சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அடிய
அடியவர்     அடியார்     அடியா     அடியும்     அடியமர்ந்து     அடியோமைத்     அடியார்தம்     அடியொன்று     அடியிட்ட     அடியால்     அடியவர்க்     அடியனேன்     அடியவர்கள்     அடியாராம்     அடியவரும்     அடியேன்     அடியே     அடிய     அடியர்    
1.124   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
கடிமலர் அயன் அரி கருத(அ)ரு வகை தழல்-
வடிவு உரு இயல் பினொடு உலகுகள் நிறைதரு
நெடியவன் மிழலையை நினைய வல்லவரே.

3.003   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அடியவர் தொழுது எழ, அமரர் ஏத்த,
செடிய வல்வினை பல தீர்ப்பவனே!
துடி இடை அகல் அல்குல்-தூமொழியைப்
பொடி அணி மார்பு உறப் புல்கினனே!
புண்ணியா! புனிதா! புகர் ஏற்றினை! புகலிந்நகர்
நண்ணினாய்! கழல் ஏத்திட, நண்ணகிலா, வினையே.

3.038   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அடியர் ஆயினீர்! சொல்லுமின்-அறிகின்றிலேன், அரன் செய்கையை;
படி எலாம் தொழுது ஏத்து கண்டியூர் வீரட்டத்து உறை பான்மையான்,
முடிவும் ஆய், முதல் ஆய், இவ் வையம் முழுதும் ஆய், அழகு ஆயது ஓர்
பொடி அது ஆர் திருமார்பினில் புரிநூலும் பூண்டு, எழு பொற்பு அதே!

8.105.09   8 st/nd Thirumurai   Song # 83   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அடியேன் அல்லேன் கொல்லோ? தான், எனை ஆட்கொண்டிலை கொல்லோ?
அடியார் ஆனார் எல்லாரும் வந்து, உன் தாள் சேர்ந்தார்;
செடி சேர் உடலம் இது, நீக்க மாட்டேன்; எங்கள் சிவலோகா!
கடியேன் உன்னை, கண் ஆரக் காணும் ஆறு, காணேனே.

8.132   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அடியார் சிலர், உன் அருள் பெற்றார், ஆர்வம் கூர; யான் அவமே,
முடை ஆர் பிணத்தின், முடிவு இன்றி, முனிவால், அடியேன், மூக்கின்றேன்;
கடியேனுடைய கடு வினையைக் களைந்து, உன் கருணைக் கடல் பொங்க,
உடையாய்! அடியேன் உள்ளத்தே ஓவாது உருக, அருளாயே!

8.133   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அடியேன் அல்லல் எல்லாம், முன், அகல ஆண்டாய், என்று இருந்தேன்;
கொடி ஏர் இடையாள் கூறா, எம் கோவே, ஆ! ஆ!' என்று அருளி,
செடி சேர் உடலைச் சிதையாதது எத்துக்கு? எங்கள் சிவலோகா!
உடையாய்! கூவிப் பணி கொள்ளாது, ஒறுத்தால், ஒன்றும் போதுமே?

8.145   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அடியார் ஆனீர் எல்லீரும், அகலவிடுமின் விளையாட்டை;
கடி சேர் அடியே வந்து அடைந்து, கடைக்கொண்டு இருமின் திருக் குறிப்பை;
செடி சேர் உடலைச் செல நீக்கி, சிவலோகத்தே நமை வைப்பான்
பொடி சேர் மேனிப் புயங்கன் தன், பூ ஆர் கழற்கே புகவிடுமே.

10.101   10 st/nd Thirumurai   Song # 44   திருமூலர்   திருமந்திரம்  
அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே.

10.611   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
அடியா ரவரே அடியா ரலாதார்?
அடியாரு மாகாதவ் வேடமு மாகா
அடியார் சிவஞான மானது பெற்றோர்
அடியா ராலாதார் அடியார்கள் அன்றே.

10.841   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
அடியார் அடியார் அடியார் அடிமைக்(கு)
அடியனாய் நல்கிட்(டு) அடிமையும் பூண்டேன்
அடியார் அருளால் அவனடி கூட்ட
`அடியான் இவன்` என்று அடிமைக்கொண்டானே.

10.913   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
அடியார் அரன்அடி ஆனந்தங் கண்டோர்
அடியா ரவர்அர னத்தனரு ளுற்றோர்
அடிஆர் பவரே அடியவ ராவர்
அடியார்பொன் னம்பலத் தாடல்கண் டாரே.

10.924   10 st/nd Thirumurai   Song # 49   திருமூலர்   திருமந்திரம்  
அடியும் முடியும் அமைந்ததோர் அத்தி
முடியும் நுனியின்கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையுங் கொளும்சார்பை யைந்து
மடியும் வலம்புரி வாய்த்தவ் வாறே.

11.010   11 st/nd Thirumurai   Song # 1   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்,
இன்ன தெனவறியா ஈங்கோயே ஓங்காரம்
மன்னதென நின்றான் மலை.

11.020   11 st/nd Thirumurai   Song # 3   கபிலதேவ நாயனார்    மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை  
அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம்
இடிஅவலோ டெள்உண்டை கன்னல் வடிசுவையில்
தாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே
வாழ்வானை வாழ்த்தியே வாழ்.

11.021   11 st/nd Thirumurai   Song # 15   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை  
அடியோமைத் தாங்கியோ ஆடை யுடுத்தோ
குடியோம்ப மாநிதியங் கொண்டோ பொடியாடும்
நெற்றியூர் வாளரவ நீள் சடையாய் நின்ஊரை
ஒற்றியூர் ஆக்கிற் றுரை.

11.022   11 st/nd Thirumurai   Song # 4   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
அடியார்தம் ஆருயிரை அட்டழிக்குங் கூற்றை
அடியால் அருவாகச் செற்றான் அடியார்தம்
அந்தரத்தால் ஏத்தி அகங்குழைந்து மெய்யரும்பி
அந்தரத்தார் சூடும் அலர்.

11.026   11 st/nd Thirumurai   Song # 6   பட்டினத்துப் பிள்ளையார்   கோயில் நான்மணிமாலை  
அடியொன்று பாதலம் ஏழிற்கும்
அப்புறம் பட்டதிப்பால்
முடியொன்றிவ் வண்டங்கள் எல்லாம்
கடந்தது முற்றும்வெள்ளைப்
பொடியொன்று தோளெட்டுத் திக்கின்
புறத்தன பூங்கரும்பின்
செடியொன்று தில்லைச்சிற் றம்பலத்
தான்தன் திருநடமே.

11.028   11 st/nd Thirumurai   Song # 27   பட்டினத்துப் பிள்ளையார்   திருவிடைமருதூர் மும்மணிக்கோவை  
அடியா யிரந்தொழில் ஆயின
ஆயிரம் ஆயிரம்பேர்
முடியா யிரங்கண்கள் மூவா
யிரம்முற்றும் நீறணிந்த
தொடியா யிரங்கொண்ட தோளிரண்
டாயிரம் என்றுநெஞ்சே
படியாய் இராப்பகல் தென்மரு
தாளியைப் பற்றிக்கொண்டே.

11.032   11 st/nd Thirumurai   Song # 16   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
அடியிட்ட கண்ணினுக் கோஅவ
னன்பினுக் கோ அவுணர்
செடியிட்ட வான்துயர் சேர்வதற்
கோ தில்லை யம்பலத்து
முடியிட்ட கொன்றை நன் முக்கட்
பிரான்அன்று மூவுலகும்
அடியிட்ட கண்ணனுக் கீந்தது
வாய்ந்த அரும்படையே.

11.034   11 st/nd Thirumurai   Song # 25   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
அடியால் அலர்மிதித் தாலரத்
தம்பில் கமிர்தமின்(று)இக்
கொடியா னொடும்பின் நடந்ததெவ்
வா(று)அலர் கோகனதக்
கடியார் நறுங்கண்ணி ஞானசம்
பந்தன் கருதலர்போல்
வெடியா விடுவெம் பரல்சுறு
நாறு வியன்கரத்தே.

12.000   12 st/nd Thirumurai   Song # 320   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அடியவர்க் கடிய னாவேன்
என்னும்ஆ தரவு கூரக்
கொடிநெடுங் கொற்ற வாயில்
பணிந்துகை குவித்துப் புக்கார்
கடிகொள்பூங் கொன்றை வேய்ந்தா
ரவர்க்கெதிர் காணக் காட்டும்
படியெதிர் தோன்றி நிற்கப்
பாதங்கள் பணிந்து பூண்டு.
12.130   12 st/nd Thirumurai   Song # 20   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
அடியனேன் அறிவி லாமை
கண்டும்என் னடிமை வேண்டிப்
படிமிசைக் கமரில் வந்திங்
கமுதுசெய் பரனே போற்றி
துடியிடை பாக மான
தூயநற் சோதி போற்றி
பொடியணி பவள மேனிப்
புரிசடைப் புராண போற்றி.
12.210   12 st/nd Thirumurai   Song # 429   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அடியனேன் ஆதரவால்
ஆண்டஅர சின்சரிதப்
படியையான் அறிந்தபடி
பகர்ந்தேன்அப் பரமுனிவன்
கடிமலர்மென் சேவடிகள்
கைதொழுது குலச்சிறையார்
முடிவில்புகழ்த் திருத்தொண்டின்
முயற்சியினை மொழிகின்றேன்.
12.280   12 st/nd Thirumurai   Song # 414   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அடியவர்கள் எதிர்கொள்ள
எழுந்தருளி அங்கணைந்து
முடிவில்பரம் பொருளானார்
முதற்கோயில் முன்னிறைஞ்சிப்
படியில்வலங் கொண்டுதிரு
முன்பெய்திப் பார்மீது
நெடிதுபணிந் தெழுந்தன்பு
நிறைகண்ணீர் நிரந்திழிய.
12.280   12 st/nd Thirumurai   Song # 443   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அடியவர்கள் களிசிறப்பத் திருவேட்டக்
குடிபணிந்தங் கலைவாய்ப் போகிக்
கடிகமழும் மலர்ப்பழனக் கழனிநாட்
டகன்பதிகள் கலந்து நீங்கிக்
கொடிமதில்சூழ் தருமபுரம் குறுகினார்
குண்டர்சாக் கியர்தங் கொள்கை
படியறியப் பழுதென்றே மொழிந்துய்யும்
நெறிகாட்டும் பவள வாயர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 476   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அடியாராம் இமையவர்தங் கூட்டம் உய்ய
அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே செங்கண்
நெடியானும் நான்முகனுங் காணாக் கோல
நீலவிட அரவணிந்த நிமலாவெந்து
பொடியான காமன்உயிர் இரதி வேண்டப்
புரிந்தளித்த புண்ணியனே பொங்கர் வாசக்
கடியாரும் மலர்ச்சோலை மருங்கு சூழும்
கவின்மருகற் பெருமானே காவாய் என்றும்.
12.280   12 st/nd Thirumurai   Song # 579   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற
அணிமறுகின் ஊடெய்தி அருகு சூழ்ந்த
கொடிநுடங்கு செழுந்திருமா ளிகையின் முன்னர்க்
கோபுரத்தைத் தாழ்ந்திறைஞ்சிக் குறுகிப் புக்கு
முடிவிலிமை யவர்முனிவர் நெருங்குந் தெய்வ
முன்றில்வலம் கொண்டுநேர் சென்று முன்னாள்
படியின்மறை அருச்சித்துக் காப்புச் செய்த
பைம்பொன்மணித் திருவாயிற் பாங்கு வந்தார்
12.290   12 st/nd Thirumurai   Song # 39   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அடியேன் பெற்ற மக்களிவர்
அடிமை யாகக் கொண்டருளிக்
கடிசேர் மலர்த்தாள் தொழுதுய்யக்
கருணை யளிக்க வேண்டுமெனக்
தொடிசேர் தளிர்க்கை இவரெனக்குத்
தூய மக்க ளெனக்கொண்டப்
படியே மகண்மை யாக்கொண்டார்
பரவை யார்தங் கொழுநனார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 324   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அடியார் இடுக்கண் தரியாதார்
ஆண்டு கொண்ட தோழர்குறை
முடியா திருக்க வல்லரே
முற்று மளித்தாள் பொற்றளிர்க்கைத்
தொடியார் தழும்பும் முலைச்சுவடும்
உடையார் தொண்டர் தாங்காணும்
படியால் அணைந்தார் நெடியோனுங்
காணா அடிகள் படிதோய.
12.290   12 st/nd Thirumurai   Song # 327   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அடியே னங்குத் திருவொற்றி
யூரில் நீரே யருள்செய்ய
வடிவே லொண்கண் சங்கிலியை
மணஞ்செய் தணைந்த திறமெல்லாம்
கொடியே ரிடையாள் பரவைதா
னறிந்து தன்பால் யான்குறுகின்
முடிவே னென்று துணிந்திருந்தா
ளென்னான் செய்வ தெனமொழிந்து.
12.360   12 st/nd Thirumurai   Song # 43   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
அடியேன் உய்ந்தேன் எங்குற்றார்
உரையா யென்ன அவர்மொழிவார்
வடிசேர் சூல கபாலத்தர்
வடதே சத்தோம் என்றார்வண்
துடிசேர் கரத்துப் பயிரவர்யாம்
சொல்ல இங்கும் இராதேபோய்க்
கடிசேர் திருவாத் தியினிழற்கீழ்
இருந்தார் கணப தீச்சரத்து.
12.360   12 st/nd Thirumurai   Song # 46   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
அடியேன் மனையில் எழுந்தருளி
அமுதுசெய்ய வேண்டுமென
நெடியோ னறியா வடியார்தாம்
நிகழுந் தவத்தீர் உமைக்காணும்
படியால் வந்தோம் உத்தரா
பதியோம் எம்மைப் பரிந்தூட்ட
முடியா துமக்குச் செய்கையரி
தொண்ணா தென்று மொழிந்தருள.
12.370   12 st/nd Thirumurai   Song # 31   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
அடியேன் பொருளாத் திருமுகங்கொண்
டணைந்த தென்ன அவர் தாமும்
கொடிசேர் விடையார் திருமுகங்கைக்
கொடுத்து வணங்கக் கொற்றவனார்
முடிமேற் கொண்டு கூத்தாடி
மொழியுங் குழறிப் பொழிகண்ணீர்
பொடியார் மார்பிற் பரந்துவிழப்
புவிமேற் பலகால் வீழ்ந்தெழுந்தார்.
12.720   12 st/nd Thirumurai   Song # 43   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
அடிய னேன்பிழை பொறுத்தெனை
யாண்டுகொண் டத்தொடக் கினைநீக்கி
முடிவி லாநெறி தருபெருங்
கருணைஎன் தரத்ததோ எனமுன்னர்ப்
படியும் நெஞ்சொடு பன்முறை
பணிந்தெழும் பரம்பரை யானந்த
வடிவு நின்றது போன்றுஇன்ப
வெள்ளத்து மலர்ந்தனர் வன்தொண்டர்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list