சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பங்கய
பங்கயங்கள்     பங்கய     பங்கயப்பா     பங்கயக்கண்     பங்கயச்செங்     பங்கயம்     பங்கயம்மலர்ச்சீறடி,     பங்கயத்து     பங்கயத்தின்    
1.027   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பங்கயங்கள் மலரும் பழனத்துச்
செங்கயல்கள் திளைக்கும் திருப் புன்கூர்,
கங்கை தங்கு சடையார் அவர் போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே.

2.028   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பங்கயம் மலர்ப்பாதர், பாதி ஓர்
மங்கையர், மணிநீலகண்டர், வான்
கங்கையர் கருவூருள் ஆன்நிலை,
அம் கை ஆடுஅரவத்து எம் அண்ணலே.

2.109   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பங்கயம்மலர்ச்சீறடி, பஞ்சு உறு மெல்விரல், அரவு அல்குல்,
மங்கைமார் பலர் மயில், குயில், கிளி, என மிழற்றிய
மொழியார், மென்
கொங்கையார் குழாம் குணலை செய் கோட்டூர்
;நற்கொழுந்தே! என்று எழுவார்கள்
சங்கை ஒன்று இலர் ஆகி, சங்கரன் திரு அருள் பெறல்
எளிது ஆமே.

3.115   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பங்கயத்து உள நான்முகன், மாலொடே, பாதம் நீள் முடி
நேடிட, மாலொடே,
துங்க நல்-தழலின் உருஆயுமே; தூய பாடல் பயின்றது, வாயுமே;
செங்கயல் கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு,
உரைசெய்வது பிச்சு ஐயே!
அங்கியைத் திகழ்விப்பது இடக்கையே; ஆலவாய், அரனாரது
இடக் கையே.

6.048   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பங்கயத்தின் மேலானும், பாலன் ஆகி உலகு அளந்த படியானும், பரவிக் காணாது
அங்கை வைத்த சென்னியராய், அளக்க மாட்டா அனல் அவன் காண்; அலை கடல் சூழ் இலங்கை வேந்தன்
கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண்; அழகன் காண்; கோலம் ஆய
மங்கையர்க்கு ஓர் கூறன் காண் வானோர் ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.

8.115   8 st/nd Thirumurai   Song # 10   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பங்கயம் ஆயிரம் பூவினில், ஓர் பூக் குறைய,
தம் கண் இடந்து, அரன் சேவடிமேல் சாத்தலுமே,
சங்கரன், எம் பிரான், சக்கரம் மாற்கு அருளிய ஆறு,
எங்கும் பரவி, நாம் தோள் நோக்கம் ஆடாமோ!

10.304   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்தி யெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாமே. 

12.280   12 st/nd Thirumurai   Song # 454   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பங்கயப்பா சடைத்தடஞ்சூழ் பழனநாட்
டகன்பதிகள் பலவும் நண்ணி
மங்கையொரு பாகத்தார் மகிழ்கோயில்
எனைப்பலவும் வணங்கிப் போற்றித்
தங்கிசையாழ்ப் பெரும்பாண ருடன்மறையோர்
தலைவனார் சென்று சார்ந்தார்
செங்கைமான் மழுவேந்துஞ் சினவிடையார்
அமர்ந்தருளுந் திருநள் ளாறு.
12.280   12 st/nd Thirumurai   Song # 1024   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பங்கயக்கண் ணருவிநீர் பாய நின்று
பரவும்இசைத் திருப்பதிகம் பாடி யாடித்
தங்குபெருங் களிகாதல் தகைந்து தட்பத்
தம்பெருமான் கழல்போற்றுந் தன்மைநீட
அங்கரிதிற் புறம்போந்தங் கயன்மால் போற்ற
அரியார்தந் திருமலைக்கீ ழணைந்தி றைஞ்சிப்
பொங்குதிருத் தொண்டர்மடங் காட்ட அங்குப்
புக்கருளி இனிதமர்ந்தார் புகலி வேந்தர்.
12.290   12 st/nd Thirumurai   Song # 287   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பங்கயச்செங் கைத்தளிரால்
பனிமலர்கொண் டருச்சித்துச்
செங்கயற்கண் மலைவல்லி
பணிந்தசே வடிநினைந்து
பொங்கியஅன் பொடுபரவிப்
போற்றியஆ ரூரருக்கு
மங்கைதழு வக்குழைந்தார்
மறைந்தஇடக் கண்கொடுத்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list