்காத     நிட்டையி    
Search limited to first 100
1.001   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி,
ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-
ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்னப்
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

1.002   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீரின் மல்கு சடையன், விடையன், அடையார் தம் அரண் மூன்றும்
சீரின் மல்கு மலையே சிலை ஆக முனிந்தான், உலகு உய்யக்
காரின் மல்கு கடல்நஞ்சம் அது உண்ட கடவுள், இடம் என்பர்
ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே.

1.002   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாகம் வைத்த முடியான், அடி கை தொழுது ஏத்தும் அடியார்கள்
ஆகம் வைத்த பெருமான், பிரமனொடு மாலும் தொழுது ஏத்த
ஏகம் வைத்த எரி ஆய் மிக ஓங்கிய எம்மான், இடம்போலும்
போகம் வைத்த பொழிலின்(ன்) நிழலால் மது வாரும் புகலூரே.

1.004   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாகபணம் திகழ் அல்குல் மல்கும் நன் நுதல் மான்விழி மங்கையோடும்
பூக வளம் பொழில் சூழ்ந்த அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே!
ஏக பெருந்தகை ஆய பெம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய்
மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

1.006   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரிநூல் மறையாளர் ஏத்த,
மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
செய் தவ நால் மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

1.006   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நால் மறையோர் வழிபாடு செய்ய,
மா மருவும் மணிக் கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

1.006   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாலும் குலைக் கமுகு ஓங்கு காழி ஞானசம்பந்தன், நலம் திகழும்
மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன்மேல் மொழிந்த,
சேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
சூலம் வல்லான் கழல் ஏத்து, பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே.

1.008   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு உடையார், நெடுமால் வணங்கும் நிமிர் சடையார், நினைவார் தம் உள்ளம்
கூறு உடையார், உடை கோவணத்தார், குவலயம் ஏத்த இருந்த ஊர் ஆம்
தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு, இனத்தைப்
பாறிடப் பாய்ந்து பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

1.009   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நானாவித உருவான், நமை ஆள்வான், நணுகாதார்
வான் ஆர் திரி புரம் மூன்று எரியுண்ணச் சிலை தொட்டான்,
தேன் ஆர்ந்து எழு கதலிக்கனி உண்பான் திகழ் மந்தி
மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே.

1.015   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் நுரை உந்தி,
பகரா வருபுனல் காவிரி பரவிப் பணிந்து ஏத்தும்,
நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய, நெய்த்தான-
நகரான் அடி ஏத்த, நமை நடலை அடையாவே.

1.015   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிழல் ஆர் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து
அழல் ஆனவன், அனல் அங்கையில் ஏந்தி, அழகு ஆய
கழலான் அடி நாளும் கழலாதே, விடல் இன்றித்
தொழலார் அவர் நாளும் துயர் இன்றித் தொழுவாரே.

1.016   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீதி அறியாத அமண்கையரொடு மண்டைப்
போதியவர் ஓது உரை கொள்ளார் புளமங்கை
ஆதி அவர் கோயில் திரு ஆலந்துறை தொழுமின்!
சாதி மிகு வானோர் தொழு தன்மை பெறல் ஆமே.

1.017   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெறி நீர்மையர், நீள் வானவர், நினையும் நினைவு ஆகி,
அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி,
குறி நீர்மையர் குணம் ஆர்தரு மணம் ஆர்தரு குன்றில்,
எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே.

1.017   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு ஏறிய திருமேனியர், நிலவும் உலகு எல்லாம்
பாறு ஏறிய படு வெண் தலை கையில் பலி வாங்கா,
கூறு ஏறிய மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி,
ஏறு ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

1.018   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்ல மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான்,
அல்லர் என, ஆவர் என, நின்றும் அறிவு அரிய
நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலை ஆர் எம்
செல்வர் அடி அல்லாது, என சிந்தை உணராதே!

1.018   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை
அறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே,
நெறி இல்லவர் குறிகள் நினையாதே, நின்றியூரில்
மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே!

1.020   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலம் மலிதரு மறைமொழியொடு, நதி உறுபுனல், புகை, ஒளி முதல்,
மலர் அவைகொடு, வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு
சலம் மலிதரு மறலிதன் உயிர்கெட, உதைசெய்த அரன் உறை பதி
திலகம் இது! என உலகுகள் புகழ்தரு, பொழில் அணி, திரு மிழலையே.

1.021   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நறை மலிதரும் அளறொடு, முகை, நகு மலர், புகை, மிகு வளர் ஒளி,
நிறை புனல் கொடு, தனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர்
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி
சிறை புனல் அமர் சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே.

1.022   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலம் மிகு திரு இதழி இன்மலர், நகு தலையொடு, கனகியின் முகை
பல, சுர நதி, பட அரவொடு, மதி பொதி சடைமுடியினன்-மிகு
தலம் நிலவிய மனிதர்களொடு தவம் முயல்தரும் முனிவர்கள் தம
மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர் தரு பரமனே.

1.023   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிழல் ஆர் சோலை நீலவண்டு இனம்,
குழல் ஆர், பண் செய் கோலக்கா உளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கல் துயரம் இல்லையே.

1.023   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாற்றமலர்மேல் அயனும், நாகத்தில்
ஆற்றல் அணை மேலவனும், காண்கிலா,
கூற்றம் உதைத்த, குழகன்-கோலக்கா
ஏற்றன்-பாதம் ஏத்தி வாழ்மினே!

1.023   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலம் கொள் காழி ஞானசம்பந்தன்,
குலம் கொள் கோலக்கா உளானையே
வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார்,
உலம் கொள் வினை போய், ஓங்கி வாழ்வரே.

1.025   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நறவு ஆர் புகலி ஞானசம்பந்தன்
செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானைப்
பெறும் ஆறு இசையால் பாடல் இவைபத்தும்
உறுமா சொல்ல, ஓங்கி வாழ்வரே.

1.026   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாற விண்ட நறுமாமலர் கவ்வி,
தேறல் வண்டு திளைக்கும் திருப்புத்தூர்,
ஊறல் வாழ்க்கை உடையார் அவர் போலும்
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே.

1.026   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெய்தல், ஆம்பல், கழுநீர், மலர்ந்து எங்கும்
செய்கள் மல்கு சிவனார் திருப்புத்தூர்,
தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும்
மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே.

1.026   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்ல கேள்வி ஞானசம்பந்தன்
செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர்ச்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும்
அல்லல் தீரும்; அவலம் அடையாவே.

1.027   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாட வல்ல மலரான், மாலும் ஆய்த்
தேட நின்றார், உறையும் திருப் புன்கூர்
ஆட வல்ல அடிகள் அவர் போலும்
பாடல் ஆடல் பயிலும் பரமரே.

1.029   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீட வல்ல நிமிர் புன்சடை தாழ
ஆட வல்ல அடிகள் இடம் ஆகும்,
பாடல் வண்டு பயிலும், நறையூரில்
சேடர் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

1.033   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடும் புனல் கங்கையும் தங்க முடிமேல்,
கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார்
மாடு முழவம் அதிர, மட மாதர்
ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே.

1.033   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு ஆர் திருமேனியர், ஊனம் இலார்பால்
ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான்-
வேறு ஆர் அகிலும், மிகு சந்தனம், உந்தி
ஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே.

1.034   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலம் ஆகிய ஞானசம்பந்தன்
கலம் ஆர் கடல் சூழ் தரு காழி
நிலை ஆக நினைந்தவர் பாடல்
வலர் ஆனவர் வான் அடைவாரே.

1.035   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நளிர் காழியுள் ஞானசம்பந்தன்
குளிர் ஆர் சடையான் அடி கூற,
மிளிர் ஆர் பொழில், வீழி மிழலை
கிளர் பாடல் வல்லார்க்கு இலை, கேடே.

1.038   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நின்று உண் சமணும், நெடுந் தேரர்,
ஒன்று அறியாமை உயர்ந்த
வென்றி அருள் ஆனவன் ஊர் ஆம்
மன்றல் மயிலாடுதுறையே.

1.038   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நயர் காழியுள் ஞானசம்பந்தன்
மயர் தீர் மயிலாடுதுறைமேல்
செயலால் உரை செய்தன பத்தும்
உயர்வு ஆம், இவை உற்று உணர்வார்க்கே.

1.041   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நதி அதன் அயலே நகுதலை மாலை, நாள்மதி, சடைமிசை அணிந்து,
கதி அது ஆக, காளி முன் காண, கான் இடை நடம் செய்த கருத்தர்;
விதி அது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்து ஒலி ஓவாப்
பதி அது ஆகப் பாவையும் தாமும் பாம்புர நன்நகராரே.

1.042   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி, ஓர் ஐந்து
புலனொடு வென்று, பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி,
நலனொடு தீங்கும் தான் அலது இன்றி, நன்கு எழு சிந்தையர் ஆகி,
மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே.

1.043   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் அகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து,
தாரகையின் ஒளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்
போர் அகலம் தரு வேடர் புனத்து இடை இட்ட விறகில்
கார் அகிலின் புகை விம்மும் கற்குடி மா மலையாரே.

1.044   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு மெய் பூசி, நிறை சடை தாழ, நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி,
ஆறுஅது சூடி, ஆடு அரவு ஆட்டி, ஐவிரல் கோவண ஆடை
பால் தரு மேனியர் பூதத்தர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
ஏறு அது ஏறியர்; ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே?

1.044   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர், அவர் இருபோதும்;
ஊணொடு கூடிய உட்கும் நகையால் உரைகள் அவை கொள வேண்டா;
ஆணொடு பெண்வடிவு ஆயினர், பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பூண் நெடு மார்பரோ, பூங்கொடி வாடப் புனை செய்வதோ இவர் பொற்பே?

1.045   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நுணங்குமறை பாடி ஆடி வேடம் பயின்றாரும்,
இணங்கும் மலைமகளோடு இரு கூறு ஒன்று ஆய் இசைந்தாரும்
வணங்கும் சிறுத்தொண்டர் வைகல் ஏத்தும் வாழ்த்தும் கேட்டு,
அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

1.046   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்;
பொடி ஆடு மார்பானை, புரிநூல் உடையானை,
கடி ஆர் கழு நீலம் மலரும் அதிகையுள்,
வெடி ஆர் தலை ஏந்தி, ஆடும், வீரட்டானத்தே.

1.047   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் அடைந்த சடையின்மேல் ஓர் நிகழ்மதி அன்றியும், போய்,
ஊர் அடைந்த ஏறு அது ஏறி உண் பலி கொள்வது என்னே
கார் அடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டு இசைப்ப,
சீர் அடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே?

1.048   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க, நல்கிய நல் அறத்தை,
ஆல் அடைந்த நீழல் மேவி, அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே?

1.048   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு அடைந்த மேனியின் கண் நேரிழையாள் ஒருபால்
கூறு அடைந்த கொள்கை அன்றி, கோல வளர் சடைமேல்
ஆறு அடைந்த திங்கள் சூடி, அரவம் அணிந்தது என்னே
சேறு அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே?

1.050   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் ஒடுங்கும் செஞ்சடையாய்! நின்னுடைய பொன்மலையை
வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனைத்
தேரொடும் போய் வீழ்ந்து அலற, திருவிரலால் அடர்த்த
வார் ஒடுங்கும் கொங்கை பங்கா! வலிவலம் மேயவனே!

1.051   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாற்றம் மிக்க கொன்றை துன்று செஞ்சடைமேல் மதியம்
ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை கொல் ஆம்?
ஊற்றம் மிக்க காலன்தன்னை ஒல்க உதைத்து அருளி,
தோற்றம் ஈறும் ஆகி நின்றாய்! சோபுரம் மேயவனே!

1.052   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நின் அடியே வழிபடுவான், நிமலா! நினைக் கருத,
என் அடியான் உயிரை வவ்வேல்! என்று அடல் கூற்று உதைத்த
பொன் அடியே பரவி, நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

1.052   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர் வாழும் மா மறுகில் சிரபுரக் கோன் நலத்தால்
நாட வல்ல பனுவல்மாலை, ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும், பாட வல்லார் பாவம் பறையுமே.

1.054   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நன்றா நால் மறையானொடு மாலும் ஆய்ச்
சென்றார் போலும், திசை எலாம்
ஒன்றாய்! உள் எரி ஆய் மிக, ஓத்தூர்
நின்றீரே! உமை நேடியே!

1.056   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்லாரும் அவர்; தீயர் எனப்படும்
சொல்லார்; நல்மலர் சூடினார்;
பல் ஆர் வெண் தலைச் செல்வர் எம் பாற்றுறை
எல்லாரும் தொழும் ஈசரே.

1.058   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிழலின் ஆர் மதி சூடிய நீள் சடை
அழலினார், அனல் ஏந்திய
கழலினார், உறையும் கரவீரத்தைத்
தொழ வல்லார்க்கு இல்லை, துக்கமே.

1.059   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நோயும் பிணியும் அருந்துயரமும் நுகர் உடைய வாழ்க்கை ஒழியத் தவம்
வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர்மிசைய நான்முகனும், மண்ணும் விண்ணும்
தாய அடி அளந்தான், காணமாட்டாத் தலைவர்க்கு இடம்போலும் தண் சோலை விண்
தோயும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!

1.060   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல் பதங்கள் மிக அறிவாய்; நான் உன்னை வேண்டுகின்றேன்;
பொற்பு அமைந்த வாய் அலகின் பூவைநல்லாய்! போற்றுகின்றேன்;
சொல்பதம் சேர் மறையாளர் திருத் தோணிபுரத்து உறையும்
வில் பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய்ப் பயலை விளம்பாயே!

1.061   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நறை கொண்ட மலர் தூவி, விரை அளிப்ப, நாள் தோறும்
முறை கொண்டு நின்று, அடியார் முட்டாமே பணி செய்ய,
சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள்,
கறை கொண்ட கண்டத்தான்-கணபதீச்சரத்தானே.

1.061   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நுண்ணியான், மிகப் பெரியான், நோய் உளார் வாய் உளான்,
தண்ணியான், வெய்யான், நம் தலைமேலான், மனத்து உளான்,
திண்ணியான், செங்காட்டங்குடியான், செஞ்சடை மதியக்
கண்ணியான், கண் நுதலான்-கணபதீச்சரத்தானே.

1.062   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாள் ஆய போகாமே, நஞ்சு அணியும் கண்டனுக்கே
ஆள் ஆய அன்பு செய்வோம்; மட நெஞ்சே! அரன் நாமம்
கேளாய்! நம் கிளை கிளைக்கும் கேடு படாத் திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன்-கோளிலி எம்பெருமானே.

1.062   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நன்று நகு நாள்மலரால், நல் இருக்கு மந்திரம் கொண்டு,
ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர்மேல்
கன்றி வரு காலன் உயிர் கண்டு, அவனுக்கு அன்று அளித்தான்-
கொன்றைமலர் பொன் திகழும் கோளிலி எம்பெருமானே.

1.062   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாணம் உடை வேதியனும் நாரணனும் நண்ண ஒணாத்
தாணு, எனை ஆள் உடையான், தன் அடியார்க்கு அன்பு உடைமை
பாணன் இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான்-
கோணல் இளம்பிறைச் சென்னிக் கோளிலி எம்பெருமானே.

1.062   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நம்பனை, நல் அடியார்கள் நாம் உடை மாடு என்று இருக்கும்
கொம்பு அனையாள் பாகன், எழில் கோளிலி எம்பெருமானை,
வம்பு அமரும் தண் காழிச் சம்பந்தன் வண் தமிழ் கொண்டு
இன்பு அமர வல்லார்கள் எய்துவர்கள், ஈசனையே.

1.063   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நகல் ஆர் தலையும் வெண்பிறையும் நளிர் சடை மாட்டு, அயலே
பகலாப் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், பாய் கலை வவ்வுதியே?
அகலாது உறையும் மா நிலத்தில் அயல் இன்மையால், அமரர்
புகலால் மலிந்த பூம் புகலி மேவிய புண்ணியனே!

1.063   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிழலால் மலிந்த கொன்றை சூடி, நீறு மெய் பூசி, நல்ல
குழல் ஆர் மடவார் ஐயம் வவ்வாய், கோல்வளை வவ்வுதியே?
அழல் ஆய் உலகம் கவ்வை தீர, ஐந்தலை நீள் முடிய
கழல் நாகஅரையன் காவல் ஆகக் காழி அமர்ந்தவனே!

1.064   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நன்று தீது என்று ஒன்று இலாத நால்மறையோன், கழலே
சென்று பேணி ஏத்த நின்ற தேவர்பிரான், இடம் ஆம்
குன்றில் ஒன்றி ஓங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர்மேல்
தென்றல் ஒன்றி முன்றில் ஆரும் தென் திருப்பூவணமே.

1.070   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நொந்த சுடலைப் பொடி-நீறு அணிவார், நுதல் சேர் கண்ணினார்,
கந்த மலர்கள் பலவும் நிலவு கமழ் புன்சடை தாழ,
பந்து அண் விரலாள் பாகம் ஆக, படுகாட்டு எரி ஆடும்
எம்தம் அடிகள் கடி கொள் சாரல் ஈங்கோய்மலையாரே.

1.070   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு ஆர் அகலம் உடையார், நிரை ஆர் கொன்றை அரவோடும்
ஆறு ஆர் சடையார், அயில்வெங்கணையால் அவுணர் புரம் மூன்றும்
சீறா எரி செய் தேவர் பெருமான், செங்கண் அடல் வெள்ளை-
ஏறு ஆர் கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

1.071   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் ஆர் முடியர்; கறை கொள் கண்டர்; மறைகள் நிறை நாவர்
பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே,
தேர் ஆர் வீதி முழவு ஆர் விழவின் ஒலியும் திசை செல்ல,
சீர் ஆர் கோலம் பொலியும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

1.071   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீண்ட சடையர்; நிரை கொள் கொன்றை விரை கொள் மலர்மாலை
தூண்டு சுடர் பொன் ஒளி கொள் மேனிப் பவளத்து எழிலார் வந்து
ஈண்டு மாடம், எழில் ஆர் சோலை, இலங்கு கோபுரம்,
தீண்டு மதியம் திகழும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

1.071   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெடியான் பிரமன் நேடிக் காணார் நினைப்பார் மனத்தாராய்,
அடியார் அவரும் அருமா மறையும் அண்டத்து அரரும்
முடியால் வணங்கிக் குணங்கள் ஏத்தி, முதல்வா, அருள்! என்ன,
செடி ஆர் செந்நெல் திகழும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

1.071   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நின்று உண் சமணர், இருந்து உண் தேரர் நீண்ட போர்வையார்,
ஒன்றும் உணரா ஊமர் வாயில் உரை கேட்டு உழல்வீர்காள்!
கன்று உண் பயப்பால் உண்ண முலையில், கபாலம் அயல் வழிய,
சென்று உண்டு ஆர்ந்து சேரும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

1.072   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாணார் அமணர்; நல்லது அறியார்; நாளும் குரத்திகள்,
பேணார் தூய்மை; மாசு கழியார்; பேசேல், அவரோடும்!
சேண் ஆர் மதி தோய் மாடம் மல்கு செல்வ நெடுவீதிக்
கோணாகரம் ஒன்று உடையார் குடந்தைக் காரோணத்தாரே.

1.073   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள்சடைதன் மேல், ஓர்
ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழில் ஆர,
போந்த மென்சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம்
காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே.

1.074   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நறவம் நிறை வண்டு அறை தார்க்கொன்றை நயந்து, நயனத்தால்
சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான்,
புறவம் உறை வண்பதியா, மதியார் புரம் மூன்று எரி செய்த
இறைவன், அறவன், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

1.074   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நினைவார் நினைய இனியான், பனி ஆர் மலர் தூய், நித்தலும்;
கனை ஆர் விடை ஒன்று உடையான்; கங்கை, திங்கள், கமழ்கொன்றை,
புனை வார்சடையின் முடியான்; கடல் சூழ் புறவம் பதி ஆக,
எனை ஆள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

1.074   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடிக் காண்கில்லாப்
படி ஆம் மேனி உடையான், பவளவரை போல்-திருமார்பில்
பொடி ஆர் கோலம் உடையான், கடல் சூழ் புறவம் பதி ஆக,
இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

1.076   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் உளான், தீ உளான், அந்தரத்து உள்ளான், நினைப்பவர் மனத்து
உளான், நித்தமா ஏத்தும்
ஊர் உளான், எனது உரை தனது உரை ஆக, ஒற்றை வெள் ஏறு
உகந்து ஏறிய ஒருவன்-
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அஞ்சிறை
வண்டு இனம் பாடும்
ஏர் உளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்
  பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

1.077   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடு இருஞ்சடைமேல் இளம்பிறை துளங்க, நிழல் திகழ் மழுவொடு, நீறு மெய் பூசி,
தோடு ஒரு காதினில் பெய்து, வெய்து ஆய சுடலையில் ஆடுவர்; தோல் உடை ஆக,
காடு அரங்கு ஆக, கங்குலும் பகலும், கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த,
ஆடுஅரவு ஆட, ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.

1.077   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நோற்றலாரேனும், வேட்டலாரேனும், நுகர் புகர் சாந்தமோடு
ஏந்திய மாலைக்
கூற்றலாரேனும், இன்ன ஆறு என்றும் எய்தல் ஆகாதது ஓர்
இயல்பினை உடையார்;
தோற்றலார் மாலும் நான்முகம் உடைய தோன்றலும், அடியொடு
முடி உற, தங்கள்
ஆற்றலால் காணார் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
ஆட்சி கொண்டாரே.

1.080   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிறை வெண்கொடி மாட நெற்றி நேர் தீண்டப்
பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம், தில்லைச்
சிறைவண்டு அறை ஓவாச் சிற்றம்பலம், மேய
இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே.

1.081   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்லார், தீ மேவும் தொழிலார், நால்வேதஞ்-
சொல்லார், கேண்மையார், சுடர் பொன்கழல் ஏத்த,
வில்லால் புரம் செற்றான் மேவும் பதிபோலும்
கல் ஆர் மதில் சூழ்ந்த காழி நகர்தானே.

1.084   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்லார் அறம் சொல்ல, பொல்லார் புறம்கூற,
அல்லார் அலர் தூற்ற, அடியார்க்கு அருள்செய்வான்;
பல் ஆர் தலைமாலை அணிவான்-பணிந்து ஏத்த,
கல் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.

1.085   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாகத்து அணையானும் நளிர் மா மலரானும்
போகத்து இயல்பினால் பொலிய, அழகு ஆகும்
ஆகத்தவளோடும் அமர்ந்து, அங்கு அழகு ஆரும்
நாகம் அரை ஆர்த்தான்-நல்லம் நகரானே.

1.085   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய
கொலை சேர் மழுவானை, கொச்சை அமர்ந்து ஓங்கு
தலம் ஆர் தமிழ் ஞானசம்பந்தன், சொன்ன
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே.

1.086   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீத்த நெறியானை, நீங்காத் தவத்தானை,
நாத்த நெறியானை, நல்லூர்ப் பெருமானை,
காத்த நெறியானை, கைகூப்பித் தொழுது
ஏத்தும் அடியார்கட்கு இல்லை, இடர்தானே.

1.087   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெடியர்; சிறிது ஆய நிரம்பா மதி சூடும்
முடியர்; விடை ஊர்வர்; கொடியர் மொழி கொள்ளார்;
கடிய தொழில் காலன் மடிய, உதை கொண்ட
அடியர் வடுகூரில் ஆடும் அடிகளே.

1.089   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நகுவெண்தலை ஏந்தி நானாவிதம் பாடிப்
புகுவான் அயம் பெய்ய, புலித்தோல் பியற்கு இட்டுத்
தகுவான்-எருக்கத்தம்புலியூர்த் தகைந்து அங்கே
தொகுவான்; கழல் ஏத்த, தொடரா, வினைதானே.

1.090   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாதன் என்பிர்காள்! காதல் ஒண் புகல்
ஆதிபாதமே ஓதி, உய்ம்மினே!

1.090   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நறவம் ஆர் பொழில் புறவம் நல் பதி
இறைவன் நாமமே மறவல், நெஞ்சமே!

1.092   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு பூசினீர்! ஏறு அது ஏறினீர்!
கூறு மிழலையீர்! பேறும் அருளுமே!

1.093   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நின்று மலர் தூவி, இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே.

1.093   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன்
ஒன்றும் உரை வல்லார் என்றும் உயர்வோரே.

1.094   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீலமாமிடற்று ஆலவாயிலான்
பால் அது ஆயினார் ஞாலம் ஆள்வரே.

1.095   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நின்று உண் சமண், தேரர், என்றும் மருதரை
அன்றி உரை சொல்ல, நன்று மொழியாரே.

1.096   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீதி பேணுவீர்! ஆதி, அன்னியூர்ச்
சோதி, நாமமே ஓதி உய்ம்மினே!

1.096   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிறைவு வேண்டுவீர்! அறவன், அன்னியூர்
மறை உளான், கழற்கு உறவு செய்ம்மினே!

1.098   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள் ஏறு
ஒன்று உடையானை, உமை ஒரு பாகம் உடையானை,
சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்-
குன்று உடையானை, கூற, என் உள்ளம் குளிருமே.

1.098   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாணாது உடை நீத்தோர்களும், கஞ்சி நாள்காலை
ஊணாப் பகல் உண்டு ஓதுவோர்கள், உரைக்கும் சொல்
பேணாது, உறு சீர் பெறுதும் என்பீர்! எம்பெருமானார்
சேண் ஆர் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே!

1.099   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீலம், நெய்தல், தண்சுனை சூழ்ந்த நீள் சோலை,
கோல மஞ்ஞை பேடையொடு ஆடும் குற்றாலம்
காலன் தன்னைக் காலால் காய்ந்த கடவுள் எம்
சூலபாணி, நன்நகர் போலும்; தொழுவீர்காள்!

1.100   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடு அலர் சோதி வெண்பிறையோடு நிரை கொன்றை
சூடலன், அந்திச் சுடர் எரி ஏந்திச் சுடுகானில்
ஆடலன், அம் சொல் அணியிழையாளை ஒருபாகம்
பாடலன், மேய நன்நகர்போலும் பரங்குன்றே.

1.100   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் இடம் கொண்ட நிமிர் சடை தன்மேல் நிரை கொன்றை
சீர் இடம் கொண்ட எம் இறைபோலும், சேய்து ஆய
ஓர் உடம்புள்ளே உமை ஒருபாகம் உடன் ஆகி,
பாரிடம் பாட, இனிது உறை கோயில் பரங்குன்றே.

1.105   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு அணி மேனியனாய், நிரம்பா மதி சூடி, நீண்ட
ஆறு அணி வார்சடையான், ஆரூர் இனிது அமர்ந்தான்-
சேறு அணி மா மலர்மேல் பிரமன் சிரம் அரிந்த, செங்கண்
ஏறு அணி வெள் கொடியான் அவன்-எம்பெருமானே.

1.105   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்ல புனல் புகலித் தமிழ் ஞானசம்பந்தன், நல்ல
அல்லிமலர்க் கழனி ஆரூர் அமர்ந்தானை,
வல்லது ஓர் இச்சையினால், வழிபாடு இவைபத்தும் வாய்க்கச்
சொல்லுதல், கேட்டல், வல்லார் துன்பம் துடைப்பாரே.

Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list