| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் புள்ள
புள்ளினும்
புள்ளுந்
புள்ளுந்தண்
புள்ள
புள்ளும்
புள்ளித்தோல்
புள்ளிமான்
புள்ளுவர்
புள்ளி
புள்ளானும்
2.044
2 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புள்ளும் கமலமும் கைக்கொண்டார்தாம் இருவர்
உள்ளுமவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே?
அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மான், எம்
வள்ளல், கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே?
3.119
3 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்; பூசு சாந்தம் பொடி-நீறு;
கொள்ளித்தீ விளக்கு; கூளிகள் கூட்டம்; காளியைக் குணம்
செய் கூத்து உடையோன்-
அள்ளல் கார் ஆமை அகடு வான்மதியம் ஏய்க்க,
முள்-தாழைகள் ஆனை
வெள்ளைக்கொம்பு ஈனும் விரி பொழில் வீழிமிழலையான்
என, வினை கெடுமே.
4.012
4 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
புள்ளிமான் பொறி அரவம், புள் உயர்த்தான் மணி நாகப்-
பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான்
உள்ரூவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர், உலகு எல்லாம்;
கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ?
4.077
4 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்து இடைப் புகுந்து நின்று
துள்ளுவர், சூறை கொள்வர்; தூ நெறி விளைய ஒட்டார்
முள் உடையவர்கள் தம்மை முக்கணான் பாத நீழல்
உள் இடை மறைந்து நின்று, அங்கு உணர்வினால் எய்யல் ஆமே.
5.055
5 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
புள்ளி கொண்ட புலி உரி ஆடையும்,
வெள்ளி கொண்ட வெண்பூதி மெய் ஆடலும்,-
நள்ளி தெண்திரை நாரையூரான் நஞ்சை
அள்ளி உண்டலும், அம்ம அழகிதே!
6.035
6 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் காணார், பொறி அழல் ஆய் நின்றான் தன்னை;
உள்ளானை; ஒன்று அல்லா உருவினானை; உலகுக்கு ஒரு விளக்கு ஆய் நின்றான் தன்னை;
கள் ஏந்து கொன்றை தூய், காலை மூன்றும் ஓவாமே, நின்று தவங்கள் செய்த
வெள்ளானை வேண்டும் வரம் கொடுப்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே.
10.305
10 st/nd Thirumurai
Song # 3
திருமூலர்
திருமந்திரம்
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்;
கள்ளுண்ண வேண்டா; தானே களிதரும்;
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.
11.007
11 st/nd Thirumurai
Song # 27
சேரமான் பெருமாள் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
புள்ளுந் துயின்று பொழுதிறு
மாந்து கழுதுறங்கி
நள்நென்ற கங்குல் இருள்வாய்ப்
பெருகிய வார்பனிநாள்
துள்ளுங் கலைக்கைச் சுடர்வண்
ணனைத்தொழு வார்மனம்போன்
றுள்ளும் உருக ஒருவர்திண்
தேர்வந் துலாத்தருமே.
12.180
12 st/nd Thirumurai
Song # 10
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
புள்ளுந்தண் புனற்கலிக்கும்
பொய்கையுடைப் புடையெங்கும்
தள்ளும்தாள் நடையசையத்
தளையவிழ்பூங் குவளைமது
விள்ளும்பைங் குழற்கதிர்நெல்
மிலைச்சியபுன் புலைச்சியர்கள்
கள்ளுண்டு களிதூங்கக்
கறங்குபறை யுங்கலிக்கும்.
12.280
12 st/nd Thirumurai
Song # 525
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
புள்ள லம்புதண் புனற்புக
லூருறை புனிதனார் அருள்பெற்றுப்
பிள்ளை யாருடன் நாவினுக்
கரசரும் பிறபதி தொழச்செல்வார்
வள்ள லார்சிறுத் தொண்டரும்
நீலநக் கரும்வளம் பதிக்கேக
உள்ளம் அன்புறு முருகர்அங்கு
ஒழியவும் உடன்பட இசைவித்தார்.
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000