சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அடியே
அடியேன்
அடியே
8.105.09
8 st/nd Thirumurai
Song # 83
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அடியேன் அல்லேன் கொல்லோ? தான், எனை ஆட்கொண்டிலை கொல்லோ?
அடியார் ஆனார் எல்லாரும் வந்து, உன் தாள் சேர்ந்தார்;
செடி சேர் உடலம் இது, நீக்க மாட்டேன்; எங்கள் சிவலோகா!
கடியேன் உன்னை, கண் ஆரக் காணும் ஆறு, காணேனே.
8.133
8 st/nd Thirumurai
Song # 2
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அடியேன் அல்லல் எல்லாம், முன், அகல ஆண்டாய், என்று இருந்தேன்;
கொடி ஏர் இடையாள் கூறா, எம் கோவே, ஆ! ஆ!' என்று அருளி,
செடி சேர் உடலைச் சிதையாதது எத்துக்கு? எங்கள் சிவலோகா!
உடையாய்! கூவிப் பணி கொள்ளாது, ஒறுத்தால், ஒன்றும் போதுமே?
12.290
12 st/nd Thirumurai
Song # 39
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அடியேன் பெற்ற மக்களிவர்
அடிமை யாகக் கொண்டருளிக்
கடிசேர் மலர்த்தாள் தொழுதுய்யக்
கருணை யளிக்க வேண்டுமெனக்
தொடிசேர் தளிர்க்கை இவரெனக்குத்
தூய மக்க ளெனக்கொண்டப்
படியே மகண்மை யாக்கொண்டார்
பரவை யார்தங் கொழுநனார்.
12.290
12 st/nd Thirumurai
Song # 327
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அடியே னங்குத் திருவொற்றி
யூரில் நீரே யருள்செய்ய
வடிவே லொண்கண் சங்கிலியை
மணஞ்செய் தணைந்த திறமெல்லாம்
கொடியே ரிடையாள் பரவைதா
னறிந்து தன்பால் யான்குறுகின்
முடிவே னென்று துணிந்திருந்தா
ளென்னான் செய்வ தெனமொழிந்து.
12.360
12 st/nd Thirumurai
Song # 43
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
அடியேன் உய்ந்தேன் எங்குற்றார்
உரையா யென்ன அவர்மொழிவார்
வடிசேர் சூல கபாலத்தர்
வடதே சத்தோம் என்றார்வண்
துடிசேர் கரத்துப் பயிரவர்யாம்
சொல்ல இங்கும் இராதேபோய்க்
கடிசேர் திருவாத் தியினிழற்கீழ்
இருந்தார் கணப தீச்சரத்து.
12.360
12 st/nd Thirumurai
Song # 46
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
அடியேன் மனையில் எழுந்தருளி
அமுதுசெய்ய வேண்டுமென
நெடியோ னறியா வடியார்தாம்
நிகழுந் தவத்தீர் உமைக்காணும்
படியால் வந்தோம் உத்தரா
பதியோம் எம்மைப் பரிந்தூட்ட
முடியா துமக்குச் செய்கையரி
தொண்ணா தென்று மொழிந்தருள.
12.370
12 st/nd Thirumurai
Song # 31
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
அடியேன் பொருளாத் திருமுகங்கொண்
டணைந்த தென்ன அவர் தாமும்
கொடிசேர் விடையார் திருமுகங்கைக்
கொடுத்து வணங்கக் கொற்றவனார்
முடிமேற் கொண்டு கூத்தாடி
மொழியுங் குழறிப் பொழிகண்ணீர்
பொடியார் மார்பிற் பரந்துவிழப்
புவிமேற் பலகால் வீழ்ந்தெழுந்தார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list