சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கடு
கடுக்     கடுவன்     கடுவடுத்த     கடுவிசை     கடுமுயற்     கடுத்தானே,     கடுவாய்     கடுத்த     கடுத்து,     கடுத்து     கடுக்கள்     கடு     கடுகிய     கடுப்     கடுத்தவன்     கடும்பகல்     கடுக்கண்டன்     கடுக்கை     கடுத்தவன்-தேர்     கடுமுரண்     கடுப்பாய்ப்     கடுவினைப்    
1.091   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடுக் கொள் சீவரை அடக்கினான் ஆரூர்
எடுத்து வாழ்த்துவார் விடுப்பர், வேட்கையே.

2.015   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடுத்தானே, காலனைக் காலால்! கயிலாயம்
எடுத்தானை ஏதம் ஆக(ம்), முனிவர்க்கு இடர்
கெடுத்தானே! கேழ் கிளரும் திருக்காறாயில்
அடுத்தானே! என்பவர்மேல் வினை அடராவே.

2.022   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடுவாய் மலி நீர் குடவாயில்தனில்
நெடு மா பெருங்கோயில் நிலாயவனை,
தடம் ஆர் புகலித் தமிழ் ஆர் விரகன்,
வடம் ஆர் தமிழ் வல்லவர் நல்லவரே.

2.028   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடுத்த வாள் அரக்கன், கயிலையை
எடுத்தவன், தலை தோளும் தாளினால்
அடர்த்தவன் கருவூருள் ஆன்நிலை,
கொடுத்தவன், அருள்; கூத்தன் அல்லனே!

2.033   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடுத்து, வல் அரக்கன், முன் நெருக்கி வரைதன்னை
எடுத்தவன், முடித் தலைகள்பத்தும் மிகு தோளும்
அடர்த்தவர்தமக்கு இடம் அது என்பர் அளி பாட,
நடத்த கலவத்திரள்கள் வைகிய நள்ளாறே.

2.043   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடுத்து வரும் கங்கைதனைக் கமழ் சடை ஒன்று ஆடாமே
தடுத்தவர், எம்பெருமானார், தாம் இனிது ஆய் உறையும்
இடம்
விடைத்து வரும் இலங்கைக் கோன் மலங்கச் சென்று,
இராமற்காப்
புடைத்து அவனைப் பொருது அழித்தான்
ள்ளிருக்குவேளூரே.

2.114   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடுக்கள் தின்று கழி மீன் கவர்வார்கள், மாசு உடம்பினர்,
இடுக்கண் உய்ப்பார் அவர் எய்த ஒண்ணா இடம் என்பரால்
அடுக்க நின்ற(வ்) அற உரைகள் கேட்டு ஆங்கு அவர்
வினைகளைக்
கெடுக்க நின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே.

2.118   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடுத்து வந்த கனமேனியினான், கருவரைதனை
எடுத்தவன் தன் முடிதோள் அடர்த்தார்க்கு இடம் ஆவது
புடைக் கொள் பூகத்து இளம் பாளை புல்கும் மதுப் பாய,
வாய்
மடுத்து மந்தி உகளும் திலதை(ம்) மதிமுத்தமே.

3.012   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடுக் கொடுத்த துவர் ஆடையர், காட்சி இல்லாதது ஓர்
தடுக்கு இடுக்கிச் சமணே திரிவார்கட்கு, தன் அருள்
கொடுக்ககிலாக் குழகன் அமரும் திருக்கோட்டாற்றுள்
இடுக்கண் இன்றித் தொழுவார் அமரர்க்கு இறை ஆவரே.

3.018   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடு உடை வாயினர், கஞ்சி வாயினர்
பிடகு உரை பேணிலார் பேணு கோயில் ஆம்
மடம் உடையவர் பயில் வைகல் மா நகர்
வடமலை அனைய நல் மாடக்கோயிலே.

3.089   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடு மலி உடல் உடை அமணரும், கஞ்சி உண் சாக்கியரும்,
இடும் அற உரைதனை இகழ்பவர் கருதும் நம் ஈசர்; வானோர்
நடு உறை நம்பனை; நால்மறையவர் பணிந்து ஏத்த, ஞாலம்
உடையவன்; கொச்சையே உள்கி வாழ், நெஞ்சமே! அஞ்சல், நீயே!

3.119   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடுத்த வாள் அரக்கன் கயிலை அன்று எடுத்த கரம் உரம்
சிரம் நெரிந்து அலற,
அடர்த்தது ஓர்விரலால், அஞ்சுஎழுத்து உரைக்க அருளினன், தட மிகு நெடுவாள்
படித்த நால்மறை கேட்டு இருந்த பைங்கிளிகள் பதங்களை
ஓத, பாடு இருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழிமிழலையான் என,
வினை கெடுமே.

4.014   4 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கடுகிய தேர் செலாது, கயிலாயம் மீது; கருதேல், உன் வீரம்; ஒழி, நீ!
முடுகுவது அன்று, தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா,
விடு விடு என்று சென்று விரைவு உற்று, அரக்கன், வரை உற்று எடுக்க, முடிதோள
நெடு நெடு இற்று வீழ, விரல் உற்ற பாதம் நினைவு உற்றது, என் தன் மனனே.

4.039   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கடுப் பொடி அட்டி மெய்யில், கருதி ஓர் தவம் என்று எண்ணி,
வடுக்களோடு இசைந்த நெஞ்சே! மதி இலி பட்டது என்னே!
மடுக்களில் வாளை பாயும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
அடுத்து நின்று உன்னு, நெஞ்சே! அருந்தவம் செய்த ஆறே!

4.047   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கடுத்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி
எடுத்தலும், மங்கை அஞ்ச, இறையவன் இறையே நக்கு,
நொடிப்பு அளவு(வு) விரலால் ஊன்ற, நோவதும் அலறியிட்டான்;
மடித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!

4.077   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கடும்பகல் நட்டம் ஆடி, கையில் ஓர் கபாலம் ஏந்தி,
இடும் பலிக்கு இல்லம் தோறும் உழி தரும் இறைவனீரே!
நெடும் பொறை மலையர் பாவை நேரிழை நெறி மென் கூந்தல்
கொடுங்குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ?

5.011   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கடுக்கண்டன் கயிலாய மலைதனை
எடுக்கல் உற்ற இராவணன் ஈடு அற,
விடுக்கண் இன்றி வெகுண்டவன், மீயச்சூர்,
இடுக்கண் தீர்க்க நின்றார், இளங்கோயிலே.

5.055   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கடுக்கை அம் சடையன் கயிலை(ம்) மலை
எடுத்த வாள் அரக்கன் தலை ஈர்-அஞ்சும்
நடுக்கம் வந்து இற, நாரையூரான் விரல்
அடுத்த தன்மையும், அம்ம அழகிதே!

5.063   5 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கடுத்த தேர் அரக்கன் கயிலை(ம்) மலை
எடுத்த தோள்தலை இற்று அலற(வ்) விரல்
அடுத்தலும்(ம்), அவன் இன் இசை கேட்டு அருள்
கொடுத்தவன் குரங்காடுதுறையனே.

5.087   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கடுத்த மேனி அரக்கன், கயிலையை
எடுத்தவன், நெடு நீள் முடிபத்து இறப்
படுத்தலும், மணஞ்சேரி, அருள்! எனக்
கொடுத்தனன், கொற்றவாளொடு நாமமே.

6.071   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கடு வாயர் தமை நீக்கி என்னை ஆட்கொள் கண் நுதலோன் நண்ணும் இடம் அண்ணல் வாயில்,
நெடுவாயில், நிறை வயல் சூழ் நெய்தல் வாயில், நிகழ் முல்லை வாயிலொடு, ஞாழல் வாயில்,
மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில், மறிகடல் சூழ் புனவாயில், மாடம் நீடு
குடவாயில், குணவாயில், ஆன எல்லாம் புகுவாரைக் கொடுவினைகள் கூடா அன்றே.

6.082   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கடு வெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும்; காரோணத்து என்றும் இருப்பார் போலும்;
இடி குரல் வாய்ப் பூதப்படையார் போலும்;   ஏகம்பம் மேவி இருந்தார் போலும்;
படி ஒருவர் இல்லாப் படியார் போலும்;   பாண்டிக்கொடு முடியும் தம் ஊர் போலும்;
செடி படு நோய் அடியாரைத் தீர்ப்பார் போலும்  திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

7.022   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கடுத்தவன்-தேர் கொண்டு ஓடிக் கயிலாய நல் மாமலையை
எடுத்தவன், ஈர்-ஐந்துவாய் அரக்கன்-முடிபத்து அலற,
விடுத்து, அவன் கை நரம்பால் வேத கீதங்கள் பாடல் உறப்
படுத்தவன்; பால் வெண் நீற்றன்-பழமண்ணிப் படிக் கரையே.

7.083   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கடு வரி மாக் கடலுள் காய்ந்தவன் தாதையை, முன்;
சுடுபொடி மெய்க்கு அணிந்த சோதியை; வன்தலை வாய்
அடு புலி ஆடையனை; ஆதியை;-ஆரூர் புக்கு-
இடு பலி கொள்ளியை; நான் என்றுகொல் எய்துவதே?

7.101   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கடு நஞ்சு உண்டு, இரக்கவே, கண்டம் கறுத்தது; இக் காலம்-
விடும் நஞ்சு உண்டு-நாகத்தை வீட்டில் ஆட்டை வேண்டா, நீ!-
கொடு மஞ்சுகள் தோய் நெடுமாடம் குலவு மணி மாளிகைக்குழாம்
இடு மிஞ்சு இதை சூழ் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!

8.104   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கடுமுரண் ஏனம் ஆகி முன்கலந்(து)
ஏழ்தலம் உருவ இடந்து பின்னெய்த்(து)
ஊழி முதல்வ சயசய என்று
வழுத்தியுங் காணா மலர் அடி இணைகள்,
வழுத்துதற்கு எளிது ஆய் வார் கடல் உலகினில்,

9.003   9 st/nd Thirumurai   Song # 7   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா  
கடுப்பாய்ப் பறைகறங் கக்கடுவெஞ்
   சிலையும் கணையும் கவணும் கைக்கொண்
டுடுப்பாய தோல் செருப் புச்சுரிகை
   வராகம்முன் ஓடு விளிஉளைப்ப
நடப்பாய் மகேந்திர நாத நாதாந்தத்
   தரையாஎன் பார்க்குநா தாந்தபதம்
கொடுப்பாய் என் னும் குணக் குன்றே என்னும்
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
 

9.014   9 st/nd Thirumurai   Song # 5   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
கடுவினைப் பாசக் கடல்கடந் தைவர்
   கள்ளரை மெள்ளவே துரந்துன்
அடியிணை இரண்டும் அடையுமா றடைந்தேன்
   அருள்செய்வாய் அருள்செயா தொழிவாய்
நெடுநிலை மாடத் திரவிருள் கிழிக்க
   நிலைவிளக் கலகில்சா லேகப்
புடைகிடந் திலங்கும் ஆவண வீதிப்
   பூவணம் கோயில்கொண் டாயே. 

11.002   11 st/nd Thirumurai   Song # 20   காரைக்கால் அம்மையார்    திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1  
கடுவன் உகளுங் கழைசூழ்
பொதும்பிற் கழுகும் பேயுமாய்
இடுவெண் டலையும் ஈமப்
புகையும் எழுந்த பெருங்காட்டில்
கொடுவெண் மழுவும் பிறையுந்
ததும்பக் கொள்ளென் றிசைபாடப்
படுவெண் துடியும் பறையுங்
கறங்கப் பரமன் ஆடுமே.

11.005   11 st/nd Thirumurai   Song # 2   ஐயடிகள் காடவர்கோன் நாயனார்   திருக்கோயில் திருவெண்பா சேத்திரத்  
கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்று
நடுநடுத்து நாஅடங்கா முன்னம் பொடியடுத்த
பாழ்க்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்
கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட.

12.080   12 st/nd Thirumurai   Song # 34   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
கடுவிசை முடுகிப் போகிக்
களிற்றொடும் பாகர் வீழ்ந்த
படுகளங் குறுகச் சென்றான்
பகைப்புலத் தவரைக் காணான்
விடுசுடர் மழுவொன் றேந்தி
வேறிரு தடக்கைத் தாய
அடுகளி றென்ன நின்ற
அன்பரை முன்பு கண்டான்.
12.100   12 st/nd Thirumurai   Song # 26   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
கடுமுயற் பறழி னோடும்
கானஏ னத்தின் குட்டி
கொடுவரிக் குருளை செந்நாய்
கொடுஞ்செவிச் சாப மான
முடுகிய விசையி லோடித்
தொடர்ந்துடன் பற்றி முற்றத்
திடுமரத் தாளிற் கட்டி
வளர்ப்பன எண்ணி லாத.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list