சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் போர்
போர்     போர்த்த     போர்வலைச்     போர்வைத்தோல்     போர்த்ததுவும்     போர்த்தாய்,     போர்ப்     போர்த்து,     போர்த்தானை,    
1.043   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போர் மலி திண் சிலை கொண்டு, பூதகணம் புடை சூழ,
பார் மலி வேடு உரு ஆகி, பண்டு ஒருவற்கு அருள் செய்தார்
ஏர் மலி கேழல் கிளைத்த இனொளி மா மணி எங்கும்
கார் மலி வேடர் குவிக்கும் கற்குடி மா மலையாரே.

1.060   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போர் மிகுத்த வயல்-தோணிபுரத்து உறையும் புரிசடை எம்
கார் மிகுத்த கறைக் கண்டத்து இறையவனை, வண்கமலத்
தார் மிகுத்த வரைமார்பன்-சம்பந்தன்-உரைசெய்த
சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே.

1.064   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போர் ஆர் மதமா உரிவை போர்த்து, பொடி அணி மேனியனாய்,
கார் ஆர் கடலில் நஞ்சம் உண்ட கண்ணுதல், விண்ணவன், ஊர்
பார் ஆர் வைகைப் புனல் வாய் பரப்பி, பல்மணி பொன் கொழித்து,
சீர் ஆர் வாரி சேர நின்ற தென்திருப்பூவணமே.

1.068   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போர் ஆர் கடலில் புனல் சூழ் காழிப் புகழ் ஆர் சம்பந்தன்,
கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலை மலையார் மேல்,
தேரா உரைத்த செஞ்சொல் மாலை செப்பும் அடியார் மேல்
வாரா, பிணிகள்; வானோர் உலகில் மருவும் மனத்தாரே.

2.076   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போர்த்ததுவும் கரியின்(ன்) உரி; புலித்தோல், உடை;
கூர்த்தது ஓர் வெண்மழு ஏந்தி; கோள் அரவம், அரைக்கு
ஆர்த்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
பார்த்ததுவும்(ம்) அரணம், படர் எரி மூழ்கவே.

3.046   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போர்த்த மெய்யினர், போது உழல்வார்கள், சொல்
தீர்த்தம் என்று தெளிவீர்! தெளியேன்மின்!
கார்த் தண்முல்லை கமழும் கருகாவூர் எம்
ஆத்தர் வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.

3.111   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போர் அணாவு முப்புரம் எரித்தவன், பொழில்கள் சூழ்தரு
மிழலை மா நகர்ச்
சேரும் ஈசனைச் சிந்தை செய்பவர் தீவினை கெடுமே.

4.001   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
போர்த்தாய், அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி-தோல்!
புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய்!
ஆர்த்தான் அரக்கன் தனை மால் வரைக் கீழ்
அடர்த்திட்டு, அருள் செய்த அது கருதாய்;
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்,
என் வேதனை ஆன விலக்கியிடாய்-
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

4.093   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
போர்ப் பனை யானை உரித்த பிரான்; பொறி வாய் அரவம்
சேர்ப்பது, வானத் திரை கடல் சூழ் உலகம்(ம்) இதனைக்
காப்பது காரணம் ஆக, கொண்டான்; கண்டியூர் இருந்த
கூர்ப்பு உடை ஒள்வாள் மழுவனை ஆம், அண்டர் கூறுவதே.

6.050   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
போர் ஆனை ஈர் உரிவைப் போர்வை யானை, புலி அதளே   உடை ஆடை போற்றினானை,
பாரானை, மதியானை, பகல் ஆனானை, பல் உயிர் ஆய் நெடுவெளி ஆய்ப் பரந்து நின்ற
நீரானை, காற்றானை, தீ ஆனானை, நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வத்-
தேரானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.

6.068   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
போர்த்து, ஆனையின் உரி-தோல் பொங்கப்பொங்க, புலி அதளே உடையாகத் திரிவான் தன்னை;
காத்தானை, ஐம்புலனும்; புரங்கள் மூன்றும், காலனையும், குரைகழலால் காய்ந்தான் தன்னை;
மாத்து ஆடிப் பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினைவேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகித்
தீர்த்தானை; திரு முதுகுன்று உடையான் தன்னை; தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.

6.069   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
போர்த்தானை, ஆனையின் தோல்; புரங்கள்
மூன்றும் பொடி ஆக எய்தானை; புனிதன் தன்னை;
வார்(த்)த்தாங்கு வனமுலையாள் பாகன் தன்னை; மறிகடலுள் நஞ்சு உண்டு, வானோர் அச்சம்
தீர்த்தானை; தென் திசைக்கே காமன் செல்ல, சிறிது அளவில் அவன் உடலம் பொடியா அங்கே
பார்த்தானை; பள்ளியின் முக்கூடலானை; பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.

6.084   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
போர் அரவம் மால்விடை ஒன்று ஊர்தியானை, புறம் பயமும் புகலூரும் மன்னினானை,
நீர் அரவச் செஞ்சடை மேல் நிலா வெண்திங்கள்   நீங்காமை வைத்தானை, நிமலன் தன்னை,
பேர் அரவப் புட்பகத்தேர் உடைய வென்றிப் பிறங்கு ஒளி வாள் அரக்கன் முடி இடியச் செற்ற
சீர் அரவக் கழலானை, செல்வன் தன்னை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.

7.028   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
போர் ஆரும் கரியின்(ன்) உரி போர்த்துப் பொன் மேனியின் மேல்,
வார் ஆரும் முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே!
கார் ஆரும் மிடற்றாய்! கடவூர் தனுள் வீரட்டானத்து
ஆரா என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

7.055   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்குப் பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து,
பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய்; பண்டு பகீரதன் வேண்ட,
ஆர்த்து வந்து இழியும் புனல் கங்கை-நங்கையாளை நின் சடைமிசைக் கரந்த
தீர்த்தனே! நின் தன் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.

7.093   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
போர் ஆர் புரம் எய் புனிதன் அமரும்
சீர் ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தை
ஆரூரன் சொல் இவை வல்லவர்கள்,
ஏர் ஆர் இமையோர் உலகு எய்துவரே.

8.105.06   8 st/nd Thirumurai   Song # 53   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
போர் ஏறே! நின் பொன் நகர்வாய் நீ போந்தருளி, இருள் நீக்கி,
வார் ஏறு இள மென் முலையாளோடு உடன் வந்தருள, அருள் பெற்ற
சீர் ஏறு அடியார் நின் பாதம் சேரக் கண்டும், கண் கெட்ட
ஊர் ஏறு ஆய், இங்கு உழல்வேனோ? கொடியேன் உயிர் தான் உலவாதே!

11.009   11 st/nd Thirumurai   Song # 29   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
போர்த்த களிற்றுரியும் பூண்ட பொறியரவும்
தீர்த்த மகளிருந்த செஞ்சடையும் மூர்த்தி
குயிலாய மென்மொழியாள் கூறாய வாறும்
கயிலாயா யான்காணக் காட்டு.
12.100   12 st/nd Thirumurai   Song # 70   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
போர்வலைச் சிலைத்தொழிற்  
புறத்திலே விளைப்பவச்
சார்வலைத் தொடக்கறுக்க  
ஏகும்ஐயர் தம்முனே
கார்வலைப் படுத்தகுன்று
கானமா வளைக்கநீள்
வார்வலைத் திறஞ்சுமந்து  
வந்தவெற்பர் முந்தினார்.
12.180   12 st/nd Thirumurai   Song # 14   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
போர்வைத்தோல் விசிவார்என்
றினையனவும் புகலுமிசை
நேர்வைத்த வீணைக்கும்
யாழுக்கும் நிலைவகையில்
சேர்வுற்ற தந்திரியும்
தேவர்பிரான் அர்ச்சனைகட்
கார்வத்தி னுடன்கோரோ
சனையும்இவை அளித்துள்ளார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list