சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் காதல்
காதல்     காதல்புரி     காதல்மெய்ப்    
3.049   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி,
ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

7.041   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
காதல் செய்து, களித்து, பிதற்றி, கடிமாமலர் இட்டு உனை ஏத்தி,
ஆதல் செய்யும் அடியார் இருக்க, ஐயம் கொள்வது அழகிதே!
ஓதக் கண்டேன்; உன்னை மறவேன்; உமையாள் கணவா! எனை ஆள்வாய்!
ஆதல் பழனக் கழனிக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே!.

10.312   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதரும்
காதல் வழிசெய்து காக்கலு மாமே. 

12.170   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
காதல் அன்பர்தம் அருந்தவப் பெருமையுங் கலந்த
வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி
ஆதி நாயகர் அமர்ந்தருள் செய்யமற் றவர்தாம்
தீதி லாநிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 315   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
காதல் செய்யுங் கருத்தினுடன்
காடும் மலையும் கான்யாறும்
சூத மலிதண் பணைப்பதிகள்
பலவுங் கடந்து சொல்லினுக்கு
நாதர் போந்து பெருந்தொண்டை
நன்னாட் டெய்தி முன்னாகச்
சீத மலர்மென் சோலைசூழ்
திருவோத் தூரில் சென்றடைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 35   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
காதல்புரி சிந்தைமகி ழக்களி சிறப்பார்
மீதணியும் நெய்யணி விழாவொடு திளைப்பார்
சூதநிகழ் மங்கல வினைத்துழனி பொங்கச்
சாதக முறைப்பல சடங்குவினை செய்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1244   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
காதல்மெய்ப் பதிகம் கல்லூர்ப்
பெருமணம் எடுத்துக் கண்டோர்
தீதுற பிறவிப் பாசந்
தீர்த்தல்செம் பொருளாக் கொண்டு
நாதனே நல்லூர் மேவும்
12.290   12 st/nd Thirumurai   Song # 222   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
காதல் புரிந்து தவம்புரியுங்
கன்னி யாரங் கமர்கின்றார்
பூத நாதர் கோயிலினிற்
காலந் தோறும் புக்கிறைஞ்சி
நீதி முறைமை வழுவாது
தமக்கு நேர்ந்த பணி செய்யச்
சீத மலர்ப்பூ மண்டபத்துத்
திரைசூழ் ஒருபாற் சென்றிருந்து.
12.360   12 st/nd Thirumurai   Song # 58   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
காதல் மனையார் தாங்கூறக்
கணவ னாருங் காதலனை
ஏதம் அகலப் பெற்றபே
றெல்லா மெய்தி னார்போல
நாதர் தமக்கங் கமுதாக்க
நறுமென் குதலை மொழிப்புதல்வன்
ஓத வணைந்த பள்ளியினில்
உடன்கொண் டெய்தக் கடிதகன்றார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list