சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கடல்
கடல்
கடல்படு
கடல்மேவு
கடல்விரிபுனல்
கடல்மிசை
1.019
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கடல் என நிற நெடுமுடியவன் அடுதிறல் தெற, அடி சரண்! என,
அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன், அணி கிளர் பிறை,
விடம் நிறை மிடறு உடையவன், விரிசடையவன், விடை உடையவன், உமை
உடன் உறை பதி கடல் மறுகு உடை உயர் கழுமல வியல் நகர் அதே.
2.020
2 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கடல் ஏறிய நஞ்சு அமுதுஉண்டவனே!
உடலே! உயிரே! உணர்வே! எழிலே!
அடல் ஏறு உடையாய்! அழுந்தை மறையோர்
விடலே! தொழ, மா மடம் மேவினையே.
2.084
2 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி
என்று கருத,
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி
ஆன ஞானமுனிவன்,
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன்
இசையால் உரைத்த பனுவல்,
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க, வினை
கெடுதல் ஆணை நமதே.
3.107
3 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கடல் இடை வெங்கடு நஞ்சம் உண்ட கடவுள், விடை ஏறி,
உடல் இடையின் பொடிப் பூச வல்லான், உமையோடு ஒருபாகன்,
அடல் இடையில் சிலை தாங்கி எய்த அம்மான், அடியார் மேல்
நடலை வினைத் தொகை தீர்த்து உகந்தான், இடம் நாரையூர் தானே.
3.109
3 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கடல் வண்ணன் நான்முகன் காண்பு அரியார்
தடவரை அரக்கனைத் தலை நெரித்தார்
விடம் அது உண்ட எம் மயேந்திரரும்;
அடல் விடை ஆரூர் ஆதி ஆனைக்காவே.
4.048
4 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
கடல் அகம் ஏழினோடும் பவனமும் கலந்து, விண்ணும்
உடல் அகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று,
தடம் மலர்க் கந்த மாலை தண்மதி பகலும் ஆகி,
மடல் அவிழ் கொன்றை சூடி, மன்னும்-ஆப்பாடியாரே.
4.061
4 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
கடல் இடை மலைகள் தம்மால் அடைத்து, மால், கருமம் முற்றி,
திடல் இடைச் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைத்
தொடல் இடை வைத்து நாவில் சுழல்கின்றேன், தூய்மை இன்றி,
உடல் இடை நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு, நானே.
4.085
4 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
கடல் மணிவண்ணன், கருதிய நான்முகன் தான், அறியான்;
விடம் அணி கண்டம் உடையவன்; தான் எனை ஆள் உடையான்;
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார்; சடை மேல்
படம் மணி நாகம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
5.083
5 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
கடல் கழி தழி நாகைக்காரோணன் தன்,
வடவரை எடுத்து ஆர்த்த அரக்கனை
அடர ஊன்றிய, பாதம் அணைதர,
தொடர அஞ்சும், துயக்கு அறும் காலனே.
7.039
7 st/nd Thirumurai
Song # 9
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான்-
காடவர் கோன்-கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்;
மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும், தஞ்சை
மன்னவன் ஆம்செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்;
புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி
பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த் துணைக்கும் அடியேன்;
அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
11.038
11 st/nd Thirumurai
Song # 6
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்
கடல்படு விடமடை
கறைமணி மிடறுடை
அடல்கரி உரியனை
அறிவுடை அளவினை.
11.038
11 st/nd Thirumurai
Song # 32
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்
கடல்மேவு புவியேறு
கவிநீரர் பெருமான்றன்
தடமாடு மிகுகாழி
தகுபேதை அருளாமல்
திடமாகில் அணிநீறு
செழுமேனி முழுதாடி
மடலேறி எழில்வீதி
வருகாதல் ஒழியேனே. 13
பதிக வகை: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
12.100
12 st/nd Thirumurai
Song # 84
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
கடல்விரிபுனல் கொளவிழுவன
கருமுகிலென நிரையே
படர்வொடுசெறி தழைபொதுளிய
பயில்புதல்வன மதன்மேல்
அடலுறுசரம் உடலுறவரை
அடியிடம்அல மரலால்
மிடைகருமரை கரடிகளொடு
விழுவனவன மேதி.
12.240
12 st/nd Thirumurai
Song # 34
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
கடல்மிசை வங்கம் ஓட்டிக்
கருதிய தேயந் தன்னில்
அடைவுறச் சென்று சேர்ந்தங்
களவில்பல் வளங்கள் முற்றி
இடைசில நாள்கள் நீங்க
மீண்டும்அக் கலத்தில் ஏறிப்
படர்புனற் கன்னி நாட்டோர்
பட்டினம் மருங்கு சார்ந்தான்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list