சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஆடு
ஆடு     ஆடும்     ஆடுகின்     ஆடுமயில்     ஆடுவார்     ஆடும்(ம்)     ஆடுவாய்,     ஆடுமின்,     ஆடுகின்றிலை;    
1.062   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆடு அரவத்து, அழகு ஆமை, அணி கேழல் கொம்பு, ஆர்த்த
தோடு அரவத்து ஒரு காதன், துணை மலர் நல் சேவடிக்கே
பாடு அரவத்து இசை பயின்று, பணிந்து எழுவார் தம் மனத்தில்
கோடரவம் தீர்க்குமவன்-கோளிலி எம்பெருமானே.

3.054   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆடும்(ம்) எனவும், அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும்(ம்) எனவும், புகழ் அல்லது, பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும்(ம்) அறுக்கும்(ம்) எனக் கேட்டிர் ஆகில்,
நாடும் திறத்தார்க்கு அருள் அல்லது, நாட்டல் ஆமே?

6.025   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆடுவாய், நீ நட்டம்; அளவின் குன்றா அவி
அடுவார், அருமறையோர்; அறிந்தேன், உன்னை;
பாடுவார், தும்புருவும் நாரதாதி; பரவுவார், அமரர்களும் அமரர்கோனும்;
தேடுவார், திருமாலும் நான்முக(ன்)னும்; தீண்டுவார், மலைமகளும் கங்கையாளும்;
கூடுமே, நாய் அடியேன் செய் குற்றேவல்?
குறை உண்டே, திரு ஆரூர் குடிகொண்டீர்க்கே?.

7.022   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஆடுமின், அன்பு உடையீர்! அடிக்கு ஆட்பட்ட தூளி கொண்டு
சூடுமின், தொண்டர் உள்ளீர்! உமரோடு எமர் சூழ வந்து,
வாடும் இவ் வாழ்க்கை தன்னை வருந்தாமல் திருந்தச் சென்று,
பாடுமின், பத்தர் உள்ளீர், பழமண்ணிப் படிக் கரையே .

8.105.04   8 st/nd Thirumurai   Song # 31   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஆடுகின்றிலை; கூத்துஉடையான் கழற்கு அன்பு இலை; என்பு உருகிப்
பாடுகின்றிலை; பதைப்பதும் செய்கிலை; பணிகிலை; பாத மலர்
சூடுகின்றிலை; சூட்டுகின்றதும் இலை; துணை இலி பிண நெஞ்சே!
தேடுகின்றிலை; தெருவுதோறு அலறிலை; செய்வது ஒன்று அறியேனே.

8.117   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஆடு அரப் பூண், உடைத் தோல், பொடிப் பூசிற்று ஓர்
வேடம் இருந்த ஆறு; அன்னே! என்னும்.
வேடம் இருந்தவா, கண்டு கண்டு, என் உள்ளம்
வாடும்; இது என்னே! அன்னே! என்னும்.

11.008   11 st/nd Thirumurai   Song # 192   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
ஆடும் இறைவன் அமரர்குழாம் தற்சூழ
மாட மறுகில் வரக்கண்டு கேடில்சீர்

12.000   12 st/nd Thirumurai   Song # 234   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
ஆடு தோகைபுடை நாசிகள் தோறும்
அரணி தந்தசுட ராகுதி  தோறும்
மாடு தாமமணி வாயில்கள் தோறும்
மங்க லக்கலசம் வேதிகை தோறுஞ்
சேடு கொண்டவொளி தேர்நிரை தோறுஞ்
செந்நெ லன்னமலை சாலைகள் தோறும்
நீடு தண்புனல்கள் பந்தர்கள் தோறும்
நிறைந்த தேவர்கணம் நீளிடை தோறும்.
12.000   12 st/nd Thirumurai   Song # 242   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
ஆடுகின் றவர்பே ரருளினால் நிகழ்ந்த
அப்பணி சென்னிமேற் கொண்டு
சூடுதங் கரங்கள் அஞ்சலி கொண்டு
தொழுந்தொறும் புறவிடை கொண்டு
மாடுபே ரொளியின் வளருமம் பலத்தை
வலங்கொண்டு வணங்கினர் போந்து
நீடுவான் பணிய வுயர்ந்தபொன் வரைபோல்
நிலையெழு கோபுரங் கடந்து.
12.140   12 st/nd Thirumurai   Song # 30   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
ஆடுமயில் இனங்களும்அங்
கசைவயர்ந்து மருங்கணுக
ஊடுசெவி யிசைநிறைந்த
உள்ளமொடு புள்ளினமும்
மாடுபடிந் துணர்வொழிய
மருங்குதொழில் புரிந்தொழுகும்
கூடியவன் கோவலரும்
குறைவினையின் துறைநின்றார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 421   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆடுவார் பாடுவார்
அலர்மாரி மேற்பொழிவார்
கூடுவார் போன்றணைவார்
குழல்அவிழ இடைநுடங்க
ஓடுவார் மாரவே
ளுடன்மீள்வர் ஒளிபெருக
நீடுவார் துகிலசைய
நிற்பாரும் ஆயினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 838   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆடும் எனவருந் திருப்பாட்டில்
12.370   12 st/nd Thirumurai   Song # 60   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
ஆடும் பெருமான் பாடல்கேட்
டருளித் தாழ்த்த படிதமக்குக்
கூடும் பரிசால் முன்பருளிச்
செய்த நாவ லூர்க்கோவை
நீடும் பெருங்கா தலிற்காண
நிறைந்த நினைவு நிரம்பமால்
தேடும் பாதர் அருளினால்
திருவா ரூர்மேற் செலவெழுந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list