சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அந்தி
அந்திமதியோடும்
அந்திவண்
அந்திப்பன்
அந்தி
அந்திப்
அந்தியும்நண்
அந்தியிளம்
அந்தியை,
அந்தியும்
அந்தியின்
அந்திபோல்
1.085
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்திமதியோடும் அரவச் சடை தாழ,
முந்தி அனல் ஏந்தி, முதுகாட்டு எரி ஆடி;
சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும்
நந்தி; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.
4.088
4 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தியை, நல்ல மதியினை, யார்க்கும் அறிவு அரிய
செந்தியை வாட்டும் செம்பொன்னினை, சென்று அடைந்தேனுடைய
புந்தியைப் புக்க அறிவினை, பூந்துருத்தி(ய்) உறையும்
நந்தியை, நங்கள் பிரான் தனை-நான் அடி போற்றுவதே.
4.098
4 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன், ஐயாறு அமர்ந்து வந்து என்
புந்தி வட்டத்து இடைப் புக்கு நின்றானையும், பொய் என்பனோ?-
சிந்தி வட்டச்சடைக்கற்றை அலம்பச் சிறிது அலர்ந்த
நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.
4.113
4 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத்து இளங்கண்ணியன், ஆறு அமர் செஞ்சடையான்,
புந்தி வட்டத்து இடைப் புக்கு நின்றானையும்,- பொய் என்பனோ-
சந்தி வட்டச் சடைக்கற்றை அலம்பச் சிறிது அலர்ந்த
நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே?
7.043
7 st/nd Thirumurai
Song # 8
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தி திரிந்து அடியாரும் நீரும் அகம்தொறும்
சந்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே?
மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம்
முந்தி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே!
7.083
7 st/nd Thirumurai
Song # 1
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன்,
சிந்தை பராமரியா தென்திரு ஆரூர் புக்கு,
எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே?
8.212
8 st/nd Thirumurai
Song # 10
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
அந்தியின் வாயெழி லம்பலத்
தெம்பரன் அம்பொன்வெற்பிற்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை
பைந்தே னொடுங்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ்
சிலம்ப மனங்கனிய
முந்தியின் வாய்மொழி நீயே
மொழிசென்றம் மொய்குழற்கே.
9.010
9 st/nd Thirumurai
Song # 10
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
அந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர்
அழகிய சடையும் வெண்ணீறும்
சிந்தையால் நினையிற் சிந்தையுங் காணேன்
செய்வதென் தெளிபுனல் அலங்கற்
கெந்தியா உகளுங் கெண்டைபுண் டரீகங்
கிழிக்குந்தண் பணைசெய்கீழ்க் கோட்டூர்
வந்தநாள் மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தனே அறியும்என் மனமே.
10.101
10 st/nd Thirumurai
Song # 42
திருமூலர்
திருமந்திரம்
அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
வந்திவ்வண் ணம்எம் மனம்புகுந் தானே.
10.512
10 st/nd Thirumurai
Song # 3
திருமூலர்
திருமந்திரம்
அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.
11.021
11 st/nd Thirumurai
Song # 1
கபிலதேவ நாயனார்
சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை
அந்தி மதிமுகிழான் அந்தியஞ் செந்நிறத்தான்
அந்தியே போலும் அவிர்சடையான் அந்தியின்
தூங்கிருள்சேர் யாமமே போலும் சுடுநீற்றான்
வீங்கிருள்சேர் நீல மிடறு.
12.000
12 st/nd Thirumurai
Song # 18
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள்
சிந்தி யாவுணர்ந் தம்முனி தென்திசை
வந்த நாவலர் கோன்புகழ் வன்றொண்டன்
எந்தை யார்அரு ளால்அணை வான்என.
12.150
12 st/nd Thirumurai
Song # 10
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
அந்திப் பிறைசெஞ் சடைமேல்அணி
ஆல வாயில்
எந்தைக் கணிசந் தனக்காப்பிடை
என்றும் முட்டா
அந்தச் செயலி னிலைநின்றடி
யாரு வப்பச்
சிந்தைக் கினிதாய திருப்பணி
செய்யும் நாளில்.
12.290
12 st/nd Thirumurai
Song # 224
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்தி வண்ணத் தொருவர்திரு
வருளால் வந்த ஆரூரர்
கந்த மாலைச் சங்கிலியார்
தம்மைக் காதல் மணம்புணர
வந்த பருவ மாதலால்
வகுத்த தன்மை வழுவாத
முந்தை விதியால் வந்தொருநாள்
முதல்வர் கோயி லுட்புகுந்தார்.
12.290
12 st/nd Thirumurai
Song # 291
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்தியும்நண் பகலும்என
எடுத்தார்வத் துடனசையால்
எந்தைபிரான் திருவாரூர்
என்றுகொல்எய் துவதென்று
சந்தஇசை பாடிப்போய்த்
தாங்கரிய ஆதரவு
வந்தணைய அன்பருடன்
மகிழ்ந்துவழிக் கொள்கின்றார்.
12.300
12 st/nd Thirumurai
Song # 1
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்தியிளம் பிறைக்கண்ணி
அண்ணலார் கயிலையினில்
முந்தைநிகழ் கோயிலுக்கு
முதற்பெருநா யகமாகி
இந்திரன்மால் அயன்முதலாம்
இமையவர்க்கு நெறியருளும்
நந்திதிரு வருள்பெற்ற
நான்மறையோ கிகளொருவர்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list