சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தாழ்
தாழ்ந்த     தாழ்சடை     தாழ்விலர்     தாழ்ந்து     தாழ்ந்தெ     தாழ்ந்தெழுந்து     தாழ்ந்துபல     தாழ்     தாழ்வு    
1.115   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தாழ்ந்த குழல் சடைமுடி அதன்மேல்-
தோய்ந்த இளம்பிறை துளங்கு சென்னிப்
பாய்ந்த கங்கையொடு பட அரவம்
ஏய்ந்தவன் இராமன தீச்சரமே.

3.091   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தாழ் இளங் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
போழ் இளமதி பொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனை,
காழியான்-அருமறை ஞானசம்பந்தன கருது பாடல்
கோழையா அழைப்பினும், கூடுவார், நீடுவான் உலகின்
ஊடே.

4.052   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தாழ் குழல் இன் சொல் நல்லார் தங்களைத் தஞ்சம் என்று(வ்)
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வேன்? எந்தை பெம்மான்!
வாழ்வ தேல் அரிது போலும்; வைகலும் ஐவர் வந்து(வ்)
ஆழ் குழிப் படுக்க ஆற்றேன்-ஆரூர் மூலட்டனீரே!

7.008   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தாழ்வு எனும் தன்மை விட்டு, தனத்தையே மனத்தில் வைத்து,
வாழ்வதே கருதி, தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார்;
ஆழ் குழிப்பட்ட போது, அலக்கணில், ஒருவர்க்கு ஆவர்;
யாழ் முயன்று இருக்கும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .

10.225   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
தாழ்சடை யான்றன் தமராய் உலகினிற்
போர்புக ழால்எந்தை பொன்னடி சேருவார்
வாயடையா உள்ளந் தேர்வார்க் கருள்செய்யுங்
கோவடைந் தந்நெறி கூடலு மாமே. 

10.713   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்
ஆழ்வினை ஆழ அவர்க்கே அறம்செய்யும்
ஆழ்வினை நீக்கி அருவினை தன்னோடு
போழ்வினை தீர்க்கும்அப் பொன்னுல காமே. 14,

11.007   11 st/nd Thirumurai   Song # 30   சேரமான் பெருமாள் நாயனார்   திருவாரூர் மும்மணிக்கோவை  
தாழ்ந்து கிடந்த சடைமுடிச்
சங்கரன் தாள்பணியா
தாழ்ந்து கிடந்துநை வார்கிளை
போல்அய் வேற்கிரங்கிச்
சூழ்ந்து கிடந்த கரைமேல்
திரையென்னும் கையெறிந்து
வீழ்ந்து கிடந்தல றித்துயி
லாதிவ் விரிகடலே.

11.009   11 st/nd Thirumurai   Song # 94   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
தாழ்ந்த சடையும் தவளத் திருநீறும்
சூழ்ந்த புலிஅதளும் சூழ்அரவும் - சேர்ந்து
நெருக்கி வானோர் இறைஞ்சும் காளத்தி ஆள்வார்க்
கிருக்கும் மா கோலங்கள் ஏற்று.

12.000   12 st/nd Thirumurai   Song # 86   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர்
வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர்
வீழ்ந்த இன்பத் துறையுள் விரவுவார்
சூழ்ந்த பல்வே றிடத்ததத் தொல்நகர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 183   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தாழ்ந்தெ ழுந்துமுன் முரசதிர்ந்
தெழும்எனுந் தண்டமிழ்த் தொடைசாத்தி
வாழ்ந்து போந்தங்கண் வளம்பதி
அதனிடை வைகுவார் மணிவெற்புச்
சூழ்ந்த தண்புனல் சுலவுமுத்
தாற்றொடு தொடுத்தசொல் தொடைமாலை
வீழ்ந்த காதலாற் பலமுறை
விளம்பியே மேவினார் சிலநாள்கள்.
12.280   12 st/nd Thirumurai   Song # 531   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தாழ்ந்து நாவினுக் கரசுடன்
தம்பிரான் கோயில்முன் புறமெய்திச்
சூழ்ந்த தொண்டரோ டப்பதி
அமர்பவர் சுரநதி முடிமீது
வீழ்ந்த வேணியர் தமைப்பெறுங்
காலங்கள் விருப்பினாற் கும்பிட்டு
வாழ்ந்தி ருந்தனர் காழியார்
வாழவந் தருளிய மறைவேந்தர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1022   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தாழ்ந்தெழுந்து திருமலையைத் தொழுது கொண்டே
தடஞ்சிலா தலசோபா னத்தா லேறி
வாழ்ந்திமையோர் குழாம்நெருங்கு மணிநீள் வாயில்
மருங்கிறைஞ்சி உட்புகுந்து வளர்பொற் கோயில்
சூழ்ந்துவலங் கொண்டிறைவர் திருமுன் பெய்தித்
தொழுதுதலை மேற்கொண்ட செங்கை போற்றி
வீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார்போல்
மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1123   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தாழ்ந்துபல முறைபணிந்து
தம்பிரான் முன்னின்று
வாழ்ந்துகளி வரப்பிறவி
மருந்தான பெருந்தகையைச்
சூழ்ந்தஇசைத் திருப்பதிகச்
சொன்மாலை வினாவுரையால்
வீழ்ந்தபெருங் காதலுடன்
சாத்திமிக இன்புற்றார்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000