சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தொழுத
தொழுது
தொழுதும்
தொழுதணைவுற்
தொழுதெ
தொழுதுபல
தொழுதுபுறம்
தொழுது,
தொழுத
தொழுதுபின்
4.053
4 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
தொழுது அகம் குழைய மேவித் தொட்டிமை உடைய தொண்டர்
அழுத(அ)அகம் புகுந்து நின்றார், அவர் அவாப் போலும்-ஆரூர்
எழில் அகம் நடு வெண் முற்றம் அன்றியும், ஏர் கொள் வேலிப்
பொழில் அகம் விளங்கு திங்கள் புது முகிழ் சூடினாரே.
5.021
5 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
தொழுது தூ மலர் தூவித் துதித்து நின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்,
பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்,
எழுதும், கீழ்க்கணக்கு-இன்னம்பர் ஈசனே.
8.104
8 st/nd Thirumurai
Song # 13
மாணிக்க வாசகர்
திருவாசகம்
தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,
ஆடியும், அலறியும், பாடியும், பரவியும்,
கொடிறும், பேதையும், கொண்டது விடாது' எனும்
படியே ஆகி, நல் இடை அறா அன்பின்,
பசு மரத்து ஆணி அறைந்தால் போல,
8.104
8 st/nd Thirumurai
Song # 27
மாணிக்க வாசகர்
திருவாசகம்
தொழுத கை துன்பம் துடைப்பாய், போற்றி!
அழிவு இலா ஆனந்த வாரி, போற்றி!
அழிவதும், ஆவதும், கடந்தாய், போற்றி!
முழுவதும் இறந்த முதல்வா, போற்றி!
மான் நேர் நோக்கி மணாளா, போற்றி!
9.015
9 st/nd Thirumurai
Song # 3
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
தொழுதுபின் செல்வ தயன்முதற் கூட்டம்
தொடர்வன மறைகள்நான் கெனினும்
கழுதுறு கரிகா டுறைவிடம் போர்வை
கவந்திகை கரியுரி திரிந்தூண்
தழலுமிழ் அரவம் கோவணம் பளிங்கு
சபவடம் சாட்டியக் குடியார்
இழுதுநெய் சொரிந்தோம் பழல்ஒளி விளக்கேழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே.
11.009
11 st/nd Thirumurai
Song # 86
நக்கீரதேவ நாயனார்
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
தொழுது நமனுந்தன் தூதுவர்க்குச் சொல்லும்
வழுவில்சீர்க் காளத்தி மன்னன் - பழுதிலாப்
பத்தர்களைக் கண்டால் பணிந்தகலப் போமின்கள்
எத்தனையும் சேய்த்தாக என்று.
11.033
11 st/nd Thirumurai
Song # 9
நம்பியாண்டார் நம்பி
திருத்தொண்டர் திருவந்தாதி
தொழுதும் வணங்கியும் மாலயன்
தேடருஞ் சோதிசென்றாங்
கெழுதுந் தமிழ்ப்பழ வாவணங்
காட்டி யெனக்குன்குடி
முழுதும் அடிமைவந் தாட்செ
யெனப்பெற்ற வன்முரல்தேன்
ஒழுகும் மலரின்நற் றாரெம்பி
ரான்நம்பி யாரூரனே.
12.070
12 st/nd Thirumurai
Song # 47
சேக்கிழார்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
தொழுது போற்றிஅத் துலைமிசை நின்றுநேர் துதிக்கும்
வழுவில் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும்
முழுதும் இன்னருள் பெற்றுத்தம் முன்தொழு திருக்கும்
அழிவில் வான்பதங் கொடுத்தெழுந் தருளினார் ஐயர்.
12.210
12 st/nd Thirumurai
Song # 182
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
தொழுதணைவுற் றாண்டஅர சன்புருகத்
தொண்டர் குழாத் திடையே சென்று
பழுதில்பெருங் காதலுடன் அடிபணியப்
பணிந்தவர்தங் கரங்கள் பற்றி
எழுதரிய மலர்க்கையால் எடுத்திறைஞ்சி
விடையின்மேல் வருவார் தம்மை
அழுதழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே
எனஅவரும் அடியேன் என்றார்.
12.210
12 st/nd Thirumurai
Song # 369
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
தொழுதெ ழுந்தநற் றொண்டரை
நோக்கிவிண் தலத்தில்
எழுபெ ருந்திரு வாக்கினால்
இறைவர்இப் பொய்கை
முழுகி நம்மைநீ கயிலையில்
இருந்தஅம் முறைமை
பழுதில் சீர்த்திரு வையாற்றிற்
காண்எனப் பணித்தார்.
12.210
12 st/nd Thirumurai
Song # 411
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
தொழுதுபல வகையாலும்
சொற்றொடைவண் டமிழ்பாடி
வழுவில்திருப் பணிசெய்து
மனங்கசிவுற் றெப்பொழுதும்
ஒழுகியகண் பொழிபுனலும்
ஓவாது சிவன்தாள்கள்
தழுவியசிந் தையில்உணர்வுந்
தங்கியநீர் மையிற்சரித்தார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 342
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
தொழுது புறம்பணைந் தங்குநின்
றேகிச் சுரர்பணிவுற்
றெழுதிரு வாலந் துறைதிருச்
செந்துறை யேமுதலா
வழுவில் கோயில்கள் சென்று
வணங்கி மகிழ்ந்தணைவார்
செழுமலர்ச் சோலைத் திருக்கற்
குடிமலை சேரவந்தார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 977
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
தொழுது விழுந்து பணிந்தெழுந்து
சொல்மா லைகளால் துதிசெய்து
முழுது மானார் அருள்பெற்றுப்
போந்து வைகி முதல்வர்தமைப்
பொழுது தோறும் புக்கிறைஞ்சிப்
போற்றி செய்தங் கமர்வார்முன்
அழுது வணங்கி ஒரு தொண்டர்
அமணர் திறத்தொன் றறிவிப்பார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 1006
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
தொழுதுபல முறைபோற்றிச்
சுரர்குருவுக் கிளையமுனி
வழுவில்தவம் புரிந்தேத்த
மன்னினார் தமைமலர்ந்த
பழுதில்செழுந் தமிழ்மாலைப்
பதிகஇசை புனைந்தருளி
முழுதும்அளித் தவர்அருளால்
போந்தனர்முத் தமிழ்விரகர்.
12.280
12 st/nd Thirumurai
Song # 1119
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
தொழுதுபுறம் போந்தருளித்
தொண்டர்குழாம் புடைசூழப்
பழுதில்புகழ்த் திருமயிலைப்
பதியில்அமர்ந் தருளுநாள்
முழுதுலகுந் தருமிறைவர்
முதல்தானம் பலஇறைஞ்ச
அழுதுலகை வாழ்வித்தார்
அப்பதியின் மருங்ககல்வார்.
12.290
12 st/nd Thirumurai
Song # 285
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
தொழுது விழுந் தெழுந்தருளாற்
துதித்துப்போய்த் தொல்லுலகம்
முழுதும்அளித் தழித்தாக்கும்
முதல்வர்திரு வேகம்பம்
பழுதில்அடி யார்முன்பு
புகப்புக்குப் பணிகின்றார்
இழுதையேன் திருமுன்பே
என்மொழிவேன் என்றிறைஞ்சி.
12.310
12 st/nd Thirumurai
Song # 20
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
தொழுது புனல்மேல் எழுந்தொண்டர்
தூய மலர்க்கண் பெற்றெழுந்தார்
பொழுது தெரியா வகையிமையோர்
12.370
12 st/nd Thirumurai
Song # 147
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
தொழுது திளைத்துப் புறம்போந்து
தோன்றப் பண்ணும் பிடிமேல்பார்
முழுதும் ஏத்த நம்பியைமுன்
பேற்றிப் பின்பு தாம்ஏறிப்
பழுதின் மணிச்சா மரைவீசிப்
பைம்பொன் மணிமா ளிகையில்வரும்
பொழுது மறுகில் இருபுடையும்
மிடைந்தார் வாழ்த்திப் புகல்கின்றார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list