| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் குல
குல
குலாவிய
குலைக்கின்ற
குலமகளிர்
குலத்தார்
குலமே
குலமுத
குலவுந்துறை
குலவு
குலச்சிறை
குலபுகழ்க்
குலகிரியின்
குலாவு
குலமலர்
குலவர்
குலையின்
குலம்
குலன்கள்
குலா
குலங்கள்
1.067
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குல வெஞ்சிலையால் மதில் மூன்று எரித்த கொல் ஏறு உடை அண்ணல்
கலவமயிலும் குயிலும் பயிலும் கடல் போல் காவேரி
நல மஞ்சு உடைய நறு மாங்கனிகள் குதிகொண்டு எதிர் உந்தி,
பலவின் கனிகள் திரை முன் சேர்க்கும் பழன நகராரே.
2.027
2 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து
இலகு மான் மழு ஏந்தும் அம் கையன்,
நிலவும் இந்திரநீலப்பர்ப்பதத்து
உலவினான், அடி உள்க, நல்குமே.
2.039
2 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குலாவு திங்கள் சடையான் குளிரும் பரிதி நியமம்,
போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியாத் தென்
புறம்பயம், பூவணம், பூழியூரும்,
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடிதோள்
நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே!
2.087
2 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குலமலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர் கூடி நேடி,
நினைவுற்
றில பல எய்த ஒணாமை எரி ஆய் உயர்ந்த பெரியான்;
இலங்கு சடையன்
சில பல தொண்டர் நின்று பெருமை(க்) கள் பேச, வரு
மைத் திகழ்ந்த பொழிலின்
நல மலர் சிந்த, வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன்
அவனே.
2.104
2 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குலவு கோலத்த கொடி நெடுமாடங்கள் குழாம், பல குளிர்
பொய்கை,
உலவு புள் இனம், அன்னங்கள் ஆலிடும், பூவை சேரும்
கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்து உறையும்
கற்பகத்தைச் சீர்
நிலவி நின்று நின்று ஏத்துவார் மேல் வினை நிற்ககில்லா
தானே.
2.115
2 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குலவர் ஆக; குலம் இலரும் ஆக; குணம் புகழுங்கால்,
உலகில் நல்ல கதி பெறுவரேனும், மலர் ஊறு தேன்
புலவம் எல்லாம் வெறி கமழும் அம் தண் புகலூர்தனுள்,
நிலவம் மல்கு சடை அடிகள் பாதம் நினைவார்களே
3.006
3 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குலையின் ஆர் தெங்கு சூழ் கொள்ளம்பூதூர்
விலையில் ஆட்கொண்ட விகிர்தனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!
4.101
4 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே நமக்கு உண்டுகொலோ-
அலம்பு அலம்பா வரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்,
சிலம்பு அலம்பா வரு சேவடியான், திரு மூலட்டானம்
புலம்பு அலம்பா வரு தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
5.077
5 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலன்கள் என் செய்வ? குற்றங்கள் என் செய்வ?
துலங்கி நீ நின்று சோர்ந்திடல், நெஞ்சமே!
இலங்கு சேறையில் செந்நெறி மேவிய
அலங்கனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே?
6.002
6 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலா வெண்தலைமாலை என்பு பூண்டு, குளிர் கொன்றைத்தார் அணிந்து, கொல் ஏறு ஏறி,
கலா வெங்களிற்று உரிவைப்போர்வை மூடி, கை ஓடு அனல் ஏந்தி, காடு உறைவார்;
நிலா வெண்மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர்-
புலா வெண்தலை ஏந்திப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.
6.014
6 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலங்கள் மிகு மலை, கடல்கள், ஞாலம், வைத்தார்;
குரு மணி சேர் அர வைத்தார்; கோலம் வைத்தார்;
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்; உண்டு அருளி விடம் வைத்தார்; எண்தோள் வைத்தார்;
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார்;
நிமிர் விசும்பின் மிசை வைத்தார்; நினைந்தார் இந் நாள்
நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
6.014
6 st/nd Thirumurai
Song # 11
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார்; குரு மணி சேர் மலை வைத்தார்; மலையைக் கையால்
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒருவிரலால் உற வைத்தார்; இறைவா! என்று
புலம்புதலும், அருளொடு போர் வாளும் வைத்தார்;
புகழ் வைத்தார்; புரிந்து ஆளாக் கொள்ள வைத்தார்;
நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார்- நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
6.020
6 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலம் கொடுத்துக் கோள் நீக்க வல்லான் தன்னை, குலவரையின் மடப்பாவை இடப்பாலானை,
மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டிக் கொண்ட மறையவனை, பிறை தவழ் செஞ்சடையினானை
சலம் கெடுத்துத் தயா மூல தன்மம் என்னும்
தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம்
நலம் கொடுக்கும் நம்பியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.
6.095
6 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலம் பொல்லேன்; குணம் பொல்லேன்; குறியும் பொல்லேன்; | குற்றமே பெரிது உடையேன்; கோலம் ஆய
நலம் பொல்லேன்; நான் பொல்லேன்; ஞானி அல்லேன்; | நல்லாரோடு இசைந்திலேன்; நடுவே நின்ற
விலங்கு அல்லேன்; விலங்கு அல்லாது ஒழிந்தேன் அல்லேன்; | வெறுப்பனவும் மிகப் பெரிதும் பேச வல்லேன்;
இலம் பொல்லேன்; இரப்பதே ஈய மாட்டேன்; |என் செய்வான் தோன்றினேன், ஏழையேனே?.
8.106
8 st/nd Thirumurai
Song # 29
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குலம் களைந்தாய்; களைந்தாய் என்னைக் குற்றம்; கொற்றச் சிலை ஆம்
விலங்கல் எந்தாய், விட்டிடுதி கண்டாய்? பொன்னின் மின்னு கொன்றை
அலங்கல் அம் தாமரை மேனி அப்பா, ஒப்பு இலாதவனே,
மலங்கள் ஐந்தால் சுழல்வன், தயிரில் பொரு மத்து உறவே.
8.111
8 st/nd Thirumurai
Song # 20
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குலம் பாடி | , கொக்கு இறகும் | பாடி, | கோல் வளையாள்
நலம் பாடி, | நஞ்சு உண்ட | வா பாடி, | நாள்தோறும்
அலம்பு ஆர் | புனல் தில்லை | அம்பலத்தே | ஆடுகின்ற
சிலம்பு ஆடல் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!
10.406
10 st/nd Thirumurai
Song # 37
திருமூலர்
திருமந்திரம்
குலாவிய கோலக் குமரிஎன் னுள்ளம்
நிலாவி யிருந்து நெடுநாள் அணைந்தும்
உலாவி யிருந்துணர்ந் துச்சியி னுள்ளே
கலாவி யிருந்த கலைத்தலை யாளே.
10.919
10 st/nd Thirumurai
Song # 2
திருமூலர்
திருமந்திரம்
குலைக்கின்ற நீரிற் குவலயம் நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடா காசம்
நிலத்திடை வானிடை நீண்டகன் றானை
வரைத்து வலஞ்செயு மாறறி யேனே.
10.924
10 st/nd Thirumurai
Song # 27
திருமூலர்
திருமந்திரம்
குலைக்கின்ற நன்னகை யான்கொங் குழக்கின்
நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்
உலைக்குப் புறம்எனில் ஓடும் இருக்கும்
புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே.
11.008
11 st/nd Thirumurai
Song # 15
சேரமான் பெருமாள் நாயனார்
திருக்கயிலாய ஞான உலா
குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு
தலமலிய ஆகந் தழீஇக் கலைமலிந்த
11.008
11 st/nd Thirumurai
Song # 169
சேரமான் பெருமாள் நாயனார்
திருக்கயிலாய ஞான உலா
குலத்தார் அகன்றிடுக குற்றத்தார் வம்மின்
நலத்தீர் நினைமின்நீர் என்று சொலற்கரிய
11.033
11 st/nd Thirumurai
Song # 23
நம்பியாண்டார் நம்பி
திருத்தொண்டர் திருவந்தாதி
குலமே றியசேய்ஞலூரிற்
குரிசில் குரைகடல்சூழ்
தலமே றியவிறற் சண்டிகண்
டீர்தந்தை தாளிரண்டும்
வலமே றியமழு வாலெறிந்
தீசன் மணிமுடிமேல்
நலமே றியபால் சொரிந்தலர்
சூட்டிய நன்னிதியே.
12.000
12 st/nd Thirumurai
Song # 143
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
குலமுத லறிவின் மிக்கார்
கோத்திர முறையுந் தேர்ந்தார்
நலமிகு முதியோர் சொல்லச்
சடங்கவி நன்மை யேற்று
மலர்தரு முகத்த னாகி
மணம்புரி செயலின் வாய்மை
பலவுடன் பேசி ஒத்த
பண்பினால் அன்பு நேர்ந்தான்.
12.150
12 st/nd Thirumurai
Song # 45
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
குலவுந்துறை நீதி யமைச்சர்
குறிப்பின் வைகக்
கலகஞ்செய் அமண்செய லாயின
கட்டு நீங்கி
நிலவுந்திரு நீற்று நெறித்துறை
நீடு வாழ
உலகெங்கும் நிரம்பிய சைவம்
உயர்ந்து மன்ன.
12.200
12 st/nd Thirumurai
Song # 15
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
குலவு மறையும் பலகலையும்
கொளுத்து வதன்முன் கொண்டமைந்த
நிலவும் உணர்வின் திறங்கண்டு
நிறுவும் மறையோர் அதிசயித்தார்
அலகில் கலையின் பொருட்கெல்லை
ஆடுங் கழலே எனக்கொண்ட
செலவு மிகுந்த சிந்தையினில்
தெளிந்தார் சிறிய பெருந்தகையார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 751
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
குலச்சிறை யார்முன் பெய்தக்
கொற்றவன் தேவி யாரும்
தலத்திடை இழிந்து சென்றார்
தண்டமிழ் நாட்டு மன்னன்
நிலத்திடை வானி னின்று
நீளிருள் நீங்க வந்த
கலைச்செழுந் திங்கள் போலும்
கவுணியர் தம்மைக் கண்டான்.
12.290
12 st/nd Thirumurai
Song # 31
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
குலபுகழ்க் கோட்புலியார்
குறையிரந்து தம்பதிக்கண்
அலகில்புக ழாரூரர்
எழுந்தருள அடிவணங்கி
நிலவியவன் தொண்டர்அஃ
திசைந்ததற்பி னேரிறைஞ்சிப்
பலர்புகழும் பண்பினார்
மீண்டுந்தம் பதியணைந்தார்.
12.410
12 st/nd Thirumurai
Song # 1
சேக்கிழார்
பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
குலகிரியின் கொடுமுடிமேல்
கொடிவேங்கைக் குறியெழுதி
நிலவுதரு மதிக்குடைக்கீழ்
நெடுநிலங்காத் தினிதளிக்கும்
மலர்புகழ்வண் தமிழ்ச்சோழர்
வளநாட்டு மாமூதூர்
உலகில்வளர் அணிக்கெல்லாம்
உள்ளுறையூ ராம்உறையூர்.
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000