| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பழக
பழகும்
பழக
பழகனை
பழகி
பழகினால்
பழகிய
பழகா
1.096
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பழகும் தொண்டர், வம்! அழகன், அன்னியூர்க்
குழகன், சேவடி தொழுது வாழ்மினே!
2.035
2 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பழகும் வினை தீர்ப்பவன்; பார்ப்பதியோடும்,
முழவம் குழல் மொந்தை முழங்க, எரிஆடும்
அழகன்; அயில்மூஇலைவேல் வலன் ஏந்தும்
குழகன்; நகர்போல் குரங்காடுதுறையே.
3.046
3 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பழக வல்ல சிறுத்தொண்டர், பா இன் இசைக்
குழகர்! என்று குழையா, அழையா, வரும்,
கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம்
அழகர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.
3.093
3 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பழக மா மலர் பறித்து, இண்டை கொண்டு, இறைஞ்சுவார் பால் செறிந்த
குழகனார், குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்ற
கழகனார், கரி உரித்து ஆடு கங்காளர், நம் காளி ஏத்தும்
அழகனார், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.
4.051
4 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
பழக நான் அடிமை செய்வேன்-பசுபதீ! பாவ நாசா!
மழ களியானையின் தோல் மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே! அரக்கன் திண் தோள் அரு வரை நெரிய ஊன்றும்
குழகனே! கோல மார்பா! கோடிகா உடைய கோவே!
4.074
4 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
பழகனை உலகுக்கு எல்லாம், பருப்பனை, பொருப்போடு ஒக்கும்
மழ களியானையின் தோல் மலை மகள் நடுங்கப் போர்த்த
குழகனை, குழவித் திங்கள் குளிர்சடை மருவ வைத்த
அழகனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
4.084
4 st/nd Thirumurai
Song # 11
திருநாவுக்கரசர்
தேவாரம்
பழக ஒர் ஊர்தி அரன், பைங்கண் பாரிடம் பாணி செய்யக்
குழலும் முழவொடு மா நடம் ஆடி, உயர் இலங்கைக்
கிழவன் இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த
அழகன், அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!
5.013
5 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
பழகி நின் அடி சூடிய பாலனைக்
கழகின்மேல் வைத்த காலனைச் சாடிய
அழகனே! அணி வீழிமிழலையுள்
குழகனே!-அடியேனைக் குறிக்கொளே!
5.077
5 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
பழகினால் வரும் பண்டு உள சுற்றமும்
விழவிடாவிடில், வேண்டிய எய்த ஒணா;
திகழ் கொள் சேறையில் செந்நெறி மேவிய
அழகனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே!
6.029
6 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
பழகிய வல்வினைகள் பாற்றுவானை, பசுபதியை, பாவகனை, பாவம் தீர்க்கும்
குழகனை, கோள் அரவு ஒன்று ஆட்டுவானை, கொடுகொட்டி கொண்டது ஓர் கையான்தன்னை,
விழவனை, வீரட்டம் மேவினானை, விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை,
அழகனை, ஆரூரில் அம்மான்தன்னை,-அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.
7.077
7 st/nd Thirumurai
Song # 4
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பழகா நின்று பணி செய்வார், பெற்ற பயன் ஒன்று அறிகிலேன்,
இகழாது உமக்கு ஆட்பட்டோர்க்கு; ஏகபடம் ஒன்று அரைச் சாத்தி!
குழகா! வாழை, குலை, தெங்கு கொணர்ந்து கரை மேல் எறியவே,
அழகு ஆர் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000