சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நீல
நீலமாமிடற்று     நீலம்,     நீல     நீலமுண்ட     நீலநக்     நீலம்     நீலவடிவர்     நீலமாமணி     நீலத்து     நீலமே    
1.094   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீலமாமிடற்று ஆலவாயிலான்
பால் அது ஆயினார் ஞாலம் ஆள்வரே.

1.099   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீலம், நெய்தல், தண்சுனை சூழ்ந்த நீள் சோலை,
கோல மஞ்ஞை பேடையொடு ஆடும் குற்றாலம்
காலன் தன்னைக் காலால் காய்ந்த கடவுள் எம்
சூலபாணி, நன்நகர் போலும்; தொழுவீர்காள்!

2.008   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய
சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள்
வேல் ஒண்கண்ணியினாளை ஒர்பாகன்,
வெண்ணெய்ப்பிரான்,
பாலவண்ணன், கழல் ஏத்த, நம் பாவம் பறையுமே.

2.062   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீலவடிவர் மிடறு, நெடியர், நிகர் இல்லார்,
கோல வடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார்,
காலர், கழலர், கரியின் உரியர், மழுவாளர்,
மேலர், மதியர், விதியர் மீயச்சூராரே.

2.081   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீலம் சேர் மிடற்றினீர்! நீண்ட செஞ்சடையினீர்!
கோலம் சேர் விடையினீர்! கொடுங்காலன் தனைச் செற்றீர்!
ஆலம் சேர் கழனி அழகு ஆர் வேணுபுரம் அமரும்
கோலம் சேர் கோயிலே கோயில் ஆகக் கொண்டீரே.

2.083   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீல நல் மாமிடற்றன்; இறைவன்; சினத்த நெடுமா உரித்த,
நிகர் இல்
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உருக் கொள்,
திகழ் தேவன்; மேவு பதிதான்
வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை, விழவு
ஓசை, வேத ஒலியின்,
சால நல் வேலை ஓசை, தரு மாட வீதி கொடி ஆடு
கொச்சைவயமே.

2.090   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீல மா மணி மிடற்று, நீறு அணி சிவன்! எனப் பேணும்
சீல மாந்தர்கட்கு அல்லால், சென்று கைகூடுவது அன்றால்
கோல மா மலர் உந்தி, குளிர் புனல் நிவா மல்கு கரைமேல்,
ஆலும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)அருளே

2.109   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி ஓர் கண்ணனே! ஒற்றை
விடைச்
சூலம் ஆர்தரு கையனே! துன்று பைம்பொழில்கள் சூழ்ந்து
அழகு ஆய
கோல மா மலர் மணம் கமழ் கோட்டூர் நற்கொழுந்தே!
என்று எழுவார்கள்
சால நீள் தலம் அதன் இடைப் புகழ் மிகத் தாங்குவர்,
பாங்காலே.

2.110   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீலமாமணி நித்திலத்தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி
ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை அமர்வானை
மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலர் அடி இணை
நாளும்
கோலம் ஏத்தி நின்று ஆடுமின்! பாடுமின்! கூற்றுவன்
நலியானே.

3.001   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீலத்து ஆர் கரிய மிடற்றார், நல்ல நெற்றிமேல் உற்ற கண்ணினார், பற்று
சூலத்தார், சுடலைப் பொடி நீறு அணிவார், சடையார்,
சீலத்தார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால், கழல் சேவடி கைதொழ,
கோலத்தாய்! அருளாய்! உன காரணம் கூறுதுமே.

3.075   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீல வரை போல நிகழ் கேழல் உரு, நீள் பறவை நேர் உருவம், ஆம்
மாலும் மலரானும், அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன்,
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம்
சாலி மலி, சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில்,
சண்பைநகரே.

3.091   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீல மாமணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க
வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில்
ஏலமோடு, இலை இலவங்கமே, இஞ்சியே, மஞ்சள், உந்தி,
ஆலியா வருபுனல் வடகரை அடை குரங்காடுதுறையே.

3.108   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீல மேனி அமணர் திறத்து நின்
சீலம் வாது செயத் திரு உள்ளமே?
மாலும் நான்முகனும் காண்பு அரியது ஓர்
கோலம் மேனி அது ஆகிய குன்றமே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

4.014   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீல நல் மேனி, செங்கண், வளை வெள் எயிற்றின், எரிகேசன், நேடி வரும் நாள
காலை நல் மாலை கொண்டு வழிபாடு செய்யும் அளவின் கண், வந்து குறுகிப்
பாலனை ஓட ஓடப் பயம் எய்துவித்த, உயிர் வவ்வு பாசம் விடும்-அக்
காலனை வீடு செய்த கழல் போலும், அண்டர் தொழுது ஓது சூடு கழலே.

5.035   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீலம் உண்ட மிடற்றினன்; நேர்ந்தது ஓர்
கோலம் உண்ட குணத்தான்; நிறைந்தது ஓர்-
பாலும் உண்டு, பழனன்பால்; என்னிடை
மாலும் உண்டு, இறை என் தன் மனத்துளே.

5.051   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீல மா மணிகண்டத்தர்; நீள் சடைக்
கோல மா மதி கங்கையும் கூட்டினார்;
சூலம் மான் மழு ஏந்தி, சுடர் முடிப்
பால் நெய் ஆடுவர்-பாலைத்துறையரே.

7.075   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நீல வண்டு அறை கொன்றை, நேர் இழை மங்கை, ஒர் திங்கள்,
சால வாள் அரவங்கள், தங்கிய செஞ்சடை எந்தை;
ஆல நீழலுள் ஆனைக்கா உடை ஆதியை; நாளும்
ஏலும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆள் உடையாரே.

8.118   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
நீல உருவின் குயிலே! நீள் மணி மாடம் நிலாவும்
கோல அழகின் திகழும் கொடி மங்கை உள்ளுறை கோயில்,
சீலம் பெரிதும் இனிய திரு உத்தரகோசமங்கை,
ஞாலம் விளங்க இருந்த நாயகனை, வரக் கூவாய்!

9.009   9 st/nd Thirumurai   Song # 6   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
நீலமே கண்டம் பவளமே திருவாய்
   நித்திலம் நிரைத்திலங் கினவே
போலுமே முறுவல் நிறையஆ னந்தம்
   பொழியுமே திருமுகம் ஒருவர்
கோலமே அச்சோ அழகிதே யென்று
   குழைவரே கண்டவர் உண்ட
தாலமே ஆகில் அவரிடம் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 

10.313   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
நீல நிறமுடை நேரிழை யாளொடுஞ்
சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவர் பராநந்தி ஆணையே. 

11.016   11 st/nd Thirumurai   Song # 13   நக்கீரதேவ நாயனார்   போற்றித் திருக்கலி வெண்பா  
நீலமுண்ட நீள்முகில்போல் நெஞ்சழல வந்தெழுந்த
ஆலமுண்ட கண்டம் அதுபோற்றி சாலமண்டிப்

12.280   12 st/nd Thirumurai   Song # 523   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீலநக் கடிகளும் நிகழ்சிறுத் தொண்டரும்
உடன்அணைந் தெய்து நீர்மைச்
சீலமெய்த் தவர்களுங் கூடவே கும்பிடுங்
செய்கைநேர் நின்று வாய்மைச்
சாலமிக் குயர்திருத் தொண்டின்உண் மைத்திறந்
தன்னையே தெளிய நாடிக்
காலமுய்த் தவர்களோ டளவளா விக்கலந்
தருளினார் காழி நாடர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 667   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீல மாமிடற் றாலவா
யான்என நிலவும்
மூல மாகிய திருவிருக்
குக்குறள் மொழிந்து
சீல மாதவத் திருத்தொண்டர்
தம்மொடும் திளைத்தார்
சாலு மேன்மையில் தலைச்சங்கப்
புலவனார் தம்முன்.
12.280   12 st/nd Thirumurai   Song # 959   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீல மாவிடந் திருமிடற்
றடக்கிய நிமலரை நேரெய்தும்
கால மானவை அனைத்தினும்
பணிந்துடன் கலந்தஅன் பர்களோடும்
சால நாள்கள்அங் குறைபவர்
தையலாள் தழுவிடக் குழைகம்பர்
கோல மார்தரக் கும்பிடும்
ஆசைகொண் டெழுங்குறிப் பினர்ஆனார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list