சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பிறை
பிறை     பிறையும்     பிறையுட்     பிறைத்துண்டஞ்     பிறைவளர்     பிறைத்த     பிறைவளரும்     பிறையானே!     பிறைதான்     பிறைக்கணிச்     பிறையோடு    
1.005   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறை உடையான், பெரியோர்கள் பெம்மான், பெய் கழல் நாள்தொறும் பேணிஏத்த
மறை உடையான், மழுவாள் உடையான், வார்தரு மால் கடல் நஞ்சம் உண்ட
கறை உடையான், கனல் ஆடு கண்ணால் காமனைக் காய்ந்தவன், காட்டுப்பள்ளிக்
குறை உடையான், குறள் பூதச் செல்வன், குரை கழலே கைகள் கூப்பினோமே!

1.019   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறை அணி படர் சடை முடி இடைப் பெருகிய புனல்  உடையவன்; நிறை
இறை அணி வளை, இணை முலையவள், இணைவனது எழில் உடை இட வகை
கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன்;
நறை அணி மலர் நறுவிரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே!

1.028   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறையும் அரவும் புனலும் சடை வைத்து,
மறையும் ஓதி, மயானம் இடம் ஆக
உறையும் செல்வம் உடையார், காவிரி
அறையும் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

1.033   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறையும் அரவும் உற வைத்த முடிமேல்
நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார்
மறையும் பலவேதியர் ஓத, ஒலி சென்று
அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே.

1.067   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறையும் புனலும் சடைமேல் உடையார்; பறை போல் விழி கண் பேய்
உறையும் மயானம் இடமா உடையார்; உலகர் தலைமகன்-
அறையும் மலர்கொண்டு அடியார் பரவி, ஆடல் பாடல் செய்
பறையும் சங்கும் பலியும் ஓவாப் பழன நகராரே.

1.071   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறை கொள் சடையர்; புலியின் உரியர்; பேழ்வாய் நாகத்தர்;
கறை கொள் கண்டர்; கபாலம் ஏந்தும் கையர்; கங்காளர்
மறை கொள் கீதம் பாடச் சேடர் மனையில் மகிழ்வு எய்தி,
சிறை கொள் வண்டு தேன் ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

1.087   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார்,
மறையும் பல பாடி மயானத்து உறைவாரும்
பறையும் அதிர் குழலும் போலப் பலவண்டு ஆங்கு
அறையும் வடுகூரில் ஆடும் அடிகளே.

1.095   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறை ஆர் சடை அண்ணல் மறை ஆர் மருதரை
நிறையால் நினைபவர் குறையார், இன்பமே.

1.119   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறை பெற்ற சடை அண்ணல், பெடைவண்டு ஆலும்
நறை பெற்ற விரிகொன்றைத்தார் நயந்த
கறை பெற்ற மிடற்று அண்ணல் கள்ளில் மேயான்,
நிறை பெற்ற அடியார்கள் நெஞ்சு உள்ளானே.

2.005   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறையும் மாசு இல் கதிரோன் அறியாமைப் பெயர்ந்து
போய்
உறையும் கோயில், பசும்பொன் அணியார், அசும்பு ஆர்
புனல்
அறையும் ஓசை பறை போலும் அனேகதங்காவதம்
இறை, எம் ஈசன், எம்மான், இடம் ஆக உகந்ததே.

2.015   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறையானே! பேணிய பாடலொடு இன் இசை
மறையானே! மாலொடு நான்முகன் காணாத
இறையானே! எழில் திகழும் திருக்காறாயில்
உறைவானே! என்பவர்மேல் வினை ஓடுமே.

2.019   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறைதான் சடைச் சேர்த்திய எந்தைபெம்மான்;
இறை தான்; இறவாக் கயிலைமலையான்;
மறை தான்; புனல், ஒண்மதி, மல்கு சென்னி
நிறை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

2.021   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறை ஆர் சடையாய்! பெரியாய்! பெரிய(ம்)
மறை ஆர்தரு வாய்மையினாய்! உலகில்
கறை ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய்!
இறை ஆர் கழல் ஏத்த, இடர் கெடுமே.

2.067   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறை வளரும் முடிச் சென்னிப் பெரும்புலியூர்ப்
பெருமானை,
நறை வளரும் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்,
மறை வளரும் தமிழ்மாலை வல்லவர், தம் துயர் நீங்கி,
நிறை வளர் நெஞ்சினர் ஆகி, நீடு உலகத்து இருப்பாரே.

2.105   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறை நிலாவிய சடை இடைப் பின்னலும் வன்னியும் துன்
ஆரும்
கறை நிலாவிய கண்டர், எண்தோளினர், காதல் செய்
கீழ்வேளூர்
மறை நிலாவிய அந்தணர் மலிதரு பெருந்திருக்கோயில்
மன்னும்
நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை
போமே.

3.009   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறை உறு செஞ்சடையார், விடையார் பிச்சை நச்சியே
வெறி உறு நாள்பலி தேர்ந்து உழல் வீழிமிழலையார்;
முறைமுறையால் இசை பாடுவார், ஆடி, முன்; தொண்டர்கள்-
இறை; உறை வாஞ்சியம் அல்லது, எப்போதும் என் உள்ளமே.

3.065   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறை நவின்ற செஞ்சடைகள் பின் தாழ, பூதங்கள்
மறை நவின்ற பாடலோடு ஆடலராய், மழு ஏந்தி,
சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனிவாய்த் தேன் கதுவும்
நிறை நவின்ற கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.

3.104   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறை வளர் செஞ்சடை பின் தயங்க, பெரிய மழு ஏந்தி,
மறை ஒலி பாடி, வெண் நீறு பூசி, மனைகள் பலி தேர்வார்
இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்
பறை ஒலி சங்கு ஒலியால் விளங்கும் பரிதி(ந்) நியமமே.

4.003   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பிறை இளங்கண்ணியினானைப் பெய்வளையாளொடும் பாடி,
துறை இளம் பல்மலர் தூவி, தோளைக் குளிரத் தொழுவேன்,
அறை இளம் பூங் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது,
சிறை இளம் பேடையொடு ஆடிச் சேவல் வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டுஅறியாதன கண்டேன்!



4.037   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பிறை தரு சடையின் மேலே பெய் புனல் கங்கை தன்னை
உறைதர வைத்த எங்கள் உத்தமன்; ஊழிஆய
நிறைதரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் என்று
குறைதரும் அடியவர்க்குக் குழகனைக் கூடல் ஆமே.

4.063   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பிறை அணி முடியினானே! பிஞ்ஞகா! பெண் ஓர்பாகா!
மறைவலா! இறைவா! வண்டு ஆர் கொன்றையாய்! வாம தேவா!
அறைகழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானே!
இறைவனே! உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே.

4.066   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பிறை உறு சடையர் போலும்; பெண் ஒரு பாகர் போலும்;
மறை உறு மொழியர் போலும்; மால், மறையவன் தன்னோடு,
முறை முறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற
நறவு அமர் கழலர் போலும்-நாக ஈச்சுரவனாரே.

5.026   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பிறை கொள் வாள்நுதல் பெய்வளைத் தோளியர்
நிறையைக் கொள்பவர்; நீறு அணி மேனியர்;
கறை கொள் கண்டத்தர்; வெண் மழுவாளினர்;
மறை கொள் வாய்மொழியார்-வன்னியூரரே.

5.029   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பிறையும் சூடி, நல் பெண்ணொடு ஆண் ஆகி, என்
நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்;
அறையும் பூம்பொழில் ஆவடுதண்துறை
இறைவநென்னை உடையவன் என்னுமே.

5.061   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பிறைக்கணிச் சடை எம்பெருமான் என்று-
கறைக் கணித்தவர் கண்ட வணக்கத்து ஆய்
உறக் கணித்து-உருகா மனத்தார்களைப்
புறக்கணித்திடும், புத்தூர்ப் புனிதனே.

6.024   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பிறை அரவக் குறுங்கண்ணிச் சடையினான்காண்;
பிறப்பு இலிகாண்; பெண்ணோடு ஆண் ஆயினான்காண்;
கறை உருவ மணிமிடற்று வெண் நீற்றான்காண்; கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலீகாண்;
இறை உருவக் கனவளையாள் இடப்பாகன்காண்; இரு நிலன்காண்; இரு நிலத்துக்கு இயல்பு ஆனான்காண்;
சிறை உருவக் களி வண்டு ஆர் செம்மையான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.

6.049   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பிறையோடு பெண் ஒருபால் வைத்தான் தான் காண்; பேரவன் காண்; பிறப்பு ஒன்றும் இல்லாதான் காண்;
கறை ஓடு மணிமிடற்றுக் காபாலீ காண்; கட்டங்கன் காண், கையில் கபாலம் ஏந்திப்
பறையோடு பல்கீதம் பாடினான் காண்; ஆடினான் காண், பாணி ஆக நின்று;
மறையோடு மா கீதம் கேட்டான் தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.

6.071   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பிறை ஊரும் சடைமுடி எம்பெருமான் ஆரூர், பெரும்பற்றப் புலியூரும், பேராவூரும்,
நறையூரும், நல்லூரும், நல்லாற்றூரும், நாலூரும், சேறூரும், நாரையூரும்,
உறையூரும், ஓத்தூரும், ஊற்றத்தூரும், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூரும்,
துறையூரும், துவையூரும், தோழூர்தானும், துடையூரும், தொழ இடர்கள் தொடரா அன்றே.

7.025   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பிறை ஆரும் சடை எம்பெருமான்! அருளாய் என்று,
முறையால் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர் தம்மை
மறையார் தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன்-சொன்ன
இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம், சிவலோகம் அதே .

7.028   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பிறை ஆரும் சடையாய்! பிரமன் தலையில் பலி கொள்
மறை ஆர் வானவனே! மறையின் பொருள் ஆனவனே!
கறை ஆரும் மிடற்றாய்! கடவூர் தனுள் வீரட்டத்து எம்
இறைவா! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

7.099   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பிறை அணி வாள் நுதலாள் உமையாள் அவள் பேழ் கணிக்க
நிறை அணி நெஞ்சு அனுங்க(ந்), நீலமால்விடம் உண்டது என்னே?
குறை அணி குல்லை, முல்லை, அளைந்து(க்), குளிர் மாதவி மேல்
சிறை அணி வண்டுகள் சேர்-திரு நாகேச்சுரத்து அரனே!

10.830   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
பிறையுட் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாட்கொண் டவர்தமைப் போலக்
கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்
`நிறையறி வோம்` என்பர் நெஞ்சிலர் தாமே.

11.004   11 st/nd Thirumurai   Song # 23   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும்
இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற
எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
எந்தையா உள்ள மிது.

11.006   11 st/nd Thirumurai   Song # 69   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
பிறைத்துண்டஞ் சூடலுற் றோபிச்சை
கொண்டனல் ஆடலுற்றோ
மறைக்கண்டம் பாடலுற் றோவென்பும்
நீறும் மருவலுற்றோ
கறைக்கண்டம் புல்லலுற் றோகடு
வாயர வாடலுற்றோ
குறைக்கொண் டிவளரன் பின்செல்வ
தென்னுக்குக் கூறுமினே.

12.020   12 st/nd Thirumurai   Song # 14   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
பிறைவளர் சடைமுடிப் பிரானைத் தொண்டரென்று
உறையுளில் அணைந்துபே ருவகை கூர்ந்திட
முறைமையின் வழிபட மொழிந்த பூசைகள்
நிறைபெரு விருப்பொடு செய்து நின்றபின்.
12.070   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
பிறைத்த ளிர்ச்சடைப் பெருந்தகைப் பெருந்திரு நல்லூர்க்
கறைக்க ளத்திறை கோவணப் பெருமைமுன் காட்டி
நிறைத்த அன்புடைத் தொண்டர்க்கு நீடருள் கொடுப்பான்
மறைக்கு லத்தொரு பிரமசா ரியின்வடி வாகி.
12.410   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
பிறைவளரும் செஞ்சடையார்
பேணுசிவா லயமெல்லாம்
நிறைபெரும்பூ சனைவிளங்க
நீடுதிருத் தொண்டர்தமைக்
குறையிரந்து வேண்டுவன
குறிப்பின்வழி கொடுத்தருளி
முறைபுரிந்து திருநீற்று
முதல்நெறியே பாலிப்பார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list