சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வார
வார்     வாரி,     வாரணி     வாரத்திற்     வாரா     வாரணிந்த     வாரி     வாரணச்     வார்ந்து     வார     வார்புனையும்     வார்ந்திழி     வாராத     வாரு     வாரின்     வாரம்     வாரிக்    
1.025   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகம் ஆய்,
சீர் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
ஏர் ஆர் புரிபுன்சடை, எம் ஈசனைச்
சேராதவர் மேல் சேரும், வினைகளே.

1.053   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாரி, மாகம் வைகு திங்கள், வாள் அரவம், சூடி,
நாரி பாகம் நயந்து, பூமேல் நான்முகன்தன் தலையில்
சீரிது ஆகப் பலி கொள் செல்வன்; செற்றலும் தோன்றியது ஓர்
மூரி நாகத்து உரிவை போர்த்தான்; மேயது முதுகுன்றே.

1.061   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வார் ஏற்ற பறை ஒலியும் சங்கு ஒலியும் வந்து இயம்ப,
ஊர் ஏற்ற செல்வத்தோடு ஓங்கிய சீர் விழவு ஓவாச்
சீர் ஏற்றம் உடைத்து ஆய செங்காட்டங்குடி அதனுள்,
கார் ஏற்ற கொன்றையான்-கணபதீச்சரத்தானே.

1.072   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வார் ஆர் கொங்கை மாது ஓர் பாகம் ஆக, வார்சடை,
நீர் ஆர் கங்கை திங்கள் சூடி, நெற்றி ஒற்றைக்கண்,
கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி, அம் தண் குழகன்-குடமூக்கில்,
கார் ஆர் கண்டத்து எண்தோள் எந்தை, காரோணத்தாரே.

1.107   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில், நண்ணும்
கார் உறு கொன்றையொடும் கதநாகம் பூண்டு அருளி,
சீர் உறும் அந்தணர் வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
நீர் உறு செஞ்சடையான் கழல் ஏத்தல் நீதியே.

1.109   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வார் உறு வனமுலை மங்கை பங்கன்,
நீர் உறு சடை முடி நிமலன், இடம்
கார் உறு கடி பொழில் சூழ்ந்து அழகு ஆர்
சீர் உறு வளவயல் சிரபுரமே.

1.136   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வார் உறு மென்முலை நன்நுதல் ஏழையொடு ஆடுவர்,
வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர்,
கார் உற நின்று அலரும் மலர்க்கொன்றை அம் கண்ணியர்,
கடு விடை கொடி, வெடிகொள் காடு உறை பதியர்,
பார் உற விண்ணுலகம் பரவபடுவோர், அவர்
படுதலைப் பலி கொளல் பரிபவம் நினையார்
தார் உறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர்
தழை பொழில் மழை நுழை தருமபுரம்பதியே.

1.136   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வார் மலி மென்முலை மாது ஒருபாகம் அது ஆகுவர்;
வளம் கிளர் மதி, அரவம், வைகிய சடையர்;
கூர் மலி சூலமும், வெண்மழுவும், அவர் வெல் படை;
குனிசிலை தனி மலை அது ஏந்திய குழகர்;
ஆர் மலி ஆழி கொள் செல்வனும், அல்லி கொள் தாமரை
மிசை அவன், அடி முடி அளவு தாம் அறியார்;
தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர்; தங்கு இடம்
தடங்கல் இடும் திரைத் தருமபுரம் பதியே.

2.088   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாராத நாடன், வருவார் தம் வில்லின் உரு மெல்கி
நாளும் உருகில்
ஆராத இன்பன், அகலாத அன்பன், அருள் மேவி நின்ற
அரன், ஊர்
பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை
பிரியாள்
தீராத காதல் நெதி நேர, நீடு திரு முல்லை வாயில்
இதுவே.

2.116   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வார் கொள் கோலம் முலை மங்கை நல்லார் மகிழ்ந்து
ஏத்தவே,
நீர் கொள் கோலச் சடை நெடு வெண் திங்கள் நிகழ்வு
எய்தவே,
போர் கொள் சூலப்படை புல்கு கையார்க்கு இடம் ஆவது
கார் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

3.011   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வார் உறு மென்முலை மங்கை பாட நடம் ஆடிப் போய்,
கார் உறு கொன்றை வெண்திங்களானும், கனல் வாயது ஓர்
போர் உறு வெண்மழு ஏந்தினானும் புனவாயிலில்,
சீர் உறு செல்வம் மல்க(வ்) இருந்த சிவலோகனே.

3.016   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வார் அணி வனமுலை மங்கையாளொடும்
சீர் அணி திரு உருத் திகழ்ந்த சென்னியர்;
நார் அணி சிலைதனால் நணுகலார் எயில்
கூர் எரி கொளுவினர் கொள்ளிக்காடரே.

3.029   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாரு மன்னும் முலை மங்கை ஓர் பங்கினன்;
ஊரு மன்னும் பலி உண்பதும் வெண்தலை
காரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்
நீரு மன்னும் சடை நிமலர் தம் நீர்மையே!

3.045   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வார் கொள் மென்முலையாள் ஒரு பாகமா,
ஊர்களார் இடு பிச்சை கொள் உத்தமன்-
சீர் கொள் மாடங்கள் சூழ் திரு ஆரூரான்;
ஆர்கணா, எனை, அஞ்சல்! எனாததே?

3.065   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வார் அணவு முலை மங்கை பங்கினராய், அம் கையினில்
போர் அணவு மழு ஒன்று அங்கு ஏந்தி, வெண்பொடி அணிவர்
கார் அணவு மணி மாடம் கடை நவின்ற கலிக் கச்சி,
நீர் அணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக்காட்டாரே.

3.075   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர்
சாரின் முரல் தெண்கடல் விசும்பு உற முழங்கு ஒலி கொள் சண்பைநகர்மேல்,
பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன், உரைசெய்
சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர், சேர்வர், சிவலோக நெறியே.

5.059   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வார் கொள் மென்முலை மங்கை ஓர் பங்கினன்,
வார் கொள் நல்முரசம்(ம்) அறைய(வ்) அறை
வார் கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு-
வார்கள் மன்னுவர், பொன்னுலகத்திலே.

6.002   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக, மழுவாள் கை   ஏந்தி, மயானத்து ஆடி,
சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலித் திரு   வாஞ்சியத்தார்; திரு நள்ளாற்றார்;
கார் ஏறு கண்டத்தார்; காமற் காய்ந்த கண் விளங்கு நெற்றியார்; கடல் நஞ்சு உண்டார்-
போர் ஏறு தாம் ஏறிப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

6.076   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வார் ஆரும் முலை மங்கை பங்கத்தான் காண்; மாமறைகள் ஆயவன் காண்; மண்ணும், விண்ணும்,
கூர் ஆர் வெந்தழலவனும், காற்றும், நீரும், குலவரையும், ஆயவன் காண்; கொடு நஞ்சு உண்ட
கார் ஆரும் கண்டன் காண்; எண்தோளன் காண்,
கயிலை மலைப்-பொருப்பன் காண் விருப்போடு என்றும்
தேர் ஆரும் நெடுவீதித் திருப் புத்தூரில்-திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.

6.081   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வார் ஆர்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்; மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்;
போர் ஆர்ந்த மால்விடை ஒன்று ஊர்வான் கண்டாய்; புகலூரை அகலாத புனிதன் கண்டாய்;
நீர் ஆர்ந்த நிமிர்சடை ஒன்று உடையான் கண்டாய்; நினைப்பார் தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்;
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

6.088   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வார் கெழுவு முலை உமையாள் வெருவ அன்று மலை எடுத்த வாள் அரக்கன் தோளும் தாளும்
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து, மீண்டே இன் இசை கேட்டு இருந்தானை; இமையோர் கோனை;
பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாட, பைம்பொழில் சேர்தரும், ஓமாம்புலியூர் மன்னும்
சீர் கெழுவு வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.

6.098   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம்; மாதேவா! மாதேவா! என்று வாழ்த்தி,
நீர் ஆண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்; நீறு அணியும் கோலமே நிகழப் பெற்றோம்;
கார் ஆண்ட மழை போலக் கண்ணீர் சோரக் கல் மனமே நல் மனமாக் கரையப் பெற்றோம்;
பார் ஆண்டு பகடு ஏறித் வருவார் சொல்லும் பணி கேட்கக் கடவோமோ? பற்று அற்றோமே.

7.005   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வார் இருங்குழல், வாள் நெடுங்கண், மலைமகள் மது விம்மு கொன்றைத்-
தார் இருந் தடமார்பு நீங்காத் தையலாள் உலகு உய்ய வைத்த,
கார் இரும் பொழில், கச்சி மூதூர்க் காமக்கோட்டம் உண்டாக, நீர் போய்
ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே? ஓணகாந்தன் தளி உளீரே!

7.005   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வாரம் ஆகித் திருவடிக்குப் பணி செய் தொண்டர் பெறுவது என்னே?
ஆரம் பாம்பு; வாழ்வது ஆரூர்; ஒற்றியூரேல், உ(ம்)மது அன்று;
தாரம் ஆகக் கங்கையாளைச் சடையில் வைத்த அடிகேள்! உந்தம்
ஊரும் காடு(வ்); உடையும் தோலே ஓணகாந்தன் தளி உளீரே!

7.039   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வார் கொண்ட வன முலையாள் உமை பங்கன் கழலே
மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன்;
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்;
செங்காட்டங்குடி மேய  சிறுத்தொண்டற்கு அடியேன்;
கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்;
கடல் காழி கணநாதன்  அடியார்க்கும் அடியேன்;
ஆர் கொண்ட வேல் கூற்றன்-களந்தைக் கோன்-அடியேன்;
ஆரூரன் ஆரூரில்   அம்மானுக்கு ஆளே .

7.089   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வார் இடம் கொள் வனமுலையாள் தன்னோடு மயானத்துப்
பாரிடங்கள் பல சூழப் பயின்று ஆடும் பரமேட்டி,
கார் இடம் கொள் கண்டத்தன், கருதும் இடம் திரு ஒற்றி-
யூர் இடம் கொண்டு இருந்த பிரான், உளோம்; போகீர்! என்றானே!

8.147   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வாரா வழி அருளி வந்து, எனக்கு மாறு இன்றி,
ஆரா அமுதாய் அமைந்தன்றே சீர் ஆர்
திருத்தன், பெருந்துறையான், என் சிந்தை மேய
ஒருத்தன், பெருக்கும் ஒளி.

8.217   8 st/nd Thirumurai   Song # 16   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
வாரிக் களிற்றின் மருப்புகு
   முத்தம் வரைமகளிர்
வேரிக் களிக்கும் விழுமலை
   நாட விரிதிரையின்
நாரிக் களிக்கமர் நன்மாச்
   சடைமுடி நம்பர்தில்லை
ஏரிக் களிக்கரு மஞ்ஞையிந்
   நீர்மையென் னெய்துவதே.

9.026   9 st/nd Thirumurai   Song # 1   புருடோத்தம நம்பி   திருவிசைப்பா  
வாரணி நறுமலர் வண்டு கெண்டு
   பஞ்சமம் செண்பக மாலை மாலை
வாரணி வனமுலை மெலியும் வண்ணம்
   வந்துவந் திவைநம்மை மயக்கு மாலோ
சீரணி மணிதிகழ் மாட மோங்கு
   தில்லையம் பலத்தெங்கள் செல்வன் வாரான்
ஆரெனை அருள்புரிந் தஞ்சல் என்பார்
   ஆவியின் பரமன்றென்றன் ஆதரவே.

10.209   10 st/nd Thirumurai   Song # 22   திருமூலர்   திருமந்திரம்  
வாரணி கொங்கை மனோன்மனி மங்கலை
காரணி காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதாதி போதமு மாமே. 

10.317   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே. 

10.710   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி
ஆரா அமுதளித் தானந்த பேர்நந்தி
பேரா யிரம்உடைப் பெம்மான்பேர் ஒன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுகென் றானே.

11.023   11 st/nd Thirumurai   Song # 54   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
வாரணிந்த கொங்கை உமையாள் மணவாளா
வாரணிந்த கொன்றை மலர்சூடி வாரணிந்த
செஞ்சடையாய் சீர்கொள் சிவலோகா சேயொளியாய்
செஞ்சடையாய் செல்ல நினை.

12.060   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
வாரி சொரியுங் கதிர்முத்தும்
வயல்மென் கரும்பிற் படுமுத்தும்
வேரல் விளையுங் குளிர்முத்தும்
வேழ மருப்பின் ஒளிர்முத்தும்
மூரல் எனச்சொல் வெண்முத்த
நகையார் தெரிந்து முறைகோக்குஞ்
சேரர் திருநாட் டூர்களின்முன்
சிறந்த மூதூர் செங்குன்றூர்.
12.100   12 st/nd Thirumurai   Song # 11   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வாரணச் சேவ லோடும்
வரிமயிற் குலங்கள் விட்டுத்
தோரண மணிகள் தூக்கிச்
சுரும்பணி கதம்பம் நாற்றிப்
போரணி நெடுவே லோற்குப்
புகழ்புரி குரவை தூங்கப்
பேரணங் காடல் செய்து
பெருவிழா எடுத்த பின்றை.
12.210   12 st/nd Thirumurai   Song # 323   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வார்ந்து சொரிந்த கண்ணருவி
மயிர்க்கால் தோறும் வரும்புளகம்
ஆர்ந்த மேனிப் புறம்பலைப்ப
அன்பு கரைந்தென் புள்ளலைப்பச்
சேர்ந்த நயனம் பயன்பெற்றுத்
திளைப்பத் திருவே கம்பர்தமை
நேர்ந்த மனத்தில் உறவைத்து
நீடும் பதிகம் பாடுவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 976   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வார ணத்தின் உரிபோர்த்த
மைந்தர் உமையாள் மணவாளர்
ஆர ணத்தின் உட்பொருளாய்
நின்றார் தம்முன் அணைந்திறைஞ்சி
நார ணற்கும் பிரமற்கும்
நண்ணற் கரிய கழல்போற்றும்
கார ணத்தின் வரும்இன்பக்
கண்ணீர் பொழியக் கைதொழுதார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 263   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வார்புனையும் வனமுலையார்
வன்தொண்டர் போனதற்பின்
தார்புனையும் மண்டபத்துத்
தம்முடைய பணிசெய்து
கார்புனையும் மணிகண்டர்
செயல்கருத்திற் கொண்டிறைஞ்சி
ஏர்புனையுங் கன்னிமா
டம்புகுந்தார் இருள்புலர.
12.530   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
வார்ந்திழி குருதி சோர
மலர்க்கருங் குழலும் சோரச்
சோர்ந்துவீழ்ந் தரற்றுந் தோகை
மயிலெனத் துளங்கி மண்ணில்
சேர்ந்தயர்ந் துரிமைத் தேவி
புலம்பிடச் செம்பொன் புற்றுள்
ஆர்ந்தபே ரொளியைக் கும்பிட்டு
அரசரும் அணையவந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list