சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கால்
கால்கொண்டு     கால்     கால்கொண்டென்     கால்கழல்     கால்களால்     கால்-தனால்    
2.003   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கால் எடுத்த திரைக்கை கரைக்கு எறி கானல் சூழ்
சேல் அடுத்த வயல் பழனத் தெளிச்சேரியீர்!
மால் அடித்தலம், மா மலரான் முடி, தேடியே
ஓலம் இட்டிட, எங்ஙனம் ஓர் உருக் கொண்டதே?

2.060   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கால் நின்று அதிர, கனல் வாய் நாகம் கச்சு ஆக,
தோல் ஒன்று உடையார்; விடையார்; தம்மைத்
தொழுவார்கள்
மால் கொண்டு ஓட மையல் தீர்ப்பார்; ஊர்போலும்
பால் வெண்மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே.

2.078   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கால் விளங்கு எரி கழலினார், கை விளங்கிய வேலினார்,
நூல் விளங்கிய மார்பினார், நோய் இலார், பிறப்பும்(ம்)
இலார்,
மால் விளங்கு ஒளி மல்கிய மாசு இலா மணிமிடறினார்,
மேல் விளங்கு வெண்பிறையினார்; மேயது விளநகர் அதே.

4.009   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கால்களால் பயன் என்? -கறைக் கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்?

4.033   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கால் கொடுத்து, இருகை ஏற்றி, கழி நிரைத்து, இறைச்சி மேய்ந்து
தோல் மடுத்து, உதிர நீரால் சுவர் எடுத்து, இரண்டுவாசல்
ஏல்வு உடைத்தா அமைத்து, அங்கு ஏழுசாலேகம் பண்ணி,
மால் கொடுத்து, ஆவி வைத்தார்-மா மறைக்காடனாரே.

4.036   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கால்-தனால் காலற் காய்ந்து கார் உரி போர்த்த ஈசர்
தோற்றனார், கடலுள் நஞ்சை; தோடு உடைக் காதர்; சோதி
ஏற்றினார் இளவெண்திங்கள், இரும் பொழில் சூழ்ந்த காயம்;
பாற்றினார், வினைகள் எல்லாம்;-பழனத்து எம் பரமனாரே.

4.037   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கால் அதிர்கழல்கள் ஆர்ப்ப, கனல்-எரி கையில் வீசி,
ஞாலமும் குழிய நின்று, நட்டம் அது ஆடுகின்ற
மேலவர்-முகடு தோய விரிசடை திசைகள் பாய
மால் ஒருபாகம் ஆக மகிழ்ந்த நெய்த்தானனாரே.

4.067   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கால் கொடுத்து, எலும்பு மூட்டி, கதிர் நரம்பு ஆக்கை ஆர்த்து
தோல் உடுத்து, உதிரம் அட்டி, தொகு மயிர் மேய்ந்த கூரை
ஓல் எடுத்து உழைஞர் கூடி ஒளிப்பதற்கு அஞ்சுகின்றேன்-
சேல் உடைப் பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே!

10.116   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.

10.813   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
கால் அங்கி நீர் பூக் கலந்தஆ காயமே
மால் அங்கி ஈசன் பிரமன் சதாசிவன்
மேல் அஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக்
காலனும் இல்லை கருத்தில்லை தானே.

10.817   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
கால்கொண்டென் சென்னியிற் கட்டறக் கட்டற
மால்கொண்ட நெஞ்சின் மயக்கில் துயக்கறப்
பால்கொண்ட என்னைப் பரன்கொள நாடினான்
மேல்கொண்டென் செம்மை விளம்பஒண்ணாதே.

12.090   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
கால்கழல் கட்டிய மள்ளர்கள்
கைகளின் மெய்க ளடக்கிய
வாளொளி வட்ட முனைந்திட
வந்திரு கைகளின் முந்தினர்
வேலொடு வேலெதிர் நீள்வன
மேவிய பாதலம் விட்டுயர்
ஞாலமு றும்பணி வீரர்கள்
நாநிமிர் கின்றன வொத்தன.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list