சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஆங்கவர்
ஆங்கவர்தந்     ஆங்கவர்     ஆங்கவர்தஞ்     ஆங்கவர்தம்    
12.210   12 st/nd Thirumurai   Song # 153   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆங்கவர்தந் திருத்தோளில்
ஆர்ந்ததிரு இலச்சினையைத்
தாங்கண்டு மனங்களித்துத்
தம்பெருமான் அருள்நினைந்து
தூங்கருவி கண்பொழியத்
தொழுதுவிழுந் தார்வத்தால்
ஓங்கியசிந் தையராகி
உய்ந்தொழிந்தேன் எனவெழுந்தார்.
12.250   12 st/nd Thirumurai   Song # 38   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆங்கவர் வாட்டந் தன்னை
அறிந்துசொல் அரசர் கூட
ஓங்கிய மனையில் எய்தி
அமுதுசெய் தருள வுற்ற
பாங்கினில் இருப்ப முந்நூல்
பயில்மணி மார்பர் தாமும்
தாங்கிய மகிழ்ச்சி யோடுந்
தகுவன சமைத்துச் சார்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 169   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆங்கவர்தஞ் சீலத்
தளவின் மையும்நினைந்தே
ஓங்கியெழுங் காதல்
ஒழியாத உள்ளத்தார்
தேங்கமழுஞ் சோலைத்
திருவேட் களங்கடந்து
பூங்கிடங்கு சூழ்புலியூர்ப்
புக்கணையும் போழ்தின்கண்.
12.280   12 st/nd Thirumurai   Song # 491   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆங்கவர் போற்றுஞ் சிறப்பின் மேவி
அப்பதி தன்னில்அமரு நாளில்
வாங்கு மலைச்சிலை யார்ம கிழ்ந்த
வர்த்தமா னீச்சரந் தான்வ ணங்கி
ஓங்கிய அன்பின் முருக னார்தம்
உயர்திருத் தொண்டு சிறப்பித் தோங்கும்
பாங்குடை வண்டமிழ் பாடி நாளும்
பரமர்தம் பாதம் பணிந்தி ருந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 604   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆங்கவர் தாங்கள் அங்கண்
அரும்பெறல் தமிழ்நா டுற்ற
தீங்கினுக் களவு தேற்றாச்
சிந்தையிற் பரிவு கொண்டே
ஓங்கிய சைவ வாய்மை
ஒழுக்கத்தில் நின்ற தன்மை
பூங்கழற் செழியன் முன்பு
புலப்படா வகைகொண் டுய்த்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 608   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆங்கவர் விடமுன் போந்த
அறிவுடை மாந்தர் அங்கண்
நீங்கிவண் தமிழ்நாட் டெல்லை
பிற்பட நெறியின் ஏகி
ஞாங்கர்நீர் நாடும் காடும்
நதிகளும் கடந்து வந்து
தேங்கமழ் கைதை நெய்தல்
திருமறைக் காடு சேர்ந்தார்.
12.400   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
ஆங்கவர்தம் அடியிணைகள்
தலைமேற்கொண் டவனியெலாம்
தாங்கியவெண் குடைவளவர்
குலஞ்செய்த தவம்அனையார்
ஓங்கிவளர் திருத்தொண்டின்
உண்மையுணர் செயல்புரிந்த
பூங்கழலார் புகழ்ச்சோழர்
திருத்தொண்டு புகல்கின்றாம்.
12.670   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
ஆங்கவர் மனத்தின் செய்கை
யரனடிப் போதுக் காக்கி
ஓங்கிய வாக்கின் செய்கை
யுயர்ந்தஅஞ் செழுத்துக் காக்கித்
தாங்குகைத் தொழிலின் செய்கை
தம்பிரான் அடியார்க் காகப்
பாங்குடை யுடையுங் கீளும்
பழுதில்கோ வணமும் நெய்வார்.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list