சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கரிய
கரியவன்
கரிய
கரியட்ட
கரியார்தாம்
கரியானும்
கரியின்
கரியத்
கரியக்
கரியரே
1.040
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரியவன் நான்முகன் கைதொழுது ஏத்த, காணலும் சாரலும் ஆகா
எரி உரு ஆகி, ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி,
வரி அரவு அல்குல் மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
விரிமலர் ஆயின தூவி, விகிர்தனது சேவடி சேர்வோம்.
1.072
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரிய மாலும் செய்ய பூமேல் அயனும் கழறிப் போய்,
அரிய அண்டம் தேடிப் புக்கும் அளக்க ஒண்கிலார்,
தெரிய அரிய தேவர் செல்வம் திகழும் குடமூக்கில்,
கரிய கண்டர், காலகாலர், காரோணத்தாரே.
1.090
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரிய கண்டனை, சிரபுரத்துள் எம்
அரசை, நாள்தொறும் பரவி, உய்ம்மினே!
2.040
2 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரியானும் நான்முகனும் காணாமைக் கனல் உரு ஆய்
அரியான் ஆம் பரமேட்டி, அரவம் சேர் அகலத்தான்,
தெரியாதான், இருந்து உறையும் திகழ் பிரமபுரம் சேர
உரியார்தாம் ஏழ் உலகும் உடன் ஆள உரியாரே.
2.096
2 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரியின் மா முகம் உடைய கணபதி தாதை, பல்பூதம்
திரிய இல் பலிக்கு ஏகும் செழுஞ்சுடர், சேர்தரு மூதூர்
சரியின் முன்கை நல் மாதர் சதிபட மா நடம் ஆடி,
உரிய நாமங்கள் ஏத்தும் ஒலி புனல் காழி நன்நகரே.
2.108
2 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரிய கண்டத்தர், வெளிய வெண்பொடி அணி மார்பினர்,
வலங்கையில்
எரியர், புன்சடை இடம் பெறக் காட்டு அகத்து ஆடிய
வேடத்தர்,
விரியும் மா மலர்ப்பொய்கை சூழ் மது மலி விற்குடி
வீரட்டம்
பிரிவு இலாதவர் பெருந் தவத்தோர் எனப் பேணுவர்,
உலகத்தே.
2.119
2 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரிய மாலும், அயனும், அடியும் முடி காண்பு ஒணா
எரிஅது ஆகி(ந்) நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டு கா
விரியின் நீர் வந்து அலைக்கும் கரை மேவும் நாகேச்சுரம்
பிரிவிலாத(வ்) அடியார்கள் வானில் பிரியார்களே
3.041
3 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரியின் உரியன், திரு ஏகம்பன்,
பெரிய புரம் மூன்று எரிசெய்தானே.
4.047
4 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
கரியத் தான் கண் சிவந்து, கயிலை நல் மலையைப் பற்றி,
இரியத் தான் எடுத்திட(ல்)லும், ஏந்திழை அஞ்ச, ஈசன்
நெரியத் தான் ஊன்றா முன்னம் நிற்கிலாது, அலறி வீழ்ந்தான்;
மறியத் தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
7.044
7 st/nd Thirumurai
Song # 9
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கரிய மனச் சமண் காடி ஆடு கழுக்களால்
எரிய வசவுணும் தன்மையோ? இமவான் மகள்
பெரிய மனம் தடுமாற வேண்டி, பெம்மான்-மதக்-
கரியின் உரி அல்லது இல்லையோ, எம்பிரானுக்கே?
7.080
7 st/nd Thirumurai
Song # 4
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கரியக் கறைக்கண்டன்(ன்); நல கண்மேல் ஒரு கண்ணான்;
வரிய சிறை வண்டு யாழ்செயும் மாதோட்ட நன் நகருள்
பரிய திரை எறியா வரு பாலாவியின் கரைமேல்-
தெரியும் மறை வல்லான்திருக்கேதீச்சுரத்தானே.
7.093
7 st/nd Thirumurai
Song # 8
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கரியின் உரியும், கலைமான்மறியும்,
எரியும் மழுவும், உடையான் இடம் ஆம்-
புரியும் மறையோர் நிறை சொல்பொருள்கள்
தெரியும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.
9.009
9 st/nd Thirumurai
Song # 3
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கரியரே இடந்தான் செய்யரே யொருபால்
கழுத்தில்ஓர் தனிவடம் சேர்த்தி
முரிவரே முனிவர் தம்மொடால் நிழற்கீழ்
முறைதெரிந் தோருடம் பினராம்
இருவரே முக்கண் நாற்பெருந் தடந்தோள்
இறைவரே மறைகளுந் தேட
அரியரே ஆகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
10.917
10 st/nd Thirumurai
Song # 2
திருமூலர்
திருமந்திரம்
கரியட்ட கையன் கபாலம்கை ஏந்தி
எரியும் இளம்பிறை சூடும்எம் மானை
அரியன் பெரியன்என்(று) ஆட்பட்ட தல்லால்
கரியன்கொள் சேயன்கொல் காண்கின்றிலேனே.
11.023
11 st/nd Thirumurai
Song # 63
பரணதேவ நாயனார்
சிவபெருமான் திருவந்தாதி
கரியார்தாம் சேருங் கலைமறிகைக் கொண்டே
கரியார்தாஞ் சேருங் கவாலி கரியாகி
நின்ற கழிப்பாலை சேரும் பிரான் நாமம்
நின்ற கழிப்பாலை சேர்.
11.023
11 st/nd Thirumurai
Song # 82
பரணதேவ நாயனார்
சிவபெருமான் திருவந்தாதி
கரியானும் நான்முகனு மாய்நின்ற கண்ண
கரியாருங் கூற்றங் கனியே கரியாரும்
காடுடையாய் காலங்கள் ஆனாய் கனலாடும்
காடுடையாய் காலமா னாய்.
12.720
12 st/nd Thirumurai
Song # 29
சேக்கிழார்
வெள்ளானைச் சருக்கம்
கரிய கண்டர்தங் கோயிலை
வலங்கொண்டு காதலால் பெருகன்பு
புரியும் உள்ளத்தர் உள்ளணைந்
திறைவர்தம் பூங்கழல் இணைபோற்றி
அரிய செய்கையில் அவனியில்
வீழ்ந்தெழுந்து அலைப்புறு மனைவாழ்க்கை
சரிய வேதலைக் குத்தலை
மாலையென் றெடுத்தனர் தமிழ்மாலை.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list