சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பரவ
பரவப்
பரவித்
பரவினர்
பரவையார்
பரவ
பரவை
பரவுதிருப்
பரவுசொற்
பரவுறுசெந்
பரவியகா
பரவி
பரவு
பரவிவரும்
பரவியப்
பரவுவாய்
பரவியே
பரவுந்
பரவும்
பரவக்
பரவுவாரையும்
பரவின
பரவைக்-கடல்
பரவிப்
பரவுவார்
2.035
2 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பரவக் கெடும், வல்வினை பாரிடம் சூழ,
இரவில் புறங்காட்டுஇடை நின்று எரிஆடி;
அரவச் சடை அந்தணன்; மேய, அழகு ஆர்
குரவப்பொழில் சூழ், குரங்காடுதுறையே.
2.050
2 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பரவி வானவர் தானவர் பலரும் கலங்கிட வந்த கார்விடம்,
வெருவ, உண்டு உகந்த அருள் என்கொல்? விண்ணவனே!
கரவு இல் மா மணி பொன் கொழித்து, இழி சந்து கார்
அகில் தந்து, பம்பை நீர்
அருவி வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே!
2.094
2 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பரவுவாரையும் உடையார்; பழித்து இகழ்வாரையும்
உடையார்;
விரவுவாரையும் உடையார்; வெண் தலைப் பலி கொள்வது
உடையார்;
அரவம் பூண்பதும் உடையார்; ஆயிரம் பேர் மிக
உடையார்;
வரவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.
3.093
3 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பரவின அடியவர் படு துயர் கெடுப்பவர், பரிவு இலார் பால்
கரவினர், கனல் அன உருவினர், படுதலைப் பலிகொடு ஏகும்
இரவினர், பகல் எரிகான் இடை ஆடிய வேடர், பூணும்
அரவினர், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.
4.024
4 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
பரவு கொப்பளித்த பாடல் பண் உடன் பத்தர் ஏத்த,
விரவு கொப்பளித்த கங்கை விரிசடை மேவ வைத்து(வ்),
இரவு கொப்பளித்த கண்டர்; ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
அரவு கொப்பளித்த கையர்-அதிகைவீரட்டனாரே.
4.082
4 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
பரவைக்-கடல் நஞ்சம் உண்டதும் இல்லை; இப் பார்முழுதும்
நிரவிக் கிடந்து தொழப்படுகின்றது;-நீண்டு இருவர்
சிரமப்பட வந்து சார்ந்தார், கழல் அடி காண்பதற்கே-
அரவக் கழல் அடி நாள்தொறும் நம் தமை ஆள்வனவே.
4.086
4 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
பரவை வரு திரை நீர்க் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல்
அரவம் அணி தரு-கொன்றை, இளந் திங்கள், சூடியது ஓர்
குரவ நறுமலர், கோங்கம், அணிந்து குலாய-சென்னி,
உரவு திரை கொணர்ந்து எற்று, ஒற்றியூர் உறை உத்தமனே!
5.008
5 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
பரவி நாளும் பணிந்தவர்தம் வினை
துரவை ஆகத் துடைப்பவர்தம் இடம்,
குரவம் நாறும் குழல் உமை கூறராய்
அரவம் ஆட்டுவர்போல், அன்னியூரரே.
6.042
6 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
பரவிப் பலபலவும் தேடி, ஓடி, பாழ் ஆம் குரம்பை இடைக் கிடந்து, வாளா
குரவி, குடிவாழ்க்கை வாழ எண்ணி, குலைகை தவிர், நெஞ்சே! கூறக் கேள், நீ;
இரவிக்குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த கோடி அமரர் ஆயம்
நிரவிக்க(அ)அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
7.077
7 st/nd Thirumurai
Song # 1
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மைப் பயிலாதேன்;
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினையமாட்டேன், நான்-
கரவு இல் அருவி கமுகு உண்ண, தெங்கு அம் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!
8.105.02
8 st/nd Thirumurai
Song # 17
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பரவுவார் இமையோர்கள்; பாடுவன நால்வேதம்;
குரவு வார் குழல் மடவாள் கூறு உடையாள், ஒரு பாகம்;
விரவுவார் மெய் அன்பின் அடியார்கள், மேன்மேல்; உன்
அரவு வார் கழல் இணைகள் காண்பாரோ, அரியானே?
8.126
8 st/nd Thirumurai
Song # 5
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பரவுவார் அவர் பாடு சென்று அணைகிலேன்; பல் மலர் பறித்து ஏத்தேன்;
குரவு வார் குழலார் திறத்தே நின்று, குடி கெடுகின்றேனை
இரவு நின்று, எரி ஆடிய எம் இறை, எரி சடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே.
10.120
10 st/nd Thirumurai
Song # 5
திருமூலர்
திருமந்திரம்
பரவப் படுவான் பரமனை ஏத்தீர்
இரவலர்க் கீதலை யாயினும் ஈயீர்
கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கீர்
நரகத்தில் நிற்றிரோ நாள்எஞ்சி னீரே.
11.029
11 st/nd Thirumurai
Song # 49
பட்டினத்துப் பிள்ளையார்
திருஏகம்பமுடையார் திருவந்தாதி
பரவித் தனைநினை யக்கச்சி
ஏகம்பர் பண்ணும்மையல்
வரவித் தனைஉள்ள எங்கறிந்
தேன்முன் அவர்மகனார்
புரவித் தனையடிக் கக்கொடி
தாய்விடி யாவிரவில்
அரவித் தனையுங்கொண் டார்மட
வார்முன்றில் ஆட்டிடவே.
12.000
12 st/nd Thirumurai
Song # 266
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
பரவினர் காப்புப் போற்றிப்
பயில்பெருஞ் சுற்றந் திங்கள்
விரவிய பருவந் தோறும்
விழாவணி யெடுப்ப மிக்கோர்
வரமலர் மங்கை யிங்கு
வந்தன ளென்று சிந்தை
தரவரு மகிழ்ச்சி பொங்கத்
தளர்நடைப் பருவஞ் சேர்ந்தார்.
12.000
12 st/nd Thirumurai
Song # 283
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
பரவையார் வலங்கொண்டு
பணிந்தேத்தி முன்னரே
புரவலனார் கோயிலினின்
றொருமருங்கு புறப்பட்டார்
விரவுபெருங் காதலினால்
மெல்லியலார் தமைவேண்டி
அரவின்ஆ ரம்புனைந்தார்
அடிபணிந்தார் ஆரூரர்.
12.200
12 st/nd Thirumurai
Song # 48
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
பரவ மேன்மேல் எழும்பரிவும்
பழைய பான்மை மிகும்பண்பும்
விரவ மேதக் கவர்தம்பால்
மேவும் பெருமை வெளிப்படுப்பான்
அரவம் மேவுஞ் சடைமுடியார்
அருளாம் என்ன அறிவழிந்து
குரவு மேவும் முதுமறையோன்
கோபம் மேவும் படிகண்டான்.
12.210
12 st/nd Thirumurai
Song # 265
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
பரவை ஓதக் கழிக்கானற்
பாங்கு நெருங்கும் அப்பதியில்
அரவச் சடைஅந் தணனாரை
அகில மறைகள் அர்ச்சனைசெய்
துரவக் கதவந் திருக்காப்புச்
செய்த அந்நாள் முதல்இந்நாள்
வரையும் அடைத்தே நிற்கின்ற
மணிநீள் வாயில் வணங்குவார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 261
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
பரவுதிருப் பதிகஇசை பாடி நீடும்
பரங்கருணைத் திருவருளின் பரிசு போற்றி
விரவுமலர்க் கண்பனிப்பக் கைகள் கூப்பி
வீழ்ந்தெழுந்து புறம்போந்து வேத வாய்மைச்
சிரபுரத்துப் பிள்ளையார் செல்லும் போது
திருநீல கண்டயாழ்ப் பாணர் பின்னே
வரஅவரை வளம்பெருகு மனையிற் போக
அருள்செய்து தந்திருமா ளிகையின் வந்தார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 369
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
பரவுசொற் பதிகமுன் பாடினார் பரிவுதான்
வரவயர்த் துருகுநேர் மனனுடன் புறம்அணைந்
தரவுடைச் சடையர்பே ரருள்பெறும் பெருமையால்
விரவும்அப் பதியமர்ந் தருளியே மேவினார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 415
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
பரவுறுசெந் தமிழ்ப்பதிகம்
பாடிஅமர்ந் தப்பதியில்
விரவுவார் திருப்பதிகம்
பலபாடி வெண்மதியோ
டரவுசடைக் கணிந்தவர்தம்
தாள்போற்றி ஆர்வத்தால்
உரவுதிருத் தொண்டருடன்
பணிந்தேத்தி உறையுநாள்.
12.280
12 st/nd Thirumurai
Song # 465
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
பரவியகா தலிற்பணிந்து பாலறா
வாயர்புறத் தணைந்து பண்பு
விரவியநண் புடையடிகள் விருப்புறுகா
தலில்தங்கி மேவும் நாளில்
அரவணிந்தார் பதிபிறவும் பணியஎழும்
ஆதரவா லணைந்து செல்வார்
உரவுமனக் கருத்தொன்றாம் உள்ளம்உடை
யவர்க்குவிடை உவந்து நல்கி.
12.280
12 st/nd Thirumurai
Song # 535
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
பரவி ஏத்திஅங் கரிதினிற்
போந்துபார் பரவுசீர் அரசோடு
விரவு நண்புடைக் குங்குலி
யப்பெருங் கலயர் தம் மனைமேவிக்
கரையில் காதல்மற் றவர்அமைத்
தருளிய விருந்தினி தமர்ந்தங்குச்
சிரபு ரத்தவர் திருமயா
னமும்பணிந் திருந்தனர் சிறப்பெய்தி.
12.280
12 st/nd Thirumurai
Song # 677
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
பரவு காதலில் பாண்டிமா
தேவியார் அருளால்
விரவு நண்பொடு குலச்சிறை
யார்விருந் தளிப்பச்
சிரபு ரத்துவந் தருளிய
செல்வர்அங் கிருந்தார்
இரவி மேற்கடல் அணைந்தனன்
எல்லிவந் தணைய.
12.280
12 st/nd Thirumurai
Song # 966
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
பரவி ஏத்திய திருப்பதி
கத்திசை பாடினார் பணிந்தங்கு
விரவும் அன்பொடு மகிழ்ந்தினி
துறைபவர் விமலரை வணங்கிப்போய்
அரவ நீர்ச்சடை அங்கணர்
தாம்மகிழ்ந் துறைதிரு வாமாத்தூர்
சிரபு ரத்துவந் தருளிய
திருமறைச் சிறுவர்சென் றணைவுற்றார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 1124
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
பரவிவரும் ஆனந்தம்
நிறைந்ததுளி கண்பனிப்ப
விரவுமயிர்ப் புளகங்கள்
மிசைவிளங்கப் புறத்தணைவுற்
றரவநெடுந் திரைவேலை
அணிவான்மி யூர்அதனுள்
சிரபுரத்துப் புரவலனார்
சிலநாள்அங் கினிதமர்ந்தார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 1151
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
பரவுதிருப் பதிகங்கள்
பலவும்இசை யினிற்பாடி
விரவியகண் ணருவிநீர்
வெள்ளத்திற் குளித்தருளி
அரவணிந்தார் அருள்பெருகப்
புறம்பெய்தி அன்பருடன்
சிரபுரத்துப் பெருந்தகையார்
தந்திருமா ளிகைசேர்ந்தார்.
12.290
12 st/nd Thirumurai
Song # 85
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
பரவியப் பதிகத் திருக்கடைக் காப்புச்
சாத்திமுன் பணிந்தருள் பெற்றுக்
கரவிலன் பர்கள்தங் கூட்டமுந் தொழுது
கலந்தினி திருந்துபோந் தருளி
விரவிய ஈங்கோய் மலைமுத லாக
விமலர்தம் பதிபல வணங்கிக்
குரவலர் சோலை யணிதிருப் பாண்டிக்
கொடுமுடி யணைந்தனர் கொங்கில்.
12.290
12 st/nd Thirumurai
Song # 114
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
பரவுவாய் குளறிக் காதல்
படிதிருப் படியைத் தாழ்ந்து
விரவுமெய் அங்கம் ஐந்தும்
எட்டினும் வணங்கி வேட்கை
உரனுறு திருக்கூத் துள்ளம்
ஆர்தரப் பெருகி நெஞ்சில்
கரவிலா தவரைக் கண்ட
நிறைவுதங் கருத்திற் கொள்ள.
12.290
12 st/nd Thirumurai
Song # 298
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
பரவியே பணிந்தவர்க்குப்
பரமர் திரு வருள்புரிவார்
விரவியஇப் பிணியடையத்
தவிர்ப்பதற்கு வேறாக
வரமலர்வண் டறைதீர்த்த
வடகுளத்துக் குளிஎன்னக்
கரவில்திருத் தொண்டர்தாங்
கைதொழுது புறப்பட்டார்.
12.290
12 st/nd Thirumurai
Song # 350
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
பரவையார் தம்பால் நம்பி
தூதராம் பாங்கிற் போன
அரவணி சடையார் மீண்டே
அறியுமாறு அணையும் போதில்
இரவுதான் பகலாய்த் தோன்ற
எதிரெழுந் தணையை விட்ட
உரவுநீர் வெள்ளம் போல
ஓங்கிய களிப்பிற் சென்றார்.
12.370
12 st/nd Thirumurai
Song # 59
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
பரவுந் தில்லை வட்டத்துப்
பயில்வார் பைம்பொன் அம்பலத்துள்
அரவும் புனலுஞ் சடையாட
ஆடு வார்கூத் தாராமை
விரவுங் காதல் மிக்கோங்க
வேதம் படியும் திருப்படிக்கீழ்
இரவும் பகலும் பணிந்தேத்தி
இன்பம் சிறக்கும் அந்நாளில்.
12.370
12 st/nd Thirumurai
Song # 123
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
பரவையார் மாளிகையில்
பரிசனங்கள் முன்னெய்த
விரவுபே ரலங்கார
விழுச்செல்வம் மிகப்பெருக
வரவெதிர்கொண் டடிவணங்க
வன்றொண்டர் மலைநாட்டுப்
புரவலனா ரையுங்கொண்டு
பொன்னணிமா ளிகைபுகுந்தார்.
12.370
12 st/nd Thirumurai
Song # 124
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
பரவியே பரவையார்
பரிவுடனே பணிந்தேத்தி
விரவியபோ னகங்கறிகள்
விதம்பலவா கச்சமைத்துப்
பரிகலமும் பாவாடை
பகல்விளக்கும் உடனமைத்துத்
திருவமுது செய்வித்தார்
திருந்தியதேன் மொழியினார்.
12.370
12 st/nd Thirumurai
Song # 134
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
பரவும் பரிசொன் றெடுத்தருளிப்
பாடுந் திருப்பாட் டின்முடிவில்
அரவம் புனைவார் தமைஐயா
றுடைய வடிக ளோவென்று
விரவும் வேட்கை யுடனழைத்து
விளங்கும் பெருமைத் திருப்பதிகம்
நிரவு மிசையில் வன்றொண்டர்
நின்று தொழுது பாடுதலும்.
12.720
12 st/nd Thirumurai
Song # 14
சேக்கிழார்
வெள்ளானைச் சருக்கம்
பரவும் பெருமைத் திருப்பதிகம்
பாடிப் பணிந்து போந் தன்பு
விரவு மறையோன் காதலனை
வெண்ணூல் பூட்டி அண்ணலார்
முரசம் இயம்பக் கலியாணம்
முடித்து முடிச்சே ரலர்தம்பால்
குரவ மலர்பூந் தண்சோலை
குலவு மலைநாடு அணைகின்றார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list