சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் எம்பி
எம்பி
எம்பிரான்
எம்பிரான்,
எம்பிரான்;
2.040
2 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும், தன் அடைந்தார்
தம்பிரான் ஆவானும், தழல் ஏந்து கையானும்,
கம்ப மா கரி உரித்த காபாலி, கறைக்கண்டன்
வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே.
4.076
4 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
எம்பிரான் என்றதே கொண்டு என் உளே புகுந்து நின்று, இங்கு
எம்பிரான் ஆட்ட, ஆடி, என் உளே உழிதர் வேனை
எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்கும் என்றால்,
எம்பிரான் என்னின் அல்லால், என் செய்கேன், ஏழையேனே?
5.008
5 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
எம்பிரான்; இமையோர்கள் தமக்கு எலாம்
இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார்;
துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்கு
அன்பர் ஆகி நின்றார்-அன்னியூரரே.
8.105.07
8 st/nd Thirumurai
Song # 67
மாணிக்க வாசகர்
திருவாசகம்
எம்பிரான், போற்றி! வானத்தவர் அவர் ஏறு, போற்றி!
கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற, வெள் நீற, போற்றி!
செம் பிரான், போற்றி! தில்லைத் திருச்சிற்றம்பலவ, போற்றி!
உம்பராய், போற்றி! என்னை ஆளுடை ஒருவ, போற்றி!
12.000
12 st/nd Thirumurai
Song # 35
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
எம்பி ராட்டிஇவ் வேழுல கீன்றவள்
தம்பி ரானைத் தனித்தவத் தால்எய்திக்
கம்பை யாற்றில் வழிபடு காஞ்சியென்று
உம்பர் போற்றும் பதியும் உடையது.
12.000
12 st/nd Thirumurai
Song # 200
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
எம்பிரான் கோயில் நண்ண
இலங்குநூன் மார்பர் எங்கள்
நம்பர்தங் கோயில் புக்க
தென்காலோ வென்று நம்பி
தம்பெரு விருப்பி னோடு
தனித்தொடர்ந் தழைப்ப மாதோ
டும்பரின் விடைமேல் தோன்றி
அவர்தமக் குணர்த்த லுற்றார்.
12.020
12 st/nd Thirumurai
Song # 15
சேக்கிழார்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
எம்பிரான் யான்செயும் பணிஎது என்றனர்
வம்புலா மலர்ச்சடை வள்ளல் தொண்டனார்
உம்பர்நா யகனும்இவ் வோடுன் பால்வைத்து
நம்பிநீ தருகநாம் வேண்டும் போதென்று.
12.280
12 st/nd Thirumurai
Song # 847
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
எம்பிரான் சிவனே எல்லாப்
பொருளும்என் றெழுதும் ஏட்டில்
தம்பிரா னருளால் வேந்தன்
தன்னைமுன் ஓங்கப் பாட
அம்புய மலராள் மார்பன்
அநபாயன் என்னுஞ் சீர்த்திச்
செம்பியன் செங்கோ லென்னத்
தென்னன்கூன்நிமிர்ந்த தன்றே.
12.290
12 st/nd Thirumurai
Song # 241
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
எம்பி ரானே நீரருளிச்
செய்தார்க் குரியேன் யான்இமையோர்
தம்பி ரானே அருள்தலைமேற்
கொண்டேன் தக்க விதிமணத்தால்
நம்பி யாரூ ரருக்கென்னை
நல்கி யருளும் பொழுதிமயக்
கொம்பி னாகங் கொண்டீர்க்குக்
கூறுந் திறமொன் றுளதென்பார்.
12.290
12 st/nd Thirumurai
Song # 392
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
எம்பிரான் எந்தை தந்தை
தந்தைஎங் கூட்ட மெல்லாம்
தம்பிரான் நீரே யென்று
வழிவழி சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை
யென்னைநின் றீருஞ் சூலை
வம்பென ஆண்டு கொண்டான்
ஒருவனோ தீர்ப்பான் வந்து.
12.680
12 st/nd Thirumurai
Song # 5
சேக்கிழார்
மன்னிய சீர்ச் சருக்கம்
எம்பி ரான்தன் மேனியின்மேல்
சருகு விழாமை யானவருந்தி
உம்பர் இழைத்த நூல்வலயம்
அழிப்ப தேஎன்று உருத்தெழுந்து
வெம்பிச் சிலம்பி துதிக்கையினில்
புக்குக் கடிப்ப வேகத்தால்
கும்ப யானை கைநிலத்தின்
மோதிக் குலைந்து வீழ்ந்ததால்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list