சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மழை
மழை     மழைவளர்     மழையிற்     மழைக்கண்     மழைக்     மழைக்கு     மழையானும்,    
1.102   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மழை ஆர் சாரல் செம்புனல் வந்து அங்கு அடி வருட,
கழை ஆர் கரும்பு கண்வளர் சோலைக் கலிக் காழி,
உழை ஆர் கரவா! உமையாள் கணவா! ஒளிர்சங்கக்-
குழையா! என்று கூற வல்லார்கள் குணவோரே.

1.121   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மழை நுழை மதியமொடு, அழிதலை, மடமஞ்ஞை
கழை நுழை புனல், பெய்த கமழ் சடைமுடியன்;
குழை நுழை திகழ் செவி, அழகொடு மிளிர்வது ஒர்
இழை நுழை புரி அணல்; இடம் இடைமருதே.

2.023   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மழை ஆர் மிடறா! மழுவாள் உடையாய்!
உழை ஆர் கரவா! உமையாள்கணவா!
விழவு ஆரும் வெண்நாவலின் மேவிய எம்
அழகா! எனும் ஆயிழையாள் அவளே

2.083   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மழை முகில் போலும் மேனி அடல் வாள் அரக்கன்
முடியோடு தோள்கள் நெரிய,
பிழை கெட, மா மலர்ப்பொன் அடி வைத்த பேயொடு
உடன் ஆடி மேய பதிதான்
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட, இடும்
ஊசல் அன்ன கமுகின்
குழை தரு கண்ணி விண்ணில் வருவார்கள் தங்கள் அடி
தேடு கொச்சைவயமே.

3.090   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மழை வளர் இளமதி மலரொடு தலை புல்கு வார்சடை மேல்
கழை வளர் புனல் புகக் கண்ட எம் கண்ணுதல், கபாலியார் தாம்,
இழை வளர் துகில் அல்குல் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விழை வளர் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

5.021   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மழைக்கண் மா மயில் ஆலும் மகிழ்ச்சியான்
அழைக்கும், தன் அடியார்கள் தம் அன்பினை;
குழைக்கும் தன்னைக் குறிக்கொள வேண்டியே
இழைக்கும், என் மனத்து-இன்னம்பர் ஈசனே.

7.009   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மழைக் கண் மடவாளை ஓர்பாகம் வைத்தீர்; வளர் புன்சடைக் கங்கையை வைத்து  உகந்தீர்;
முழைக் கொள் அரவொடு என்பு அணிகலனா, முழுநீறு மெய் பூசுதல் என்னைகொலோ?
கழைக் கொள் கரும்பும், கதலிக்கனியும், கமுகின் பழுக்காயும், கவர்ந்து கொண்டு இட்டு,
அழைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே!

7.058   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மழைக்கு அரும்பும் மலர்க் கொன்றையினானை வளைக்கல் உற்றேன்; மறவா மனம் பெற்றேன்;
பிழைத்து ஒரு கால் இனிப் போய்ப் பிறவாமைப் பெருமை பெற்றேன்; பெற்றது ஆர் பெறுகிற்பார்?
குழைக் கருங்கண்டனைக் கண்டு கொள்வானே பாடுகின்றேன்; சென்று கூடவும் வல்லேன்;
கழைக் கரும்பும் கதலிப் பலசோலை கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே .

7.085   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மழை நுழை மதியமொடு வாள் அரவம் சடைமேல
இழை நுழை துகில் அல்குல் ஏந்திழையாளோடும
குழை அணி திகழ் சோலைக் கூடலையாற்றூரில்
அழகன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

7.086   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மழையானும், திகழ்கின்ற மலரோன், என்று இருவர் தாம்
உழையா நின்றவர் உள்க உயர்வானத்து உயர்வானை,
பழையானை; பனங்காட்டூர் பதி ஆகத் திகழ்கின்ற
குழை(க்)காதற்கு அடிமைக் கண் குழையாதார் குழைவு என்னே!

12.080   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மழைவளர் உலகில் எங்கும்
மன்னிய சைவ மோங்க
அழலவிர் சடையான் அன்பர்க்
கடாதன அடுத்த போது
முழையரி யென்னத் தோன்றி
முரண்கெட எறிந்து தீர்க்கும்
பழமறை பரசுந் தூய
பரசுமுன் னெடுக்கப் பெற்றார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 18   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
மழையிற் கரைந்தங் குவரூறி
மேனி வெளுத்த வடிவினால்
உழையிற் பொலிந்த திருக்கரத்தார்
அடியார் வேடம் என்றுணர்ந்தே
இழையிற் சிறந்த வோடைநுதல்
யானைக் கழுத்தி னின்றிழிந்து
விழைவிற் பெருகுங்காதலினால்
விரைந்து சென்று கைதொழுதார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list