சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஆளு
ஆளும்     ஆளு     ஆளுடைத்     ஆளுடைய     ஆளுடையா     ஆளும்அங்    
10.928   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை
நாளும் வழிபடும் நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
வாளும் மனத்தொடு வைத்தொழிந் தேனே.

12.040   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
ஆளு நாயகர் அன்பர் ஆனவர்
அளவி லார்உளம் மகிழவே
நாளு நாளும்நி றைந்து வந்துநு
கர்ந்த தன்மையின் நன்மையால்
நீளு மாநிதி யின்ப ரப்புநெ 
ருங்கு செல்வநி லாவியெண்
தோளி னார்அள கைக்கி ருத்திய
தோழ னாரென வாழுநாள்.
12.080   12 st/nd Thirumurai   Song # 56   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
ஆளுடைத் தொண்டர் செய்த
ஆண்மையுந் தம்மைக் கொல்ல
வாளினைக் கொடுத்து நின்ற
வளவனார் பெருமை தானும்
நாளுமற் றவர்க்கு நல்கும்
நம்பர்தாம் அளக்கி லன்றி
நீளுமித் தொண்டின் நீர்மை
நினைக்கில்ஆர் அளக்க வல்லார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 199   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆளுடைய நாயகன்தன்
அருள்பெற்றங் ககன்றுபோய்
வாளைபாய் புனற்பழனத்
திருப்பழன மருங்கணைந்து
காளவிடம் உண்டிருண்ட
கண்டர்பணிக் கலன்பூண்டு
நீள்இரவில் ஆடுவார்
கழல்வணங்க நேர்பெற்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 21   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆளுடையா ளுடன்தோணி
அமர்ந்தபிரான் அருள்போற்றி
மூளுமகிழ்ச் சியில்தங்கள்
முதன்மறைநூல் முறைச்சடங்கு
நாளுடைய ஈரைந்து
திங்களினும் நலஞ்சிறப்பக்
கேளிருடன் செயல்புரிந்து
பெரிதின்பங் கிளர்வுறுநாள்.
12.280   12 st/nd Thirumurai   Song # 665   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆளும் அங்கணர் ஆலவாய்
அமர்ந்தினி திருந்த
காள கண்டரைக் கண்களின்
பயன்பெறக் கண்டு
நீள வந்தெழும் அன்பினால்
பணிந்தெழ நிறையார்
மீள வும்பல முறைநில
முறவிழுந் தெழுவார்.
12.350   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
ஆளும்அங் கணருக் கன்பர்
அணைந்தபோ தடியில் தாழ்ந்து
மூளுமா தரவு பொங்க
முன்புநின் றினிய கூறி
நாளும்நல் லமுதம் ஊட்டி
நயந்தன வெல்லாம் நல்கி
நீளும்இன் பத்துள் தங்கி
நிதிமழை மாரி போன்றார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list