சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வேதம்
வேதம்     வேதம்வளர்க்    
1.066   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி,
பூதம் சூழ, பொலிய வருவார்; புலியின் உரி-தோலார்;
நாதா! எனவும், நக்கா! எனவும், நம்பா! என நின்று,
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழனநகராரே.

1.104   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வேதம் ஓர் கீதம் உணர்வாணர் தொழுது ஏத்த, மிகு வாசப்-
போதனைப் போல் மறையோர் பயிலும் புகலிதன்னுள்
நாதனை, ஞானம் மிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில்
ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே.

2.037   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வேதம் பல ஓமம் வியந்து அடி போற்ற,
ஓதம் உலவும், மறைக்காட்டில் உறைவாய்!
ஏதில் சமண்சாக்கியர் வாக்குஇவை, என்கொல்,
ஆதரொடு தாம் அலர் தூற்றிய ஆறே?

3.056   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வேதம் மலிந்த ஒலி, விழவின்(ன்) ஒலி, வீணை ஒலி,
கீதம் மலிந்து உடனே கிளர, திகழ் பௌவம் அறை
ஓதம் மலிந்து உயர் வான் முகடு ஏற, ஒண் மால்வரையான்
பேதையொடும் இருந்தான் பிரமாபுரம் பேணுமினே!

3.058   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வேதம் ஆய், வேள்வி ஆகி, விளங்கும் பொருள் வீடு அது ஆகி,
சோதி ஆய், மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது ஒன்றே?
சாதியால் மிக்க சீரால்-தகுவார் தொழும் சாத்தமங்கை
ஆதி ஆய் நின்ற பெம்மான்! அயவந்தி அமர்ந்தவனே!

5.014   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வேதம் ஓதும் விரிசடை அண்ணலார்,
பூதம் பாட நின்று ஆடும் புனிதனார்
ஏதம் தீர்க்கும் இடைமருதா! என்று-
பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.

5.025   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வேதம் ஓதி வந்து இல் புகுந்தார் அவர்,
காதில் வெண் குழை வைத்த கபாலியார்,
நீதி ஒன்று அறியார், நிறை கொண்டனர்-
பாதி வெண் பிறைப் பாசூர் அடிகளே.

5.037   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வேதம் ஆகிய வெஞ் சுடர் ஆனையார்;
நீதியால் நிலன் ஆகிய ஆனையார்;
ஓதி ஊழி தெரிந்து உணர் ஆனையார்;
காதல் ஆனைகண்டீர்-கடவூரரே.

5.057   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வேதம் ஆய விண்ணோர்கள் தலைவனை,
ஓதி மன் உயிர் ஏத்தும் ஒருவனை,-
கோதி வண்டு அறையும் திருக்கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே!

5.099   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வேதம் ஓதில் என்? வேள்விகள் செய்கில் என்?
நீதி நூல்பல நித்தல் பயிற்றில் என்?
ஓதி அங்கம் ஓர் ஆறும் உணரில் என்?
ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே.

6.083   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வேதம் ஓர் நான்கு ஆய், ஆறு அங்கம் ஆகி, விரிக்கின்ற பொருட்கு எல்லாம் வித்தும் ஆகி,
கூதல் ஆய், பொழிகின்ற மாரி ஆகி, குவலயங்கள் முழுதும் ஆய், கொண்டல் ஆகி,
காதலால் வானவர்கள், போற்றி! என்று கடிமலர்கள் அவை தூவி ஏத்த நின்ற
பாதி ஓர் மாதினனை; பாசூர் மேய பரஞ்சுடரை; கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.

7.049   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வேதம் ஓதி, வெண்நீறு பூசி, வெண் கோவணம் தற்று, அயலே
ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்தரம் நீர் மகிழ்வீர்;
மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன் பூண்டி மா நகர்வாய்,
ஏது காரணம் ஏது காவல் கொண்டு, எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!

10.102   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
வேதம் உரைத்தானும் வேதிய னாகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்கா
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.

12.280   12 st/nd Thirumurai   Song # 618   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வேதம்வளர்க் கவுஞ்சைவம் விளக்கு தற்கும்
வேதவனத் தருமணியை மீண்டும் புக்குப்
பாதமுறப் பணிந்தெழுந்து பாடிப் போற்றிப்
பரசியருள் பெற்றுவிடை கொண்டு போந்து
மாதவத்து வாகீசர் மறாத வண்ணம்
வணங்கியருள் செய்துவிடை கொடுத்து மன்னுங்
காதலினால் அருமையுறக் கலந்து நீங்கிக்
கதிர்ச்சிவிகை மருங்கணைந்தார் காழி நாதர்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list