சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வேலை
வேலை     வேலையழற்     வேலைக்-கடல்     வேலையின்    
2.048   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வேலை மலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன் தன்
மேல் அடர் வெங்காலன் உயிர் விண்ட பினை, நமன் தூதர்,
ஆலமிடற்றான் அடியார் என்று, அடர அஞ்சுவரே.

2.122   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வேலை தன்னில் மிகு நஞ்சினை உண்டு இருள் கண்டனார்,
ஞாலம் எங்கும் பலி கொண்டு உழல்வார் நகர் ஆவது
சால நல்லார் பயிலும் மறை கேட்டுப் பதங்களைச்
சோலை மேவும் கிளித்தான் சொல் பயிலும் புகலியே.

4.086   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வேலைக்-கடல் நஞ்சம் உண்டு வெள் ஏற்றொடும் வீற்றிருந்த
மாலைச் சடையார்க்கு உறைவு இடம் ஆவது, வாரி குன்றா
ஆலைக் கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த
சோலை, திரு ஒற்றியூரை எப்போதும் தொழுமின்களே!

4.111   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வேலைக்-கடல் நஞ்சம் உண்டாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
காலற் கடந்தான் இடம் கயிலாயமும், காமர் கொன்றை,
மாலைப் பிறையும், மணி வாய் அரவும், விரவி எல்லாம்
சாலக் கிடக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!

5.084   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வேலை வென்ற கண்ணாரை விரும்பி, நீர்,
சீலம் கெட்டுத் திகையன் மின், பேதைகாள்!
காலையே தொழும் காட்டுப்பள்ளி(ய்) உறை
நீலகண்டனை நித்தல் நினைமினே!

6.023   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வேலை சேர் நஞ்சம், மிடற்றான் கண்டாய்; விண் தடவு பூங் கயிலை வெற்பன் கண்டாய்;
ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய்; அமரர்கள் தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய்;
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய்; பருப்பதத் தான் கண்டாய்; பரவை மேனி
மாலை ஓர்கூறு உடைய மைந்தன்
கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

7.085   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வேலையின் நஞ்சு உண்டு, விடை அது தான் ஏறி,
பால் அன மென்மொழியாள் பாவையொடும்(ம்) உடனே,
கோலம் அது உரு ஆகி, கூடலையாற்றூரில்
ஆலன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

11.024   11 st/nd Thirumurai   Song # 5   இளம்பெருமான் அடிகள்   சிவபெருமான் திருமும்மணிக்கோவை  
வேலை முகடும் விசும்பகடும் கைகலந்த
காலைநீர் எங்கே கரந்தனையால்
மாலைப் பிறைக்கீறா கண்முதலா பெண்பாகா ஐயோ
இறைக்கூறாய் எங்கட் கிது.

12.280   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வேலையழற் கதிர்படிந்த
வியன்கங்குல் வெண்மதியம்
சோலைதொறும் நுழைந்துபுறப்
படும்பொழுது துதைந்தமலர்ப்
பாலணைந்து மதுத்தோய்ந்து
தாதளைந்து பயின்றந்தி
மாலையெழுஞ் செவ்வொளிய
மதியம்போல் வதியுமால்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list