சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஏத
ஏதம்
ஏதும்
ஏத்தினர்
ஏத்துவர்
ஏத்தம்
ஏதொக்கும்
ஏத்தியே
ஏத்துற்றுப்
ஏத
ஏதமே
ஏதமில்சீர்
ஏத்தாதே
ஏதமில்
ஏதனை,
ஏதுக்களாலும்
ஏத்த(அ)ரும்
ஏத்தாது
1.058
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஏதம் வந்து அடையா, இனி நல்லன
பூதம் பல்படை ஆக்கிய
காதலான், திகழும் கரவீரத்து எம்
நாதன், பாதம் நணுகவே.
2.013
2 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஏதனை, ஏதம் இலா இமையோர் தொழும்
வேதனை, வெண்குழை தோடு விளங்கிய
காதனை, கடிபொழில் கோழம்பம் மேவிய
நாதனை, ஏத்துமின், நும் வினை நையவே!
2.100
2 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஏதம் மிக்க மூப்பினோடு, இருமல், ஈளை, என்று இவை
ஊதல் ஆக்கை ஓம்புவீர்! உறுதி ஆவது அறிதிரேல்,
போதில் வண்டு பண்செயும் பூந் தண் கோவலூர் தனுள்,
வேதம் ஓது நெறியினான், வீரட்டானம் சேர்துமே.
3.054
3 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர்விட்டு உளன், எங்கள் சோதி;
மா துக்கம் நீங்கல் உறுவீர், மனம்பற்றி வாழ்மின்!
சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே
3.068
3 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஏதம் இல பூதமொடு, கோதை துணை ஆதி முதல், வேத விகிர்தன்,
கீதமொடு நீதிபல ஓதி மறவாது பயில் நாதன், நகர்தான்-
தாது பொதி போது விட, ஊது சிறை மீது துளி கூதல் நலிய,
காதல் மிகு சோதி கிளர் மாது மயில் கோது கயிலாயமலையே.
3.070
3 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஏதம் இலர், அரிய மறை; மலையர் மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண்
பேதை தடமார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது இடம் ஆம்
காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால்,
மாதர் மறிதிரைகள் புக, வெறிய வெறி கமழும் மயிலாடுதுறையே.
3.095
3 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஏத்த(அ)ரும் புகழ் அணி இன்னம்பர் மேவிய
தூர்த்தனைத் தொலைவு செய்தீரே;
தூர்த்தனைத் தொலைவு செய்தீர்! உமைத் தொழுபவர்
கூர்த்த நல் குணம் உடையோரே.
5.060
5 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஏதும் ஒன்றும் அறிவு இலர் ஆயினும்,
ஓதி அஞ்சு எழுத்தும்(ம்) உணர்வார்கட்குப்
பேதம் இன்றி, அவர் அவர் உள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர், மாற்பேறரே.
7.025
7 st/nd Thirumurai
Song # 9
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
ஏத்தாது இருந்து அறியேன்; இமையோர் தனி நாயகனே!
மூத்தாய், உலகுக்கு எல்லாம்; முதுகுன்றம் அமர்ந்தவனே!
பூத்து ஆரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே,
கூத்தா! தந்து அருளாய், கொடியேன் இட்டளம் கெடவே! .
7.055
7 st/nd Thirumurai
Song # 3
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
ஏதம் நன் நிலம் ஈர்-அறுவேலி ஏயர்கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து,
கோதனங்களின் பால் கறந்து ஆட்டக் கோல வெண்மணல் சிவன் தன்மேல் சென்ற
தாதை தாள் அற எறிந்த தண்டிக்கு உன் சடைமிசை மலர் அருள் செயக் கண்டு,
பூத ஆளி! நின் பொன் அடி அடைந்தேன்-பூம்பொழில்-திருப் புன்கூர் உளானே! .
8.119
8 st/nd Thirumurai
Song # 2
மாணிக்க வாசகர்
திருவாசகம்
ஏதம் இலா இன் சொல் மரகதமே! ஏழ் பொழிற்கும்
நாதன், நமை ஆளுடையான், நாடு உரையாய் காதலர்க்கு
அன்பு ஆண்டு, மீளா அருள் புரிவான் நாடு, என்றும்,
தென் பாண்டி நாடே, தெளி.
10.412
10 st/nd Thirumurai
Song # 5
திருமூலர்
திருமந்திரம்
ஏதும் பலமாம் இயந்திரரா சன்னடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங் கெடச் செம்பில் சட்கோணந் தான்இடே.
10.702
10 st/nd Thirumurai
Song # 4
திருமூலர்
திருமந்திரம்
ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் மீசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்
றார்த்தனர் அண்டங் கடந்தப் புறம்நின்று
சாத்தனன் என்னும் கருத்தறி யாரே.
10.711
10 st/nd Thirumurai
Song # 15
திருமூலர்
திருமந்திரம்
ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்
றார்த்தெம தீசன் அருட்சே வடிஎன்றன்
மூர்த்தியை மூவா முதல்உரு வாய்நின்ற
தீர்த்தனை யாரும் திதித்துண ராரே.
10.924
10 st/nd Thirumurai
Song # 8
திருமூலர்
திருமந்திரம்
ஏத்தம் இரண்டுள ஏழு துரவுள
மூத்தோன் இறைக்க இளையோன் படுத்தநீர்
பத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடின்
கூத்தி வளர்த்ததோர் கோழிப்பு ள்ளாமே.
11.004
11 st/nd Thirumurai
Song # 62
காரைக்கால் அம்மையார்
அற்புதத் திருவந்தாதி
ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகா
தேதொக்கும் என்பதனை யாரறிவார் - பூதப்பால்
வில்வேட னாகி விசயனோ டேற்றநாள்
வல்வேட னான வடிவு.
11.020
11 st/nd Thirumurai
Song # 11
கபிலதேவ நாயனார்
மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை
ஏத்தியே என்னுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனிவெண் கோட்டு மதமுகத்துத் தூத்தழல்போல்
செக்கர்த் திருமேனிச் செம்பொற் கழல்ஐங்கை
முக்கட் கடாயானை முன்
11.023
11 st/nd Thirumurai
Song # 15
பரணதேவ நாயனார்
சிவபெருமான் திருவந்தாதி
ஏத்துற்றுப் பார்த்தன் எழில்வான் அடைவான்போல்
ஏத்துற்றுப் பார்த்தன் இறைஞ்சுதலும் ஏத்துற்றுப்
பாசுபதம் அன்றளித்த பாசூரான் பால்நீற்றான்
பாசுபதம் இன்றளியென் பால்.
12.190
12 st/nd Thirumurai
Song # 54
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
ஏத மில்பல யோனிஎண் பத்து
நான்கு நூறாயி ரந்தனுள் வைத்த
பேத மும்புரந் தருளும்அக் கருணைப்
பிரான்மொ ழிந்தஆ கமவழி பேணிப்
போது நீர்மையில் தொழுதனள் போதப்
பொருப்பில் வேந்தனும் விருப்பில்வந் தெய்தி
மாத வம்புரிந் தருளுதற் கமைந்த
வளத்தொ டும்பரி சனங்களை விடுத்தான்.
12.280
12 st/nd Thirumurai
Song # 804
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
ஏதமே விளைந்த திந்த
அடிகள்மார் இயல்பா லென்பார்
நாதனும் ஆல வாயில்
நம்பனே காணு மென்பார்
போதமா வதுவும் முக்கட்
புராணனை அறிவ தென்பார்
வேதமும் நீறு மாகி
விரவிடும் எங்கும் என்பார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 1161
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
ஏதமில்சீர் மறையவரில்
ஏற்றகுலத் தோடிசைவால்
நாதர்திருப் பெருமணத்து
நம்பாண்டார் நம்பிபெறும்
காதலியைக் காழிநா
டுடையபிரான் கைப்பிடிக்கப்
போதுமவர் பெருந்தன்மை
எனப்பொருந்த எண்ணினார்.
12.290
12 st/nd Thirumurai
Song # 134
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
ஏத்தாதே இருந்தறியேன்
எனுந்திருப்பாட் டெவ்வுலகும்
காத்தாடும் அம்பலத்துக்
கண்ணுளனாங் கண்ணுதலைக்
கூத்தாதந் தருளாய்இக்
கோமளத்தின் முன்னென்று
நீத்தாருந் தொடர்வரிய
நெறிநின்றார் பரவுதலும்.
12.290
12 st/nd Thirumurai
Song # 390
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
ஏதமில் பெருமைச் செய்கை
ஏயர்தம் பெருமான் பக்கல்
ஆதியார் ஏவும் சூலை
அனல்செய்வேல் குடைவ தென்ன
வேதனை மேன்மேற் செய்ய
மிகஅதற் குடைந்து வீழ்ந்து
பூதநா யகர்தம் பொற்றாள்
பற்றியே போற்று கின்றார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list