1.002
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குறி கலந்த இசை பாடலினான், நசையால், இவ் உலகு எல்லாம் நெறி கலந்தது ஒரு நீர்மையனாய், எருது ஏறி, பலி பேணி, முறி கலந்தது ஒரு தோல் அரைமேல் உடையான் இடம் மொய்ம் மலரின் பொறி கலந்த பொழில் சூழ்ந்து, அயலே புயல் ஆரும் புகலூரே.
|
1.002
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காது இலங்கு குழையன், இழை சேர் திருமார்பன், ஒருபாகம் மாது இலங்கு திருமேனியினான், கருமானின் உரி ஆடை மீது இலங்க அணிந்தான், இமையோர் தொழ, மேவும் இடம் சோலைப் போதில் அங்கு நசையால் வரிவண்டு இசை பாடும் புகலூரே.
|
1.002
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கழலின் ஓசை, சிலம்பின் ஒலி, ஓசை கலிக்க, பயில் கானில், குழலின் ஓசை குறள்பாரிடம் போற்ற, குனித்தார் இடம் என்பர் விழவின் ஓசை, அடியார் மிடைவு உற்று விரும்பிப் பொலிந்து எங்கும் முழவின் ஓசை, முந் நீர் அயர்வு எய்த முழங்கும் புகலூரே.
|
1.003
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டி, பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறை கோயில் மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலிதாயத்து உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த, நம் உண்மைக் கதி ஆமே.
|
1.003
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கடலில் நஞ்சம் அமுது உண்டு, இமையோர் தொழுது ஏத்த, நடம் ஆடி, அடல் இலங்கை அரையன் வலி செற்று அருள் அம்மான் அமர் கோயில் மடல் இலங்கு கமுகின், பலவின், மது விம்மும் வலி தாயம் உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ, உள்ளத்துயர் போமே.
|
1.004
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கழல் மல்கு பந்தொடு அம்மானை முற்றில் கற்றவர், சிற்றிடைக் கன்னிமார்கள், பொழில் மல்கு கிள்ளையைச் சொல் பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே! எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்பு உறு செல்வம் இது என் கொல் சொல்லாய் மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த, விண் இழி கோயில் விரும்பியதே?
|
1.004
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கன்னியர் ஆடல் கலந்து, மிக்க கந்துக வாடை கலந்து, துங்கப் பொன் இயல் மாடம் நெருங்கு செல்வப் புகலி நிலாவிய புண்ணியனே! இன் இசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே! இது என் கொல் சொல்லாய் மின் இயல் நுண் இடையார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
|
1.004
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காமன் எரிப்பிழம்பு ஆக நோக்கி, காம்பு அன தோளியொடும் கலந்து, பூ மரு நான்முகன் போல்வர் ஏத்த, புகலி நிலாவிய புண்ணியனே! ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான்! இது என்கொல் சொல்லாய் வீ மரு தண் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
|
1.007
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோவண ஆடையும், நீற்றுப்பூச்சும், கொடுமழு ஏந்தலும், செஞ்சடையும், நாவணப் பாட்டும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய் பூவண மேனி இளைய மாதர், பொன்னும் மணியும் கொழித்து எடுத்து, ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?
|
1.008
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குற்றம் அறுத்தார், குணத்தின் உள்ளார், கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார், ஒற்றை விடையினர், நெற்றிக்கண்ணார், உறை பதி ஆகும் செறிகொள் மாடம் சுற்றிய வாசலில் மாதர் விழாச் சொல் கவி பாட, நிதானம் நல்க, பற்றிய கையினர், வாழும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
|
1.009
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கடம் தாங்கிய கரியை அவள் வெருவ உரி போர்த்து, படம் தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழ ஊர் நடம் தாங்கிய நடையார், நல பவளத்துவர் வாய், மேல் விடம் தாங்கிய கண்ணார், பயில் வேணுபுரம் அதுவே.
|
1.010
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரி காலன, குடர் கொள்வன, கழுது ஆடிய காட்டில் நரி ஆடிய நகு வெண் தலை உதையுண்டவை உருள, எரி ஆடிய இறைவர்க்கு இடம் இனவண்டு இசை முரல, அரி ஆடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே.
|
1.011
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்லால் நிழல் கீழாய்! இடர் காவாய்! என வானோர் எல்லாம் ஒரு தேர் ஆய், அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப, வல்லாய் எரி காற்று ஈர்க்கு, அரி கோல், வாசுகி நாண், கல் வில்லால், எயில் எய்தான் இடம் வீழிமிழலையே.
|
1.011
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரத்தால் மலி சிரத்தான்; கரி உரித்து ஆயது ஒரு படத்தான்; புரத்தார் பொடிபட, தன் அடி பணி மூவர்கட்கு ஓவா வரத்தான் மிக அளித்தான்; இடம் வளர் புன்னை முத்து அரும்பி, விரைத் தாது பொன் மணி ஈன்று, அணி வீழிமிழலையே.
|
1.013
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குரவம் கமழ் நறு மென் குழல் அரிவை அவள் வெருவ, பொரு வெங்கரி பட வென்று, அதன் உரிவை உடல் அணிவோன், அரவும், அலைபுனலும், இளமதியும், நகுதலையும், விரவும் சடை அடிகட்கு இடம் விரி நீர் வியலூரே.
|
1.014
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கைம் மா மத கரியின் இனம் இடியின் குரல் அதிர, கொய்ம் மா மலர்ச் சோலை புக மண்டும் கொடுங்குன்றம் அம்மான்! என உள்கித் தொழுவார்கட்கு அருள் செய்யும் பெம்மான் அவன், இமையோர் தொழ, மேவும் பெரு நகரே.
|
1.014
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கூனல் பிறை சடைமேல் மிக உடையான் கொடுங்குன்றைக் கானல் கழுமலமா நகர்த் தலைவன் நல கவுணி, ஞானத்து உயர் சம்பந்தன நலம் கொள் தமிழ் வல்லார், ஊனத்தொடு துயர் தீர்ந்து, உலகு ஏத்தும் எழிலோரே.
|
1.015
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோலம் முடி நெடு மாலொடு, கொய் தாமரை யானும், சீலம் அறிவு அரிது ஆய் ஒளி திகழ்வு ஆய நெய்த்தானம், காலம் பெற, மலர் நீர் அவை தூவித் தொழுது ஏத்தும் ஞாலம் புகழ் அடியார் உடல் உறு நோய் நலியாவே.
|
1.016
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை ஆர் மிடறு உடையான், கமழ் கொன்றைச் சடை முடி மேல் பொறை ஆர் தரு கங்கைப்புனல் உடையான், புளமங்கைச் சிறை ஆர்தரு களி வண்டு அறை பொழில் சூழ் திரு ஆலந் துறையான் அவன், நறை ஆர் கழல் தொழுமின், துதி செய்தே!
|
1.017
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொடி ஆர் நெடுமாடக் குன்றளூரின் கரைக் கோல இடி ஆர் கடல் அடி வீழ்தரும் இடும்பாவனத்து இறையை, அடி ஆயும் அந்தணர் காழியுள் அணி ஞானசம்பந்தன் படியால் சொன்ன பாடல் சொல, பறையும், வினைதானே.
|
1.018
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குழலின் இசை வண்டின் இசை கண்டு, குயில் கூவும் நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில், அழலின் வலன் அங்கையது ஏந்தி, அனல் ஆடும் கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகணே.
|
1.018
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவு ஆக நின்று அங்கு ஒருவிரலால் உற வைத்தான் நின்றியூரை நன்று ஆர்தரு புகலித் தமிழ் ஞானம் மிகு பந்தன் குன்றாத் தமிழ் சொல்லக் குறைவு இன்றி நிறை புகழே.
|
1.019
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கடல் என நிற நெடுமுடியவன் அடுதிறல் தெற, அடி சரண்! என, அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன், அணி கிளர் பிறை, விடம் நிறை மிடறு உடையவன், விரிசடையவன், விடை உடையவன், உமை உடன் உறை பதி கடல் மறுகு உடை உயர் கழுமல வியல் நகர் அதே.
|
1.019
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொழு மலர் உறை பதி உடையவன், நெடியவன், என இவர்களும், அவன் விழுமையை அளவு அறிகிலர், இறை; விரை புணர் பொழில் அணி விழவு அமர் கழுமலம் அமர் கனல் உருவினன் அடி இணை தொழுமவர் அருவினை எழுமையும் இல, நில வகைதனில்; எளிது, இமையவர் வியன் உலகமே.
|
1.021
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கதம் மிகு கரு உருவொடு உகிர் இடை வடவரை கணகண என, மதம் மிகு நெடுமுகன் அமர் வளைமதி திகழ் எயிறு அதன் நுதிமிசை, இதம் அமர் புவி அது நிறுவிய எழில் அரி வழி பட, அருள் செய்த பதம் உடையவன் அமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர், படியிலே.
|
1.021
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குணம் அறிவுகள் நிலை இல, பொருள் உரை மருவிய பொருள்களும் இல, திணம் எனுமவரொடு, செதுமதி மிகு சமணரும், மலி தமது கை உணல் உடையவர், உணர்வு அரு பரன் உறை தரு பதி உலகினில் நல கணம் மருவிய சிவபுரம் நினைபவர் எழில் உரு உடையவர்களே.
|
1.022
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரம் முதலிய அவயவம் அவை கடுவிட அரவு அது கொடு வரு வரல் முறை அணி தருமவன், அடல் வலி மிகு புலி அதள் உடையினன்- இரவலர் துயர் கெடு வகை நினை, இமையவர் புரம் எழில் பெற வளர், மரம் நிகர் கொடை, மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே.
|
1.022
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கதி மலி களிறு அது பிளிறிட உரிசெய்த அதிகுணன்; உயர் பசு பதி அதன்மிசை வரு பசு பதி பல கலை அவை முறை முறை உணர் விதி அறிதரும் நெறி அமர் முனிகணனொடு மிகு தவம் முயல்தரும் அதி நிபுணர்கள் வழிபட, வளர் மறைவனம் அமர் தரு பரமனே.
|
1.022
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை மலி திரிசிகை படை, அடல் கனல் மழு, எழுதர வெறி மறி, முறை முறை ஒலி தமருகம், முடைதலை, முகிழ் மலி கணி, வட முகம், உறைதரு கரன்-உலகினில் உயர் ஒளி பெறு வகை நினைவொடு மலர் மறையவன் மறைவழி வழிபடும் மறைவனம் அமர்தரு பரமனே.
|
1.024
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொங்கு செருந்தி கொன்றைமலர் கூடக் கங்கை புனைந்த சடையார், காழியார், அம் கண் அரவம் ஆட்டுமவர் போல் ஆம் செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரே.
|
1.024
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொல்லை விடைமுன் பூதம் குனித்து ஆடும் கல்லவடத்தை உகப்பார் காழியார், அல்ல இடத்தும் நடந்தார் அவர்போல் ஆம் பல்ல இடத்தும் பயிலும் பரமரே.
|
1.024
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கார் ஆர் வயல் சூழ் காழிக் கோன்தனைச் சீர் ஆர் ஞானசம்பந்தன் சொன்ன பாரார் புகழப் பரவ வல்லவர் ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே.
|
1.025
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கார் ஆர் வண்ணன், கனகம் அனையானும், தேரார் செம்பொன் பள்ளி மேவிய, நீர் ஆர் நிமிர்புன் சடை, எம் நிமலனை ஓராதவர்மேல் ஒழியா, ஊனமே.
|
1.026
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கருக்கம் எல்லாம் கமழும் பொழில் சோலைத் திருக்கொள் செம்மை விழவு ஆர் திருப்புத்தூர் இருக்க வல்ல இறைவர் அவர் போலும் அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே.
|
1.026
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கூறை போர்க்கும் தொழிலார், அமண், கூறல் தேறல் வேண்டா; தெளிமின்! திருப்புத்தூர், ஆறும் நான்கும் அமர்ந்தார் அவர்போலும் ஏறு கொண்ட கொடி எம் இறையாரே.
|
1.027
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரை உலாவு கதிர் மா மணிமுத்தம் திரை உலாவு வயல் சூழ் திருப் புன்கூர், உரையின் நல்ல பெருமான் அவர் போலும் விரையின் நல்ல மலர்ச் சேவடியாரே.
|
1.027
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குண்டு முற்றிக் கூறை இன்றியே பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல் கொளேல்! வண்டு பாட மலர் ஆர் திருப் புன்கூர்க் கண்டு தொழுமின், கபாலிவேடமே!
|
1.028
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோது சாற்றித் திரிவார், அமண் குண்டர், ஓதும் ஓத்தை உணராது எழு, நெஞ்சே! நீதி நின்று நினைவார் வேடம் ஆம் ஆதி சோற்றுத்துறை சென்று அடைவோமே.
|
1.029
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காடும் நாடும் கலக்கப் பலி நண்ணி, ஓடு கங்கை ஒளிர் புன் சடை தாழ, வீடும் ஆக மறையோர் நறையூரில், நீடும் சித்தீச்சுரமே நினை நெஞ்சே!
|
1.029
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்வியாளர், கனகம் அழல் மேனி புல்கு கங்கை புரி புன் சடையான் ஊர், மல்கு திங்கள் பொழில் சூழ், நறையூரில் செல்வர் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே!
|
1.029
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கூர் உலாவு படையான், விடை ஏறி, போர் உலாவு மழுவான், அனல் ஆடி, பேர் உலாவு பெருமான், நறையூரில் சேரும் சித்தீச்சுரமே இடம் ஆமே.
|
1.030
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கயல் ஆர் தடங்கண்ணியொடும் எருது ஏறி அயலார் கடையில் பலி கொண்ட அழகன் இயலால் உறையும் இடம் எண் திசையோர்க்கும் புயல் ஆர் கடல் பூம் புகலி நகர்தானே.
|
1.030
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காது ஆர் கன பொன் குழை தோடு அது இலங்க, தாது ஆர் மலர் தண் சடை ஏற முடித்து, நாதான் உறையும் இடம் ஆவது நாளும் போது ஆர் பொழில் பூம் புகலி நகர்தானே.
|
1.030
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறுத்தான், கனலால் மதில் மூன்றையும் வேவ; செறுத்தான், திகழும் கடல் நஞ்சு அமுது ஆக; அறுத்தான், அயன்தன் சிரம் ஐந்திலும் ஒன்றை; பொறுத்தான்; இடம் பூம் புகலி நகர்தானே.
|
1.031
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கழுவார், துவர் ஆடை கலந்து மெய் போர்க்கும், வழுவாச் சமண் சாக்கியர் வாக்கு அவை கொள்ளேல்! குழு மின்சடை அண்ணல் குரங்கணில் முட்டத்து எழில் வெண் பிறையான் அடி சேர்வது இயல்பே.
|
1.031
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல் ஆர் மதில் காழியுள் ஞானசம்பந்தன் கொல் ஆர் மழு ஏந்தி குரங்கணில் முட்டம் சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆக வல்லார்க்கு எளிது ஆம், பிறவா வகை வீடே.
|
1.032
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் ஆர் கமழ் காழியுள் ஞானசம்பந்தன் எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின்மேல் பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள் விண்ணோர் உலகத்தினில் வீற்றிருப்பாரே.
|
1.033
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கணை நீடு எரி, மால், அரவம், வரை வில்லா, இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர் பிணை மா மயிலும், குயில், சேர் மட அன்னம், அணையும் பொழில் அன்பில் ஆலந் துறையாரே.
|
1.034
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொலை ஆர்தரு கூற்றம் உதைத்து மலையான் மகளோடு மகிழ்ந்தான், கலையார் தொழுது ஏத்திய, காழி தலையால் தொழுவார் தலையாரே.
|
1.035
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரிது ஆகிய நஞ்சு அணி கண்டன், வரிது ஆகிய வண்டு அறை கொன்றை விரி தார் பொழில், வீழி மிழலை உரிதா நினைவார் உயர்வாரே.
|
1.036
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர நீரும் நிலை ஆர் சடையார் இடம் ஆகும் மலை ஆரமும் மா மணி சந்தோடு அலை ஆர் புனல் சேரும் ஐயாறே.
|
1.036
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொக்கின் இறகினொடு வன்னி புக்க சடையார்க்கு இடம் ஆகும் திக்கின் இசை தேவர் வணங்கும் அக்கின் அரையாரது ஐயாறே.
|
1.036
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் கலிக்காழியர் மன்னன்- நலம் ஆர்தரு ஞானசம்பந்தன்- அலை ஆர் புனல் சூழும் ஐயாற்றைச் சொலும் மாலை வல்லார் துயர் வீடே.
|
1.038
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரவு இன்றி நல்மாமலர் கொண்டே இரவும் பகலும் தொழுவார்கள் சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ் வர மா மயிலாடுதுறையே.
|
1.039
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறி வளர் குன்றம் எடுத்தவன் காதல் கண் கவர் ஐங்கணையோன் உடலம் பொறி வளர் ஆர் அழல் உண்ணப் பொங்கிய பூதபுராணர், மறி வளர் அம் கையர், மங்கை ஒரு பங்கர், மைஞ்ஞிறமான் உரி தோல் உடை ஆடை வெறி வளர் கொன்றை அம்தாரார் வேட்கள நன்நகராரே.
|
1.040
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, காதில் ஒர் வெண்குழையோடு புன மலர்மாலை புனைந்து, ஊர் புகுதி என்றே பல கூறி, வனமுலை மாமலை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர், இனமலர் ஏய்ந்தன தூவி, எம்பெருமான் அடி சேர்வோம்.
|
1.040
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரியவன் நான்முகன் கைதொழுது ஏத்த, காணலும் சாரலும் ஆகா எரி உரு ஆகி, ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி, வரி அரவு அல்குல் மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர், விரிமலர் ஆயின தூவி, விகிர்தனது சேவடி சேர்வோம்.
|
1.040
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குண்டு அமணர், துவர்க்கூறைகள் மெய்யில் கொள்கையினார், புறம் கூற, வெண்தலையில் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி, வண்டு அமர் பூங்குழல் மங்கை ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர், தொண்டர்கள் மா மலர் தூவ, தோன்றி நின்றான் அடி சேர்வோம்.
|
1.040
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல் உயர் மாக்கடல் நின்று முழங்கும் கரை பொரு காழி அ மூர் நல் உயர் நால்மறை நாவின் நல் தமிழ் ஞானசம்பந்தன் வல் உயர் சூலமும் வெண்மழுவாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர், சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே.
|
1.041
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொக்கு இறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர், அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள், மிக்க நல் வேத வேள்வியுள் எங்கும் விண்ணவர் விரைமலர் தூவ, பக்கம் பல் பூதம் பாடிட, வருவார் பாம்புர நன் நகராரே.
|
1.041
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கடி படு கமலத்து அயனொடு மாலும், காதலோடு அடிமுடி தேட, செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீவணர்; எம்முடைச் செல்வர்; முடி உடை அமரர் முனிகணத்தவர்கள் முறை முறை அடி பணிந்து ஏத்த, படி அது ஆகப் பாவையும் தாமும் பாம்புர நன்நகராரே.
|
1.041
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குண்டர், சாக்கியரும், குணம் இலாதாரும், குற்றுவிட்டு உடுக்கையர் தாமும், கண்ட ஆறு உரைத்துக் கால் நிமிர்த்து உண்ணும் கையர்தாம் உள்ள ஆறு அறியார்; வண்டு சேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார்; பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன்நகராரே.
|
1.042
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குண்டும் தேரும், கூறை களைந்தும் கூப்பிலர் செப்பிலர் ஆகி மிண்டும் மிண்டர் மிண்டு அவை கண்டு மிண்டு செயாது விரும்பும்! தண்டும் பாம்பும் வெண்தலை சூலம் தாங்கிய தேவர் தலைவர் வண்டும் தேனும் வாழ் பொழில் சோலை மல்கு பெருந்துறையாரே.
|
1.042
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கடை ஆர் மாடம் நன்கு எழு வீதிக் கழுமல ஊரன்-கலந்து நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன்-நல்ல பெருந்துறை மேய படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார் உடையார் ஆகி, உள்ளமும் ஒன்றி, உலகினில் மன்னுவர்தாமே.
|
1.043
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காமரு வார் பொழில் சூழும் கற்குடி மா மலையாரை நா மரு வண்புகழ்க் காழி நலம் திகழ் ஞானசம்பந்தன் பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள் பூ மலி வானவரோடும் பொன்னுலகில் பொலிவாரே.
|
1.044
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை புனை மானுரி-தோல் உடை ஆடை; கனல் சுடரால் இவர் கண்கள்; தலை அணி சென்னியர்; தார் அணி மார்பர்; தம் அடிகள் இவர் என்ன, அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற இலை புனை வேலரோ, ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே?
|
1.044
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, கனல் தரு தூமதிக்கண்ணி புன மலர் மாலை அணிந்து, அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன, வனமலி வண்பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற மனமலி மைந்தரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?
|
1.045
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கேடும் பிறவியும் ஆக்கினாரும், கேடு இலா வீடுமாநெறி விளம்பினார், எம் விகிர்தனார் காடும் சுடலையும் கைக்கொண்டு, எல்லிக் கணப்பேயோடு ஆடும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.
|
1.045
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கந்தம் கமழ் கொன்றைக் கண்ணி சூடி, கனல் ஆடி, வெந்தபொடி-நீற்றை விளங்கப் பூசும் விகிர்தனார் கொந்து அண் பொழில்-சோலை அரவின் தோன்றிக் கோடல் பூத்த, அம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.
|
1.045
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கணையும் வரிசிலையும் எரியும் கூடிக் கவர்ந்து உண்ண, இணை இல் எயில் மூன்றும் எரித்திட்டார், எம் இறைவனார் பிணையும் சிறுமறியும் கலையும் எல்லாம் கங்குல் சேர்ந்து அணையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.
|
1.045
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கவிழ மலை, தரளக் கடகக் கையால் எடுத்தான் தோள் பவழ நுனிவிரலால் பைய ஊன்றிப் பரிந்தாரும் தவழும் கொடிமுல்லை புறவம் சேர நறவம் பூத்து அவிழும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.
|
1.046
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குண்டைக் குறள் பூதம் குழும, அனல் ஏந்தி, கெண்டை பிறழ் தெண் நீர்க் கெடில வடபக்கம், வண்டு மருள் பாட, வளர் பொன் விரி கொன்றை விண்ட தொடையலான் ஆடும், வீரட்டானத்தே.
|
1.046
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரிபுன்புறம் ஆய கழிந்தார் இடுகாட்டில், திரு நின்று ஒரு கையால், திரு ஆம் அதிகையுள், எரி ஏந்திய பெருமான், எரிபுன் சடை தாழ, விரியும் புனல் சூடி, ஆடும், வீரட்டானத்தே.
|
1.046
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல் ஆர் வரை அரக்கன் தடந்தோள் கவின் வாட, ஒல்லை அடர்த்து, அவனுக்கு அருள்செய்து, அதிகையுள், பல் ஆர் பகுவாய நகு வெண்தலை சூடி, வில்லால் எயில் எய்தான் ஆடும், வீரட்டானத்தே.
|
1.047
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொல்லை முல்லை நகையினாள் ஓர் கூறு அது அன்றியும், போய், அல்லல் வாழ்க்கைப் பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னைகொல் ஆம் சொல்ல நீண்ட பெருமையாளர், தொல்கலை கற்று வல்லார், செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே?
|
1.047
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கை அடைந்த மானினோடு கார் அரவு அன்றியும், போய், மெய் அடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தல் என்னே கை அடைந்த களைகள் ஆகச் செங்கழுநீர் மலர்கள் செய் அடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேயவனே?
|
1.047
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண்ணு மூன்றும் உடையது அன்றி, கையினில் வெண்மழுவும் பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே எண்ணும் மூன்று கனலும் ஓம்பி, எழுமையும் விழுமியர் ஆய், திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே?
|
1.047
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குறைபடாத வேட்கையோடு கோல்வளையாள் ஒருபால் பொறை படாத இன்பமோடு புணர்தரும் மெய்ம்மை என்னே இறை படாத மென்முலையார் மாளிகைமேல் இருந்து, சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே?
|
1.048
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணம் ஆகி வந்து, வேடு அடைந்த வேடன் ஆகி, விசயனொடு எய்தது என்னே கோடு அடைந்த மால்களிற்றுக் கோச்செங்கணாற்கு அருள்செய் சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே?
|
1.048
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கார் அடைந்த வண்ணனோடு கனகம் அனையானும், பார் இடந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார், சீர் அடைந்து வந்து போற்ற, சென்று அருள் செய்தது என்னே தேர் அடைந்த மா மறுகின் சேய்ஞலூர் மேயவனே?
|
1.051
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொல் நவின்ற மூ இலைவேல், கூர் மழுவாள் படையன், பொன்னை வென்ற கொன்றைமாலை சூடும் பொற்பு என்னை கொல் ஆம்? அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து, அரை சேர் துன்ன வண்ண ஆடையினாய்! சோபுரம் மேயவனே!
|
1.051
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குற்றம் இன்மை, உண்மை, நீ என்று உன் அடியார் பணிவார், கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை கொல் ஆம்? வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு, அயன் வெண் தலையில் துற்றல் ஆன கொள்கையானே! சோபுரம் மேயவனே!
|
1.052
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கனைத்து எழுந்த வெண்திரை சூழ் கடல் இடை நஞ்சு தன்னைத் தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ! நின்னை மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி, இராப்பகலும் நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
|
1.052
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கூறு கொண்டாய்! மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால் மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே! கொடிமேல் ஏறு கொண்டாய்! சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
|
1.052
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை, அன்றி நின்ற, அரக்கர் கோனை அரு வரைக்கீழ் அடர்த்தாய்! என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி, இராப்பகலும், நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
|
1.054
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குழை ஆர் காதீர்! கொடுமழுவாள் படை உழை ஆள்வீர்! திரு ஓத்தூர் பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார் அழையாமே அருள் நல்குமே!
|
1.054
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கார் அமண், கலிங்கத் துவர் ஆடையர் தேரர், சொல் அவை தேறன் மின்! ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர்ச் சீரவன், கழல் சேர்மினே!
|
1.054
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர் அரும்பு கொன்றை அடிகளை, பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல் விரும்புவார் வினை வீடே.
|
1.056
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கார் ஆர் கொன்றை கலந்த முடியினர், சீர் ஆர் சிந்தை செலச் செய்தார் பாரார் நாளும் பரவிய பாற்றுறை யார், ஆர் ஆதி முதல்வரே.
|
1.057
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காட்டினானும், அயர்த்திடக் காலனை வீட்டினான், உறை வேற்காடு பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர் ஓட்டினார், வினை ஒல்லையே.
|
1.060
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காண் தகைய செங்கால் ஒண் கழி நாராய்! காதலால் பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள் என்று, வளர் சேண் தகைய மணி மாடத் திருத் தோணிபுரத்து உறையும் ஆண்தகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே!
|
1.061
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை இலங்கு மலர்க்குவளை கண் காட்டக் கடிபொழிலின் நறை இலங்கு வயல் காழித் தமிழ் ஞானசம்பந்தன், சிறை இலங்கு புனல் படப்பைச் செங்காட்டங்குடி சேர்த்தும் மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே.
|
1.062
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்-நவிலும் மால்வரையான், கார் திகழும் மாமிடற்றான், சொல்-நவிலும் மாமறையான், தோத்திரம் செய் வாயின் உளான், மின் நவிலும் செஞ்சடையான்; வெண்பொடியான், அம் கையினில் கொல்-நவிலும் சூலத்தான்-கோளிலி எம்பெருமானே.
|
1.063
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கவர் பூம்புனலும் தண் மதியும் கமழ் சடை மாட்டு, அயலே அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாய், ஆய் நலம் வவ்வுதியே? அவர் பூண் அரையர்க்கு ஆதி ஆய அடல் மன்னன் ஆள் மண்மேல் தவர் பூம் பதிகள் எங்கும் ஓங்கும் தங்கு தராயவனே!
|
1.063
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கட்டு ஆர் துழாயன், தாமரையான், என்று இவர் காண்பு அரிய சிட்டார் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், செய் கலை வவ்வுதியே? நட்டார் நடுவே நந்தன் ஆள, நல்வினையால் உயர்ந்த கொட்டாறு உடுத்த தண்வயல் சூழ் கொச்சை அமர்ந்தவனே!
|
1.063
1 st/nd Thirumurai
Song # 12
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கடை ஆர் கொடி நல் மாட வீதிக் கழுமல ஊர்க் கவுணி நடை ஆர் பனுவல் மாலை ஆக ஞானசம்பந்தன்-நல்ல படை ஆர் மழுவன்மேல் மொழிந்த பல்பெயர்ப்பத்தும் வல்லார்க்கு அடையா, வினைகள் உலகில் நாளும்; அமருலகு ஆள்பவரே.
|
1.064
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கடி ஆர் அலங்கல் கொன்றை சூடி, காதில் ஓர் வார்குழையன், கொடி ஆர் வெள்ளை ஏறு உகந்த கோவணவன், இடம் ஆம் படியார் கூடி, நீடி ஓங்கும் பல்புகழால் பரவ, செடி ஆர் வைகை சூழ நின்ற தென்திருப்பூவணமே.
|
1.064
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கூர் ஆர் வாளி சிலையில் கோத்துக் கொடி மதில் கூட்டு அழித்த பார் ஆர் வில்லி, மெல்லியலாள் ஓர் பால் மகிழ்ந்தான், இடம் ஆம் ஆரா அன்பில் தென்னர் சேரர் சோழர்கள் போற்று இசைப்ப, தேர் ஆர் வீதி மாடம் நீடும் தென் திருப்பூவணமே.
|
1.065
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குழலின் ஓசை, வீணை, மொந்தை கொட்ட, முழவு அதிர, கழலின் ஓசை ஆர்க்க, ஆடும் கடவுள் இருந்த இடம் சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண்திரை மொண்டு எறிய, பழி இலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.
|
1.066
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலம் ஆர் கடலுள் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்த குலம் ஆர் கயிலைக்குன்று அது உடையர், கொல்லை எருது ஏறி நலம் ஆர் வெள்ளை, நாளிகேரம், விரியா நறும்பாளை சலம் ஆர் கரியின் மருப்புக் காட்டும் சண்பை நகராரே.
|
Search limited to first 100