சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கொங்கு
கொங்கு     கொங்குபுக்     கொங்குதங்     கொங்கு(கு)    
1.024   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கொங்கு செருந்தி கொன்றைமலர் கூடக்
கங்கை புனைந்த சடையார், காழியார்,
அம் கண் அரவம் ஆட்டுமவர் போல் ஆம்
செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரே.

1.118   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கொங்கு அணி நறுங் கொன்றைத் தொங்கலன், குளிர்சடையான்,
எங்கள் நோய் அகல நின்றான் என, அருள் ஈசன் இடம்
ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகு அழித்த
பைங்கண் வெள் ஏறு உடையான்-பருப்பதம் பரவுதுமே.

2.042   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கொங்கு சேர் தண்கொன்றை மாலையினான், கூற்று அடரப்
பொங்கினான், பொங்கு ஒளி சேர் வெண் நீற்றான்,
பூங்கோயில்
அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி
தங்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.

2.051   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கொங்கு உலாம் மலர்ச்சோலை வண்டு இனம் கெண்டி மா மது உண்டு இசை செய,
தெங்கு பைங்கமுகம் புடை சூழ்ந்த திருக்களருள
மங்கை தன்னொடும் கூடிய மணவாளனே! பிணை கொண்டு, ஓர் கைத்தலத்து,
அம் கையில் படையாய்! அடைந்தார்க்கு அருளாயே!

2.058   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கொங்கு ஆர்ந்த பைங்கமலத்து அயனும், குறள் ஆய்
நிமிர்ந்தானும்,
அங்காந்து தள்ளாட, அழல் ஆய் நிமிர்ந்தீர்! இலங்கைக்
கோன்
தம் காதல் மா முடியும் தாளும் அடர்த்தீர்! குடவாயில்,
பங்கு ஆர்ந்த கோயிலே கோயில் ஆகப் பரிந்தீரே.

2.121   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கொங்கு அரவப்படு வண்டு அறை குளிர் கானல்வாய்ச்
சங்கு அரவப் பறையின்(ன்) ஒலி அவை சார்ந்து எழ,
பொங்கு அரவம்(ம்) உயர் பாதிரிப்புலியூர் தனுள்
அங்கு அரவம்(ம்) அரையில்(ல்) அசைத்தானை அடைமினே!

3.002   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கொங்கு சேர் குழலாள், நிழல் வெண் நகை, கொவ்வை வாய், கொடி ஏர் இடையாள் உமை
பங்கு சேர் திருமார்பு உடையார்; படர் தீ உரு ஆய்,
மங்குல் வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர்; வான்மிசை வந்து எழு
பொங்கு நீரில் மிதந்த நன் பூந்தராய் போற்றுதுமே.

3.022   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கொங்கு அலர் வன்மதன் வாளி ஐந்து; அகத்து
அங்கு உள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்;
தங்கு அரவின் படம் அஞ்சு; தம் உடை
அம் கையில் ஐவிரல்; அஞ்சு, எழுத்துமே.

3.084   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கொங்கு இயல் சுரிகுழல், வரிவளை, இளமுலை, உமை ஒரு-
பங்கு இயல் திரு உரு உடையவர்; பரசுவொடு இரலை மெய்
தங்கிய கரதலம் உடையவர்; விடையவர்; உறைபதி
பொங்கிய பொருகடல் கொள, அதன்மிசை உயர் புறவமே.

3.100   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கொங்கு இயல் பூங்குழல் கொவ்வைச் செவ்வாய்க்
கோமளமாது உமையாள
பங்கு இயலும் திருமேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து,
சங்கு இயல் வெள்வளை சோர வந்து, என் சாயல்
கொண்டார் தமது ஊர்
துங்கு இயல் மாளிகை சூழ்ந்த செம்மைத் தோணிபுரம்
தானே.

6.024   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கொங்கு வார் மலர்க்கண்ணிக் குற்றாலன்காண்; கொடுமழுவன்காண்; கொல்லைவெள் ஏற்றான்காண்;
எங்கள்பால்-துயர் கெடுக்கும் எம்பிரான்காண்; ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயினான்காண்;
பொங்கு மா கருங்கடல் நஞ்சு உண்டான் தான்காண்;
பொன் தூண் காண்; செம்பவளத்திரள் போல்வான்காண்;
செங்கண் வாள் அரா, மதியோடு உடன்
வைத்தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.

7.010   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கொங்கு நுழைத்தன வண்டு அறை கொன்றையும் கங்கையும் திங்களும் சூடு சடை,
மங்குல் நுழை மலை மங்கையை நங்கையை பங்கினில்-தங்க உவந்து அருள் செய்,
சங்குகுழைச் செவி கொண்டு, அருவித்திரள் பாய, (அ)வியாத் தழல் போல் உடை, தம்
அம் கை, மழுத் திகழ் கையன் இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே.

7.042   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கொங்கு ஆர் மலர்க் கொன்றை அம் தாரவனே! கொடு கொட்டி ஒர் வீணை உடையவனே!
பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொதியும் புனிதா! புனம் சூழ்ந்து அழகு ஆர்
துங்கு ஆர் புனலுள் பெய்து கொண்டு மண்டி, திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை மேல்
வெங் கார் வயல் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே .

7.072   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கொங்கு அணை சுரும்பு உண, நெருங்கிய குளிர் இளந்
தெங்கொடு பனை பழம் படும் இடம்; தேவர்கள்
தங்கிடும் இடம்; தடங்கடல்-திரை புடைதர
எங்களது அடிகள் நல் இடம் வலம்புரமே.

7.099   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கொங்கு அணை வண்டு அரற்ற, குயிலும் மயிலும் பயிலும்
தெங்கு அணை பூம்பொழில் சூழ் திரு நாகேச்சுரத்து அரனை,
வங்கம் மலி கடல் சூழ் வயல் நாவல் ஆரூரன், சொன்ன
பங்கம் இல் பாடல் வல்லார் அவர்தம் வினை பற்று அறுமே.

7.102   7 st/nd Thirumurai   Song # 3      
கொங்கு(கு) அணா மலர்கள் மேவும் குளிர்பொழில் இமையப் பாவை
பங்கு(கு) அணா(வ்) உருவினானே! பருமணி உமிழும் வெம்மைச்
செங்கண் ஆர் அரவம் பூண்ட திகழ்மறைக் காடு(டு) அமர்ந்தாய்!
அங்கணா! இது அன்றோதான், எம்மை ஆள் உகக்கும் ஆறே!

10.924   10 st/nd Thirumurai   Song # 62   திருமூலர்   திருமந்திரம்  
கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தஅஃ(து)
அங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வார்இல்லை
திங்கள்புக் கால்இரு ளாவ தறிந்திலர்
தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே.

11.035   11 st/nd Thirumurai   Song # 2   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்  
கொங்குதங் குங்குஞ்சி கூடாப்
பருவத்துக் குன்றவில்லி
பங்குதங் கும்மங்கை தன்னருள்
பெற்றவன், பைம்புணரிப்
பொங்குவங் கப்புனல் சேர்த
புதுமணப் புன்னையின்கீழ்ச்
சங்குதங் கும்வயற் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

12.370   12 st/nd Thirumurai   Song # 141   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
கொங்கு நாடு கடந்துபோய்க்
குலவு மலைநாட் டெல்லையுற
நங்கள் பெருமான் தோழனார்
நம்பி தம்பி ரான்தோழர்
அங்க ணுடனே யணையவெழுந்து
அருளா நின்றார் எனும்விருப்பால்
எங்கும் அந்நாட் டுள்ளவர்கள்
எல்லாம் எதிர்கொண் டின்புறுவார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list