சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் எய்த
எய்திய     எய்தும்     எய்தி     எய்திட     எய்தின     எய்துவ(து)     எய்து     எய்தியசீர்     எய்துமவர்     எய்தியபே     எய்த     எய்தானை,     எய்தினர்க்கு     எய்தல்     எய்த்தேன்    
2.122   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எய்த ஒண்ணா இறைவன் உறைகின்ற புகலியை,
கைதவம் இல்லாக் கவுணியன் ஞானசம்பந்தன் சீர்
செய்த பத்தும்(ம்) இவை செப்ப வல்லார், சிவலோகத்தில்
எய்தி, நல்ல இமையோர்கள் ஏத்த, இருப்பார்களே.

6.066   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எய்தானை, புரம் மூன்றும் இமைக்கும் போதில்; இரு விசும்பில் வருபுனலைத் திரு ஆர் சென்னிப்
பெய்தானை; பிறப்பு இலியை; அறத்தில் நில்லாப் பிரமன் தன் சிரம் ஒன்றைக் கரம் ஒன்றி(ன்)னால்
கொய்தானை; கூத்து ஆட வல்லான் தன்னை; குறி இலாக் கொடியேனை அடியேன் ஆகச்
செய்தானை; திரு நாகேச்சுரத்து உளானை; சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

8.103   8 st/nd Thirumurai   Song # 21   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
எய்தினர்க்கு ஆர் அமுது அளிப்போன், வாழ்க!
கூர் இருள் கூத்தொடு குனிப்போன், வாழ்க!
பேர் அமைத் தோளி காதலன், வாழ்க!
ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன், வாழ்க!
காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு, வாழ்க!

8.105.08   8 st/nd Thirumurai   Song # 77   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
எய்தல் ஆவ தென்று நின்னை எம்பிரான் இவ் வஞ்சனேற்கு
உய்தல் ஆவது உன்கண் அன்றி மற்றோர் உண்மை இன்மையின்
பைதல் ஆவ தென்று பாது காத் திரங்கு பாவியேற்கு
இஃது அலாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே

8.125   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
எய்த்தேன் நாயேன்; இனி இங்கு இருக்ககில்லேன்; இவ் வாழ்க்கை
வைத்தாய்; வாங்காய்; வானோர் அறியா மலர்ச் சேவடியானே!
முத்தா! உன் தன் முக ஒளி நோக்கி, முறுவல் நகை காண,
அத்தா! சால ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

10.107   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ தறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே. 8,

10.321   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
எய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்துங் கலைபோல ஏறி இறங்குமாம்
துய்யது சூக்கத்துத் தூலத்த காயமே. 

10.403   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
எய்தி வழிபடில் எய்தா தனஇல்லை
எய்தி வழிபடில் இந்திரன் செல்வம்உண்
டெய்தி வழிபடில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிபடில் எய்திடும் முத்தியே

10.408   10 st/nd Thirumurai   Song # 50   திருமூலர்   திருமந்திரம்  
எய்திட லாகும் இருவினை யின்பயன்
கொய்தளிர் மேனிக் குமரி குலாம்கன்னி
மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு
கைதவம் இன்றிக் கருத்துறு மாறே.

10.516   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
எய்திய காலங்கள் எத்தனை யாயினும்
தையலும் தானும் தனிநா யகம்என்பர்
வைகலும் தன்னை வணங்கு மவர்கட்குக்
கையிற் கருமஞ்செய் காட்டது வாமே.

10.807   10 st/nd Thirumurai   Song # 30   திருமூலர்   திருமந்திரம்  
எய்திய பெத்தமும் முத்தியும் என்பன
எய்தும் அரன்அரு ளே விளையாட்டோ(டு)
`எய்தி டுயிர்சுத்தத் திடும்நெறி` என்னவே
எய்தும் உயிர்இறை பால் அறி வாமே.

10.813   10 st/nd Thirumurai   Song # 35   திருமூலர்   திருமந்திரம்  
எய்தின செய்யும் இருமாயா சத்தியின்
எய்தின செய்யும் இருஞான சத்தியின்
எய்தின செய்யும் இருஞால சத்தியின்
எய்தின செய்யும் இறையருள் தானே.

10.838   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
எய்திய காலத்(து) இருபொழு தும்சிவன்
மெய்செயின் மேலை விதிஅது வாய்நிற்கும்
பொய்யும் புலனும் புகல்என்றும் நீக்கிடில்
ஐயனும் அவ்வழி ஆகிநின்றானே.

10.838   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
எய்துவ(து) எய்தா தொழிவ(து) இதுஅருள்
உய்ய அருள்செய்தான் உத்தமன் நந்தி
பொய்செய் புலன்நெறி ஒன்பதும் தாழ்க்கொளின்
மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே.

12.000   12 st/nd Thirumurai   Song # 291   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
எய்து மென்பெடை யோடிரை தேர்ந்துண்டு
பொய்கை யிற்பகல் போக்கிய புள்ளினம்
வைகு சேக்கைகண் மேற்செல வந்தது
பையுள் மாலை தமியோர் பனிப்புற.
12.100   12 st/nd Thirumurai   Song # 135   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
எய்தியசீர் ஆகமத்தில்  
இயம்பியபூ சனைக்கேற்பக்
கொய்தமல ரும்புனலும்  
முதலான கொண்டணைந்தார்
மைதழையுங் கண்டத்து  
மலைமருந்தை வழிபாடு
செய்துவருந் தவமுடைய  
முனிவர்சிவ கோசரியார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 118   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
எய்துமவர் குறிப்பறிந்தே
இன்மொழிகள் பலமொழிந்து
செய்தவத்தீர் திருமேனி
இளைத்திருந்த தென்னென்று
கைதொழுது கந்தையினைத்
தந்தருளும் கழுவஎன
மைதிகழ்கண் டங்கரந்த
மாதவத்தோர் அருள்செய்வார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 404   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
எய்தியபே ரானந்த
இன்பத்தின் இடைஅழுந்தி
மொய்திகழுஞ் சடையானை
முளைத்தானை என்றெடுத்துச்
செய்தவத்தோர் தாண்டகச்செந்
தமிழ்பாடிப் புறத்தணைவார்
கைதொழுது பணிந்தேத்தித்
திருவுள்ளங் களிசிறந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
எய்தி யவர்தம் எதிரிறைஞ்சி
இருந்தண் சாரல் மலைநாட்டுச்
செய்தி முறைமை யால்உரிமைச்
செங்கோல் அரசு புரிவதற்கு
மைதீர் நெறியின் முடிசூடி
யருளு மரபால் வந்ததெனப்
பொய்தீர் வாய்மை மந்திரிகள்
போற்றிப் புகன்ற பொழுதின்கண்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list