சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கங்கை
கங்கை
கங்கையும்
கங்கைநதி
கங்கைநீர்
கங்கைநீள்
கங்கை,
கங்கையைச்
1.105
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கங்கை ஓர் வார்சடைமேல் கரந்தான், கிளிமழலைக் கேடு இல்
மங்கை ஓர் கூறு உடையான், மறையான், மழு ஏந்தும்
அம் கையினான், அடியே பரவி, அவன் மேய ஆரூர்
தம் கையினால்-தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.
2.081
2 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கங்கை சேர் சடைமுடியீர்! காலனை முன் செற்று உகந்தீர்!
திங்களோடு இள அரவம் திகழ் சென்னி வைத்து உகந்தீர்!
மங்கை ஓர்கூறு உடையீர்! மறையோர்கள் நிறைந்து ஏத்த,
பங்கயன் சேர் வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.
2.095
2 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கங்கை நீர் சடைமேலே கதம் மிக, கதிர் இளவன மென்
கொங்கையாள் ஒருபாகம் மருவிய, கொல்லை வெள் ஏற்றன்;
சங்கை ஆய்த் திரியாமே தன் அடியார்க்கு அருள் செய்து,
அங்கையால் அனல் ஏந்தும் அடிகளுக்கு இடம் அரசிலியே.
2.101
2 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கங்கை பொங்கு செஞ்சடைக் கரந்த கண்டர், காமனை
மங்க வெங்கணால் விழித்த மங்கைபங்கன், மன்னும் ஊர்
தெங்கின் ஊடு போகி வாழை கொத்து இறுத்து,
மாவின்மேல்
அம் கண் மந்தி முந்தி ஏறும் அம் தண் ஆரூர் என்பதே.
2.118
2 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கங்கை, திங்கள், வன்னி, துன் எருக்கி(ன்)னொடு, கூவிளம்,
வெங் கண் நாகம், விரிசடையில் வைத்த விகிர்தன்(ன்)
இடம்
செங்கயல் பாய் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி,
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் மதிமுத்தமே.
3.028
3 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கங்கை ஆர் சடை இடைக் கதிர் மதி அணிந்தவன்,
வெங் கண் வாள் அரவு உடை வேதியன், தீது இலாச்
செங்கயல் கண் உமையாளொடும் சேர்வு இடம்
மங்கைமார் நடம் பயில் மா மழபாடியே.
3.058
3 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கங்கை ஓர் வார்சடைமேல் அடைய, புடையே கமழும்
மங்கையோடு ஒன்றி நின்ற(ம்) மதிதான் சொல்லல் ஆவது ஒன்றே?
சங்கை இல்லா மறையோர் அவர்தாம் தொழு சாத்தமங்கை,
அங்கையில் சென்னி வைத்தாய்! அயவந்தி அமர்ந்தவனே!
4.034
4 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊட,
தென்கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான், மலையை,
முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட,
அம் கை வாள் அருளினான் ஊர்- அணி மறைக்காடுதானே.
4.038
4 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப் பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார்; திசை திசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்; மான்மறி, மழுவும், வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார்;-ஐயன் ஐயாறனாரே.
5.040
5 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடை வைத்து மலைமகள்-
நங்கையை உடனே வைத்த நாதனார்,
திங்கள் சூடி, திருக்கழிப்பாலையான்,
இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே.
5.097
5 st/nd Thirumurai
Song # 15
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கை தங்கிய செஞ்சடைமேல் இளன்
திங்கள் சூடிய தீநிற-வண்ணனார்;
இங்கணார், எழில் வானம் வணங்கவே;
அம் கணாற்கு அதுவால், அவன் தன்மையே!
5.099
5 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்?
கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்?
ஒங்கு மாகடல் ஓதம் நீராடில் என்?
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.
6.079
6 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கை எனும் கடும் புனலைக் கரந்தான் தன்னை, கா மரு பூம்பொழில் கச்சிக் கம்பன் தன்னை,
அம் கையினில் மான் மறி ஒன்று ஏந்தினானை, ஐயாறு மேயானை, ஆரூரானை,
பங்கம் இலா அடியார்க்குப் பரிந்தான் தன்னை, பரிதிநியமத்தானை, பாசூரானை,
சங்கரனை, தலையாலங்காடன் தன்னை, சாராதே சால நாள் போக்கினேனே!.
7.054
7 st/nd Thirumurai
Song # 3
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கங்கை தங்கிய சடை உடைக் கரும்பே! கட்டியே! பலர்க்கும் களை கண்ணே!
அங்கை நெல்லியின் பழத்து இடை அமுதே! அத்த! என் இடர் ஆர்க்கு எடுத்து உரைக்கேன்?
சங்கும் இப்பியும் சலஞ்சலம் முரல, வயிரம் முத்தொடு பொன் மணி வரன்றி,
ஒங்கும் மா கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!.
7.070
7 st/nd Thirumurai
Song # 1
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே! காமனுக்கு அனலே!
பொங்கு மாகடல் விடம் மிடற்றானே! பூதநாதனே! புண்ணியா! புனிதா!
செங்கண் மால்விடையாய்! தெளி தேனே! தீர்த்தனே! திரு ஆவடுதுறையுள்
அங்கணா! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
9.005
9 st/nd Thirumurai
Song # 7
சேந்தனார்
திருவிசைப்பா
கங்கைநீர் அரிசிற் கரைஇரு மருங்கும்
கமழ்பொழில் தழுவிய கழனித்
திங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்
மாடநீ டுயர்திரு வீழித்
தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி
நம்பியைத் தன்பெருஞ் சோதி
மங்கைஓர் பங்கத் தென்னரு மருந்தை
வருந்திநான் மறப்பனோ இனியே.
11.032
11 st/nd Thirumurai
Song # 50
நம்பியாண்டார் நம்பி
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
கங்கை வலம்இடம் பூவலங்
குண்டலம் தோடிடப்பால்
தங்குங் கரம்வலம் வெம்மழு
வீயிடம் பாந்தள்வலம்
சங்க மிடம்வலம் தோலிட
மாடை வலம்அக்கிடம்
அங்கஞ் சரிஅம் பலவன் வலங்கா
ணிடமணங்கே.
12.000
12 st/nd Thirumurai
Song # 136
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
கங்கையும் மதியும் பாம்புங்
கடுக்கையு முடிமேல் வைத்த
அங்கணர் ஓலை காட்டி
ஆண்டவர் தமக்கு நாடு
மங்கையர் வதன சீத
மதியிரு மருங்கு மோடிச்
செங்கயல் குழைகள் நாடுந்
திருமுனைப் பாடி நாடு.
12.020
12 st/nd Thirumurai
Song # 29
சேக்கிழார்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
கங்கைநதி கரந்தசடை
கரந்தருளி யெதிர்நின்ற
வெங்கண்விடை யவர்அருள
வேட்கோவ ருரைசெய்வார்
எங்களிலோர் சபதத்தால்
உடன்மூழ்க இசைவில்லை
பொங்குபுனல் யான்மூழ்கித்
தருகின்றேன் போதுமென.
12.110
12 st/nd Thirumurai
Song # 7
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
கங்கைநீர் கலிக்கும் சென்னிக்
கண்ணுதல் எம்பி ராற்குப்
பொங்குகுங் குலியத் தூபம்
பொலிவுறப் போற்றிச் செல்ல
அங்கவ ரருளி னாலே
வறுமைவந் தடைந்த பின்னும்
தங்கள்நா யகர்க்குத் தாமுன்
செய்பணி தவாமை யுய்த்தார்.
12.210
12 st/nd Thirumurai
Song # 377
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
கங்கை யேமுதல் தீர்த்தமாங்
கடவுள்மா நதிகள்
மங்க லம்பொலி புனற்பெருந்
தடங்கொடு வணங்க
எங்கும் நீடிய பெருங்கண
நாதர்கள் இறைஞ்சப்
பொங்கி யங்களால் பூதவே
தாளங்கள் போற்ற.
12.280
12 st/nd Thirumurai
Song # 1077
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
கங்கை வார்சடை யார்கபா
லீச்சரத் தணைந்து
துங்க நீள்சுடர்க் கோபுரம்
தொழுதுபுக் கருளி
மங்கை பாகர்தம் கோயிலை
வலங்கொண்டு வணங்கிச்
செங்கை சென்னிமேல் குவிந்திடத்
திருமுன்பு சேர்ந்தார்.
12.290
12 st/nd Thirumurai
Song # 341
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
கங்கைநீர் கரந்த வேணி
கரந்தவர் அருளிச் செய்வார்
நங்கைநீ மறாது செய்யின்
நான்வந்த துரைப்ப தென்ன
அங்கயல் விழியி னாரும்
அதனைநீ ரருளிச் செய்தால்
இங்கெனக் கிசையு மாகில்
இசையலாம் என்று சொல்லி.
12.300
12 st/nd Thirumurai
Song # 4
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
கங்கைநீள் துறையாடிக்
கருத்துறைநீள் கடலேற்றும்
அங்கணர்தாம் மகிழ்ந்தருளும்
அவிமுத்தம் பணிந்தேத்தி
மங்குல்வளர் வரைவிந்த
மன்னுபருப் பதம்இறைஞ்சித்
திங்களணி சடையர்திருக்
காளத்தி மலைசேர்ந்தார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list