சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கருவ
கருவைக்     கருவரை     கருவை     கருவில்     கருவரம     கருவரையொரு     கருவ     கருவினால்     கருவினை,     கருவனே!     கருவனை,     கருவை;     கருவளர்    
1.116   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கருவைக் கழித்திட்டு, வாழ்க்கை கடிந்து, உம் கழல் அடிக்கே
உருகி, மலர் கொடுவந்து, உமை ஏத்துதும், நாம் அடியோம்;
செரு இல் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள்செய்தவரே!
திரு இலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

3.035   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கருவினால் அன்றியே கரு எலாம் ஆயவன்,
உருவினால் அன்றியே உருவு செய்தான், இடம்
பருவ நாள், விழவொடும் பாடலோடு ஆடலும்
திருவினால் மிகு புகழ்த் தென்குடித்திட்டையே.

4.013   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கருவரை சூழ் கடல் இலங்கைக் கோமானைக் கருத்து அழியத்
திரு விரலால் உதகரணம் செய்து உகந்த சிவமூர்த்தி,
பெருவரை சூழ் வையகத்தார், பேர் நந்தி என்று ஏத்தும்
அரு வரை சூழ் ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

4.055   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கருவரை அனைய மேனிக் கடல் வண்ணன் அவனும் காணான்;
திரு வரை அனைய பூமேல் திசை முகன் அவனும் காணான்;
ஒரு வரை உச்சி ஏறி ஓங்கினார், ஓங்கி வந்து(வ்)
அருமையின் எளிமை ஆனார் அவர், வலம்புரவனாரே.

5.004   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கருவினை, கடல்வாய் விடம் உண்ட எம்
திருவினை, திரு அண்ணாமலையனை,
உருவினை, உணரார் புரம் மூன்று எய்த
அருவினை,-அடியேன் மறந்து உய்வனோ?

5.013   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கருவனே! கரு ஆய்த் தெளிவார்க்கு எலாம்
ஒருவனே! உயிர்ப்பு ஆய் உணர்வு ஆய் நின்ற
திருவனே! திரு வீழிமிழலையுள்
குருவனே!-அடியேனைக் குறிக்கொளே!

5.083   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கருவனை, கடல் நாகைக்காரோணனை,
இருவருக்கு அறிவு ஒண்ணா இறைவனை,
ஒருவனை, உணரார் புரம்மூன்று எய்த
செருவனை, தொழத் தீவினை தீருமே.

6.091   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கருவை; என் தன் மனத்து இருந்த கருத்தை; ஞானக் கடுஞ்சுடரை; படிந்து கிடந்து அமரர் ஏத்தும்
உருவை; அண்டத்து ஒரு முதலை; ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடு ஆய் நின்ற,
மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த, மயானத்து, மாசிலா மணியை; வாசத்
திரு எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை; செழுஞ்சுடரை; சென்று அடையப் பெற்றேன், நானே.

7.098   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கருவரை போல் அரக்கன் கயிலை(ம்) மலைக்கீழ்க் கதற,
ஒருவிரலால் அடர்த்து, இன் அருள் செய்த உமாபதிதான்
திரை பொரு பொன்னி நன்நீர்த் துறைவன், திகழ் செம்பியர்கோன்,
நரபதி,-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.

9.002   9 st/nd Thirumurai   Song # 2   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா  
கருவளர் மேகத் தகடுதோய் மகுடக்
   கனகமா ளிகைகலந் தெங்கும்
பெருவள முத்தீ நான்மறைத் தொழிலால்
   எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் தெய்வப் பதிவிதி நிதியந்
   திரண்டசிற் றம்பலக் கூத்தா
உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும்
   உன்அடிக் கீழதென் உயிரே.

10.205   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள்புரிந் தானே. 

10.214   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்தும்மற் றோரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
துருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.

10.807   10 st/nd Thirumurai   Song # 32   திருமூலர்   திருமந்திரம்  
கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரிய மதில் உண்ணும் ஆசையாம்
உரிய சுழுத்தி முதல்எட்டும் சூக்கத்(து)
அரிய கனா தூலம் அந்நன வாமே.

10.808   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
கருவரம பாகிய காயத் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்பிறப் புற்றார்
குருவரம் பெற்(று)அவர் கூடிய பின்னை
இருவரும் இன்றிஒன் றாகிநின் றாரே.

12.100   12 st/nd Thirumurai   Song # 82   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
கருவரையொரு தனுவொடுவிசை
கடுகியதென முனைநேர்
குரிசில்முன்விடும் அடுசரமெதிர்
கொலைபயில்பொழு தவையே
பொருகரியொடு சினவரியிடை
புரையறவுடல் புகலால்
வருமிரவொடு பகலணைவன
எனமிடையுமவ் வனமே.
12.280   12 st/nd Thirumurai   Song # 185   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கருவ ரைப்பிற் புகாதவர் கைதொழும்
ஒருவ ரைத்தொழு துள்ள முவந்துபோய்ப்
பெருவ ரத்தினிற் பெற்றவர் தம்முடன்
திருவ ரத்துறை சேர்தும்என் றேகுவார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list