சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கொன்றை
கொன்றை
கொன்றைமாலையும்
கொன்றை,
3.006
3 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொன்றை பொன் சொரியும் கொள்ளம்பூதூர்
நின்ற புன்சடை நிமலனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!
3.006
3 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொன்றை சேர் சடையான் கொள்ளம்பூதூர்,
நன்று காழியுள் ஞானசம்பந்தன்
இன்று சொல் மாலை கொண்டு ஏத்த வல்லார், போய்,
என்றும் வானவரோடு இருப்பாரே.
3.040
3 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொன்றை சூடி நின்ற தேவை
அன்றி, ஒன்றும் நன்று இலோமே.
5.014
5 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொன்றைமாலையும் கூவிளம் மத்தமும்
சென்று சேரத் திகழ்சடை வைத்தவன்,
என்றும் எந்தைபிரான், இடைமருதினை
நன்று கைதொழுவார் வினை நாசமே.
5.072
5 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொன்றை சூடியை, குன்றமகளொடும்
நின்ற நீலக்குடி அரனே! எனீர்-
என்றும் வாழ்வு உகந்தே இறுமாக்கும் நீர்;
பொன்றும் போது நுமக்கு அறிவு ஒண்ணுமே?
6.016
6 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொன்றை அம் கூவிள மாலை தன்னைக்
குளிர்சடைமேல் வைத்து உகந்த கொள்கையாரும்,
நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்பு
உருவம் ஆய் நின்ற நிமலனாரும்,
அன்று அ(வ்)வ் அரக்கன் அலறி வீழ
அரு வரையைக் காலால் அழுத்தினாரும்,
என்றும் இடு பிச்சை ஏற்று உண்பாரும்-இடைமருது
மேவிய ஈசனாரே.
8.117
8 st/nd Thirumurai
Song # 10
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கொன்றை, மதியமும், கூவிளம், மத்தமும்,
துன்றிய சென்னியர்; அன்னே! என்னும்.
துன்றிய சென்னியின் மத்தம் உன்மத்தமே,
இன்று, எனக்கு ஆன ஆறு; அன்னே! என்னும்.
12.280
12 st/nd Thirumurai
Song # 432
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
கொன்றை வார்சடை முடியரைக்
கோழம்பத் திறைஞ்சி
என்றும் நீடிய இன்னிசைப்
பதிகம் முன் இயம்பி
மன்று ளார்மகிழ் வைகல்மா
டக்கோயில் மருங்கு
சென்று சார்ந்தனர் திருவளர்
சிரபுரச் செல்வர்.
12.360
12 st/nd Thirumurai
Song # 87
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
கொன்றை வேணி யார் தாமும்
பாகங் கொண்ட குலக்கொடியும்
வென்றி நெடுவேல் மைந்தரும்தம்
விரைப்பூங் கமலச் சேவடிக்கீழ்
நின்ற தொண்டர் மனைவியார்
நீடு மகனார் தாதியார்
என்றும் பிரியா தேயிறைஞ்சி
யிருக்க வுடன்கொண் டேகினார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list