சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பொடி
பொடி     பொடிகள்     பொடியார்     பொடிக்கின்     பொடிஏர்     பொடிமூடு     பொடியார்க்குந்     பொடிய     பொடிதனைப்     பொடிக்கொடு    
1.040   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொடி உடை மார்பினர், போர் விடை ஏறி, பூதகணம் புடை சூழ,
கொடி உடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு, பலபல கூறி,
வடிவு உடை வாள் நெடுங்கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
கடி கமழ் மா மலர் இட்டு, கறைமிடற்றான் அடி காண்போம்.

1.068   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொடி கொள் உருவர், புலியின் அதளர், புரிநூல் திகழ் மார்பில்
கடி கொள் கொன்றை கலந்த நீற்றர், கறை சேர் கண்டத்தர்,
இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனைச்சாரல்
கடிய விடை மேல் கொடி ஒன்று உடையார் கயிலை மலையாரே.

1.099   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொடிகள் பூசித் தொண்டர் பின் செல்ல, புகழ் விம்ம,
கொடிகளோடும் நாள்விழ மல்கு குற்றாலம்
கடி கொள் கொன்றை, கூவிள மாலை, காதல் செய்
அடிகள் மேய நன்நகர் போலும்; அடியீர்காள்!

1.111   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொடி புல்கு மார்பினில் புரி புல்கு நூல்,
அடி புல்கு பைங்கழல், அடிகள் இடம்;
கொடி புல்கு மலரொடு குளிர் சுனை நீர்
கடி புல்கு வள நகர் கடைமுடியே.

1.119   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொடியார் மெய் பூசினும், புறவின் நறவம்
குடியா ஊர் திரியினும், கூப்பிடினும்,
கடி ஆர் பூம்பொழில்-சோலைக் கள்ளில் மேயான்
அடியார் பண்பு இகழ்வார்கள், ஆதர்களே.

2.104   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொடி கொள் மேனி வெண் நூலினர், தோலினர், புலி உரி
அதள் ஆடை,
கொடி கொள் ஏற்றினர், மணி, கிணின் என வரு குரை
கழல் சிலம்பு ஆர்க்க,
கடி கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும்
கற்பகத்தை, தம்
முடிகள் சாய்த்து அடி வீழ்தரும் அடியரை முன்வினை
மூடாவே.

2.107   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொடி கொள் மேனியர், புலி அதள் அரையினர், விரிதரு
கரத்து ஏந்தும்
வடி கொள் மூ இலை வேலினர், நூலினர், மறிகடல்
மாதோட்டத்து
அடிகள், ஆதரித்து இருந்த கேதீச்சுரம் பரிந்த சிந்தையர்
ஆகி,
முடிகள் சாய்த்து, அடி பேண வல்லார் தம்மேல் மொய்த்து
எழும் வினை போமே.

2.113   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி அதளினர்,
அடி இலங்கும் கழல் ஆர்க்க ஆடும் அடிகள்(ள்), இடம்
இடி இலங்கும் குரல் ஓதம் மல்க(வ்) எறி வார் திரைக்
கடி இலங்கும் புனல் முத்து அலைக்கும் கடல் காழியே.

2.118   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி, புலர் காலையே,
அடிகள் ஆரத் தொழுது, ஏத்த நின்ற(வ்) அழகன்(ன்) இடம்
கொடிகள் ஓங்கிக் குலவும் விழவு ஆர் திலதைப்பதி,
வடி கொள் சோலை(ம்) மலர் மணம் கமழும் மதிமுத்தமே.

3.046   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொடி மெய் பூசி, மலர் கொய்து, புணர்ந்து உடன்,
செடியர் அல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர்
கடி கொள் முல்லை கமழும் கருகாவூர் எம்
அடிகள்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.

3.058   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொடிதனைப் பூசு மார்பில் புரிநூல் ஒரு பால் பொருந்த,
கொடி அன சாயலாளோடு உடன் ஆவதும் கூடுவதே?
கடி-மணம் மல்கி, நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை
அடிகள் நக்கன் பரவ, அயவந்தி அமர்ந்தவனே!

3.083   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொடி கொள் திரு மார்பர்; புரி நூலர்; புனல் பொங்கு அரவு தங்கும்
முடி கொள் சடை தாழ, விடை ஏறு முதலாளர் அவர்; இடம் ஆம்
இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய்தொழிலாளர் விழ மல்க,
செடி கொள் வினை அகல, மனம் இனியவர்கள் சேர் திரு நலூரே.

4.038   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொடிதனைப் பூச வைத்தார்; பொங்கு வெண் நூலும் வைத்தார்
கடியது ஓர் நாகம் வைத்தார்; காலனைக் கால் அவைத்தார்
வடிவு உடை மங்கை தன்னை மார்பில் ஓர் பாகம் வைத்தார்
அடி இணை தொழவும் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.

4.056   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொடி அணி மெய்யர் போலும்; பொங்கு வெண் நூலர் போலும்;
கடியது ஓர் விடையர் போலும்; காமனைக் காய்வர் போலும்;
வெடி படுதலையர் போலும்; வேட்கையால் பரவும் தொண்டர்
அடிமையை அளப்பர்போலும் ஆவடுதுறையனாரே.

4.062   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொடிக்கொடு பூசி, பொல்லாக் குரம்பையில் புந்தி, ஒன்றி,
பிடித்து நின் தாள்கள் என்றும் பிதற்றி, நான் இருக்கமாட்டேன்-
எடுப்பன் என்று இலங்கைக் கோன் வந்து எடுத்தலும், இருபது(த்) தோள
அடர்த்தனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

6.012   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொடி நாறு மேனியர்; பூதிப் பையர்; புலித்தோலர்; பொங்கு அரவர்; பூணநூலர்;
அடி நாறு கமலத்தர்; ஆரூர் ஆதி; ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார் தாம்-
கடி நாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;
மடி நாறு மேனி இம் மாயம் நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

6.073   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொடி ஆடும் மேனிப் புனிதன் கண்டாய்; புள் பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய்;
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய்; எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய்;
மடல் ஆர் திரை புரளும் காவிரீ வாய்   வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய்
கொடி ஆடு நெடு மாடக் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

7.028   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பொடி ஆர் மேனியனே! புரி நூல் ஒருபால் பொருந்த,
வடி ஆர் மூ இலை வேல், வளர் கங்கை இன் மங்கையொடும்,
கடி ஆர் கொன்றையனே! கடவூர் தனுள் வீரட்டத்து எம்
அடிகேள்! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

7.030   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பொடி ஏறு திருமேனிப் பெருமானை, பொங்கு அரவக் கச்சையானை,
கடி நாறும் பூம் பொய்கைக் கயல் வாளை குதி கொள்ளும் கருப்பறியலூர்
கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண் செய்யும் கொகுடிக் கோயில்
அடி ஏறு கழலானை, நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே!.

7.050   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பொடி ஆடு மேனியன் பொன் புனம் சூழ் புனவாயிலை
அடியார் அடியன்-நாவல் ஊரன்-உரைத்தன
மடியாது கற்று இவை ஏத்த வல்லார், வினை மாய்ந்து போய்க்
குடி ஆக, பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை, குற்றமே.

11.006   11 st/nd Thirumurai   Song # 27   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
பொடிக்கின் றிலமுலை போந்தில
பல்சொற் பொருள்தெரியா
முடிக்கின் றிலகுழல் ஆயினும்
கேண்மின்கள் மூரிவெள்ளம்
குடிக்கொண்ட செஞ்சடைக் கொண்டலங்
கண்டன்மெய்க் கொண்டணிந்த
கடிக்கொன்றை நாறுகின் றாள்அறி
யேன்பிறர் கட்டுரையே.

11.032   11 st/nd Thirumurai   Song # 62   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
பொடிஏர் தருமே னியனாகிப்
பூசல் புகவடிக்கே
கடிசேர் கணைகுளிப் பக்கண்டு
கோயிற் கருவியில்லா
வடியே படவமை யுங்கணை
யென்ற வரகுணன்தன்
முடி ஏர்தருகழ லம்பலத்
தாடிதன் மொய்கழலே.

12.120   12 st/nd Thirumurai   Song # 25   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
பொடிமூடு தழலென்னத்
திருமேனி தனிற்பொலிந்த
படிநீடு திருநீற்றின்
பரப்பணிந்த பான்மையராய்க்
கொடிநீடு மறுகணைந்து
தம்முடைய குளிர்கமலத்
தடிநீடும் மனத்தன்பர்
தம்மனையி னகம்புகுந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 105   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பொடியார்க்குந் திருமேனிப்
புனிதர்க்குப் புவனங்கள்
முடிவாக்குந் துயர்நீங்க
முன்னைவிடம் அமுதானால்
படியார்க்கும் அறிவரிய
பசுபதியார் தம்முடைய
அடியார்க்கு நஞ்சமுதம்
ஆவதுதான் அற்புதமோ.
12.280   12 st/nd Thirumurai   Song # 215   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பொடிய ணிந்த புராணன் அரத்துறை
அடிகள் தம்மரு ளேயிது வாமெனப்
படியி லாதசொல் மாலைகள் பாடியே
நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000