சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அக்கு
அக்கு
அக்குடியின்
அக்குலத்தின்
அக்கும்
அக்கு,
2.042
2 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அக்கு இருந்த ஆரமும், ஆடு அரவும், ஆமையும்,
தொக்கு இருந்த மார்பினான்; தோல் உடையான்; வெண்
நீற்றான்;
புக்கு இருந்த தொல் கோயில் பொய் இலா மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
2.078
2 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அக்கு அர(வ்)வு அணிகலன் என அதனொடு ஆர்த்தது
ஓர் ஆமை பூண்டு
உக்கவர் சுடுநீறு அணிந்து, ஒளி மல்கு புனல் காவிரிப்
புக்கவர் துயர் கெடுக! என பூசு வெண்பொடி மேவிய
மிக்கவர் வழிபாடு செய் விளநகர், அவர் மேயதே.
3.017
3 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அக்கு அரவு அரையினர், அரிவை பாகமாத்
தொக்க நல் விடை உடைச் சோதி, தொல்-நகர்
தக்க நல் வானவர், தலைவர், நாள்தொறும்
மிக்கவர், தொழுது எழு விசயமங்கையே.
3.092
3 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அக்கு உலாம் அரையினர்; திரை உலாம் முடியினர்;
அடிகள்; அன்று,
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார்; கதிர் கொள் செம்மை
புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலைத்
திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர்
தாமே.
4.016
4 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
அக்கு ஆர் அணி வடம் ஆகத்தர், நாகத்தர்
நக்கு ஆர் இளமதிக் கண்ணியர், நாள்தொறும்
உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர் தொறும்
புக்கார்-புகலூர்ப் புரிசடையாரே.
5.097
5 st/nd Thirumurai
Song # 14
திருநாவுக்கரசர்
தேவாரம்
அக்கும் ஆமையும் பூண்டு, அனல் ஏந்தி, இல்
புக்கு, பல்பலி தேரும் புராணனை-
நக்கு, நீர்கள், நரகம் புகேன்மினோ!-
தொக்க வானவரால்-தொழுவானையே.
6.030
6 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
அக்கு உலாம் அரையினன்காண்; அடியார்க்கு என்றும் ஆர் அமுது ஆய் அண்ணிக்கும் ஐயாற்றான்காண்;
கொக்கு, உலாம் பீலியொடு, கொன்றை மாலை, குளிர்மதியும், கூர் அரவும், நீரும், சென்னித்
தொக்கு உலாம் சடையினன்காண்; தொண்டர் செல்லும் தூநெறிகாண்-வானவர்கள் துதி செய்து ஏத்தும்,
திக்கு எலாம் நிறைந்த புகழ்த் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.
6.073
6 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
அக்கு, அரவம், அரைக்கு அசைத்த அம்மான் கண்டாய்; அருமறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய்;
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய்; சதாசிவன் காண்; சலந்தரனைப் பிளந்தான் கண்டாய்;
மைக் கொள் மயில்-தழை கொண்டு வரும் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மழுவன் கண்டாய்
கொக்கு அமரும் வயல் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
6.079
6 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
அக்கு இருந்த அரையானை, அம்மான் தன்னை, அவுணர் புரம் ஒரு நொடியில் எரி செய்தானை,
கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன் தன்னை, குண்டலம் சேர் காதானை, குழைவார் சிந்தை
புக்கு இருந்து போகாத புனிதன் தன்னை, புண்ணியனை, எண்ண(அ)ரும் சீர்ப் போகம் எல்லாம்
தக்கு இருந்த தலையாலங்காடன் தன்னை, சாராதே சால நாள் போக்கினேனே!.
8.212
8 st/nd Thirumurai
Song # 14
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
அக்கும் அரவும் அணிமணிக்
கூத்தன்சிற் றம்பலமே
ஒக்கு மிவள தொளிருரு
வஞ்சிமஞ் சார்சிலம்பா
கொக்குஞ் சுனையுங் குளிர்தளி
ருங்கொழும் போதுகளும்
இக்குன்றி லென்றும் மலர்ந்தறி
யாத வியல்பினவே.
12.030
12 st/nd Thirumurai
Song # 2
சேக்கிழார்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
அக்கு லப்பதிக் குடிமுதல் வணிகர்
அளவில் செல்வத்து வளமையின் அமைந்தார்
செக்கர் வெண்பிறைச் சடையவ ரடிமைத்
திறத்தின் மிக்கவர் மறைச்சிலம் படியார்
மிக்க சீரடி யார்கள்யா ரெனினும்
வேண்டும் யாவையும் இல்லையென் னாதே
இக்க டற்படி நிகழமுன் கொடுக்கும்
இயல்பின் நின்றவர் உலகியற் பகையார்.
12.130
12 st/nd Thirumurai
Song # 4
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
அக்கு லப்பதி தன்னில் அறநெறித்
தக்க மாமனை வாழ்க்கையில் தங்கினார்
தொக்க மாநிதித் தொன்மையில் ஓங்கிய
மிக்க செல்வத்து வேளாண் தலைமையார்.
12.210
12 st/nd Thirumurai
Song # 16
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
அக்குடியின் மேல்தோன்றல்
ஆயபெருந் தன்மையினார்
மிக்கமனை அறம்புரிந்து
விருந்தளிக்கும் மேன்மையினார்
ஒக்கல்வளர் பெருஞ்சிறப்பின்
உளரானார் உளரானார்
திக்குநில வும்பெருமை
திகழவரும் புகழனார்.
12.450
12 st/nd Thirumurai
Song # 6
சேக்கிழார்
பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
அக்குலத்தின் செய்தவத்தால்
அவனிமிசை அவதரித்தார்
மிக்கபெருஞ் செல்வத்து
மீக்கூர விளங்கினார்
தக்கபுகழ்க் கலியனார்
எனும்நாமந் தலைநின்றார்
முக்கண்இறை வர்க்குஉரிமைத்
திருத்தொண்டின் நெறிமுயல்வார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list