சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கள்ள
கள்ளிக்
கள்ள
கள்ளும்
கள்ளம்
கள்ளி
கள்ளனேன்
கள்ளின்
கள்ளினம்
கள்ளவிழ்
2.067
2 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கள்ளம் மதித்த கபாலம் கைதனிலே மிக ஏந்தி,
துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர்; எழில் மிகு
செல்வர்;
வெள்ளம், நகுதலைமாலை, விரிசடை மேல் மிளிர்கின்ற
பிள்ளை மதிப் பெருமானார் பெரும் புலியூர் பிரியாரே.
2.101
2 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டு, அருத்தியோடு
உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்து உளான் உகந்த ஊர்
துள்ளி வாளை பாய் வயல், சுரும்பு உலாவு நெய்தல்வாய்
அள்ளல் நாரை ஆரல் வாரும், அம் தண் ஆரூர் என்பதே.
3.102
3 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கள்ளி இடுதலை ஏந்து கையர், கரிகாடர், கண் நுதலார்
வெள்ளிய கோவண ஆடை தன்மேல் மிளிர் ஆடு அரவு ஆர்த்து,
நள் இருள் நட்டம் அது ஆடுவர், நன்நலன் ஓங்கு நாரையூர்
உள்ளிய போழ்தில், எம்மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே.
4.075
4 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
கள்ளனேன் கள்ளத் தொண்டு ஆய்க் காலத்தைக் கழித்துப் போக்கி,
தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன்; நாடிக் கண்டேன்;
உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று
வெள்கினேன்; வெள்கி, நானும் விலா இறச் சிரித்திட்டனே!
5.054
5 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
கள்ளின் நாள்மலர் ஓர் இரு-நான்கு கொண்டு,
உள்குவார் அவர் வல்வினை ஓட்டுவார்-
தெள்ளு நீர் வயல் பாய் கெடிலக் கரை,
வெள்ளை நீறு அணி மேனி, வீரட்டரே.
6.023
6 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய்; காலனையும் காலால் கடந்தான் கண்டாய்;
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய்; புலி உரி சேர் ஆடைப் புனிதன் கண்டாய்;
வெள்ளி மிளிர் பிறை முடிமேல் சூடி கண்டாய்; வெண் நீற்றான் கண்டாய்; நம் செந்தில் மேய
வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.
7.035
7 st/nd Thirumurai
Song # 5
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கள்ளி நீ செய்த தீமை உள்ளன பாவமும் பறையும்படி
தெள்ளிதா எழு, நெஞ்சமே! செங்கண் சே உடைச் சிவலோகன் ஊர்
துள்ளி வெள் இள வாளை பாய் வயல்-தோன்று தாமரைப் பூக்கள் மேல்,
புள்ளி நள்ளிகள் பள்ளி கொள்ளும் புறம்பயம் தொழப் போதுமே.
8.218
8 st/nd Thirumurai
Song # 30
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
கள்ளினம் ஆர்த்துண்ணும் வண்கொன்றை
யோன்தில்லைக் கார்க்கடல்வாய்ப்
புள்ளின மார்ப்பப் பொருதிரை
யார்ப்பப் புலவர்கடம்
வள்ளின மார்ப்ப மதுகர
மார்ப்ப வலம்புரியின்
வெள்ளின மார்ப்ப வரும்பெருந்
தேரின்று மெல்லியலே.
9.025
9 st/nd Thirumurai
Song # 3
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
கள்ளவிழ் தாமரைமேற் கண்
டயனோடு மால்பணிய
ஒள்ளெரி யின்னடுவே உரு
வாய்ப்பரந் தோங்கியசீர்த்
தெள்ளிய தண்பொழில்சூழ் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலத்
துள்ளெரி யாடுகின்ற ஒரு
வனையு ணர்வரிதே.
11.002
11 st/nd Thirumurai
Song # 2
காரைக்கால் அம்மையார்
திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1
கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக்
கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை
விள்ள எழுதி வெடுவெ டென்ன
நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத்
துள்ளிச் சுடலைச் சுடுபி ணத்தீச்
சுட்டிய முற்றும் சுளிந்து பூழ்தி
அள்ளி அவிக்கநின் றாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங்காடே.
11.006
11 st/nd Thirumurai
Song # 78
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
கள்ள வளாகங் கடிந்தடி
மைப்படக் கற்றவர்தம்
உள்ள வளாகத் துறுகின்ற
உத்தமன் நீள்முடிமேல்
வெள்ள வளாகத்து வெண்ணுரை சூடி
வியன்பிறையைக்
கொள்ள வளாய்கின்ற பாம்பொன் றுளது
குறிக்கொண்மினே.
11.008
11 st/nd Thirumurai
Song # 120
சேரமான் பெருமாள் நாயனார்
திருக்கயிலாய ஞான உலா
கள்ளும் கடாமுங் கலவையுங் கைபோந்திட்டு
உள்ளும் புறமுஞ் செறிவமைத்துத் தெள்ளொளிய
11.010
11 st/nd Thirumurai
Song # 27
நக்கீரதேவ நாயனார்
திருஈங்கோய்மலை எழுபது
கள்ள முதுமறவர் காட்டகத்து மாவேட்டை
கொள்ளென் றழைத்த குரல்கேட்டுத் துள்ளி
இனக்கவலை பாய்ந்தோடும் ஈங்கோயே நந்தம்
மனக்கவலை தீர்ப்பான் மலை.
11.035
11 st/nd Thirumurai
Song # 4
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
கள்ளம் பொழில்நனி பள்ளித்
தடங்கட மாக்கியஃதே
வெள்ளம் பணிநெய்த லாக்கிய
வித்தகன், வெண்குருகு
புள்ளொண் தவளப் புரிசங்கொ
டலாக் கயலுகளத்
தள்ளந் தடம்புனல் சண்பையர்
காவலன் சம்பந்தனே.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list