சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அட்ட
அட்டானம்
அட்ட
அட்டது
அட்டும்
அட்டுமின்,
அட்டமாமலர்
அட்டமூர்த்தி
அட்டபுட்பம்
அட்டன்(ந்)
2.039
2 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அட்டானம் என்று ஓதிய நால் இரண்டும்,
அழகன் உறை கா அனைத்தும், துறைகள்
எட்டு ஆம், திருமூர்த்தியின் காடு ஒன்பதும்,
குளம் மூன்றும், களம் அஞ்சும், பாடி நான்கும்,
மட்டு ஆர் குழலாள் மலைமங்கை பங்கன்
மதிக்கும் இடம் ஆகிய பாழிமூன்றும்,
சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய்,
அரும்பாவங்கள் ஆயின தேய்ந்து அறவே!
2.117
2 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அட்ட காலன் தனை வவ்வினான், அவ் அரக்கன் முடி
எட்டும் மற்றும் இருபத்திரண்டும்(ம்) இற ஊன்றினான்,
இட்டம் ஆக இருப்பான் அவன்போல் இரும்பைதனுள்,
மட்டு வார்ந்த பொழில் சூழ்ந்து எழில் ஆரும் மாகாளமே.
3.036
3 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அட்ட மாசித்திகள் அணை தரு காளத்தி
வட்ட வார் சடையனை, வயல் அணி காழியான்-
சிட்ட நால்மறை வல ஞானசம்பந்தன்-சொல்
இட்டமாப் பாடுவார்க்கு இல்லை ஆம், பாவமே.
4.093
4 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
அட்டது காலனை; ஆய்ந்தது வேதம் ஆறு அங்கம்; அன்று
சுட்டது காமனை, கண் அதனாலே; தொடர்ந்து எரியக்
கட்டு அவை மூன்றும் எரித்த பிரான்; கண்டியூர் இருந்த
குட்டம் முன் வேதப்படையனை ஆம், அண்டர் கூறுவதே.
4.093
4 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
அட்டும் ஒலிநீர், அணி மதியும், மலர் ஆன எல்லாம்,
இட்டுப் பொதியும் சடைமுடியான், இண்டைமாலை; அம் கைக்
கட்டும் அரவு அது தான் உடையான்; கண்டியூர் இருந்த
கொட்டும் பறை உடை கூத்தனை ஆம், அண்டர் கூறுவதே.
4.097
4 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
அட்டுமின், இல் பலி! என்று என்று அகம் கடைதோறும் வந்து,
மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்கொலோ?-
கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோள் அரவும்
நட்டம் நின்று ஆடிய நாதர், நல்லூர் இடம் கொண்டவரே.
5.009
5 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
அட்டமாமலர் சூடி, அடும்பொடு,
வட்டப்புன்சடை மா மறைக்காடரோ!
நட்டம் ஆடியும், நால்மறை பாடியும்,!
இட்டம் ஆக இருக்கும் இடம் இதே.
5.010
5 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
அட்டமூர்த்தி அது ஆகிய அப்பரோ!
துட்டர் வான் புரம் சுட்ட சுவண்டரோ!
பட்டம் கட்டிய சென்னிப் பரமரோ!
சட்ட இக் கதவம் திறப்பிம்மினே!
5.054
5 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
அட்டபுட்பம் அவை கொளும் ஆறு கொண்டு,
அட்டமூர்த்தி அநாதிதன் பால் அணைந்து,
அட்டும் ஆறு செய்கிற்ப-அதிகை வீ-
ரட்டனார் அடி சேருமவர்களே.
7.080
7 st/nd Thirumurai
Song # 8
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அட்டன்(ந்) அழகு ஆக (வ்) அரைதன் மேல் அரவு ஆர்த்து
மட்டு உண்டு வண்டு ஆலும் பொழில் மாதோட்ட நன்நகரில்
பட்ட அரி நுதலாளொடு பாலாவியின் கரைமேல
சிட்டன் நமை ஆள்வான் திருக்கேதீச்சுரத்தானே.
8.142
8 st/nd Thirumurai
Song # 2
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அட்ட மூர்த்தி, அழகன், இன் அமுது ஆய ஆனந்த வெள்ளத்தான்,
சிட்டன், மெய்ச் சிவலோக நாயகன், தென் பெருந்துறைச் சேவகன்,
மட்டு வார் குழல் மங்கையாளை ஒர் பாகம் வைத்த அழகன் தன்
வட்ட மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே!
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list