சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அளி
அளித்தான்
அளியார்
அளியொத்த
அளிமிடை
அளிமிடைதார்த்
அளிக்குலங்கள்
அளித்து
அளியின்
அளி
அளித்த
அளியானை,
அளியமன்
அளிநீ
4.020
4 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
அளித்து வந்து அடி கைதொழுமவர்மேல் வினை கெடும் என்று இ(வ்) வையகம்
களித்து வந்து உடனே கலந்து ஆடக் காதல் ஆய்க்
குளித்தும், மூழ்கியும், தூவியும், குடைந்து ஆடு கோதையர் குஞ்சியுள் புகத்
தெளிக்கும் தீர்த்தம் அறாத் திரு ஆரூர் அம்மானே!
4.054
4 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகி,
களியின் ஆர் பாடல் ஓவாக் கடவூர் வீரட்டம் என்னும்
தளியினார் பாதம் நாளும் நினைவு இலாத் தகவு இல் நெஞ்சம்
தெளிவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!
4.072
4 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
அளி மலர்க் கொன்றை துன்றும் அவிர்சடை உடையர் போலும்;
களி மயில் சாயலோடும் காமனை விழிப்பர் போலும்;
வெளி வளர் உருவர் போலும்; வெண் பொடி அணிவர் போலும்;
எளியவர், அடியர்க்கு என்றும்;-இன்னம்பர் ஈசனாரே.
5.037
5 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
அளித்த ஆன் அஞ்சும் ஆடிய ஆனையார்;
வெளுத்த நீள்கொடி ஏறு உடை ஆனையார்
எளித்த வேழத்தை எள்குவித்த ஆனையார்;
களித்த ஆனைகண்டீர்-கடவூரரே.
6.066
6 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
அளியானை, அண்ணிக்கும் ஆன்பால் தன்னை, வான் பயிரை, அப் பயிரின் வாட்டம் தீர்க்கும்
துளியானை, அயன் மாலும் தேடிக் காணாச் சுடரானை, துரிசு அறத் தொண்டுபட்டார்க்கு
எளியானை, யாவர்க்கும் அரியான் தன்னை, இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல்,-
தெளியானை, திரு நாகேச்சுரத்து உளானை, சேராதார் நன் நெறிக் கண் சேராதாரே.
8.123
8 st/nd Thirumurai
Song # 10
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அளித்து வந்து, எனக்கு ஆவ' என்று அருளி, அச்சம் தீர்த்த நின் அருள் பெருங்கடலில்,
திளைத்தும், தேக்கியும், பருகியும், உருகேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே!
வளைக் கையானொடு மலரவன் அறியா வானவா! மலை மாது ஒரு பாகா!
களிப்பு எலாம் மிகக் கலங்கிடுகின்றேன்; கயிலை மா மலை மேவிய கடலே!
8.125
8 st/nd Thirumurai
Song # 5
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அளி புண் அகத்து, புறம் தோல் மூடி, அடியேன் உடை யாக்கை,
புளியம்பழம் ஒத்து இருந்தேன்; இருந்தும், விடையாய்! பொடி ஆடீ!
எளிவந்து, என்னை ஆண்டுகொண்ட என் ஆர் அமுதே! ஓ!
அளியேன்' என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
8.207
8 st/nd Thirumurai
Song # 2
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
அளியமன் னும்மொன் றுடைத்தண்ண
லெண்ணரன் தில்லையன்னாள்
கிளியைமன் னுங்கடி யச்செல்ல
நிற்பிற் கிளரளகத்
தளியமர்ந் தேறின் வறிதே
யிருப்பிற் பளிங்கடுத்த
ஒளியமர்ந் தாங்கொன்று போன்றொன்று
தோன்று மொளிமுகத்தே.
8.213
8 st/nd Thirumurai
Song # 7
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
அளிநீ டளகத்தின் அட்டிய
தாதும் அணியணியும்
ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண்
மாலையுந் தண்நறவுண்
களிநீ யெனச்செய் தவன்கடற்
றில்லையன் னாய்கலங்கல்
தெளிநீ யனையபொன் னேபன்னு
கோலந் திருநுதலே.
10.104
10 st/nd Thirumurai
Song # 11
திருமூலர்
திருமந்திரம்
அளித்தான் உலகெங்குந் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான்பே ரின்பத் தருள்வெளி தானே.
10.209
10 st/nd Thirumurai
Song # 21
திருமூலர்
திருமந்திரம்
அளியார் முக்கோண வயிந்தவந் தன்னில்
அளியார் திரிபுரை யாம் அவள் தானே
அளியார் சதாசிவ மாகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்தும்செய் வாளே.
10.405
10 st/nd Thirumurai
Song # 20
திருமூலர்
திருமந்திரம்
அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போல்உள்ளே நோக்கித்
தெளியுறு வித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யஉண் டாளே.
12.100
12 st/nd Thirumurai
Song # 100
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
அளிமிடை கரைசூழ் சோலை
அலர்கள்கொண் டணைந்த ஆற்றின்
தெளிபுன லிழிந்து சிந்தை
தெளிவுறுந் திண்ண னார்தாம்
களிவரு மகிழ்ச்சி பொங்கக்
காளத்தி கண்டு கொண்டு
குளிர்வரு நதியூ டேகிக்
குலவரைச் சாரல் சேர்ந்தார்.
12.240
12 st/nd Thirumurai
Song # 11
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
அளிமிடைதார்த் தனதத்தன்
அணிமாடத் துள்புகுந்து
தெளிதருநூல் விதிவழியே
செயல்முறைமை செய்தமைத்துத்
தளிரடிமென் நகைமயிலைத்
தாதவிழ்தார்க் காளைக்குக்
களிமகிழ்சுற் றம்போற்றக்
கலியாணஞ் செய்தார்கள்.
12.280
12 st/nd Thirumurai
Song # 329
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அளிக்குலங்கள் சுளித்தகல
அரவிந்தம் முகம்புலரப்
பளிக்குமணி மரகதவல்
லியிற்கோத்த பான்மையெனத்
துளித்தலைமெல் லறுகுபனி
தொடுத்தசையச் சூழ்பனியால்
குளிர்க்குடைந்து வெண்படாம்
போர்த்தனைய குன்றுகளும்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list