சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல்
இலங்கையர்     இலை     இலங்கை     இந்து     இயல்     இகழ்     இழை     இரு     இயல்வு     இசை     இரைக்கும்     இறை     இடி     இருவர்க்கு     இலகும்     இடை     இருவர்தேவரும்     இருளைப்     இழைத்த     இரவில்-திரிவோர்கட்கு     இரும்     இரவன்     இயலும்     இறைவர்     இருவர்     இன்பம்     இளகக்     இடந்த     இன்குரல்     இகழ்ந்து     இலங்கைத்     இட்டம்     இரவணன்     இருந்தஅக்     இருந்தேன்இக்     இருக்கில்     இதுபதி     இணங்கிநின்     இருக்குரு     இருந்தார்     இடிஞ்சில்     இயக்குறு     இன்புறு     இலைநல     இயலுறும்     இருமலுஞ்     இகழ்ந்ததும்     இருந்த     இல்லது     இலயங்கள்     இன்பப்     இறையவன்     இலைப்பொறி     இன்புற்     இட்டான்     இன்புற     இரண்டா     இயம     இட்டதவ்     இளைக்கின்ற     இருபதி     இருக்குந்     இடையொடு     இரண்டினின்     இருநிதி     இருக்கின்ற     இவ்வகை     இடக்கை     இருந்தனள்     இணையார்     இருந்தஇவ்     இயலும்இம்     இயைந்தனள்     இருளும்வெளி     இடங்     இனியதென்     இருளது     இன்பக்     இரவும்     இதுவப்     இந்துவி     இராசியுட்     இட்ட     இருந்தனர்     இருந்தஇச்     இல்லடைந்     இதுபணிந்     இருக்குஞ்     இருட்டறை     இருள்நீக்கி     இருள்சூ     இருவி     இருந்தழு     இமையவர்     இத்தவம்     இசைந்தெழும்     இதயத்தும்     இறப்பும்     இருந்து     இலைதொட்டுப்     இன்பமும்     இழிகுலத்     இறையடி     இலிங்கம     இருளார்ந்த     இலிங்கநற்     இருபத     இந்துவும்     இராப்பக     இயங்கும்     இரதம்     இன்பத்து     இப்பரி     இருந்தேன்     இக்காயம்     இங்கித்தை     இந்தியம்     இலையாம்     இடவகை     இருவினை     இல்லதும்     இடன்ஒரு     இரும்புண்ட     இவன்இல்லம்     இயம்புவன்     இளங்கொளி     இலங்கிய     இடைபிங்     இருதயந்     இடங்கொண்ட     இருவரும்     இடாக்கொண்டு     இரண்டு     இலையில்லை     இருளும்     இல்லனு     இங்குநின்     இனிவார்     இடர்களையா     இறைவனே     இனியோநாம்     இன்று     இதுவன்றே     இங்கிருந்து     இவரைப்     இடப்பால     இருளின்     இல்லும்     இழவாடிச்     இடம்மால்     இருந்தனம்     இருளார்     இழையார்     இமையோர்     இருள்புரி     இடையாலும்     இக்கணக்கு     இட்டிடையும்     இல்லாரை     இடைஇடையே     இன்னிசை     இன்னிசையும்     இன்றன்றே     இடப்பாகம்     இனிதே     இவளுக்கு     இடரீர்     இயம்பாய்     இருந்தவா     இவரே     இசையும்தன்     இடுதினைதின்     இருள்கொண்ட     இறைக்கோ     இல்லை     இடப்பா     இன்றியாம்     இறையாய     இலமலரஞ்     இடமால்     இனியாரும்     இனியவா     இடமாய     இடைதரில்     இதுநீர்     இவள்அப்     இடர்தரு     இலர்கொலாம்     இக்கயங்கொள்     இலவிதழ்வாய்     இருக்கும்     இன்றிருந்து     இயங்குந்     இனியவர்     இடவம்     இடைக்குமின்     இறைத்தார்     இலவவெங்     இன்றுசெய்     இருநில     இடத்துறை     இறையும்     இயலா     இடையு     இருந்தண்     இழைவள     இழைகெழு     இளந்தென்றல்     இரும்பதணம்     இருவேலி     இன்றிவன்     இனியின்     இசையை     இலைமா     இனையவகை     இந்த     இயம்பல     இசைவினா     இருள்மறை     இடம     இருக்கோல     இதற்குமுன்     இன்ன     இன்னவா     இன்றிவர்     இளமையின்     இந்நெறி     இழையணி     இதுவெ     இருவரால்     இயற்பகை     இப்படி     இன்னுயிர்     இங்கது     இம்முனைய     இந்நிலைய     இவ்வாறு     இத்திரு     இவ்வண்ணந்     இத்தனைகா     இவ்வகைவரு     இவர்தமைக்     இளைத்தனர்     இவ்வண்ணம்     இந்தனத்தை     இப்பரிசு     இத்தனை     இதற்கினி     இல்லத்தில்     இவ்வா     இப்படித்தா     இவ்வகையால்     இத்தன்மை     இப்பரிசா     இன்னல்தரும்     இப்பிறவி     இவ்வ     இமமலிய     இக்கந்தை     இறையோன்     இவ்வகைய     இடியுற்றெழும்     இருவினைப்     இந்நாளில்     இத்தன்     இங்ங     இம்மாயப்     இந்நிலைமை     இல்லாளன்     இன்னடிசில்     இன்னிலை     இறவாத     இப்பந்தர்     இரவு     இரும்புவனம்     இந்நி     இத்த     இசைவி     இன்னம்பர்     இறைஞ்சி     இந்நிலை     இங்கெழுந்     இவர்நிலை     இருதிறத்     இன்னன     இருந்தவத்தோர்     இப்படியால்     இன்னவண்ணம்     இம்மையிலே     இறைவர்திருக்     இளமயில்     இன்னணம்     இருந்தஇடைச்     இன்புற்றங்     இனையபல     இஞ்சி     இறைஞ்சிப்     இரந்துதாங்     இந்நிலையில்     இருவருந்     இவன்உயிர்பெற்     இந்தநிலை     இருளாரும்     இந்நியதி     இறைஞ்சுதலும்     இப்பொழுதே     இனிய     இறையுந்     இறைவ     இறைவர்திருத்     இருபெருவேந்     இனைய     இப்பெ     இம்முனையர்     இவ்வகையே     இந்நெறியால்     இனையகடுஞ்     இடங்கழியார்     இரக்கம்     இலங்கைக்கு     இத்     இராவணன்     இளி     இரக்கம்(ம்)     இறைவன்     இலையின்     இறைவனை,     இடம்     இருந்தவன்     இலங்கு     இலவம்,     இரவொடு,     இடரினும்,     இகல்     இன்பு     இயமன்     இகழும்     இறையவன்,     இமயம்     இறைக்     இனது     இங்கு     இலைத்     இச்சையர்,     இட்டு     இளமதி     இசைந்த     இடறினார்,     இரும்பு     இறுமாந்து     இடுக்கண்     இல்     இந்திரனோடு     இரப்பவர்க்கு     இலவின்     இரவியும்,     இந்திரன்     இழிவித்த     இடைவித்த     இழித்தன     இருள்     இகழ்ந்தவன்     இடுக்கு     இவள்     இம்மை     இல்லக்     இம்மை,     இழுக்கின்     இண்டை     இரவனை,     இறைவனார்,     இமையா     இடுகுநுண்     இரா     இடுவார்     இரங்கா     இளைய     இன்பமும்,     இரண்டும்     இன்னம்     இள     இட்டது,     இடபம்     இணர்ந்து     இயக்கர்,     இளமை     இறந்தார்க்கும்     இடிப்பான்     இல்லானை,     இயல்பு     இறவாதே     இடர்,     இந்திரத்தை     இடர்     இண்டைச்     இறுத்தானை,     இமையாது     இலம்;     இம்     இகழ்ந்தானை     இணை     இழவு     இழைக்கும்(ம்)     இரவத்து     இழித்து     இறைகளோடு     இந்திரனுக்கும்     இட்டிது     இளைப்பு     இறைவன்!     இலவ     இட்டன்     இங்ஙனம்     இரவி     இறங்கிச்     இறந்தார்     இலையால்,     இந்திரன்,     இந்திரியத்     இணைப்பு     இடரைக்     இழித்தனன்     இருப்பு     இருதலைக்     இந்திரனும்,     இப்     இன்     இரங்கும்     இரந்து     இன்று,     இயக்கிமார்     இந்திரிய     இடக்கும்     இருங்களி     இரத     இன்னற     இங்கய     இறவரை     இளையா     இருந்துதி     இரவணை     இறுமாப்     இயன்மன்னும்     இடர்கெடுத்     இணங்கிலா     இத்தெய்வ     இவளைவார்     இவ்வரும்     இருந்திரைத்     இப்பாடல்     இந்திர     இலையார்     இளமென்     இறைவனை    
Search limited to first 100
1.004   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண் தோள் இற்று அலற விரல் ஒற்றி, ஐந்து
புலம் களை கட்டவர் போற்ற, அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே!
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே! இது என்கொல் சொல்லாய்
விலங்கல் ஒண் மாளிகை சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

1.006   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்குத் தின்னும்
நிலை அமண் தேரரை நீங்கி நின்று, நீதர் அல்லார் தொழும் மா மருகல்,
மலைமகள் தோள் புணர்வாய்! அருளாய் மாசு இல் செங்காட்டங்குடி அதனுள்
கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

1.007   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலங்கை இராவணன் வெற்பு எடுக்க, எழில் விரல் ஊன்றி, இசை விரும்பி,
நலம் கொளச் சேர்ந்த, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
புலன்களைச் செற்று, பொறியை நீக்கி, புந்தியிலும் நினைச் சிந்தைசெய்யும்
அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

1.008   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இந்து அணையும் சடையார், விடையார், இப் பிறப்பு என்னை அறுக்க வல்லார்,
வந்து அணைந்து இன் இசை பாடுவார் பால் மன்னினர், மன்னி இருந்த ஊர் ஆம்
கொந்து அணையும் குழலார் விழவில் கூட்டம் இடை இடை சேரும் வீதி,
பந்து அணையும் விரலார்தம் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

1.012   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இயல் ஆடிய பிரமன் அரி இருவர்க்கு அறிவு அரிய,
செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன்-
புயல் ஆடு வண்பொழில் சூழ் புனல் படப்பைத் தடத்து அருகே
முயல் ஓட, வெண் கயல் பாய் தரு முதுகுன்று அடைவோமே.

1.016   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலங்கை மனன் முடி தோள் இற, எழில் ஆர் திருவிரலால்
விலங்கல் இடை அடர்த்தான் இடம் வேதம் பயின்று ஏத்தி,
புலன்கள் தமை வென்றார் புகழவர் வாழ் புளமங்கை,
அலங்கல் மலி சடையான் இடம் ஆலந்துறை அதுவே.

1.020   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இகழ் உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி சமண்விரகினர்,
திகழ் துவர் உடை உடல் பொதிபவர், கெட, அடியவர் மிக அருளிய
புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய புவி
திகழ் சுரர்தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ் திரு மிழலையே.

1.022   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில் உருவினன்;
முழையினில் மிகு துயில் உறும் அரி முசிவொடும் எழ, முளரியொடு எழு
கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன்-இருள் உறும்
மழை தவழ் தரு பொழில் நிலவிய மறைவனம் அமர் தரு பரமனே.

1.022   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இரு நிலன் அது புனல் இடை மடிதர, எரி புக, எரி அது மிகு
பெரு வளியினில் அவிதர, வளி கெட, வியன் இடை முழுவதும் கெட,
இருவர்கள் உடல் பொறையொடு திரி எழில் உரு உடையவன்-இனமலர்
மருவிய அறுபதம் இசை முரல் மறைவனம் அமர் தரு பரமனே.

1.022   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இயல்வு அழிதர, விது செலவு உற, இனமயில் இறகு உறு தழையொடு
செயல் மருவிய சிறு கடம் முடி அடை கையர், தலை பறிசெய்து தவம்
முயல்பவர், துவர்படம் உடல் பொதிபவர், அறிவு அரு பரன் அவன்-அணி
வயலினில் வளை வளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே.

1.026   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இசை விளங்கும் எழில் சூழ்ந்து, இயல்பு ஆகத்
திசை விளங்கும் பொழில் சூழ் திருப்புத்தூர்,
பசை விளங்கப் படித்தார் அவர் போலும்
வசை விளங்கும் வடி சேர் நுதலாரே.

1.030   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இரைக்கும் புனல் செஞ்சடை வைத்த எம்மான் தன்-
புரைக்கும் பொழில் பூம் புகலி நகர் தன் மேல்
உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன் ஒண் மாலை
வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே.

1.031   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இறை ஆர் வளையாளை ஒரு பாகத்து அடக்கி,
கறை ஆர் மிடற்றான்; கரி கீறிய கையான்;
குறை ஆர் மதி சூடி குரங்கணில் முட்டத்து
உறைவான்; எமை ஆள் உடை ஒண் சுடரானே.

1.034   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இடி ஆர் குரல் ஏறு உடை எந்தை
துடி ஆர் இடையாளொடு துன்னும்,
கடி ஆர் பொழில் சூழ்தரு, காழி
அடியார் அறியார், அவலமே.

1.034   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இருவர்க்கு எரி ஆகி நிமிர்ந்தான்
உருவில் பெரியாளொடு சேரும்,
கரு நல் பரவை கமழ், காழி
மருவ, பிரியும், வினை மாய்ந்தே.

1.037   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இடி ஆர் கடல் நஞ்சு அமுது உண்டு
பொடி ஆடிய மேனியினான் ஊர்
அடியார் தொழ, மன்னவர் ஏத்த,
படியார் பணியும் பனையூரே.

1.037   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலகும் முடிபத்து உடையானை
அல்லல் கண்டு அருள் செய்த எம் அண்ணல்,
உலகில் உயிர் நீர் நிலம் மற்றும்
பல கண்டவன், ஊர் பனையூரே.

1.054   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இடை ஈர் போகா இளமுலையாளை ஓர்
புடையீரே! புள்ளிமான் உரி
உடையீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர்ச்
சடையீரே! உம தாளே.

1.055   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இருவர்தேவரும் தேடித் திரிந்து, இனி
ஒருவரால் அறிவு ஒண்ணிலன்,
மருவு நீள்கழல் மாற்பேற்று அடிகளைப்
பரவுவார் வினை பாறுமே.

1.059   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பு ஆய வாழ்க்கை ஒழியத் தவம்
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம், நீள் கழலே நாளும் நினைமின்!சென்னிப்
பிறை, சூழ் அலங்கல் இலங்கு கொன்றை, பிணையும் பெருமான் பிரியாத நீர்த்
துறை சூழ் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!

1.066   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இருளைப் புரையும் நிறத்தின் அரக்கன் தனை ஈடு அழிவித்து,
அருளைச் செய்யும் அம்மான்-ஏர் ஆர் அம் தண்கந்தத்தின்
மருளைச் சுரும்பு பாடி, அளக்கர் வரை ஆர் திரைக்கையால்-
தரளத்தோடு பவளம் ஈனும் சண்பை நகராரே.

1.069   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இழைத்த இடையாள் உமையாள் பங்கர், இமையோர் பெருமானார்,
தழைத்த சடையார், விடை ஒன்று ஏறித் தரியார் புரம் எய்தார்
பிழைத்த பிடியைக் காணாது ஓடிப் பெருங்கை மதவேழம்
அழைத்துத் திரிந்து, அங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே.

1.081   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இரவில்-திரிவோர்கட்கு இறை தோள் இணைபத்தும்
நிரவி, கர வாளை நேர்ந்தான் இடம் போலும்
பரவித் திரிவோர்க்கும் பால் நீறு அணிவோர்க்கும்
கரவு இல்-தடக்கையார் காழி நகர்தானே.

1.082   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இரும் பொன்மலை வில்லா, எரி அம்பா, நாணில்,-
திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில்
தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும்
விரும்பி எதிர்கொள்வார் வீழி மிழலையே.

1.082   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இரவன் பகலோனும் எச்சத்து இமையோரை
நிரவிட்டு, அருள் செய்த நிமலன் உறை கோயில்
குரவம், சுரபுன்னை, குளிர் கோங்கு, இள வேங்கை,
விரவும் பொழில் அம் தண் வீழி மிழலையே.

1.088   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இயலும் விடை ஏறி, எரி கொள் மழு வீசி,
கயலின் இணைக்கண்ணாள் ஒருபால் கலந்து ஆட,
இயலும் இசையானை, எழில் ஆப்பனூரானைப்
பயிலும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

1.089   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலை ஆர் தரு சூலப்படை எம்பெருமானாய்,
நிலையார் மதில் மூன்றும் நீறு ஆய் விழ எய்த
சிலையான்-எருக்கத்தம்புலியூர்த் திகழ் கோயில்
கலையான்; அடி ஏத்த, கருதா, வினைதானே.

1.092   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இறைவர் ஆயினீர்! மறை கொள் மிழலையீர்!
கறை கொள் காசினை முறைமை நல்குமே!

1.093   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே.

1.095   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இருவர்க்கு எரி ஆய உருவம் மருதரைப்
பரவி ஏத்துவார் மருவி வாழ்வரே.

1.096   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இன்பம் வேண்டுவீர்! அன்பன், அன்னியூர்
நன்பொன் என்னுமின், உம்பர் ஆகவே!

1.096   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இருவர் நாடிய அரவன் அன்னியூர்
பரவுவார், விண்ணுக்கு ஒருவர் ஆவரே.

1.102   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இளகக் கமலத்து ஈன் கள் இயங்கும் கழி சூழ,
களகப் புரிசைக் கவின் ஆர் சாரும் கலிக் காழி,
அளகத் திரு நன்நுதலி பங்கா! அரனே! என்று
உளகப் பாடும் அடியார்க்கு உறு நோய் அடையாவே.

1.103   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இடந்த பெம்மான் ஏனம் அது ஆயும், அனம் ஆயும்,
தொடர்ந்த பெம்மான்; மதி சூடி; வரையார்தம்
மடந்தை பெம்மான்; வார்கழல் ஓச்சிக் காலனைக்
கடந்த பெம்மான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.

1.110   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலை மலி பொழில் இடைமருது இறையை
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
பலம் மிகு தமிழ் இவைபத்தும் வல்லார்
உலகு உறு புகழினொடு ஓங்குவரே.

1.112   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இன்குரல் இசை கெழும் யாழ் முரலத்
தன் கரம் மருவிய சதுரன் நகர்
பொன் கரை பொரு பழங்காவிரியின்
தென் கரை மருவிய சிவபுரமே.

1.113   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இகழ்ந்து அரு வரையினை எடுக்கல் உற்று, ஆங்கு
அகழ்ந்த வல் அரக்கனை அடர்த்த பாதம்
நிகழ்ந்தவர், நேடுவார், நேடச் செய்தே
திகழ்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே.

1.117   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலங்கைத் தலைவனை, ஏந்திற்று, இறுத்தது, இரலை; இல்-நாள்,
கலங்கிய கூற்று, உயிர் பெற்றது மாணி, குமை பெற்றது;
கலம் கிளர் மொந்தையின், ஆடுவர், கொட்டுவர், காட்டு அகத்து;
சலம் கிளர் வாழ் வயல் சண்பையுள் மேவிய தத்துவரே.

1.123   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இட்டம் அது அமர் பொடி இசைதலின், நசை பெறு
பட்டு அவிர் பவள நல்மணி என அணி பெறு
விட்டு ஒளிர் திரு உரு உடையவன்-விரைமலர்
மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே.

1.123   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இரவணன் இருபதுகரம் எழில் மலைதனின்
இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து,
இரவணம் அமர் பெயர் அருளினன்-நகநெதி
இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே.

1.123   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலை மலிதர மிகு துவர் உடையவர்களும்,
நிலைமையில் உணல் உடையவர்களும், நினைவது
தொலை வலி நெடுமறை தொடர் வகை உருவினன்-
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே.

1.124   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இரு நிலம் இதன் மிசை எழில் பெறும் உருவினர்
கரு மலிதரு மிகு புவி முதல் உலகினில்
இருள் அறு மதியினர், இமையவர் தொழுது எழு
நிருபமன், மிழலையை நினைய வல்லவரே.

1.131   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இழை மேவு கலை அல்குல் ஏந்திழையாள் ஒருபால் ஆய், ஒருபால் எள்காது
உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு
கழை மேவு மடமந்தி மழை கண்டு, மகவினொடும் புக, ஒண் கல்லின்
முழை மேவு மால்யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே.

2.009   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இரக்கம் ஒன்றும் இலான், இறையான் திருமாமலை
உரக் கையால் எடுத்தான்தனது ஒண் முடிபத்து இற
விரல் தலை நிறுவி, உமையாளொடு மேயவன்
வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே.

2.018   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப,
துலங்க விரல் ஊன்றலும், தோன்றலனாய்;
வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான்!
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே?

2.030   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலங்கையர் இறைஞ்சு இறை, விலங்கலில் முழங்க
உலம் கெழு தடக்கைகள் அடர்த்திடலும், அஞ்சி,
வலம்கொள எழுந்தவன் நலம் கவின, அஞ்சு
புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய்!

2.032   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இரக்கம் இல் குணத்தொடு உலகு எங்கும் நலி வெம்போர்
அரக்கன் முடிபத்து அலை புயத்தொடும் அடங்கத்
துரக்க, விரலின் சிறிது வைத்தவர் இடம் சீர்
வரக் கருணையாளர் பயில் வண் திரு ஐயாறே.

2.038   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இருக்கும் நீள்வரை பற்றி அடர்த்து, அன்று எடுத்த
அரக்கன் ஆகம் நெரித்து, அருள்செய்தவன் கோயில்
மருக் குலாவிய மல்லிகை, சண்பகம் வண் பூந்
தரு, குலாவிய தண்பொழில் நீடு சாய்க்காடே.

2.051   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி(ந்) நகர்க் கவுணியன்,
செந்து நேர் மொழியார் அவர் சேரும் திருக்களருள
அந்தி அன்னது ஓர் மேனியானை, அமரர் தம் பெருமானை, ஞானசம்
பந்தன் சொல் இவைபத்தும் பாட, தவம் ஆமே.

2.058   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இழை ஆர்ந்த கோவணமும் கீளும் எழில் ஆர் உடை
ஆக,
பிழையாத சூலம் பெய்து, ஆடல் பாடல் பேணினீர்!
குழை ஆரும் பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த குடவாயில்,
விழவு ஆர்ந்த கோயிலே கோயில் ஆக மிக்கீரே.

2.063   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இத் தேர் ஏக, இம் மலை பேர்ப்பன் என்று ஏந்தும்
பத்து ஓர்வாயான் வரைக்கீழ் அலற, பாதம்தான்
வைத்து, ஆர் அருள் செய் வரதன் மருவும்(ம்) ஊர் ஆன
புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே.

2.066   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு;
பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு;
தராவணம் ஆவது நீறு; தத்துவம் ஆவது நீறு;
அரா அணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.

2.068   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இளி படும் இன்சொலினார்கள் இருங்குழல்மேல் இசைந்து
ஏற,
தெளிபடு கொள்கை கலந்த தீத் தொழிலார் கடம்பூரில்
ஒளிதரு வெண்பிறை சூடி, ஒண்ணுதலோடு உடன் ஆகி,
புலி அதள் ஆடை புனைந்தான் பொன்கழல் போற்றுதும்,
நாமே.

2.073   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இரக்கம்(ம்) உடை இறையவன் ஊர் தோணிபுரம், பூந்தராய்,
சிலம்பன்தன் ஊர்,
நிரக்க வருபுனல் புறவம், நின்ற தவத்து அயன் ஊர், சீர்த்
தேவர்கோன் ஊர்,
வரக் கரவாப் புகலி, வெங்குரு, மாசு இலாச் சண்பை, காழி,
கொச்சை,
அரக்கன் விறல் அழித்து அருளி கழுமலம் அந்தணர்
வேதம் அறாத ஊரே.

2.074   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இறைவன் அமர் சண்பை, எழில் புறவம், அயன் ஊர்,
இமையோர்க்கு அதிபன் சேர் ஊர்,
குறைவு இல் புகழ்ப் புகலி, வெங்குரு, தோணிபுரம், குணம்
ஆர் பூந்தராய், நீர்ச்
சிறை மலி நல் சிரபுரம், சீர்க் காழி, வளர் கொச்சை,
கழுமலம் தேசு இன்றிப்
பறி தலையொடு அமண்கையர், சாக்கியர்கள், பரிசு அறியா
அம்மான் ஊரே.

2.077   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலையின் ஆர் சூலம், ஏறு உகந்து ஏறியே, இமையோர்
தொழ,
நிலையினால் ஒரு கால் உறச் சிலையினால் மதில்
எய்தவன்,
அலையின் ஆர் புனல் சூடிய அண்ணலார், அறையணி
நல்லூர்
தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார், தடுமாற்றமே.

2.080   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இறை நின்று இலங்கு வளையாள் இளையாள் ஒருபால்
உடையார்,
மறை நின்று இலங்கு மொழியார், மலையார், மனத்தின்
மிசையார்
கறை நின்று இலங்கு பொழில் சூழ் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான்
அடிகளே

2.083   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இறைவனை, ஒப்பு இலாத ஒளி மேனியானை, உலகங்கள்
ஏழும் உடனே
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா
இருந்த மணியை,
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த
தமிழ்மாலை பாடுமவர், போய்,
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி, என்றும் அழகா
இருப்பது அறிவே.

2.087   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை தன் கை எதிர்
நாணி பூண, வரையில்
கடும் அயில் அம்பு கோத்து, எயில் செற்று உகந்து,
அமரர்க்கு அளித்த தலைவன்;
மடமயில் ஊர்தி தாத என நின்று, தொண்டர் மனம் நின்ற
மைந்தன் மருவும்
நடம் மயில் ஆல, நீடு குயில் கூவு சோலை நறையூரில்
நம்பன் அவனே.

2.099   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இன்று நன்று, நாளை நன்று என்று நின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போக விட்டுப் போதுமின்!
மின் தயங்கு சோதியான் வெண்மதி, விரிபுனல்,
கொன்றை, துன்று சென்னியான் கோடி காவு சேர்மினே!

2.101   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இருந்தவன் கிடந்தவன்(ன்), இடந்து விண் பறந்து, மெய்
வருந்தியும் அளப்பு ஒணாத வானவன் மகிழ்ந்த ஊர்
செருந்தி, ஞாழல், புன்னை, வன்னி, செண்பகம், செழுங்
குரா,
அரும்பு சோலை வாசம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே.

2.102   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலங்கு பூண்வரை மார்பு உடை இராவணன் எழில் கொள்
வெற்பு எடுத்து, அன்று,
கலங்கச் செய்தலும், கண்டு, தம் கழல் அடி நெரிய வைத்து,
அருள் செய்தார்
புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல் மன்று அதன்
இடைப் புகுந்து ஆரும்,
குலம் கொள் மா மறையவர் சிரபுரம் தொழுது எழ, வினை
குறுகாவே.

2.108   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இடம் கொள் மாகடல் இலங்கையர் கோன் தனை இகல்
அழிதர ஊன்று
திடம் கொள் மால்வரையான், உரை ஆர்தரு பொருளினன்,
இருள் ஆர்ந்த
விடம் கொள் மா மிடறு உடையவன், உறைபதி விற்குடி
வீரட்டம்
தொடங்கும் ஆறு இசை பாடி நின்றார் தமைத் துன்பம்
நோய் அடையாவே.

2.110   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலவம், ஞாழலும், ஈஞ்சொடு, சுரபுன்னை, இளமருது,
இலவங்கம்,
கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன்;
அலை கொள் வார்புனல், அம்புலி, மத்தமும், ஆடு அரவு
உடன் வைத்த
மலையை; வானவர் கொழுந்தினை; அல்லது வணங்குதல்
அறியோமே.

2.119   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலங்கை வேந்தன் சிரம்பத்து, இரட்டி எழில் தோள்களும்,
மலங்கி வீழ(ம்) மலையால் அடர்த்தான் இடம் மல்கிய
நலம் கொள் சிந்தையவர் நாள்தொறும் நண்ணும்
நாகேச்சுரம்,
வலம்கொள் சிந்தை உடையார் இடர் ஆயின மாயுமே.

3.003   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம்
புயல் அன மிடறு உடைப் புண்ணியனே!
கயல் அன வரி நெடுங்கண்ணியொடும்
அயல் உலகு அடி தொழ அமர்ந்தவனே!
கலன் ஆவது வெண்தலை; கடிபொழில் புகலி தன்னுள்,
நிலன் நாள்தொறும் இன்பு உற, நிறை மதி அருளினனே.

3.003   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இரவொடு, பகல் அது, ஆம் எம்மான்! உன்னைப்
பரவுதல் ஒழிகிலேன், வழி அடியேன்;
குர, விரி நறுங்கொன்றை, கொண்டு அணிந்த
அர விரிசடை முடி ஆண்டகையே!
அனமென் நடையாளொடும், அதிர்கடல் இலங்கை மன்னை
இனம் ஆர்தரு தோள் அடர்த்து, இருந்தனை, புகலியுளே.

3.004   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இடரினும், தளரினும், எனது உறு நோய்
தொடரினும், உன கழல் தொழுது எழுவேன்;
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

3.007   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இரவு இடை ஒள் எரி ஆடினானும், இமையோர் தொழச்
செரு இடை முப்புரம் தீ எரித்த சிவலோகனும்,
பொரு விடை ஒன்று உகந்து ஏறினானும் புகலி(ந்)நகர்,
அரவு இடை மாதொடும் வீற்றிருந்த அழகன் அன்றே!

3.012   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும், இமையோர் தொழ
மலை மல்கு மங்கை ஓர்பங்கன் ஆய(ம்) மணிகண்டனும்
குலை மல்கு தண்பொழில் சூழ்ந்து, அழகு ஆர் திருக்கோட்டாற்றுள்
அலை மல்கு வார்சடை ஏற்று உகந்த அழகன் அன்றே!

3.012   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இரவு அமரும் நிறம் பெற்று உடைய இலங்கைக்கு இறை,
கரவு அமரக் கயிலை எடுத்தான், வலி செற்றவன்-
குரவு அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
அரவு அமரும் சடையான்; அடியார்க்கு அருள்செய்யுமே.

3.016   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இறை உறு வரி வளை இசைகள் பாடிட,
அறை உறு கழல் அடி ஆர்க்க, ஆடுவர்;
சிறை உறு விரிபுனல் சென்னியின் மிசைக்
குறை உறு மதியினர் கொள்ளிக்காடரே.

3.017   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இரும் பொனின் மலைவிலின், எரிசரத்தினால்,
வரும் புரங்களைப் பொடிசெய்த மைந்தன் ஊர்
சுரும்பு அமர் கொன்றையும், தூய மத்தமும்,
விரும்பிய சடை அணல் விசயமங்கையே.

3.019   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இரவு மல்கு இளமதி சூடி, ஈடு உயர்
பரவ மல்கு அருமறை பாடி, ஆடுவர்
அரவமோடு உயர் செம்மல் அம்பர், கொம்பு அலர்
மரவம் மல்கு எழில் நகர், மருவி வாழ்வரே.

3.019   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இகல் உறு சுடர் எரி இலங்க வீசியே,
பகல் இடம் பலி கொளப் பாடி ஆடுவர்
அகலிடம் மலி புகழ் அம்பர், வம்பு அவிழ்
புகல் இடம் நெடு நகர் புகுவர்போலுமே.

3.021   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இன்பு உடையார், இசை வீணை; பூண் அரா,
என்பு, உடையார்; எழில் மேனிமேல் எரி
முன்பு உடையார்; முதல் ஏத்தும் அன்பருக்கு
அன்பு உடையார் கருக்குடி எம் அண்ணலே!

3.038   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இயலும் ஆறு எனக்கு இயம்புமின்(ன்) இறைவ(ன்)னும் ஆய் நிறை செய்கையை!
கயல் நெடுங்கண்ணினார்கள் தாம் பொலி கண்டியூர் உறை வீரட்டன்
புயல் பொழிந்து இழி வான் உளோர்களுக்கு ஆக அன்று, அயன் பொய்ச் சிரம்,
அயல் நக(வ்), அது அரிந்து, மற்று அதில் ஊன் உகந்த அருத்தியே!

3.041   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலங்கை அரசைத் துலங்க ஊன்றும்
நலம் கொள் கம்பன் இலங்கு சரணே.

3.044   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலங்கை மன்னனை ஈர்-ஐந்து இரட்டிதோள
துலங்க ஊன்றிய தூ மழுவாளினார்
கலங்கள் வந்து உலவும், கழிப்பாலையை
வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.

3.045   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலங்கை மன்னன் இருபதுதோள் இறக்
கலங்க, கால்விரலால், கடைக் கண்டவன்-
வலம்கொள் மா மதில் சூழ் திரு ஆரூரான்;
அலங்கல் தந்து, எனை, அஞ்சல்! எனும்கொலோ?

3.049   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இயமன் தூதரும் அஞ்சுவர், இன்சொலால்
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்;
நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன், நாமம் நமச்சிவாயவே.

3.049   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல்
தலம் கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்,
மலங்கி, வாய்மொழி செய்தவன் உய் வகை
நலம் கொள் நாமம் நமச்சிவாயவே.

3.050   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இகழும் காலன் இதயத்தும், என் உளும்,
திகழும் சேவடியான் திருந்தும்(ம்) இடம்
புகழும் பூமகளும் புணர் பூசுரர்
நிகழும் தண்டலை நீணெறி; காண்மினே!

3.050   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலங்கை வேந்தன் இருபது தோள் இற,
விலங்கலில் அடர்த்தான் விரும்பும்(ம்) இடம்
சலம் கொள் இப்பி தரளமும் சங்கமும்
நிலம் கொள் தண்டலை நீணெறி; காண்மினே!

3.055   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இடி ஆர் ஏறு உடையாய்! இமையோர்தம் மணி முடியாய்!
கொடி ஆர் மா மதியோடு, அரவம், மலர்க்கொன்றையினாய்!
செடி ஆர் மாதவி சூழ் திரு வான்மியூர் உறையும்
அடிகேள்!உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.

3.056   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இறையவன், ஈசன், எந்தை, இமையோர் தொழுது ஏத்த நின்ற
கறை அணி கண்டன், வெண்தோடு அணி காதினன், காலத்து அன்று
மறை மொழி வாய்மையினான், மலையாளொடு மன்னு சென்னிப்
பிறை அணி செஞ்சடையான், பிரமாபுரம் பேணுமினே!

3.056   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இமையவர் அஞ்சி ஓட, எதிர்வார் அவர்தம்மை இன்றி
அமைதரு வல் அரக்கன் அடர்த்து(ம்), மலை அன்று எடுப்ப,
குமை அது செய்து, பாட, கொற்றவாளொடு நாள் கொடுத்திட்டு
உமையொடு இருந்த பிரான் பிரமாபுரம் உன்னுமினே!

3.058   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இமயம் எல்லாம் இரிய மதில் எய்து, வெண் நீறு பூசி,
உமையை ஒர்பாகம் வைத்த நிலைதான் உன்னல் ஆவது ஒன்றே?
சமயம், ஆறு அங்கம், வேதம், தரித்தார் தொழும் சாத்தமங்கை,
அமைய வேறு ஓங்கு சீரான், அயவந்தி அமர்ந்தவனே!

3.060   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலங்கையர் மன்னன் ஆகி எழில் பெற்ற இராவணனைக்
கலங்க, ஒர் கால்விரலால், கதிர் போல் முடிபத்து அலற,
நலம் கெழு சிந்தையனாய் அருள் போற்றலும், நன்கு அளித்த
வலம் கெழு மூ இலைவேல் உடையான் இடம் வக்கரையே.

3.064   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இறைக் கண்ட வளையாளோடு இரு கூறு ஆய் ஒருகூறு
மறைக் கண்டத்து இறை நாவர், மதில் எய்த சிலை வலவர்,
கறைக் கொண்ட மிடறு உடையர், கனல் கிளரும் சடைமுடிமேல்
பிறைக் கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

3.066   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இகழ்ந்து உரைக்கும் சமணர்களும், இடும் போர்வைச் சாக்கியரும்,
புகழ்ந்து உரையாப் பாவிகள் சொல் கொள்ளேன்மின், பொருள் என்ன!
நிகழ்ந்து இலங்கு வெண்மணலின் நிறைத் துண்டப்
பிறைக்கற்றை
திகழ்ந்து இலங்கு செஞ்சடையார் திரு வேட்டக்குடியாரே.

3.069   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இனது அளவில், இவனது அடி இணையும், முடி, அறிதும் என இகலும் இருவர்
தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலைதன்னை வினவில்
புனவர் புனமயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம் புணரும் நாள
கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு காளத்திமலையே.

3.070   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலங்கை நகர் மன்னன் முடி ஒருபதினொடு இருபது தோள் நெரிய, விரலால்
விலங்கலில் அடர்த்து, அருள்புரிந்தவர் இருந்த இடம் வினவுதிர்களேல்
கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா,
மலங்கி வரு காவிரி நிரந்து பொழிகின்ற மயிலாடுதுறையே.

3.071   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இன்ன உரு, இன்ன நிறம், என்று அறிவதேல் அரிது; நீதிபலவும்
தன்ன உரு ஆம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்வு இடம்
முன்னை வினை போம் வகையினால், முழுது உணர்ந்து முயல்கின்ற முனிவர்
மன்ன, இருபோதும் மருவித் தொழுது சேரும், வயல் வைகாவிலே.

3.072   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இங்கு கதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தி, எழில் மெய்யுள் உடனே,
மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி, மகிழ் மாகறல் உளான்-
கொங்கு, வளர் கொன்றை, குளிர்திங்கள், அணி செஞ்சடையினான்-அடியையே
நுங்கள் வினை தீர, மிக ஏத்தி, வழிபாடு நுகரா, எழுமினே!

3.079   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இலைத் தலை மிகுத்த படை எண்கரம் விளங்க, எரி வீசி, முடிமேல்
அலைத் தலை தொகுத்த புனல் செஞ்சடையில் வைத்த அழகன்
தன் இடம் ஆம்
மலைத்தலை வகுத்த முழைதோறும், உழை, வாள் அரிகள்,
கேழல், களிறு,
கொலைத்தலை மடப்பிடிகள், கூடி விளையாடி நிகழ்
கோகரணமே.

3.085   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இச்சையர், இனிது என இடு பலி; படுதலை மகிழ்வது ஒர்
பிச்சையர்; பெருமையை இறைபொழுது அறிவு என உணர்வு இலர்
மொச்சைய அமணரும், முடை படு துகிலரும், அழிவது ஒர்
விச்சையர்; உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே.

3.087   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம்
கட்டு உறு கதிர் இளவனமுலை இணையொடு கலவலின்,
நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர் தம் நாமமே;
இட்டு உறும் எரியினில் இடில், இவை பழுது இலை; `மெய்ம்மையே!

3.095   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இளமதி நுதலியொடு இன்னம்பர் மேவிய
வள மதி வளர் சடையீரே;
வள மதி வளர் சடையீர்! உமை வாழ்த்துவார்
உளம் மதி மிக உடையாரே.

3.095   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இடி குரல் இசை முரல் இன்னம்பர் மேவிய
கடி கமழ் சடைமுடியீரே;
கடி கமழ் சடைமுடியீர்! உம கழல் தொழும்
அடியவர் அருவினை இலரே.

Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list