சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கைக
கைகலந்தானைக்
கைக்கும்
கைகள்
கைக
கைக்கடா
கைகளுந்
கைக்கொண்டு
கைகாள்,
கைக்குவான்
4.009
4 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
கைகாள், கூப்பித் தொழீர்!-கடி மா மலர் தூவி நின்று,
பைவாய்ப் பாம்பு அரை ஆர்த்த பரமனை-கைகாள், கூப்பித் தொழீர்!
9.018
9 st/nd Thirumurai
Song # 1
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து
கழுத்தில்ஓர் தனிவடங் கட்டி
முக்கண்நா யகராய்ப் பவனிபோந் திங்ஙன்
முரிவதோர் முரிவுமை யளவும்
தக்கசீர்க் கங்கை யளவும்அன் றென்னோ
தம்மொருப் பாடுல கதன்மேல்
மிக்கசீர் ஆரூர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடங்குலா வினரே.
10.838
10 st/nd Thirumurai
Song # 9
திருமூலர்
திருமந்திரம்
கைகலந்தானைக் கருந்தினுள் நந்தியை
மெய்கலந் தான்றன்னை வேத முதல்வனைப்
பொய்கலந் தார்முன் புகுதானைப் புனிதப்
பொய்யொழிந்த தார்க்கே புகலிட மாமே.
11.020
11 st/nd Thirumurai
Song # 2
கபிலதேவ நாயனார்
மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை
கைக்கும் பிணியொடு கான் தலைப்படும் ஏல்வையினில்
எய்க்கும் கவலைக் கிடைந்தடைந் தேன்வெம்மை நாவளைக்கும்
பைக்கும் அரவரை யான்தந்த பாய்மத யானைபத்துத்
திக்கும் பணிநுதற் கண்திரு வாளன் திருவடியே.
12.000
12 st/nd Thirumurai
Song # 19
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
கைகள் கூப்பித் தொழுதெழுந் தத்திசை
மெய்யில் ஆனந்த வாரி விரவிடச்
செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி
ஐயம் நீங்க வினவுவோ ரந்தணர்.
12.000
12 st/nd Thirumurai
Song # 29
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
கைக ளஞ்சலி கூப்பிக் கலங்கினான்
செய்ய சேவடி நீங்குஞ் சிறுமையேன்
மையல் மானுட மாய்மயங் கும்வழி
ஐய னேதடுத் தாண்டருள் செய்என.
12.000
12 st/nd Thirumurai
Song # 317
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
கைக்கடா குரங்கு கோழி
சிவல்கவு தாரி பற்றிப்
பக்கமுன் போது வார்கள்
பயில்மொழி பயிற்றிச் செல்ல
மிக்கபூம் பிடகை கொள்வோர்
விரையடைப் பையோர் சூழ
மைக்கருங் கண்ணி னார்கள்
மறுகநீண் மறுகில் வந்தார்.
12.210
12 st/nd Thirumurai
Song # 253
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
கைகள் குவித்துக் கழல்போற்றிக்
கலந்த அன்பு கரைந்துருக
மெய்யில் வழியுங் கண்ணருவி
விரவப் பரவுஞ் சொல்மாலை
செய்ய சடையார் தமைச்சேரார்
தீங்கு நெறிசேர் கின்றார்என்
றுய்யு நெறித்தாண் டகம்மொழிந்தங்
கொழியாக் காதல் சிறந்தோங்க.
12.210
12 st/nd Thirumurai
Song # 358
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
கைக ளும்மணி பந்த சைந்துற
வேக ரைந்து சிதைந்தபின்
மெய்க லந்தெழு சிந்தை அன்பின்
விருப்பு மீமிசை பொங்கிட
மொய்க டுங்கனல் வெம்ப ரற்புகை
மூளு மத்த முயங்கியே
மைகொள் கண்டர்தம் அன்பர் செல்ல
வருந்தி உந்தினர் மார்பினால்.
12.280
12 st/nd Thirumurai
Song # 865
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
கைகளுந் தலைமீ தேறக்
கண்ணில்ஆ னந்த வெள்ளம்
மெய்யெலாம் பொழிய வேத
முதல்வரைப் பணிந்து போற்றி
ஐயனே அடிய னேனை
அஞ்சலென் றருள வல்ல
மெய்யனே என்று வீட
லாலவாய் விளம்ப லுற்றார்.
12.290
12 st/nd Thirumurai
Song # 188
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
கைகள் கூப்பி முன்னணைவார்
கம்பை யாறு பெருகிவர
ஐயர் தமக்கு மிகஅஞ்சி
ஆரத் தழுவிக் கொண்டிருந்த
மையு லாவுங் கருநெடுங்கண்
மலையா ளென்றும் வழிபடுபூஞ்
செய்ய கமலச் சேவடிக்கீழ்த்
திருந்து காத லுடன் வீழ்ந்தார்.
12.370
12 st/nd Thirumurai
Song # 172
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
கைக்கொண்டு கொடுபோம்அக்
கைவினைஞர் தமையேவி
மைக்கொண்ட மிடற்றாரை
வணங்கிப்போய்க் கொங்ககன்று
மெய்க்கொண்ட காதலினால்
விரைந்தேகி மென்கரும்பும்
செய்க்கொண்ட சாலியுஞ்சூழ்
திருவாரூர் சென்றணைந்தார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list