சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கழி
கழிகின்ற     கழிப்படு     கழிவும்     கழிந்தது     கழிந்த     கழிநீள்     கழிக்கானல்     கழி     கழிகாடலனே!     கழியொடு     கழிக்     கழிந்தவர்     கழித்திலேன்;     கழியக்     கழிகட்    
2.011   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கழி ஆர் சீர் ஓதம் மல்கும் கடல் காழியு
ஒழியாது கோயில்கொண்டானை, உகந்து உள்கித்
தழி ஆர் சொல் ஞானசம்பந்தன் தமிழ் ஆர
மொழிவார்கள், மூஉலகும் பெறுவார்களே.

2.020   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கழிகாடலனே! கனல் ஆடலினாய்!
பழிபாடு இலனே! அவையே பயிலும்
அழிபாடு இலராய், அழுந்தை மறையோர்
வழிபாடுசெய் மா மடம் மன்னினையே.

2.021   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கழி ஆர் பதி காவலனைப் புகலிப்
பழியா மறை ஞானசம்பந்தன சொல்
வழிபாடு இவை கொண்டு, அடி வாழ்த்த வல்லார்,
கெழியார், இமையோரொடு; கேடு இலரே.

2.077   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கழி உலாம் கடல் கானல் சூழ் கழுமலம் அமர் தொல் பதிப்
பழி இலா மறை ஞானசம்பந்தன், நல்லது ஓர் பண்பின் ஆர்
மொழியினால், அறையணி நல்லூர் முக்கண் மூர்த்திதன் தாள் தொழக்
கெழுவினார் அவர், தம்மொடும் கேடு இல் வாழ் பதி பெறுவரே.

2.100   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கழியொடு உலவு கானல் சூழ் காழி ஞானசம்பந்தன்,
பழிகள் தீரச் சொன்ன சொல் பாவநாசம் ஆதலால்,
அழிவு இலீர், கொண்டு ஏத்துமின்! அம் தண்
கோவலூர்தனில்,
விழி கொள் பூதப்படையினான், வீரட்டானம் சேர்துமே.

3.047   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கழிக் கரைப் படு மீன் கவர்வார் அமண்-
அழிப்பரை அழிக்கத் திரு உள்ளமே?
தெழிக்கும் ம்புனல் சூழ் திரு ஆலவாய்
மழுப்படை உடை மைந்தனே! நல்கிடே!

3.082   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கழி அருகு பள்ளி இடம் ஆக அடும் மீன்கள் கவர்வாரும்,
வழி அருகு சார வெயில் நின்று அடிசில் உள்கி வருவாரும்
பழி அருகினார் ஒழிக! பான்மையொடு நின்று தொழுது ஏத்தும்
அழி அருவி தோய்ந்த பெருமான் உறைவது அவளிவணலூரே.

3.121   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கழி உளார் எனவும், கடல் உளார் எனவும், காட்டு
உளார்:, நாட்டு உளார் எனவும்,
வழி உளார் எனவும், மலை உளார் எனவும், மண்
உளார், விண் உளார் எனவும்,
சுழி உளார் எனவும், சுவடு தாம் அறியார், தொண்டர்
வாய் வந்தன சொல்லும்
பழி உளார் போலும்! பந்தணைநல்லூர் நின்ற எம்
பசுபதியாரே.

4.010   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கழிந்தவர் தலை கலன் ஏந்தி, காடு உறைந்து
இழிந்தவர் ஒருவர்! என்று எள்க, வாழ்பவர்-
வழிந்து இழி மதுகரம் மிழற்ற, மந்திகள்
கிழிந்த தேன் நுகர் தரும் கெடில வாணரே.

4.026   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கழித்திலேன்; காமவெந்நோய்; காதன்மை என்னும் பாசம்
ஒழித்திலேன்; ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து
விழித்திலேன்; வெளிறு தோன்ற வினை எனும் சரக்குக் கொண்டேன்;
அழித்திலேன்; அயர்த்துப் போனேன் அதிகை வீரட்டனீரே!

5.050   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கழியக் கண்டிலேன்; கண் எதிரே கண்டேன்;
ஒழியப் போந்திலேன்; ஒக்கவே ஓட்டந்தேன்;
வழியில் கண்டிலேன்; வாய்மூர் அடிகள் தம்
சுழியில் பட்டுச் சுழல்கின்றது என்கொலோ?

7.095   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கழி ஆய், கடல் ஆய், கலன் ஆய், நிலன் ஆய், கலந்த சொல் ஆகி,-
இழியாக் குலத்தில் பிறந்தோம்-உம்மை இகழாது ஏத்துவோம்;
பழிதான் ஆவது அறியீர்: அடிகேள்! பாடும் பத்தரோம்;
வழிதான் காணாது, அலமந்து இருந்தால், வாழ்ந்துபோதீரே!

8.210   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
கழிகின்ற வென்னையும் நின்றநின்
   கார்மயில் தன்னையும்யான்
கிழியொன்ற நாடி யெழுதிக்கைக்
   கொண்டென் பிறவிகெட்டின்
றழிகின்ற தாக்கிய தாளம்
   பலவன் கயிலையந்தேன்
பொழிகின்ற சாரல்நுஞ் சீறூர்த்
   தெருவிடைப் போதுவனே.

8.217   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
கழிகட் டலைமலை வோன்புலி
   யூர்கரு தாதவர்போல்
குழிகட் களிறு வெரீஇஅரி
   யாளி குழீஇவழங்காக்
கழிகட் டிரவின் வரல்கழல்
   கைதொழு தேயிரந்தேன்
பொழிகட் புயலின் மயிலின்
   துவளு மிவள்பொருட்டே.

10.314   10 st/nd Thirumurai   Song # 23   திருமூலர்   திருமந்திரம்  
கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்
கழிகின்ற அப்பொருள் காணலுமாகும்
கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற்
கழியாத அப்பொருள் காணலு மாமே.

10.711   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
கழிப்படு தண்கடற் கௌவை உடைத்து
வழிப்படு வார்மலர் மொட்டறி யார்கள்
பழிப்படு வார்பலரும் பழி வீழ
வெளிப்படு வார்உச்சி மேவிநின் றானே.

10.714   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
கழிவும் முதலுமெங் காதற் றுணையும்
அழிவும தாய்நின்ற ஆதிப் பிரானைப்
பழியும் புகழும் படுபொருள் முற்றும்
ஒழியுமென் ஆவி உழவுகொண் டானே.

11.005   11 st/nd Thirumurai   Song # 17   ஐயடிகள் காடவர்கோன் நாயனார்   திருக்கோயில் திருவெண்பா சேத்திரத்  
கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறி
ஒழிந்த துடல்இரா வண்ணம் அழிந்தது
இராமலையா கொண்டுபோ என்னாமுன் நெஞ்சே
சிராமலையான் பாதமே சேர்.

11.009   11 st/nd Thirumurai   Song # 21   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
கழிந்த கழிகிலாய் நெஞ்சே கழியாது
ஒழிந்தநாள் மேற்பட் டுயர்ந்தோர் மொழிந்தசீர்க்
கண்ணுதலான் எந்தை கயிலாய மால்வரையை
நண்ணுதலாம் நன்மை நமக்கு.

11.033   11 st/nd Thirumurai   Song # 67   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
கழிநீள் கடல்நஞ் சயின்றார்க்
கிருந்த கடிமலரை
மொழிநீள் புகழ்க்கழற் சிங்கன்தன்
தேவிமுன் மோத்தலுமே
எழில்நீள் குமிழ்மலர் மூக்கரிந்
தானென் றியம்புவரால்
செழுநீர் மருகல்நன் னாட்டமர்
தஞ்சைச் செருத்துணையே.

12.280   12 st/nd Thirumurai   Song # 467   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கழிக்கானல் மருங்கணையுங் கடல்நாகை
யதுநீங்கிக் கங்கை யாற்றுச்
சுழிக்கானல் வேணியர்தம் பதிபலவும்
பரவிப்போய்த் தோகை மார்தம்
விழிக்காவி மலர்பழனக் கீழ்வேளூர்
விமலர்கழல் வணங்கி ஏத்தி
மொழிக்காதல் தமிழ்மாலை புனைந்தருளி
அங்ககன்றார் மூதூர் நின்றும்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000