சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஆற்ற
ஆற்றல்
ஆற்றையும்
ஆற்றுகி
ஆற்றரு
ஆற்றில்
ஆற்றில்நீர்
ஆற்றின்மேற்
ஆற்று
ஆற்றானே!
ஆற்ற
ஆற்றவும்(ம்)
ஆற்றேன்
ஆற்றகில்லேன்
1.024
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆற்றல் உடைய அரியும் பிரமனும்
தோற்றம் காணா வென்றிக் காழியார்,
ஏற்றம் ஏறு அங்கு ஏறுமவர் போல் ஆம்
கூற்றம் மறுகக் குமைத்த குழகரே.
1.078
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆற்றையும் ஏற்றது ஓர் அவிர்சடை உடையர்; அழகினை அருளுவர்;
குழகு அலது அறியார்;
கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர்; நடு இருள்
ஆடுவர்; கொன்றை அம்தாரார்;
சேற்று அயல் மிளிர்வன கயல் இளவாளை செருச் செய, ஓர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய
இவர் வணம் என்னே?
2.015
2 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆற்றானே! ஆறு அணி செஞ்சடை ஆடுஅரவு
ஏற்றானே! ஏழ் உலகும் இமையோர்களும்
போற்றானே! பொழில் திகழும் திருக்காறாயில்
நீற்றானே! என்பவர்மேல் வினை நில்லாவே.
2.066
2 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றி, புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்,
தேற்றி, தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
3.016
3 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆற்ற நல் அடி இணை அலர் கொண்டு ஏத்துவான்,
சாற்றிய அந்தணன் தகுதி கண்ட நாள்
மாற்றலன் ஆகி முன் அடர்த்து வந்து அணை
கூற்றினை உதைத்தனர் கொள்ளிக்காடரே.
5.069
5 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆற்றவும்(ம்) அவலத்து அழுந்தாது, நீர்,
தோற்றும் தீயொடு, நீர், நிலம், தூ வெளி,
காற்றும், ஆகி நின்றான் தன் கருவிலி,
கூற்றம் காய்ந்தவன், கொட்டிட்டை சேர்மினே!
5.072
5 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆற்ற நீள்சடை, ஆயிழையாள் ஒரு-
கூற்றன்; மேனியில் கோலம் அது ஆகிய
நீற்றன் நீலக்குடி உடையான்; அடி
போற்றினார் இடர் போக்கும் புனிதனே.
8.103
8 st/nd Thirumurai
Song # 32
மாணிக்க வாசகர்
திருவாசகம்
ஆற்றேன் ஆக, அவயவம் சுவைதரு
கோல் தேன் கொண்டு செய்தனன்;
ஏற்றார் மூதூர் எழில் நகை எரியின்
வீழ்வித்தாங்கு, அன்று,
அருள் பெரும் தீயின் அடியோம் அடிக் குடில்
8.127
8 st/nd Thirumurai
Song # 2
மாணிக்க வாசகர்
திருவாசகம்
ஆற்றகில்லேன் அடியேன்; அரசே! அவனி தலத்து ஐம் புலன் ஆய
சேற்றில் அழுந்தாச் சிந்தை செய்து, சிவன், எம்பெருமான்,' என்று ஏத்தி,
ஊற்று மணல் போல், நெக்கு நெக்கு உள்ளே உருகி, ஓலம் இட்டு,
போற்றிப் புகழ்வது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
10.101
10 st/nd Thirumurai
Song # 31
திருமூலர்
திருமந்திரம்
ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் குங்கிழக் குத்திசை எட்டொடும்
ஆற்றுவன் அப்படி ஆட்டலும் ஆமே.
10.219
10 st/nd Thirumurai
Song # 3
திருமூலர்
திருமந்திரம்
ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.
10.606
10 st/nd Thirumurai
Song # 11
திருமூலர்
திருமந்திரம்
ஆற்றில் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட வாறொக்கும்
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.
12.280
12 st/nd Thirumurai
Song # 813
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
ஆற்றில்நீர் கடுக வோடும்
மருங்குற அரசன் நோக்கி
நீற்றணி திகழ்ந்த மேனி
நிறைமதிப் பிள்ளை யாரும்
வேற்றுரு அருகர் நீரும்
விதித்தஏ டிடுக என்றான்
தோற்றவர் தோலா ரென்று
முன்னுறத் துணிந்திட் டார்கள்.
12.280
12 st/nd Thirumurai
Song # 849
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
ஆற்றின்மேற் செல்லும்ஏடு
தொடர்ந்தெடுப் பதற்கு வேண்டிக்
காற்றென விசையிற் செல்லும்
கடும்பரி ஏறிக் கொண்டு
கோற்றொழில் திருத்த வல்ல
குலச்சிறை யார்பின் சென்றார்
ஏற்றுயர் கொடியி னாரைப்
பாடினார் ஏடு தங்க.
12.280
12 st/nd Thirumurai
Song # 1055
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
ஆற்று நாள்களில் அணங்கனார்
கன்னிமா டத்தின்
பால்த டம்பொழில் மருங்கினிற்
பனிமலர் கொய்வான்
போற்று வார்குழற் சேடிய
ருடன்புறம் போந்து
கோற்றொடித் தளிர்க் கையினால்
முகைமலர் கொய்ய.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list