சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பின்
பின்னிய     பின்     பின்னுசடைகள்     பின்னைநின்     பின்னெய்த     பின்னை     பின்மறவர்கள்     பின்பு     பின்சென்ற     பின்பும்     பின்னும்     பின்னொருநாள்     பின்னங்குப்     பின்னொடு     பின்னு     பின்தானும்     பின்னுசடை     பின்னுசெஞ்    
1.008   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பின்னிய தாழ்சடையார், பிதற்றும் பேதையர் ஆம் சமண் சாக்கியர்கள்
தன் இயலும் உரை கொள்ளகில்லாச் சைவர், இடம் தளவு ஏறு சோலைத்
துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனை இடை மூழ்கி, தொடர்ந்த சிந்தைப்
பன்னிய பாடல் பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

1.071   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பின் தாழ் சடைமேல் நகுவெண்தலையர்; பிரமன் தலை ஏந்தி,
மின் தாழ் உருவில் சங்கு ஆர் குழைதான் மிளிரும் ஒரு காதர்
பொன் தாழ் கொன்றை, செருந்தி, புன்னை, பொருந்து, செண்பகம்,
சென்று ஆர் செல்வத் திரு ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

1.074   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பின்னுசடைகள் தாழக் கேழல் எயிறு பிறழப் போய்,
அன்ன நடையார் மனைகள் தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து,
புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக,
என்னை உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

3.101   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பின்னொடு முன் இடு தட்டைச் சாத்திப் பிரட்டே திரிவாரும்,
பொன் நெடுஞ் சீவரப் போர்வையார்கள், புறம் கூறல் கேளாதே,
இன் நெடுஞ் சோலை வண்டு யாழ்முரலும் இராமேச்சுரம் மேய,
பல்-நெடு வெண்தலை கொண்டு உழலும், பரமர் செயும் செயலே!

4.045   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பின்னு வார் சடையான் தன்னைப் பிதற்றிலாப் பேதைமார்கள்
துன்னுவார், நரகம் தன்னுள்;-தொல்வினை தீர வேண்டின்,
மன்னு வான் மறைகள் ஓதி, மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி,
உன்னுவார் உள்ளத்து உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.

4.075   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பின் இலேன், முன் இலேன், நான்; பிறப்பு அறுத்து அருள் செய்வானே!
என் இலேன், நாயினேன் நான்? இளங் கதிர்ப் பயலைத் திங்கள்
சில்-நிலா எறிக்கும் சென்னிச் சிவபுரத்து அமரர் ஏறே!
நின் அலால் களைகண் ஆரே? நீறு சேர் அகலத்தானே!

6.011   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பின்தானும் முன்தானும் ஆனான் தன்னை,
பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் தன்னை,
நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானே ஆகி
நல்வினையும் தீவினையும் ஆனான் தன்னை,
சென்று ஓங்கி விண் அளவும் தீ ஆனானை,
திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நின்று ஆய நீடூர் நிலாவினானை, -நீதனேன்
என்னே நான் நினையா ஆறே!.

6.049   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பின்னுசடை மேல் பிறை சூடினான் காண்; பேர் அருளன் காண்;   பிறப்பு ஒன்று இல்லாதான் காண்;
முன்னி உலகுக்கு முன் ஆனான் காண்; மூ எயிலும் செற்று உகந்த முதல்வன் தான் காண்;
இன்ன உரு என்று அறிவு ஒணாதான் தான் காண்; ஏழ் கடலும் ஏழ் உலகும் ஆயினான் காண்;
மன்னும் மடந்தை ஓர் பாகத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.

7.063   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பின்னை நம்பும் புயத்தான் நெடுமாலும் பிரமனும் என்று இவர் நாடியும் காணா
உன்னை நம்பி! ஒருவர்க்கு எய்தல் ஆமே, உலகு நம்பி உரை செய்யுமது அல்லால்?
முன்னை நம்பி; பின்னும் வார் சடை நம்பி; முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது
என்னை? நம்பி! எம்பிரான் ஆய நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .

9.008   9 st/nd Thirumurai   Song # 9   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
பின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும்
    பெரியதங் கருணையும் காட்டி
அன்னைதேன் கலந்(து)இன் அமு(து)உகந்(து) அளித்தாங்(கு)
    அருள்புரி பரமர்தம் கோயில்
புன்னைதேன் சொரியும் பொழிலகம் குடைந்து
    பொறிவரி வண்டினம் பாடும்
தென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
    திருவளர் திருச்சிற்றம் பலமே.
10.100   10 st/nd Thirumurai   Song # 20   திருமூலர்   திருமந்திரம்  
பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.

10.601   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனே எம்மிறை
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும்
மன்னெய்த வைத்த மனமது தானே.

10.808   10 st/nd Thirumurai   Song # 19   திருமூலர்   திருமந்திரம்  
பின்னை யறியும் பெருந்தவத் துண்மைசெய்
தன்னை யறியின் தயாபரன் எம்மிறை
முன்னை யறிவு முடிகின்ற ஞானமும்
என்னை யறியலுற் றின்புற்ற வாறே.

12.100   12 st/nd Thirumurai   Song # 81   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
பின்மறவர்கள் விடுபகழிகள்  
பிறகுறவயி றிடைபோய்
முன்னடுமுக மிசையுறுவிட  
முடுகியவிசை யுடனக்
கொன்முனையடு சரமினமெதிர்
குறுகியமுக முருவத்
தன்னெதிரெதிர் பொருவனநிகர்
தலையனபல கலைகள்.
12.260   12 st/nd Thirumurai   Song # 21   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பின்பு முன்னையிற் பெருகிய
மகிழ்ச்சிவந் தெய்த
இன்பு றுந்திறத் தெல்லையில்
பூசனை இயற்றி
அன்பு மேம்படும் அடியவர்
மிகஅணை வார்க்கு
முன்பு போலவர் வேண்டுவ
விருப்புடன் முடிப்பார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 57   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பின்சென்ற பிள்ளையார்
தமைநோக்கிப் பெருந்தவத்தோர்
முன்செல்கை தனையொழிந்து
முனிவார்போல் விலக்குதலும்
மின்செய்பொலங் கிண்கிணிக்கால்
கொட்டியவர் மீளாமை
உன்செய்கை இதுவாகில்
போதுஎன்றுஅங் குடன்சென்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 827   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பின்பும் ஆரறி வாரவர் பெற்றியே
என்ப தியாருணர் வானும்சென் றெட்டொணா
மன்பெ ருந்தன்மை யாரென வாழ்த்தினார்
அன்பு சூழ்சண்பை ஆண்டகை யாரவர்.
12.290   12 st/nd Thirumurai   Song # 242   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பின்னும் பின்னல் முடியார்முன்
பெருக நாணித் தொழுரைப்பார்
மன்னுந் திருவா ரூரின்கண்
அவர்தாம் மிகவும் மகிழ்ந்துறைவ
தென்னுந் தன்மை யறிந்தருளும்
எம்பி ராட்டி திருமுலைதோய்
மின்னும் புரிநூல் அணிமார்பீர்
என்றார் குன்றா விளக்கனையார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 274   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பின்னொருநாள் திருவாரூர்
தனைப்பெருக நினைந்தருளி
உன்னஇனி யார்கோயில்
புகுந்திறைஞ்சி ஒற்றிநகர்
தன்னையக லப்புக்கார்
தாஞ்செய்த சபதத்தால்
முன்னடிகள் தோன்றாது
கண்மறைய மூர்ச்சித்தார்.
12.570   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
பின்னங்குப் பிழைத்ததொரு
பிள்ளையைத்தம் பெயரோன்அவ்
அன்னந்துய்த் திலதுகுடிக்
கொருபுதல்வ னருளுமென
இந்நெல்லுண் டாள்முலைப்பால்
உண்டதுஎன எடுத்தெறிந்து
மின்னல்ல வடிவாளால்
இருதுணியாய் விழவேற்றார்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000