சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கதி
கதி
கதிர்
கதிரவன்
கதிர்கண்ட
கதியா
கதியே
கதிர்மதி
கதிர்மணி
கதிரி
கதிரோன்
கதிரவ
கதிர்முடிமன்
கதித்தவன்
கதிர்க்(க்)
கதிர்த்த
1.022
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கதி மலி களிறு அது பிளிறிட உரிசெய்த அதிகுணன்; உயர் பசு
பதி அதன்மிசை வரு பசு பதி பல கலை அவை முறை முறை உணர்
விதி அறிதரும் நெறி அமர் முனிகணனொடு மிகு தவம் முயல்தரும்
அதி நிபுணர்கள் வழிபட, வளர் மறைவனம் அமர் தரு பரமனே.
1.131
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கதிர் ஒளிய நெடுமுடிபத்து உடைய கடல் இலங்கையர்கோன் கண்ணும் வாயும்
பிதிர் ஒளிய கனல் பிறங்க, பெருங்கயிலைமலையை நிலை பெயர்த்த ஞான்று,
மதில் அளகைக்கு இறை முரல, மலர் அடி ஒன்று ஊன்றி, மறை பாட, ஆங்கே
முதிர் ஒளிய சுடர் நெடுவாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி முதுகுன்றமே.
3.042
3 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கதிர் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட, கண்ணுதல்,
முதிர் ஆர் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய முக்கணன்-
எதிர் ஆர் புனல் அம் புன்சடை எழில் ஆரும் சிற்றேமத்தான்;
அதிர் ஆர் பைங்கண் ஏறு உடை ஆதிமூர்த்தி அல்லனே!
4.005
4 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
கதி ஒன்றும் அறியாதே, கண் அழலைத் தலை பறித்து, கையில் உண்டு
பதி ஒன்று நெடுவீதிப் பலர் காண நகை நாணாது உழிதர் வேற்கு
மதி தந்த ஆருரில் வார் தேனை வாய்மடுத்துப் பருகி உய்யும்
விதி இன்றி, மதி இலியேன், விளக்கு இருக்க மின்மினித்தீக் காய்ந்த ஆறே!
4.047
4 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
கதித்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி
அதிர்த்து அவன் எடுத்திட(ல்)லும், அரிவை தான் அஞ்ச, ஈசன்
நெதித்தவன் ஊன்றியிட்ட நிலை அழிந்து அலறி வீழ்ந்தான்;
மதித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
7.077
7 st/nd Thirumurai
Song # 9
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கதிர்க்(க்) கொள் பசியே ஒத்தே நான் கண்டேன், உம்மைக் காணாதேன்;
எதிர்த்து நீந்த மாட்டேன், நான்-எம்மான் தம்மான் தம்மானே!
விதிர்த்து மேகம் மழை பொழிய, வெள்ளம் பரந்து, நுரை சிதறி,
அதிர்க்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!
8.106
8 st/nd Thirumurai
Song # 42
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும், ஊன் கழியா
விதி அடியேனை விடுதி கண்டாய்? வெள் தலை முழையில்
பதி உடை வாள் அரப் பார்த்து, இறை பைத்துச் சுருங்க, அஞ்சி,
மதி நெடு நீரில் குளித்து, ஒளிக்கும் சடை மன்னவனே.
8.225
8 st/nd Thirumurai
Song # 45
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
கதிர்த்த நகைமன்னுஞ் சிற்றவ்வை
மார்களைக் கண்பிழைப்பித்
தெதிர்த்தெங்கு நின்றெப் பரிசளித்
தானிமை யோரிறைஞ்சும்
மதுத்தங் கியகொன்றை வார்சடை
யீசர்வண் தில்லைநல்லார்
பொதுத்தம்ப லங்கொணர்ந் தோபுதல்வா
எம்மைப் பூசிப்பதே.
10.321
10 st/nd Thirumurai
Song # 18
திருமூலர்
திருமந்திரம்
கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்
அதிரவன் அண்டப் புறஞ்சென் றடர்ப்ப
எதிரவன் ஈசன் இடமது தானே.
10.607
10 st/nd Thirumurai
Song # 9
திருமூலர்
திருமந்திரம்
கதிர்கண்ட காந்தம் கனலின் வடிவாம்
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாம்
சதிர்கொண்ட சாக்கி சரியன் வடிவாம்
எதிர்கொண்ட ஈசன் எழில்வடி வாமே.
11.028
11 st/nd Thirumurai
Song # 6
பட்டினத்துப் பிள்ளையார்
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
கதியா வதுபிறி தியாதொன்றும்
இல்லை களேபரத்தின்
பொதியா வதுசுமந் தால்விழப்
போமிது போனபின்னர்
விதியாம் எனச்சிலர் நோவதல்
லாலிதை வேண்டுநர்யார்
மதியா வதுமரு தன்கழ
லேசென்று வாழ்த்துவதே.
11.032
11 st/nd Thirumurai
Song # 33
நம்பியாண்டார் நம்பி
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
கதியே யடியவர் எய்ப்பினில்
வைப்பாக் கருதிவைத்த
நிதியே நிமிர்புன் சடையமிர்
தேநின்னை யென்னுள்வைத்த
மதியே வளர்தில்லை யம்பலத்
தாய்மகிழ் மாமலையாள்
பதியே பொறுத்தரு ளாய்கொடி
யேன்செய்த பல்பிழையே.
11.036
11 st/nd Thirumurai
Song # 28
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை
கதிர்மதி நுழையும் படர்சடை மகுடத்
தொருத்தியைக் கரந்த விருத்தனைப் பாடி
முத்தின் சிவிகை முன்னாட் பெற்ற
அத்தன் காழி நாட்டுறை யணங்கோ மொய்த்தெழு
தாமரை யல்லித் தவிசிடை வளர்ந்த
காமரு செல்வக் கனங்குழை யவளோ மீமருத்
தருவளர் விசும்பில் தவநெறி கலக்கும்
உருவளர் கொங்கை யுருப்பசி தானோ
வாருணக் கொம்போ மதனன் கொடியோ
ஆரணி யத்து ளருந்தெய்வ மதுவோ
வண்டமர் குழலும் கெண்டையங் கண்ணும்
வஞ்சி மருங்குங் கிஞ்சுக வாயும்
ஏந்திள முலையுங் காந்தளங் கையும்
ஒவியர் தங்க லொண்மதி காட்டும்
வட்டிகைப் பலகை வான்துகி லிகையால்
இயக்குதற் கரியதோர் உருவுகண் டென்னை
மயக்கவந் துதித்ததோர் வடிவிது தானே.
12.000
12 st/nd Thirumurai
Song # 265
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
கதிர்மணி பிறந்த தென்ன
உருத்திர கணிகை மாராம்
பதியிலார் குலத்தில் தோன்றிப்
பரவையா ரென்னு நாமம்
விதியுளி விளக்கத் தாலே
மேதகு சான்றோ ரான்ற
மதியணி புனிதன் நன்னாள்
மங்கல அணியால் சாத்தி.
12.070
12 st/nd Thirumurai
Song # 18
சேக்கிழார்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
கதிரி ளம்பிறைக் கண்ணியர் நண்ணிய பொழுதின்
முதிரும் அன்புடைத் தொண்டர்தாம் முறைமையின் முன்னே
அதிக நன்மையின் அறுசுவைத் திருவமு தாக்கி
எதிரெ ழுந்துசென் றிறைஞ்சிட நிறைந்தநூன் மார்பர்.
12.090
12 st/nd Thirumurai
Song # 8
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
கதிரோன் எழமழுங்கிக்
கால்சாயுங் காலை
மதிபோல் அழிந்துபொறா
மற்றவனும் சுற்றப்
பதியோ ருடன்கூடப்
பண்ணியமர் மேற்சென்
றெதிர்போர் விளைப்பதற்கே
எண்ணித் துணிந்தெழுந்தான்.
12.100
12 st/nd Thirumurai
Song # 101
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
கதிரவ னுச்சி நண்ணக்
கடவுள்மால் வரையி னுச்சி
அதிர்தரு மோசை ஐந்தும்
ஆர்கலி முழக்கங் காட்ட
இதுவென்கொல் நாணா வென்றார்க்
கிம்மலைப் பெருந்தேன் சூழ்ந்து
மதுமலர் ஈக்கள் மொய்த்து
மருங்கெழும் ஒலிகொல் என்றான்.
12.360
12 st/nd Thirumurai
Song # 7
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
கதிர்முடிமன் னனுமிவர்தங்
களிற்றுரிமை யாண்மையினை
அதிசயித்துப் புகழ்ந்துரைப்ப
அறிந்தவமைச் சர்களுரைப்பார்
மதியணிந்தார் திருத்தொண்டு
வாய்த்தவலி யுடைமையினால்
எதிரிவருக் கிவ்வுலகி
லில்லையென வெடுத்துரைத்தார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list