சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கண்ணு
கண்ணு
கண்ணுத
கண்ணுதல்
கண்ணுடை
கண்ணும்
கண்ணுதலார்
கண்ணுதலிற்
கண்ணுதலான்,
கண்ணுழை
1.047
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண்ணு மூன்றும் உடையது அன்றி, கையினில் வெண்மழுவும்
பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே
எண்ணும் மூன்று கனலும் ஓம்பி, எழுமையும் விழுமியர் ஆய்,
திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே?
2.075
2 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண்ணு மூன்றும் உடை ஆதி வாழ் கலிக் காழியு
அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன்
சொல்,
வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார்,
விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல்புகழாளரே.
8.101
8 st/nd Thirumurai
Song # 5
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி,
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி;
விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய்!
எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர்,
பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்;
8.224
8 st/nd Thirumurai
Song # 16
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
கண்ணுழை யாதுவிண் மேகங்
கலந்து கணமயில்தொக்
கெண்ணுழை யாத்தழை கோலிநின்
றாலு மினமலர்வாய்
மண்ணுழை யாவும் அறிதில்லை
மன்னன தின்னருள்போற்
பண்ணுழை யாமொழி யாளென்ன
ளாங்கொல்மன் பாவியற்கே.
10.101
10 st/nd Thirumurai
Song # 7
திருமூலர்
திருமந்திரம்
கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன்என் றறியகி லார்களே.
10.214
10 st/nd Thirumurai
Song # 24
திருமூலர்
திருமந்திரம்
கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீக்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாகவகுத்துவைத் தானே.
10.408
10 st/nd Thirumurai
Song # 12
திருமூலர்
திருமந்திரம்
கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர்
மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணா
பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர்
விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே.
10.413
10 st/nd Thirumurai
Song # 66
திருமூலர்
திருமந்திரம்
கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி
பண்ணுறு நாதம் பகையற நின்றிடில்
விண்ணமர் சோதி விளங்க ஹிரீங்காரம்
மண்ணுடை நாயகி மண்டல மாகுமே.
11.009
11 st/nd Thirumurai
Song # 65
நக்கீரதேவ நாயனார்
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
கண்ணும் கருத்துங் கயிலாய ரேஎமக்கென்
றெண்ணி யிருப்பவன்யான் எப்பொழுதும் நண்ணும்
பொறியா டரவசைத்த பூதப் படையார்
அறியார்கொல் நெஞ்சே அவர்.
12.000
12 st/nd Thirumurai
Song # 319
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
கண்ணுதல் கோயில் தேவா
சிரியனாங் காவ ணத்துள்
விண்ணவ ரொழிய மண்மேன்
மிக்கசீ ரடியார் கூடி
எண்ணிலார் இருந்த போதில்
இவர்க்கியா னடியான்ஆகப்
பண்ணுநா ளெந்நா ளென்று
பரமர்தாள் பரவிச் சென்றார்.
12.100
12 st/nd Thirumurai
Song # 177
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
கண்ணுதல் கண்ணில் தங்கண்
இடந்தப்பிற் காணும் நேர்பா
டெண்ணுவார் தம்பி ரான்தன்
திருக்கண்ணில் இடக்கா லூன்றி
உண்ணிறை காத லோடும்
ஒருதனிப் பகழி கொண்டு
திண்ணனார் கண்ணி லூன்றத்
தரித்திலர் தேவ தேவர்.
12.280
12 st/nd Thirumurai
Song # 1254
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
கண்ணுதலார் திருமேனி
உடன்கூடக் கவுணியனார்
நண்ணியது தூரத்தே
கண்டுநணு கப்பெறா
விண்ணவரும் முனிவர்களும்
விரிஞ்சனே முதலானார்
எண்ணிலவர் ஏசறவு
தீரஎடுத் தேத்தினார்.
12.290
12 st/nd Thirumurai
Song # 118
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
கண்ணுதலார் விரும்புகருப் பறிய லூரைக்
கைதொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும்
மண்ணிவளம் படிக்கரையை நண்ணி யங்கு
மாதொருபா கத்தவர்தாள் வணங்கிப் போற்றி
எண்ணில்புகழ்ப் பதிகமுமுன் னவன்என் றேத்தி
யேகுவார் வாழ்கொளிபுத் தூரெய் தாது
புண்ணியனார் போம்பொழுது நினைந்து மீண்டு
புகுகின்றார் தலைக்கலன்என் றெடுத்துப்போற்றி.
12.360
12 st/nd Thirumurai
Song # 16
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
கண்ணுதலார் கணபதீச்
சரத்தின்கண் கருத்தமர
உண்ணிறைஅன் பினிற்பணிசெய்
தொழுகுவார் வழுவின்றி
எண்ணில்பெருஞ் சீரடியார்
இடைவிடா தமுதுசெய
நண்ணியபே ருவகையுடன்
நயந்துறையும் நாளின்கண்.
12.360
12 st/nd Thirumurai
Song # 41
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
கண்ணுதலிற் காட்டாதார்
கணபதீச் சரத்தின்கண்
வண்ணமலர் ஆத்தியின்கீழ்
இருக்கின்றோம் மற்றவர் தாம்
நண்ணினால் நாமிருந்த
பரிசுரைப்பீர் என்றருளி
அண்ணலார் திருவாத்தி
யணைந்தருளி அமர்ந்திருந்தார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list